ஞாயிறு, 13 மே, 2018


        அன்னையர் தின ஸ்பெஷல்  தாய்மையின்  வலிமை 

அரிய புகைப்படங்கள்


                                       அரிய புகைப்படங்கள்
                                        ---------------------------------


அண்மையில்  திரு துரை செல்வராஜு  அவர்கள் சில பழைய புகைப் படங்களை  தன்  தளத்தில் பகிர்ந்திருந்தார்  அதன் பின்னூட்டத்தில் நானும் சில அரிய புகைப் படங்களை  எனக்கு வந்தவை பகிர்ந்திருக்கிறேன்  என்று எழுதி இருந்தேன்   எனது சேமிப்பு படங்களைப்பார்த்துக் கொண்டிருந்தபோதுஇவற்றையும்  என்  தளத்தில் பகிரத் தோன்றியது நீங்களும் ரசிக்கலாமே 




ஒரு சில படங்கள்  துரை சாரின்பதிவிலும்   காணலாம் 



முந்தைய புகைப்பட பகிர்வுக்குப் பார்க்கவும்  







     

வியாழன், 10 மே, 2018

ஒரு கதம்பமாலை



                                             ஒரு கதம்பமாலை
                                             ------------------------------

கடந்த சில வருடங்களாக மே மாதத்தில் யாராவதுவீட்டுக்கு வ்ருவதுண்டு அவர்களை சிரம் தாழ்த்தி வரவேற்க என்வீட்டில் ஒரு எக்சோடிக் பூ உண்டு  மே மாதம்  மட்டும் தலை காட்டும்  பூவின் வாழ்வும் சுமார் பத்துநாட்கள்மட்டுமே  இந்த ஆண்டு செடி தலைகாட்டி இருக்கிறது மொத்தம் நான்கு செடிகளிருக்கும் இதுவரை இருப்பைக்காட்டியது இரண்டுசெடிகளே   ஒரு பூவும் ஒரு மொக்கும் படமெடுத்துள்ளேன்  இப்பூ பற்றி நான்  சிலமுறை  பகிர்ந்ததுண்டு  இதன்பெயர் ஃபுட்பால் லில்லி என்று கீதா மதிவாணன்தான் முதலில் எனக்குத் தெரிவித்தார் பார்ப்போம் இன்னுமெத்தனை செடிகள் எத்தனைஆண்டுகள் என்று


விரியும் மலரும்  அருகே மொட்டும் 


ஒவ்வொரு ஆண்டும் விஷுப்பண்டிகை வரும்  கேரளத்தவருக்கு விசேஷமானது  அதிகாலையில் கணி வைப்பார்கள் அதைக் காண்பது ஆண்டுமுழுவதும்  நல்லதை காண வைக்கும்  என்பார்கள்  கணி வைப்பது அவரவர் திறமையைப்பொறுத்தது அரிசி பருப்பு உப்பு தேங்காய்  தங்கநகை பழங்கள்  ரூபாய் நோட்டுகள் எல்லாமிடம் பெறும் இது வருஷப் பிறப்புடன் சேர்ந்து வரும் பெரியவர்கள்சின்னவர்களுக்கு கணி நேட்டம் கொடுப்பது வழக்கம்  என் மாமியார் இருந்தவரை  எனக்கும் கிடைத்ததுபுதிய நோட்டாகப்பார்த்துக் கொடுப்பார் என்பேரக்குழந்தைகள என்னிடம் டிமான்ட்  செய்து  ஆளுக்கு ரூ  நூறுக்குக் குறையாமல் கறந்து விடுவார்கள்  அப்படிக் கொடுப்பதிலும் ஒருமகிழ்ச்சி இருக்கிறது
இந்த ஆண்டு என் மனைவி கூடுதலாக தங்க முலாம் பூசிய விக்கிரகங்களையும்   வைத்திருந்தாள் ஒரு காலத்தில் தாமரை படத்துடன் வந்து கோண்டிருந்த  இருபது பைசா நாணயங்களும் தங்க முலாமில் மினுக்கின  அவற்றை நவ ராத்திரியின் போது  பூஜைக்கு  உபயோகப் படுத்துவாள்  108 காயின்களிருக்கும்இந்தமுறை கணியிலும்


