நினைவுகள் சுமை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் சுமை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜூன், 2014

ஈரமில்லா நெஞ்சு....?


                                ஈரமில்லா நெஞ்சு
                                --------------------------



நான்கு  நாட்களுக்கு முன் என் கடைசி தம்பி சென்னையிலிருந்து தொலை பேசினான்( லாண்ட் லைனில்) எனக்கு இடுப்பு வலி. என் மனைவி அவனிடம் பேசினாள் “ அண்ணி, சின்ன அண்ணா உடம்புக்கு முடியாமல் மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்என்றான் . மனைவி விவரங்களைக் கேட்டுக் கொண்டாள். எனக்கு உடல் நலம் சரியாய் இல்லாததாலும் நடந்து வருவது பிரச்சனையாய் இருப்பதாலும் விவரங்களை என்னிடம் தெரிவிப்பதாய்க் கூறினாள். என்ன ஆயிற்று எனக்கு ? அவனைக் குறித்த நினைவுகள் மனசில் ஓடலாயிற்று. என் தந்தையின் இரண்டாம் தாரத்தின் மூன்றாவது மகன் இவன் புத்திசாலித்தனத்தில் சராசரிக்கும் குறைவானவன் என் தந்தை இறந்தபோது ஆறு வயது தந்தை இறந்தபிறகு சிற்றன்னையையும் தம்பிகளையும் பராமரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. நான் பயிற்சியில் சேர்ந்திருந்த நேரம் தந்தையின் இழப்பு பற்றி நான் முன்பே எழுதி இருக்கிறேன் பயிற்சி முடிந்து வந்ததும் அனைவரையும் பெங்களூர் கூட்டி வந்தேன் மூத்த இருவரது படிப்பு முடிந்து அவர்கள் தங்கள் கால்களில் நிற்கத் தயார் ஆகும் வரை நானும் பெங்களூரில் இருந்தேன் திருச்சியில் வேலை கிடைத்துப் போனபோது என்னுடன் இவனையும் என் மைத்துனன் ஒருவனையும் கூட்டிச் சென்று அவர்களைப் பள்ளியில் சேர்த்தேன் இவனுக்குப் படிப்பு ஏறவில்லை. பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி. இவன் இப்படியாவதற்கு முதன்மை காரணம் என் சிற்றன்னைதான் இவனுக்கு தகுந்த அறிவுரை கூறுவதை விட்டு மனசளவில் என்னிடமிருந்து விலகிச் செல்லவும் காரணமாயிருந்தாள் என்ன சொல்லி என்ன பயன் . என் மைத்துனன் நன்கு படித்துவேலையில் அமர்ந்து சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றான். இவன் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒரு வேலை பெற்று இவனும் ஓய்வு பெற்றுவிட்டான். நல்ல வேளை. இவனுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் மிகவும் கஷ்டப் பட்டிருக்கும்
 நேற்று முன் தினம் சென்னையில் இருந்து மீண்டும் தொலை பேசி . இவன் இறந்து விட்டான் என்று. எனக்கு வருத்தமோ அழுகையோ வரவில்லை. என் மனம் மரத்து விட்டதா? நான் வளர்த்த ஒருவன் இறந்து விட்ட செய்தி கேட்டும் என் ரியாக்‌ஷன்  “ ஓ, அப்படியா “ என்பதோடு நின்றுவிட்டது
என்னகாரணம் ? ஒரு வேளை எனக்கு ஞானம் பிறந்து விட்டதா.?மஹாபாரதக் கதைகள் எழுதுவதற்காக பாரதம் படித்துக் கொண்டிருந்தேன் . அதில் பாண்டவர் வனவாசம் போது நச்சுப் பொய்கையில் யக்‌ஷனின் கேள்வியும் தருமனின் பதிலும் நினைவுக்கு வருகிறது பிறந்தவன் இறக்கத்தான் வேண்டும் அனைவரும் அறிந்ததே.  மீண்டும் மீண்டும் பிறப்பும் இறப்பும் வருவது தெரிந்தும் எல்லாமே சாசுவதம் போல் நினைப்பதே  உலகின் மிகச் சிறந்த ஆச்சரியம் . எனக்கு ஏன் இந்த நினைப்பு வருகிறது. நாளை என் முடிவு வந்தாலும் அநேகம் பேர் “ஓ, அப்படியா “ என்பதோடு நின்று விடுவார்களா. இந்த நிலையாமை தெரிந்து விட்டதால் நான் இறந்தபின் நான் நானாக இல்லாமல் நினைவாய் மாறிவிடுவேன் .என்று தெரிந்ததால் தானோ மற்றும். இந்த நினைப்பு அடிக்கடி வருவதால்தானோ என் நெஞ்சும் ஈரமற்றுப் போய் விட்டது.? இந்த நினைப்பே என்னை அன்று இப்படி எழுத வைத்தது . எழுதியது படிக்க இப்படியில் சொடுக்கவும் 
2011-ல் ஒரு நாள் இப்படி இடுப்பு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது உணவு உண்கையில் குப்புற வீழ்ந்தேன் .அதன் விளைவே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று எழுதி இருந்தேன். இப்போதும் அதேபோல் இடுப்புவலி. உண்ணும்போது அந்த நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.WILL HISTORY REPEAT?ஏனோ இந்த நினைவைத் தவிர்க்க முடியவில்லை. ஹிஸ்டரி படிக்க இங்கே சொடுக்குங்கள். என் பழைய பதிவில் திரு.ஜீவி பல ஆலோசனைகளைக் கூறி இருந்தார். இருந்தாலும்  சிறிது முடிந்தாலும் கணினி முன் அமர்ந்து விடுகிறேன். அப்படி அமர்வது என்னை நானே உணர மிகவும் உதவுகிறது. உடல் உபாதை தராமல் இருக்க விரும்புகிறேன்