கடன் பட்டார் நெஞ்சம்
-----------------------------------
என்ன
எழுத என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது
கடன் பட்டார் நெஞ்சம் போல என்னும் வரி நினைவுக்கு வந்தது. அதுவே
பதிவின் தலைப்பு என்று முடிவு செய்தேன்
கடன்
பட்டவர் நெஞ்சம் எல்லாம் கலங்குமா என்னும்
அடிப்படைக் கேள்வி எழுந்தது கடன் வாங்காதவர் இருக்கிறார்களா நாடே கடன் பட்டு நாம் எல்லோருமே கடனாளியாகத்தானே
இருக்கிறோம் நாடு கடன் பட்டால்
நமக்கேன்ன அரசாங்கம் நோட்டடித்து சமாளிக்கும்
காப்பிப்பொடி முதல் சர்க்கரை வரை அடுத்த
வீட்டில் கடன்வாங்குதலும் கொடுத்தலும் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்துகிறது அதில்
அதிக பாதகமில்லைகடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் எனும்போதுதான்கடன்
பட்ட நெஞ்சம் எல்லாம் வருகிறது. கடன்
ஏன் வாங்குகிறோம் நம்மிடம் இல்லாதபோது.
வாங்கியதை நம்மால் திருப்பிக்கொடுக்க முடியும் என்றுநம்பிக்கை இருக்கும் போது.
ஆனால் ஒரு முறை கடன் வாங்கிவிட்டால் எந்த
ஒரு பொருளும் இல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லைகடனோ உடனோ வாங்கி சமாளிக்கலாம்
என்று தோன்றிவிடும் ( கடனோ சரி அது என்ன உடனோ ?.புரியாமலேயே எழுதிவிட்டேன் )
திருமணம்
ஆன புதிதில் மனைவி கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியாதபோது எப்படியும்
திருப்பிக் கொடுக்கத்தானே போகிறோம்என்ற எண்ணம் வரும்போது கடன் வாங்குகிறோம். ஆனால்
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கஎண்ணும்போது அதற்கான ரிசோர்ஸ் இல்லாதபோது பிரச்சனை
வருகிறது
திருமணம்
ஆன புதிதில்சென்னையில் குடி போனோம் வில்லி
வாக்கம் நான் அப்போது பணி புரிந்த
லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் அடுத்து இருந்ததால் அங்கு வீடு வாடகைக்கு
எடுத்தேன் நான் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டால் என்மனைவி தனியே இருக்கவேண்டும் நிறைய
குடித்தனங்கள் இருந்த இடத்தில் கடன்கொடுத்து வசூலிக்க பட்டாணியர் என்று
சொல்லப்படும் மீசை தாடி வைத்துத் தலைப்பகையுடன் ஆஜானுபாகுவான ஒருவர் அடிக்கடி வருவார் அவரைப் பார்த்தே என் மனைவி
அச்சமுறுவாள் அப்படிப்பட்டவர்களிடம் கடன் வாங்கி கொடுக்காமல் எப்படி இருக்க
முடியும் அவர்களும் அன்னிய தேசத்தில் கடன் கொடுத்து அதில் வரும் வட்டியில்
எப்படித் துணிந்து வாழ்கிறார்களோ என்று தோன்றும்ஒரு முறை கடன் வாங்கிப்
பழக்கப்பட்டால் எதையும் இல்லை என்று நினைக்கத் தோன்றாது
ஒரு
வீட்டை வாங்க வேண்டுமென்றால் இப்போது
யாரும் கை இருப்பைப் பற்றி நினைப்பது இல்லைபத்துலட்சம் பெறுமானம் உள்ள வீடு தவணை முறையில் பதின் மூன்றோ பதினாலோ கூட கொடுக்க வேண்டி
இருக்கும் இ எம் ஐ மாதாந்திரமாகக் கட்டும் போது உயரும் மதிப்பு தெரிவதில்லை தவணைகளை கட்டாமல் பணத்தை இழந்தோரும் உண்டு
சிலருக்கு கடன் கொடுத்து மற்றவரை வசப்படுத்தும்
குணமும் உண்டு / திருச்சியில் பணியில் இருந்த போது ஒருவர் வட்டி எனும்
அடைமொழியுடன் அவர் பெயர் அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அவர் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்டும் கூட
ஆவார். புதிதாகப் பணியில் சேருபவரை மடக்கி பாலிசி எடுக்க வைப்பார் எப்படியாவது
ஒருவரைக் குறிவைத்தால் பாலிசி விற்காமல்
விடமாட்டார் . அதற்கு அவரிடம் இருந்த ஒரு உபாயம் பாலிசி கொடுக்க வேண்டியவருக்கு
எப்படியாவது கடன் கொடுத்து விடுவார் அதைத்
திருப்பிக் கேட்கவும் மாட்டார் கடன் கொடுப்பது என்பது அவருக்கு பாலிசி விற்க தூண்டில் போடுவது போல் அவரைக்
கடனாளியாக்கி அதையே சாக்காக வைத்து பாலிசி
விற்றுவிடுவார் ஒரு முறை அவரிடம் இன்னாருக்குப் பாலிசி விற்க முடியாதென்று பந்தயம்
கட்டித் தோற்றிருக்கிறேன்
கடன்
பற்றி எழுதும்போதுஇன்னொரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வருகிறது அப்போது நான் விஜயவாடாவில்
இருந்தேன்
வேண்டப்பட்டவர்
ஒருவரிடமிருந்து உருக்கமான கடிதம் ஒன்று வந்தது. அதில் அவரது வேலை
போய்விட்டதாகவும் அவசரத் தேவைகளைச்
சமாளிக்கத் திண்டாடுவதாகவும் போன வேலை
இன்னும் பதினைந்து நாட்களில் திரும்பக் கிடைக்கும் என்றும் அப்படிக்
கிடைத்தவுடன் என்னிடம் வாங்கும் கடனைத்
திருப்புவதாகவும் எழுதி இருந்தார் இல்லாமையின் கொடுமை எனக்குத் தெரியும் ஆகவே கடிதம்கிடைத்தவுடன் ரூ500/-உடனே ட்ராஃப்ட்
எடுத்து அனுப்பினேன்
ஆயிற்று
ஏறத்தாழ நாற்பது வருடங்கள் கடன் பற்றிய
பேச் மூச் எதுவும் இல்லை நானும் இதுவரைக் கேட்கவில்லை. ஆனால் ஓரோர் சமயம் அந்தக் காலத்து ரூ 500/ -ன் மதிப்பு இப்போது
எவ்வளவு என்று நினைத்துப் பார்ப்பதுண்டு
என்
இளவயதிலேயே பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார் என் தந்தை. ஒரே ஆறுதல் என்னவென்றால் எந்தக் கடனும் இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார் நிச்சயமாக கடன் பட்ட நெஞ்சத்தோடு போயிருக்க மாட்டார் என்பதே மனசுக்கு நிம்மதி
/