பயண நினைவுகள் வட இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயண நினைவுகள் வட இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 டிசம்பர், 2014

நினைவடுக்குகளிலிருந்த பயணம்-4


                          நினைவடுக்குகளிலிருந்த  பயணம் -4
                          --------------------------------------------------------
(சில நாட்கள் கணினியிலிருந்து விடுபட்டிருப்பேன் என்று சென்றபதிவில் எழுதி இருந்தேன்.After a hectic two weeks  I am back. டிராஃப்டாக எழுதி இருந்த நினைவடுக்குகளில் இருந்த பயணம் -4 ஐ இப்போது பதிவிடுகிறேன் )

எங்களுக்கும் அண்ணா அண்ணிக்கும் கொடுக்கப் பட்ட இடங்கள் இரண்டு தளங்களில் இருந்தது என்று சென்ற பதிவில் முடித்திருந்தேன்
 இனி
அப்போது எங்களிடம் கைபேசிகள் இருக்கவில்லை. தினமும் எங்கள் நலன் குறித்து std பூத்துக்குப் போய் எங்கள் மக்களுக்கு ஃபோன் செய்து அறிவிப்போம். அன்று நாங்கள் அறையில் செட்டில் ஆனவுடன் விவரங்களுக்குஃபோன் செய்ய அருகில் இருந்த ஒர் std பூத்துக்குப் போனோம்  முதலில் நான் தொலை பேசிவிட்டு பிறகு அண்ணாவும் அண்ணியும் பூத்துக்குள் போய்ப் பேசினார்கள். பிறகு அறைக்குத் திரும்பினோம். அறையில் நுழையும்போது அண்ணா தன்னுடைய பர்ஸையும் சிறு பையையும் பூத்திலேயே விட்டு வந்ததாய்க் கூறினார். பயணக் களைப்புடன் அவருக்குக் கொஞ்சம் ஜுரமும் இருந்தது. பூத்தை விட்டு வெளியே வந்து கால் மணிநேரத்துக்கும் மேல் ஆகியிருக்கலாம். இப்போது போல் atm வசதி ஏதுமில்லை. பர்ஸ் நிறையப் பணம் வைத்திருந்தார். எங்கே போய் தொலை பேசினோம் என்பதே நிச்சயமாகத் தெரியவில்லை. புது இடம். பதறிப் போய்த் தேடினோம். நல்ல காலம் பூத்தில் அவரது பர்ஸும் பையும் பத்திரமாக இருந்தது. இந்தக் களேபரத்தில் அண்ணி அறைச் சாவியை எங்கள் அறையில் விட்டிருந்ததாகச் சாதிக்க ஆரம்பித்தார். மறதி நோயின் வெளிப்பாடு சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்திருந்தது. கடைசியில் அண்ணாவின் பையில் சாவி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது

அருகில் இருந்த எந்த ஹோட்டலிலும் காப்பியோ நம்மூர் உணவோ கிடைக்கவில்லை. அண்ணி அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கமுள்ளவர்.எப்படியோஅன்றைய பொழுது கழிந்தது. 


 மறு நாள் பொழுதை ஹரித்வார் நகரைச் சுற்றிப் பார்பதிலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் குறித்துத் தகவல் சேகரிப்பதிலும் கழித்தோம் அங்கே  சண்டிதேவி கோவில் மற்றும் மானசா தேவிக்கோவில் ஆகியவை குன்றுகளின் மேல் இருந்தன. அங்கே போய்வர கேபிள் கார் வசதி இருந்தது. முதன் முதலில் கேபிள் காரில் பயணம் த்ரில்லிங்காக இருந்தது. சண்டிதேவி கோவிலில் குரங்குகளின் தொல்லை அதிகம். அவை நம்மைத் தொந்தரவு செய்யாமப் இருக்க போகும் பாதையில்சுற்றிலும் கம்பி வலைகள் வேயப் பட்டிருந்தது. மாலையில் ஹரித்வார் கங்கைக் கரைக்குச் சென்றோம். அடுத்து வர இருந்த அர்த் கும்பாபிஷேகத்துக்கு தயாராக சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்றோம். கங்கைக்கு எடுக்கும் அஹா ஆரத்தியைக் கண்டோம். அருகில் கடைகளுக்குச் சென்று ஸ்படிக மாலைகளும் ருத்திராட்ச மாலைகளும் வாங்கினோம். அருகே இருந்த ஒரு ருத்திராட்ச மரத்தையும் கண்டோம். என்னதான் சுற்றினாலும் வயிற்றுக்குத் திருப்தியாக உணவு கிடைக்கவில்லை. ஹரித்வார் சாலைகளில்குதிரை வண்டி மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா பிரயாணம் வித்தியாசமாக இருந்தது. அங்கு இருந்ததை விட chaotic  ட்ராஃபிக் எங்காவது இருக்குமா தெரியவில்லை.மறு நாள் ரிஷிகேஷ் சென்றுவர பஸ்ஸுக்கு முன் பதிவு செய்து கொண்டோம். சில புகைப் படங்களை இணைக்கிறேன்.
ஹரித்வாரில் அர்த் கும்பமேளாவுக்காக சில கட்டுமானப் பணிகள்
  
