நினைவடுக்குகளிலிருந்த பயணம் -4
--------------------------------------------------------
(சில நாட்கள் கணினியிலிருந்து விடுபட்டிருப்பேன் என்று சென்றபதிவில் எழுதி இருந்தேன்.After a hectic two weeks I am back. டிராஃப்டாக எழுதி இருந்த நினைவடுக்குகளில் இருந்த பயணம் -4 ஐ இப்போது பதிவிடுகிறேன் )
எங்களுக்கும்
அண்ணா அண்ணிக்கும் கொடுக்கப் பட்ட இடங்கள் இரண்டு தளங்களில் இருந்தது என்று சென்ற
பதிவில் முடித்திருந்தேன்
இனி
அப்போது எங்களிடம் கைபேசிகள்
இருக்கவில்லை. தினமும் எங்கள் நலன் குறித்து std பூத்துக்குப் போய் எங்கள் மக்களுக்கு ஃபோன் செய்து
அறிவிப்போம். அன்று நாங்கள் அறையில் செட்டில் ஆனவுடன் விவரங்களுக்குஃபோன் செய்ய
அருகில் இருந்த ஒர் std பூத்துக்குப் போனோம்
முதலில் நான் தொலை பேசிவிட்டு பிறகு அண்ணாவும் அண்ணியும் பூத்துக்குள்
போய்ப் பேசினார்கள். பிறகு அறைக்குத் திரும்பினோம். அறையில் நுழையும்போது அண்ணா
தன்னுடைய பர்ஸையும் சிறு பையையும் பூத்திலேயே விட்டு வந்ததாய்க் கூறினார். பயணக்
களைப்புடன் அவருக்குக் கொஞ்சம் ஜுரமும் இருந்தது. பூத்தை விட்டு வெளியே வந்து கால்
மணிநேரத்துக்கும் மேல் ஆகியிருக்கலாம். இப்போது போல் atm வசதி ஏதுமில்லை. பர்ஸ் நிறையப் பணம் வைத்திருந்தார்.
எங்கே போய் தொலை பேசினோம் என்பதே நிச்சயமாகத் தெரியவில்லை. புது இடம். பதறிப்
போய்த் தேடினோம். நல்ல காலம் பூத்தில் அவரது பர்ஸும் பையும் பத்திரமாக இருந்தது.
இந்தக் களேபரத்தில் அண்ணி அறைச் சாவியை எங்கள் அறையில் விட்டிருந்ததாகச் சாதிக்க
ஆரம்பித்தார். மறதி நோயின் வெளிப்பாடு சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்திருந்தது.
கடைசியில் அண்ணாவின் பையில் சாவி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது அருகில் இருந்த எந்த ஹோட்டலிலும் காப்பியோ நம்மூர் உணவோ கிடைக்கவில்லை. அண்ணி அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கமுள்ளவர்.எப்படியோஅன்றைய பொழுது கழிந்தது.
மறு நாள் பொழுதை
ஹரித்வார் நகரைச் சுற்றிப் பார்பதிலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் குறித்துத்
தகவல் சேகரிப்பதிலும் கழித்தோம் அங்கே
சண்டிதேவி கோவில் மற்றும் மானசா தேவிக்கோவில் ஆகியவை குன்றுகளின் மேல்
இருந்தன. அங்கே போய்வர கேபிள் கார் வசதி இருந்தது. முதன் முதலில் கேபிள் காரில்
பயணம் த்ரில்லிங்காக இருந்தது. சண்டிதேவி கோவிலில் குரங்குகளின் தொல்லை அதிகம்.
அவை நம்மைத் தொந்தரவு செய்யாமப் இருக்க போகும் பாதையில்சுற்றிலும் கம்பி வலைகள்
வேயப் பட்டிருந்தது. மாலையில் ஹரித்வார் கங்கைக் கரைக்குச் சென்றோம். அடுத்து வர
இருந்த அர்த் கும்பாபிஷேகத்துக்கு தயாராக சில கட்டுமான வேலைகள் நடந்து
கொண்டிருந்தது. அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்றோம். கங்கைக்கு எடுக்கும்
அஹா ஆரத்தியைக் கண்டோம். அருகில் கடைகளுக்குச் சென்று ஸ்படிக மாலைகளும்
ருத்திராட்ச மாலைகளும் வாங்கினோம். அருகே இருந்த ஒரு ருத்திராட்ச மரத்தையும்
கண்டோம். என்னதான் சுற்றினாலும் வயிற்றுக்குத் திருப்தியாக உணவு கிடைக்கவில்லை.
