நவராத்திரி ஸ்பெஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவராத்திரி ஸ்பெஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

சில நினைவுகள் நவராத்திரி


சில நினைவுகள்  நவராத்திரி


புரட்டாசி அமாவாசைக்கு  அடுத்த பத்து நாட்கள் விசேஷன் தான்   நவராத்திரி அல்லவா
நவராத்திரி எனும்போது நெஞ்சில்  மோதும்  நினைவுகள் ஏராளம் ஒன்பது நாட்களும் புதுப்புடவை சரசரக்கச் பெண்டிர் விதிஉலாவரும்காட்சியும்   சிறுமியர் தங்கள் பாடல் திறமையை வெளிப்படுத்தத் துடித்தாலும் பல தயக்கத்துக்குப்பின் போதும் என்றுசொல்லும் அளவுக்கு பாடி மகிழ்வதை காண்பது இக்காலத்திலும் இருக்கிறதா தெரியவில்லை 1968 என்று நினைவு  திருச்சியிலிருந்தபோது  நவராத்திரி கொலுவுக்கு பொம்மைகள் இருக்கவில்லை ஆனால் என்மனைவிக்கு ஆசை மட்டுமிருந்தது சென் னை குறளகம் சென்று பொம்மைகள் வாங்கி வந்ததும் அதன்பின் ஆண்டு தோறும்கொலு வைப்பதும்  வழக்கமாகி இருந்தது நாங்கள் வேலை மாற்றலாகி விஜயவாடாசென்றதும் பின்  மீண்டும்  திருச்சிவந்ததும் அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று பெங்களூரில் செட்டில் ஆனபோதும் இந்தபொம்மைகளையும் விடாதுஎடுத்துவந்தோம்  2012 வரை  பொம்மைகள் வைத்து  வழிபடுவது தொடர்ந்தது  அதன் பின்  என்மனைவிக்கு கொலு வைத்தது போதும் என்றாகி  இருந்த பொம்மைகளை  வேண்டிய சிலருக்கு கொடுத்ததும்மறக்க முடியாது
 நவராத்திரி கொண்டாட்டம் பல இடங்களில் பல விதமாகக் கொண்டாடப்படுகிறது எது எப்படி ஆனாலும் கொண்டாட்டத்துக்கு பின்னணியாக பல கதைகளுண்டு வங்காளிகள் துர்கா பூஜையாகக் கொண்டாடுகிறார்கள்  வங்காளிகளின் ஒரு பிரதான வழிபாடு  துர்கா பூஜை துர்கா பூஜை சமயம் பெங்காளிகள்  கூடிச் சேர்ந்துவழிபாடு செய்வார்கள்அவர்களது வழிபாடுகளை  திருச்சியிலும் பெங்களூரிலும் பார்த்திருக்கிறேன் பெங்களூரில் RBANM SCHOOL  மைதானத்தில்பெங்களூர் வாழ் வங்காளிகள்  சிறப்பாகக் கூட்டு வழிபாடு நடத்துகிறார்கள் துர்கை பதுமையை வழிபட்டு விஜயதசமிக்குப் பின்  நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்கிறார்கள் வடக்கே ராவணனைக்கொன்றதினமாக அனுஷ்டிக்கப்படுகிறது
 தமிழ் நாட்டில் நவராத்திரிபெரும்பாலும் பெண்கள் பண்டிகையாகவே அனுஷ்டிக்கப்படுகிறது
 திருச்சியில் கொதிகலன் தொழிற்சாலைக்கு அன்றுஎல்லோரும் வந்துபோகலாம்   1960  களில்  நான் பெங்களூர் எச் ஏ எல்லில்  இருந்தபோது தொழிலாளர்கள் தங்கள் கைவினையைக் காட்டஆயு பூஜையைக் கொண்டாடினார்கள் என் சில அனுபவங்களை முன்பே பகிர்ந்திருக்கிறேன் எனக்கு அண்மையில் ஒரு செய்திப்படம்வந்திருந்ததுஅதில் கண்ட செய்திகள்புன்னகைக்க வைத்தாலும்   பண்டிகைகள் வழிபாட்டையும்  மீறி சந்தோஷம் தர உபயோகமாகின்றன என்பதே தெரிகிறது    

 இந்தக்காணொளி நான் எழுதிய பாட்டு ஒன்றுக்கு திரு சுப்பு தாத்தா  மெட்டமைத்து பாடியது 


இந்தப்படமே self explanatory



நவராத்திரி விழாவுக்கு  பெண்களுக்குப் பிடித்தமான  புடவைகளும்  உணவு வகைகளுமே பரிந்துரைக்கப்படுகின்றன

 2012ல் நான் எழுதிய பாடல்

ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்

இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லிப் போற்றுவேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-

புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்

முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்

காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே

உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,

எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே

உன்னை வணங்குகிறேன்