விஷுக் கணி  தங்கத் தாமரைகளுடன் 
விஷுக் கணி 

அவரவர் பிம்பம்  காணப்படுவதில்லை 
----------------------------------------------------------------------

என் பெயர் அர்ச்சனா நானொரு புது அப்பாயிண்ட்மெண்டுக்கு அந்தமருத்துவருக்காகக்காத்துக் கொண்டிருந்தேன்  அங்கே அவரது BDS படிப்பைத் தாங்கி அவர் பெயர் கொண்ட பலகையும்  பார்த்தேன் திடீரென என் நினைவலைகளில் ஒரு உயரமான கம்பீரமான முகம் அதே பெயர் கொண்ட உருவம்  தெரிந்தது ஒரு காலத்தில் சுமார் முப்பது  வருடங்களுக்கு முன்   எனக்கு அவர் பால் ஏற்பட்டிருந்த ஈர்ப்பும்நினைவிலாடியது
அவரைப் பார்த்ததும்  அந்த எண்ணம்மறைந்தது இந்த வழுக்கை விழுந்த நரை முடியுடன் கூடியவர் முகச் சுருக்கமுள்ளவர் என் பழைய நண்பராக இருக்க முடியாது
என் பற்கள் சோதிக்கப்பட்ட பிறகு “ நீங்கள் செயிண்ட்  சேவியரில் படித்தீர்களா “ என்று கேட்டேன்
“ஆம் “ என்று சந்தோஷத்துடன்கூறினார்
‘ எந்த ஆண்டு “
’1987’’ என்றார்
“அப்படியானால் என்வகுப்பில் ‘ என்றேன்
சிறிது நேரத்துக்குப்பின்  அந்த வழுக்கை தலையன் நரைத்த முடி கொண்டவன்  முகச் சுருக்கம் கொண்டவன்  என்னை தீர்க்கமாகப் பார்த்து
எந்த வகுப்புக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தீர்கள் “ என்று கேட்டானே ஒரு
கேள்வி ……………..!!


பெண்கள்பற்றி சில பதிவுகள் எழுதி இருந்தேன் ஏன் ஆண்களை பற்றி எழுதக் கூடாதுஎன்று தோன்றியது விளைவு கீழே

ஆண்கள் சங்கட மற்றவர்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும்ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.


 இப்போது ஆண்களும் பெண்களும்.
--------------------------------------------------
ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சிமோட்டுசோடாபுட்டி )

பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபாசந்தியா )

நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.

நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்

ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.

பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.

ஆண் குளியலறையில் டூத் ப்ரஷ்,பேஸ்ட்ரேசர்ஷேவிங் க்ரீம்,
சோப்டவல் ஆகியவை இருக்கும்.

பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.

ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.

ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.

பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.

பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.

ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.


பெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்

ஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்
உடை அணிவான்.

ஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.

பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.

பெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.

ஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.

ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
 
வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
எந்த பலனும் இல்லை. ). 
                                ========================== 