ஹர்த்வார் சண்டி கோவிலில் இருந்து ஒரு காட்சி.
 
சண்டி தேவி கோவிலில் ஒரு பக்த குடும்பம்
 
கேபிள் காரில்

ஹரி-கி பௌடி ஒரு தோற்றம்.
 
ஹர்த்வார் ஹரி-கி-பௌடி
 
எல்லாவற்றையும் நினைவிலிருந்தே எழுதுவதால் அவை கோர்வையாக வருவதில்லை. அப்போது இதுபற்றி எல்லாம் எழுதுவேன் என்று நினைத்திருந்தால் ஒவ்வொரு நிகழ்வையும் இடத்தையும் பதிவு செய்து வைத்திருப்பேன்.

ஹர்த்வாரிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டோம். இமைய மலையின் அடிவாரத்துக்குப் போகிறோம் என்னும் நினைப்பே த்ரில் ஆக இருந்தது. இரு பெரிய பாலங்கள்  கட்டி இருக்கிறார்கள் அவற்றை லக்க்ஷ்மண் ஜூலா என்றும் ராம் ஜூலா என்றும் கூறுகிறார்கள் நிறையவே யாத்ரிகர்கள் வருகிறார்கள் எங்கு சென்றாலும் இந்த உணவு விஷயம் படுத்துகிறது. இருந்தாலும் அங்கு நான் ஓரளவுக்கு நன்கு சாப்பிட்டேன். கோவில்கள் எல்லாமே வடக்கில் அமைப்பில் வேறு பட்டுஇருக்கிறது. ஒரு வேளை அவர்களுக்குஆகம விதிகள் என்று ஏதுமில்லையோ.? எப்போது பேரூந்து புறப்பட்டு விடுமோ என்னும் கவலை இருந்து கொண்டே இருந்தது. அங்கு ஆற்றில் கை வைத்தால் சில்லென்றிருக்கிறது. பொதுவாக ஆறுகள் என்றால் எனக்கு அங்கு குளிக்கும் ஆசை வரும். எவ்வளவுதான் நினைவு படுத்த முயன்றாலும் அங்கு நான் குளித்தேனா என்பது நினைவுக்கு வருவதில்லை. அங்கு பெரும்பாலும் ஷாப்பிங் என்பது மாலைகளும் மணிகளும் மட்டுமே. நாங்களும் சிலவற்றை வாங்கிக் கொண்டொம் சில நினைவுகளைப் புகைப் படங்கள் மூலம் புதுப்பிக்க வேண்டி உள்ளது. ரிஷிகேஷிலிருந்து திரும்பி வரும் போது ஹர்த்வாரில் சில கோவில்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு அளவில் பெரிய கோவில் ஒன்றைக்கண்டோம். வைஷ்ணவி கொவிலுக்குள் செல்வது போல் ஒரு குகைப் பாதை மாதிரி அமைத்திருக்கிறார்கள். அங்கு தவழ்ந்து சென்றே கோவிலின் தேவியை தரிசிக்க வேண்டி இருந்தது.மாதா லால் தேவி என்று புகைப் படத்தின் பின்னே எழுதி வைத்திருக்கிறேன் ராமாயணக் கதை மாந்தர்களின் சிலைகள் கலர் கலராக இருக்கின்றன

ஹர்த்வாரிலிருந்து ரிஷிகேஷ்  ஓடும் பஸ்ஸிலிருந்து
, .                                  .                                    
  
ராம் ஜூலா
.
லக்ஷ்மண் ஜூலாவில்
.
லக்ஷ்மண் ஜூலாவில் என் மனைவி.

. 
மாதா லால் தேவி கோவில்

கோவிலின் ஒரு தோற்றம்.


