நினைவடுக்குகளிலிருந்த ஒரு பயணம் -1
---------------------------------------------------------
( பொதுவாக தமிழ் மணத்தில் என் இடுகைகளை நானே இணைத்துக் கொள்வேன்.கடந்த சில பதிவுகளை யாரோ இணைக்கிறார்கள் வேண்டாமே.ப்ளீஸ்...)
நினைவடுக்குகளில்
ஒரு பயணம்
வருடம் 2003. ஆகஸ்ட் கடைசியோ
செப்டெம்பர் முதல் வாரமோ சரியாக
நினைவில்லை “பாலா காசிக்குப் போகலாம் என்று ஒரு திட்டம். நீயும் வருகிறாயா.?” என் சின்ன அண்ணா
கேட்டார். கரும்பு தின்னக் கூலியா.?எனக்குத்தான் பயணிக்கப் பிடிக்குமே. கலந்து
ஆலோசித்தோம். அப்போது ரயில்வேயில் ரௌண்ட் ட்ரிப் செய்தால் டிக்கெட் பணம் டெலஸ்கோப்
ரேட்டில் வசூலிப்பார்கள். அதற்கு ஒரு கண்டிஷன் . போகும் வழி ரூட்டும் வரும் வழி
ரூட்டும் ஒன்றாய் இருக்கக் கூடாது.மொத்த தூரத்துக்குக் கட்டணம் கணக்குப் பண்ணி
வசூலிப்பார்கள்.குறிப்பிட்ட நாட்களுக்குள் பயணத்தை முடிதுக் கொள்ள வேண்டும் என்பது
ஒரு கண்டிஷன்.அந்த வசதி இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. எங்களுக்கு எங்கள்
பெரிய அண்ணாவையும் கூட்டிக் கொண்டு போக விருப்பம். ஆனால் அவர் இருந்தது மதுராவில்
அவர் பெண்ணுடன். இந்த மாதிரிப் பயணம் நன்றாக திட்டமிடப் படவேண்டும் போகும் இடங்களுக்கு
ரிசர்வேஷன் இல்லாவிட்டால் பாடு திண்டாட்டமாகும். நாங்கள் பெங்களூருவிலிருந்து
முதலில் ஜெய்பூர் போய், அங்கிருந்து மதுரா, ஆக்ரா வாரணாசி, அலஹாபாத் ஹரித்வார், ரிஷிகேஷ் டெல்லி போய் பிறகு நேராக
பெங்களூரு திரும்புவதாகத் திட்டமிட்டோம். பெரிய அண்ணா எங்களுடன் மதுராவில்
சேர்ந்து டெல்லியில் சின்ன பெண் வீட்டோடு பயணத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினார்.
ஆனால் கடைசி நேரத்தில் சின்ன
அண்ணாவின் மனைவிக்கு சில அசௌகரியங்கள் காரணமாக பயணத்தை ரத்து செய்யச் சொல்லிக்
கேட்டுக் கொண்டார் ஒரு முறை திட்டமிட்டதை ரத்து செய்ய எனக்கு மனமில்லை. மேலும்
இந்தப் பயண ஆசையைத் தூண்டிவிட்டதே என்
சின்ன அண்ணாதான். திட்டமிட்டபடி நானும் என் மனைவியும் முந்தைய டிக்கெட்டுக்களைக்
கான்சல் செய்து எங்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்கினோம். பெரிய அண்ணா திட்டமிட்டபடி
டிக்கெட் வாங்கி கொள்வதாகக் கூறினார்.
அப்போது இந்த ஆன் லைன் வசதி
இருந்ததா தெரியாது. எங்கள் யாரிடமும் கணினியும் இருக்கவில்லை. ரயில்வே கைடை வாங்கி
எந்த ட்ரெயின் எங்கிருந்து எங்கு எத்தனை
மணிக்கு என்று இரண்டு மூன்று நாள் பிரயாசைப் பட்டு தீர்மானித்தோம். அதன் பிறகு
ரிசர்வேஷன் நாங்கள் பயணிக்க இருந்த எல்லா ரயில்களுக்கும் குறிப்பிட்ட தேதிகளில்
செய்து கொண்டோம். . முதலில் பெங்களூருவிலிருந்து ஜெய்ப்பூருக்கு அக்டோபர் இரண்டாம்
தேதி புறப்பட்டோம். ஜெய்ப்பூரில் எங்கு தங்குவது என்ன என்ன பார்க்க வேண்டும் என்று
ஒன்றுமே தெரியாது. என் மூத்த மகன் எக்சைட் கம்பனியில் வேலையிலிருந்தான். அவன்
ஜெய்ப்பூர் ஏரியா மானேஜருக்குப் ஃபோன் செய்து எங்களை வரவேற்கவும் ஹோட்டல் வசதி
செய்து தரவும் கேட்டுக் கொண்டான். எங்களை ஜெய்ப்பூர் ரயில் ந்லையத்தில் எங்கள்
பெயர் கொண்ட தட்டியுடன் திரு முகேஷ் பார்கவா என்ற நண்பர் காத்துக் கொண்டிருந்தார்.
ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ தூரத்துக்குள் ஒரு ஹோட்டலில் எங்களைத்
தங்க ஏற்பாடு செய்தார். ஜெய்ப்பூரில் கோட்டை சேஷ் மஹல் அங்கு பிரசித்திபெற்ற
கோவில்கள் ஹவா மஹல் ஜல் மஹல் ஆல்பெர்ட்
மியூசியம் போன்ற இடங்களுக்குச் சென்று வர டாக்சி ஏற்பாடு செய்து கொடுத்தார். அவ்வளவு
தூரம் சென்றபின் ஷாப்பிங் இல்லாமலா. என் மனைவி டிப் அண்ட் டை வகையறாவில் ஒரு
சாரிவாங்கினாள். ராஜஸ்தான் எம்போரியத்தில் ஒரு சில்க் குயில்ட்டும் வாங்கினோம்.
அங்கு சென்றிருந்த போது எடுத்த புகைப் படங்கள் சில மீட்டெடுத்தது,
![]() | ||
| ஜெய்ப்பூர் கோட்டை மதிலில் |
![]() |
| ஜெய்ப்பூர் கோவிந்த் தேவ் கோவிலின் முன் முகேஷ் பார்கவாவுடன் |
![]() |
| ஜெய்ப்பூர் பிர்லா மந்திர் வெளியே |
![]() |
| ஜெய்ப்பூர் பிர்லா மந்திர் உள்ளே |
![]() |
| ஜெய்ப்பூர் ஹவாமஹல் உள்ளே |
![]() |
| ஜெய்ப்பூர் ஹவாமஹல் உள்ளிருந்து ஒரு காட்சி |
![]() |
| ஜெய்ப்பூர் ஜல் மஹல்( நீரில் மாளிகை) |
![]() |
| ஆல்பெர்ட் மியூசியம் ஜெய்ப்பூர் |
![]() |
| கமல் பாக்(g) தோட்டம் ஜெய்ப்பூர் |
பெங்களூருவிலிருந்து அக்டோபர் 2-ம்தேதி காலை 11 1/2 மணிக்குப் புறப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி காலை 6 1/2 மணி அளவில் ஜெய்ப்பூர் சேர்ந்தோம். பிங்க் சிடி என்றழைக்கப் படும் ஜெய்ப்பூர் பார்க்கும் இடங்களெல்லாம் பிங்க் ஆகவே இருக்கிறது ஜெய்ப்பூர் மியூசியத்தில் காணும் சில வாசகங்கள் இந்திய அரசர்கள் ஆங்கிலேயரிடம் மிகவும் விசுவாசமாக இருந்ததைக் குறிப்பிடுவது போல் இருக்கிறது. ஜெய்ப்பூரில் கமல் தோட்டம் என்று பார்க்கவேண்டிய இடம் என்றதனால் பார்க்கப் போனால் மிகவும் ஏமாற்றமளித்தது. பெங்களூரு தோட்டங்கள் முன் அது நிற்க முடியாது.ஜல்மஹல் எனப்படும் நீரில் கட்டப் பட்ட மாளிகை தூரத்தில் இருந்தே பார்வையிட முடிந்தது
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் மிகவும் அனுசரணையாகவே இருந்தனர்.டீ கேட்டால் நம் கண்முன்னாலேயே பாக்கெட் பால் திறக்கப் பட்டு ஃப்ரெஷாக டீ போட்டுத் தந்தார்கள் சப்பாத்தியும் நம் விருப்பத்துக்கு ஏற்ப மெலிதாக இட்டுக் கொடுத்தார்கள். நாங்கள் ஒன்றரை நாள் தங்கலுக்குப் பின் 5-ம் தேதி மதியம் மதுரா வர ரயில் ஏறினோம்.(மீதி அடுத்தபதிவில்) .