ஞாயிறு, 6 மே, 2018

தேர்தல் சிந்தனைகள்


                                              தேர்தல் சிந்தனைகள்                         
                                               ---------------------------------
      சில எண்ணங்கள் கட்டுக்குள் இல்லை
கர்நாடகா தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததொ என்னும்  வண்ணம் பேசுகிறார்கள் எப்படி இருந்தாலும்  சாமானியன்  வாக்களிக்க வேண்டும் அல்லவா  வாக்களிக்கும் போது  வேட்பாளருக்கா இல்லை கட்சிக்கா என்னும் சந்தேகம் எழுகிறது வேட்பாளர் பற்றி பெரும்பாலோருக்கு தெரியாது அவர் நல்லவர் ஆனாலும்   ஒரு கட்சியின்  கட்டுப்பாட்டுக்குள்  இருக்க வேண்டியவர்  கட்சி இல்லாமல் சுயேட்சையாக இருந்தால் எதுவும் செய்ய இயலாதவர்  ஒரு வேளை பலம்  குறைந்த கட்சிக்கு பலம் சேர்க்க விலை போகலாம்  ஆகவே வேட்பாளர் என்பதை விட கட்சி என்பதே முதல் இடம் பெற  வேண்டும் என்று தோன்று கிறது என்னை கேட்டால்கட்சி தாவியவர் யாராயிருந்தாலும்   நிராகரிக்கப் படவேண்டும்  இவர்களை நம்ப முடியாது சரியான பச்சோந்திகள் ஒரு கட்சி ஆட்சியின் போது அதன் பலனை அனுபவிப்பவர்களுக்கு  தேர்ந்தெடுக்க கஷ்டம் இல்லை  மற்ற படி கட்சியின் கொள்கைகள் பிடித்திருந்தால் அவர்களுக்கு வாக்களிக்கலாம் சில நாட்கள் முன்  படித்த நினைவு வழக்கு உள்ளாவர்களது  வழக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணைக்கு வந்து முடிவெடுக்கப்படும்  என்பதே  யார் மீதெல்லாம் வழக்கு இருக்கிறது என்பதே மறக்கும் அளவுக்கு  மாற்றங்கள் வந்து நல்லவர்கள்போல் நடமாடுபவர்களே அதிகம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதுஎன்று ஒருமத்திய  மந்திரி அன்றே சொன்ன நினைவு (கட்காரியோ ) அது போல்தானே நடக்கிறது  பூனழிக்கும்காவல் பாலுக்கும் காவல் என்றே செயல் படும் மத்திய அரசின்  செயல் பாடுகள்  நம்பத்தக்கதல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது
 ஜன் லோக்பால் என்ற முழக்கம் இருந்ததே நினைவுக்கு  வருகிறதா  அதை நீர்க்கச் செய்து ஏதோ ஒரு லோக்பால்  நிறுவுவதாகக் கூறி  ஹசாரேயின்  உண்ணாவிரதப் போராட்டத்துக்கு  முற்றுப் புள்ளி  இடப்பட்டது ஊழல் வழக்குகளை விசாரிக்கும்  முறையில் ஒரு  கான்ஸ்டி ட்யூஷனல் அந்தஸ்து பெற்றஒரு அமைப்பு ஊழல் வழ்க்குகளை விசாரிக்கும் என்றுபடித்த நினைவு  பலசெய்திகள் மறந்து போய் விடுகின்றனா  அதுவே கட்சிகளுக்கு வர மாகிறது இப்போதுஅரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள் அவர்களுக்குத் தோன்றியபடி(அல்லது அவர்களுக்குவரும் கட்டளைப்படி ) நினைத்த நேரத்தில்  வழக்குகளை  ஆராய்வார்கள் தோன்றியபடி நிறுத்துவார்கள் என்ன வழக்கு என்றே மறந்துபோன நிலையில் விசாரணைக்கு வந்து  தீர்ப்பு வரும்  குற்றம் புரிந்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் இதை எல்லாம்  நோக்கும் போதுஏதோ சக்திக்மறை முகமாக இயங்குவது தெரியும்   இல்லை தெரிகிறதா
கர்நாடகா தேர்தலில்  வலைத்தள  வாசகர்கள்பங்கு மிகவும் குறைவாகவே இருக்கும் இருந்தாலும்  ஊதுகிற சங்கை ஊதி என்  கருத்துகளை கூறி இருக்கிறேன்
வாக்களிக்கும்  போது  தனி வேட்பாளர் முக்கியமல்ல  க்ட்சியே முதன்மை இடம் பெற வேண்டும்  ஒரு செய்தியுடன் முடிக்கிறேன்    We will  get  what we deserve    




                                         