அடுத்தநாள் ஹர்த்வாரிலிருந்து புது டெல்லி. அங்கு என் அண்ணாவின் இரண்டாவது மகள்  இருந்தாள். அவரது மாப்பிள்ளை எங்களை டெல்லியில் மெட்ரோ ரயிலில் கூட்டிச் சென்றார் அங்கே இந்திரா காந்தி சுடப்பட்ட இடத்துக்கும் கூட்டிச் சென்றார்.  ஒரு நாள் ஓய்வுக்குப் பின் பெங்களூர் போகும் ரயிலில் திரும்பினோம். இந்த வட இந்திய யாத்திரையின் போது ஏறத்தாழ எல்லாவித ட்ரான்ஸ்போர்ட் மோடிலும் பயணித்தோம். அக்டோபர்
2-ம் தேதி துவங்கி 22-ம் தேதிவரை பயணித்தது அடிக்கடி நினைவில் வரும் இப்போது அதைப்பதிவாக்கி விட்டேன்                                  .                                    
சுடப் படும் முன் இந்திரா காந்தி நடந்து வந்த பாதை பின்னணியில்
  .                                                                             
இந்திரா காந்தி சுடப் பட்ட இடம் அருகே     (பயண நினைவுகள் முற்றும்)

புதன், 10 டிசம்பர், 2014

நினைவடுக்குகளிளிருந்த ஒரு பயணம் -2


                              நினைவடுக்குகளிலிருந்த ஒரு பயணம்-2
                              ------------------------------------------------------


நாங்கள் ஒன்றரை நாள் தங்கலுக்குப் பின் 5-ம் தேதி மதியம் மதுரா வர ரயில் ஏறினோம்.(மீதி அடுத்தபதிவில்) என்று சென்ற பதிவை முடித்திருந்தேன்
நாங்கள் மதுரா வந்தபோது இருட்டி விட்டது. ரயில் நிலையத்தில் மின் வெட்டு காரணமாக விளக்குகளே இருக்கவில்லை. முன் பின் தெரியாத இடம் இருட்டு வேறு.ரயில் பெட்டிகளின் வெளிச்சத்தில் இறங்கினோம். நல்ல வேளை என் அண்ணாவும் அவரது மாப்பிள்ளையும் ரயில் நிலையம் வந்திருந்தார்கள். கண்டதும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு.
முதலில் திட்டமிட்டபோது மதுராவைப் பார்த்துவிட்டு ஆக்ரா சென்று அங்கிருந்து வாரணாசி செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் அண்ணா மதுராவிலிருந்தே ஆக்ரா சென்று வந்து மதுராவிலிருந்தே வாரணாசி பயணப் படலாம் என்றார். அதுவே சிறந்த ஐடியாவாகப் பட எங்கள் ரிசர்வேஷனை மதுராவிலிருந்து வாரணாசி என்று மாற்றினோம். அண்ணாவின் மாப்பிள்ளை ஊர் சுற்றிப் பார்க்க கார் ஏற்பாடு செய்திருந்தார். மதுராவும் சுற்றி உள்ள இடங்களும் கிருஷ்ணர் பிறந்து வளர்ந்த இடம் எனப் படுகிறது. ஆறாம் தேதி காலை முதலில் ஆக்ரா சென்று வருவதாகத் திட்டம் 
அண்ணா அண்ணியுடன் தாஜ் மஹால் முன்
தாஜ் மஹாலிலிருந்து யமுனை ஆறு ஒரு காட்சி.
ஆக்ராவில் டோங்கா ஓட்டினேன்
ஆக்ரா கோட்டை முன்பு.


ஆக்ரா பார்த்து முடித்தபின் ஃபடேபூர் சிக்ரி பயணமானோம் அக்பரின் மாளிகையும் கோட்டைத் தளமாகவும் இருந்தது காணக் கண்கொள்ளாக் காட்சி. படங்கள் எடுக்கத் தயார் ஆன நிலையில் காமிராவில் ஃபில்ம் தீர்ந்து விட்டிருந்தது தெரிந்தது. மிகவும் ஏமாற்றத்துடன்  சுற்றி வந்தோம். இப்போதுதோன்றுகிறது நம் வெங்கட நாகராஜ் மாதிரி இருப்பவர்கள் சென்றால் அதன் அழகு அத்தனையையும் சிறை பிடித்திருப்பார்கள். இப்போதைக்கு கூகிளில் சுட்ட படம் ஒன்றைப் பதிவிடுகிறேன் ஆக்ரா செல்பவர்கள் ஃபடேஹ்பூர் சிக்ரியை தவறாமல் காணச் செல்ல வேண்டும்
ஃபடெஹ்பூர் சிக்ரி ஒரு தோற்றம் ( கூகிள் உபயம்)
மதுராவில் ஒட்டக வண்டி


