துயில் எழ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துயில் எழ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மார்ச், 2020

உதய கீதம்





                                     உதய கீதம்
                                      ------------------


பொழுது புலர்ந்தது மெல்லன எழுவீர்
 புள்ளினங்கள்சிறுகாலைப் பொழுதில் பறந்துதம் இரைதனை தேடவே
நாற்திசையும் பறந்து திரிகின்ற்ன
மானிடர்கள்தம் பாபம்போக்கவே   உன்சன்னதியில்
 காத்திருக்கின்றனர் உந்திரு நாமம் சொல்லியே புண்ணியம் விழைகின்றனர் உன் திருக்கண் அருள் பொழிய எழுந்தருள்வாய்  ராமா கிருஷ்ணா கோவிந்தாஎன
நாமங்களில்லா பெரும்பேரைஏதோ அழைத்தே ஏத்துகின்றனர்
நின் திருப்பெயர் பலசொல்லி  நின்னடியார் மெய் மறக்க
நின் செவியால் கேட்டருளி அவர்தம்   குறைநீக்க
எழுந்தருள்வாய
உன்னை      உறங்க விடாமல் குருவாயூர்
நிர்மால்ய தரிசனம்  காணஏங்கும்  பக்தர்க்கு  அருள
மெல்லென எழுவீர் ஆதவன் குணதிசை எழுமுன்

நீர் எழுந்தருள்வீர் ஐயா 
நேற்று   என்பது அனுபவமானால் 
இன்றைய தினம்நம்பிக்கை ஆகட்டும்
பொழுது புலர்கிறது  மெல்லென எழுவீர்

இத்துடனொரு பாடல் பகிர்வு



இன்னுமொரு பாடல் பகிர்வு