வித்தியாசமான போட்டி.......(?)
------------------------------------
எழுதுவதற்கு புதிதாய் விஷயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இருந்தாலும் புதிதாய் ஏதாவது செய்ய மனம் விழைகிறது. டி.பி. கைலாசம் அவர்களின்
ஆங்கிலக் கவிதை துரோணரை தமிழ்ப் படுத்தினேன் . ஒரு தமிழ் கவிதையை ஆங்கிலப்
படுத்தினால் என்ன என்னும் எண்ணம் ஓடியது. எந்தக் கவிதையை எடுத்துக்
கொள்வது? என் கவி(வ)தையை நான் சிதைத்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள்.ஆங்கிலத்தில்
இருந்து தமிழ்ப் படுத்தும்போது பொருள் தெரியாத வார்த்தைகளுக்கு அகராதியைப்
பார்த்துப் பொருள் தெரிந்து கொள்ளலாம்.
தமிழில் ஓரளவு எழுதும் திறமை கை கொடுக்கலாம் . ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலப்
படுத்தும்போது அதற்கேற்ற ஆங்கில அறிவு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாய் வந்து
நின்றது. இருந்தாலும் முயற்சித்துப் பார்ப்போமே என்னும் எண்ணமே இதை செய்யத்
தூண்டியது. என் பழைய பதிவான “செய்யாத குற்றம்” சோதனை எலி
ஆனது. இர்ண்டையும் தருகிறேன் என் படைப்பை ஆங்கில மொழியாக்கம் செய்ய நான் வலை
நண்பர்களை இதன் மூலம் அழைக்கிறேன் தமிழ் ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும்
தேர்ச்சி உடையோர் என் பதிவை வாசிப்பவரிலும் உள்ளார் என்று எனக்குத் தெரியும் நல்ல
ஆங்கில மொழியாக்கத்துக்கு பாராட்டு நிச்சயம் . பரிசும் கிடைக்கலாம் என்ன நண்பர்களே
தயாரா.?
செய்யாத குற்றம்
----------------
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
நிறையவே பார்த்து விட்டு,
நித்திரை செல்லப் போகுமுன்,
அன்றைய நிகழ்வுகள்
நினைவினில் நிழலாடும்
நிறையவே பார்த்து விட்டு,
நித்திரை செல்லப் போகுமுன்,
அன்றைய நிகழ்வுகள்
நினைவினில் நிழலாடும்
என்னென்னவோ செய்ய எண்ணியவை
செய்தே முடிக்காமல் மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும் பாதகமில்லை
முக்கியமானதாய் இல்லாதவரை.
கண்ணயர சில நேரம் பிடிக்கும்
பின் கண் மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க் கனவுகள், அலை அலையாய்
கதை போல விரிந்து பரவும்.
எழுத்தில் கொண்டு வந்தால்
இனிதே ரசிக்கலாம்,
இடுகையில் பதிக்கலாம்
என்றெல்லாம் கனவினூடே
நினைவுகளும் கூடவே வரும்,
விடியலில் எழுந்து இனிய கனவுகளை
அசை போட முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்
வடிக்க வார்த்தைகளும் வராது,
கற்பனையும் கை கொடுக்காது.
அதிகாலை நடை
பயிலுகையில் எழுதுவதற்கு விஷயங்கள் யோசிக்கசெய்தே முடிக்காமல் மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும் பாதகமில்லை
முக்கியமானதாய் இல்லாதவரை.
கண்ணயர சில நேரம் பிடிக்கும்
பின் கண் மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க் கனவுகள், அலை அலையாய்
கதை போல விரிந்து பரவும்.
எழுத்தில் கொண்டு வந்தால்
இனிதே ரசிக்கலாம்,
இடுகையில் பதிக்கலாம்
என்றெல்லாம் கனவினூடே
நினைவுகளும் கூடவே வரும்,
விடியலில் எழுந்து இனிய கனவுகளை
அசை போட முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்
வடிக்க வார்த்தைகளும் வராது,
கற்பனையும் கை கொடுக்காது.
நடையினூடே வார்த்தைகளும்
அழகாக வந்து வீழும்.
சற்றே மலர்ந்து வீடு வந்து,
பேனா பிடித்தால் என்னதான்
எழுதுவது, ஒன்றும் தோன்றாது
நினைப்பது ஏன் மறக்க வேண்டும்..?
பார்த்த முகம் பரிச்சயமானது
, பேர்மட்டும்
வேண்டும்போது நினைவுக்கு வராது.
ஆடும் சிறார் கண்டு மனம் மகிழும்
கூடவே ஓடியாட உடல் மறுக்கும்.
எண்ணங்களில் இளமை என்றுமிருக்கும்
உடல் உபாதைகள் முதுமையை நினைவூட்டும்.
வேண்டியதை விரும்பிச் செய்ய விழையும் மனமே,
உன்னால் முடியாது என்று கூடவே கூறும்.
உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா..?
வேண்டும்போது நினைவுக்கு வராது.
ஆடும் சிறார் கண்டு மனம் மகிழும்
கூடவே ஓடியாட உடல் மறுக்கும்.
எண்ணங்களில் இளமை என்றுமிருக்கும்
உடல் உபாதைகள் முதுமையை நினைவூட்டும்.
வேண்டியதை விரும்பிச் செய்ய விழையும் மனமே,
உன்னால் முடியாது என்று கூடவே கூறும்.
உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா..?
இனி என் ஆங்கில மொழியாக்கம்
---------------------------------------------
On to bed before you go to sleep
The
day’s tidings just linger around
Lot of unfinished work loom past
Matters
nothing so long they are unimportant
It
takes some time to go asleep-but
Once in slumber, colorful dreams
Unfold
in waves as stories aplenty
Pen
them on paper or post them in blogs
They
might be interesting to read
Suggestions occur even as the dream is on
Chew the cud of
the dreams in the morn
Only
hazy thoughts and images
Nothing
worth reproducing in black and white
In
the early morn-walk
Words
and thoughts artistic and
Beautiful
would flow in stream
Happy
and back home and try to pen
Words
and thoughts will get unstuck
Why
this happens , questions arise.
Face
is familiar but the name just don’t come on board
Pleased
to see children at play colorful and gay
But
your parts of body wouldn’t let you play
You
are young in your thoughts and feel but
Niggles
of your old age would just remind you
You
are old and unfit
Fellow
men , pray say
Is
old age a punishment for a
Crime not committed..!
(ஆங்கில மொழியாக்கம் செய்து அவரவர் வலையில் பதிவு செய்து எனக்குத் தெரியப் படுத்தினால் போதும் பரிசுப் பரிசீலனைக்கு ஜூன் மாதம் 20-ம் தேதிவரை எனக்கு அறிவிக்கப் படும் பதிவுகள் எடுத்துக் கொள்ளப்படும் )