மறு நாள் 7-ம் தேதி மதுராவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.கிருஷ்ணன் பிறந்த இடம் எனப்படும் மதுரா கிருஷ்ணா கோவிலுக்குச் சென்றோம். ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. எங்களுடன் அண்ணா அண்ணி அவரது மகள் மற்றும் பேத்தியும் உடன் வந்தார்கள். கிருஷ்ணன் கோவிலுக்கு அருகே ஒரு சிறை போல் தோன்றும் இடமே கிருஷ்ணர் பிறந்த இடம் என்றனர். அந்தக் கோவிலைச் சுற்றி வரும்போது அண்ணாவின் பேத்தி பாத்ரூம் தேடித் தனியாகப் போய்விட்டாள். வர நாழியானதும் எல்லோரும் கவலைப் பட ஆரம்பித்தார்கள். இதற்கு நடுவில் என் அண்ணியும் சொல்லாமல் கொள்ளாமல் பேத்தியைத்தேடிச் சென்று விட்டாள். இந்தக் களேபரத்தில் எதிலும் மனம் லயிக்கவில்லை.அந்த நேரம் முதல்தான் என் அண்ணிக்கு  அல்ஜீமர் என்னும் மறதி நோய் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு வழியாக அண்ணியையும் பேத்தியையும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வந்தார் அண்ணா.

மதுரா கிருஷ்ணன் பிறந்த்தாகச் சொல்லுமிடம் ஒரு மசூதியை ஒட்டி இருக்கிறது பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின் அங்கும் காசி விஸ்வநாதர் கோவிலிலும்( இதுவும் ஒரு மசூதியை ஒட்டியே இருக்கிறது) ஒரு பதட்டம் நிலவியதை உணர முடிந்தது. அங்கு எந்த புகைப்படமும் எடுக்கவில்லைமதுரா கோவில் படத்தை கூகிளில் இருந்து எடுத்துப் பதிவிடுகிறேன்
ஸ்ரீ கிருஷ்ணா கோவில் மதுரா.



கோவிந்த்ஜி கோவில் பர்சானா
துவாரகா தேஷ்  கோவில்
வெண்ணை திருடும் கண்ணன்.

கிருஷ்ணர் கதையில் வரும் பெயர்களுள்ள ஊர்கள் எல்லாம் சுமார் 30 கிமீ வட்டத்துக்குள் வரும் முடிந்தவரை எல்லா இடங்களுக்கும் போனோம். மதுராவில் உள்ள இஸ்கான் பங்கி பிஹாரி கோவிலில் கிருஷ்ணரின் சில கதை நிகழ்வுகள் அசையும் பொம்மைகளாகக் கண்ணாடிக் கூட்டுக்குள் வைக்கப் பட்டிருக்கின்றன. எனக்கு மதுராவில் போகுமிடங்களில் எல்லாம் பலரும் உழைக்காமல் கண்ணன் பெயரைச் சொல்லியே யாசகம் கேட்டது மனதை வருத்தியது அவர்கள தங்களைப்ரிஜ்வாசிகள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள் நந்த் காவ்ன், பர்சானா, கோவர்தன், த்வாரகேஷ் என்னும் இடங்களில் எல்லாம் கோவில்கள் இருக்கின்றன. ஒட்டக வண்டிகளை எங்கும் காண முடிந்தது. யமுனை ஆறும் ஓடுகிறது சில புகைப் படங்களைப் பதிவிடுகிறேன் படங்கள் இடம் மாறி பதிவாகி இருக்கிறது
இஸ்கான் (B)பங்கி பிஹாரி கோவில் மதுரா
அண்ணாவின் பேத்தி.-கண்ணாடி தடுப்பின் உள்ளே யசோதா கிருஷ்ணன்
 
கம்ச வதம் -தடுப்புக்கு வெளியே அண்ணா.
   
ராதாராணி கோவில்- பர்சானா
 
 கோவர்தன் முன்னால் மதுரா
.
 
மத்ராவில் யமுனா நதி பிரம்ம கட்டம்
  மீதி அடுத்த பதிவில்