ஹரித்வார் சாலைகளில்குதிரை வண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷா பிரயாணம் வித்தியாசமாக
இருந்தது. அங்கு இருந்ததை விட chaotic ட்ராஃபிக் எங்காவது
இருக்குமா தெரியவில்லை.மறு நாள் ரிஷிகேஷ் சென்றுவர பஸ்ஸுக்கு முன் பதிவு செய்து
கொண்டோம். சில புகைப் படங்களை இணைக்கிறேன்.
![]() |
| ஹரித்வாரில் அர்த் கும்பமேளாவுக்காக சில கட்டுமானப் பணிகள் |
![]() |
| ஹரி-கி பௌடி ஒரு தோற்றம். |
![]() |
| ஹர்த்வார் ஹரி-கி-பௌடி |
ஹர்த்வாரிலிருந்து
பஸ்ஸில் புறப்பட்டோம். இமைய மலையின் அடிவாரத்துக்குப் போகிறோம் என்னும் நினைப்பே
த்ரில் ஆக இருந்தது. இரு பெரிய பாலங்கள் கட்டி இருக்கிறார்கள் அவற்றை லக்க்ஷ்மண் ஜூலா
என்றும் ராம் ஜூலா என்றும் கூறுகிறார்கள் நிறையவே யாத்ரிகர்கள் வருகிறார்கள் எங்கு
சென்றாலும் இந்த உணவு விஷயம் படுத்துகிறது. இருந்தாலும் அங்கு நான் ஓரளவுக்கு
நன்கு சாப்பிட்டேன். கோவில்கள் எல்லாமே வடக்கில் அமைப்பில் வேறு பட்டுஇருக்கிறது.
ஒரு வேளை அவர்களுக்குஆகம விதிகள் என்று ஏதுமில்லையோ.? எப்போது பேரூந்து புறப்பட்டு
விடுமோ என்னும் கவலை இருந்து கொண்டே இருந்தது. அங்கு ஆற்றில் கை வைத்தால்
சில்லென்றிருக்கிறது. பொதுவாக ஆறுகள் என்றால் எனக்கு அங்கு குளிக்கும் ஆசை வரும்.
எவ்வளவுதான் நினைவு படுத்த முயன்றாலும் அங்கு நான் குளித்தேனா என்பது நினைவுக்கு
வருவதில்லை. அங்கு பெரும்பாலும் ஷாப்பிங் என்பது மாலைகளும் மணிகளும் மட்டுமே.
நாங்களும் சிலவற்றை வாங்கிக் கொண்டொம் சில நினைவுகளைப் புகைப் படங்கள் மூலம் புதுப்பிக்க
வேண்டி உள்ளது. ரிஷிகேஷிலிருந்து திரும்பி வரும் போது ஹர்த்வாரில் சில
கோவில்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு அளவில் பெரிய கோவில் ஒன்றைக்கண்டோம்.
வைஷ்ணவி கொவிலுக்குள் செல்வது போல் ஒரு குகைப் பாதை மாதிரி அமைத்திருக்கிறார்கள்.
அங்கு தவழ்ந்து சென்றே கோவிலின் தேவியை தரிசிக்க வேண்டி இருந்தது.மாதா லால் தேவி
என்று புகைப் படத்தின் பின்னே எழுதி வைத்திருக்கிறேன் ராமாயணக் கதை மாந்தர்களின்
சிலைகள் கலர் கலராக இருக்கின்றன
![]() |
| ஹர்த்வாரிலிருந்து ரிஷிகேஷ் ஓடும் பஸ்ஸிலிருந்து |
, .
.
![]() |
| கோவிலின் ஒரு தோற்றம். |
அடுத்தநாள்
ஹர்த்வாரிலிருந்து புது டெல்லி. அங்கு என் அண்ணாவின் இரண்டாவது மகள் இருந்தாள். அவரது மாப்பிள்ளை எங்களை டெல்லியில்
மெட்ரோ ரயிலில் கூட்டிச் சென்றார் அங்கே இந்திரா காந்தி சுடப்பட்ட இடத்துக்கும்
கூட்டிச் சென்றார். ஒரு நாள் ஓய்வுக்குப்
பின் பெங்களூர் போகும் ரயிலில் திரும்பினோம். இந்த வட இந்திய யாத்திரையின் போது
ஏறத்தாழ எல்லாவித ட்ரான்ஸ்போர்ட் மோடிலும் பயணித்தோம். அக்டோபர்
2-ம் தேதி
துவங்கி 22-ம் தேதிவரை பயணித்தது அடிக்கடி நினைவில் வரும் இப்போது அதைப்பதிவாக்கி
விட்டேன் .
![]() |
| சுடப் படும் முன் இந்திரா காந்தி நடந்து வந்த பாதை பின்னணியில் |
.
![]() | |
| இந்திரா காந்தி சுடப் பட்ட இடம் அருகே | (பயண நினைவுகள் முற்றும்) |





