வியாழன், 3 மே, 2018

பெண்களை நம்பலாமா


                              பெண்களை நம்பலாமா 
                               -------------------------------------
 பெண்கள் ஒரு கண்ணோட்டம்
சென்ற பதிவில் என் அணுகு முறைகள் பற்றி எழுதி இருந்தேன்   இது ஒரு மாற்றத்துக்காக
பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும்
முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.? மனதில் படுவதில் இதுவு மொன்று பெண்களில் பலரும்  say yes when  they mean  no குறிப்பிட்ட சில விஷயங்களில்  அவர்கள் conformist களாகவே இருக்கிறார்கள் இருக்க விரும்புகிறார்கள் செக்ஸ் பற்றி எழுதுவது அவர்களுக்கு ஒரு taboo நாடறிந்த உண்மைகளை விட்டு அவர்களுக்குள்ளாக நினைத்துக் கொண்டிருக்கும் சில நல்லதுஎன்று  தவறாக நினைக்கும் கருத்துக்சளில்மூழ்குவார்கள் மனதிற்குள்நினைப்பதுதான்  தெரியாதே இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்   எல்லாமே அனுபவக் கணிப்புகள்தான் பெண்கள் என்று கூறும் போது அது மனைவியராக மட்டும்தான் இருக்க வேண்டுமா நல்ல கேள்வி தயும்  சகோதரியும் கூட மனைவியராக இருக்கிறார்களே   


 அழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;
கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,
ஆனந்தத்திலும் வரலாம்துக்கத்திலும் வரலாம்.
எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்
பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்
தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்
பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வாழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது
உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் “ பரோல்.

அதென்ன  மணவினைச் சிறையில்பரோல்’? மணவினைச் சிறைவாசமென்னும் பதிவு ஒன்று எழுதி இருந்தேன் அது உங்கள்பார்வைக்கு மீண்டும்பதிவாக்குகிறேன் படிக்க இங்கே “ சொடுக்கவும்





                           

திங்கள், 30 ஏப்ரல், 2018

என்றும் நான்



                                                      என்றும் நான்                                                        -----------------------


மனம் ஒன்றுவதில்லை எழுத, என்று எழுதி இருந்தேன் புதிதாக ஏதும் எழுத வராவிட்டாலும் பழைய பதிவுகள் சில மனம்கவர்ந்தன ஆண்பெண் ஈர்ப்பு பற்றி நான் எழுதி இருந்த சில பதிவுகள் இன்று படித்தாலும்  நன்றாகத்தான்  இருப்பது போல் இருக்கிறது இரண்டு மூன்று பதிவுகளை மீள் பதிவாக்குகிறேன் இவற்றின்  ஊடே இழையோடும்சில எண்ணங்கள் ஒரு வேளை என்  மனத்திண்மையைக் காட்டுகிறதோ  நான்  எழுதியதை நானே விமரிசிப்பதுஅழகல்ல  நீங்களும்   படித்துப் பாருங்களேன்  
           ----------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்


காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில் 
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும் 
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே 
எண்ணுகின்றாய்,இது தகுமோ, முறையோ முரணன்றோ?


எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று. 


என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..


பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை. 
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி
.               ---------------

நாலாறு வயதிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்
(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல்கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க் நானிருக்கிறேன்
நாலாறு வயதிலும் நல்ல பையனாக.
                       -------------------------

           
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என் 
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க 
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை 
தடுக்கவும்  இயலுமோ ...?
எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால் 
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி 
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும் 
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி 
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              -----------------------------------

        எந்தன்    உயிருக்குயிர்     நீயே
                
நாடும்    அன்பு     நானோ
           
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
                
கருத்தின்  ஒளியும்  நானோ
            
நற்பண்பின்    சுவை    நீயே ---உன்
                
பாவின்   நயமும்   நானோ
            
என்    எண்ணின்   பொருள்   நீயே
                 
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !
            

 --------------------------------------------------------------------------