நெஞ்சில் நீங்கா நிகழ்வுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெஞ்சில் நீங்கா நிகழ்வுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சில நேரங்கள் -பேரனுடன்


                             சில நேரங்கள்-பேரனுடன்
                            ----------------------------------------
                      ( அல்லது பேரப் பிரலாபங்கள் OR பிரதாபங்கள் ..?)

எங்களுக்குஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. இளைய மகனின் மகன் ,வயது 9, பள்ளியில் விளையாடும் போது அடிபட்டு கீழ் உதட்டில் மூன்று நான்கு தையல்கள் போட வெண்டி இருந்ததாகச் செய்தி.மகன் வேலைக்குப் போகவேண்டும் . மறுமகளுக்கும் பள்ளிப்பணி. பேத்தி கல்லூரிபோக வேண்டும்  இவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் , ஓய்வில் இருக்கட்டும் என்பது மருத்துவர் உத்தரவு. பிள்ளையைத் தனியே வீட்டில் விட்டுப் போக முடியுமா.? நாங்கள் எதற்கு இருக்கிறோம்?. அங்கே ஆஜரானோம். என் பேரனுடன் நேரம் செலவிட இது ஒரு வாய்ப்பு. ஆனால்.... எனக்கு கை ஒடிந்ததுபோல் இருக்கும். அங்கே கணினி என் உபயோகத்துக்கு இல்லை.எப்போது நாங்கள் அங்கு சென்றாலும் அவனுடைய அறையில்தான் தங்குவோம். இந்த முறை போனபோது அறையின் கதவில் இருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது. அவனுக்கான ஒரு உலகில் அவன் இருக்கும்போது தொந்தரவு செய்யப் படுவதை அவன் விரும்புவதில்லை என்று புரிந்தது. நீங்களே பாருங்கள் அந்த வாசகங்களை  code என்பது பாஸ்வேர்ட். சொன்னால்தான் அனுமதி . அது அவன் விருப்பம் போல் மாறும் நான் போயிருந்தபோது NINJAஎன்பதே கோட்



என்னதான் காயம் பட்டிருந்தாலும் அது அவனது spirit ஐக் குறைக்கவில்லை. அவன் ஓடுவதும் ஆடுவதும் காணும்போது நம் வயிற்றில் புளியைக் கரைத்ததுபோல் இருக்கும்.
அவனை ஓர் இடத்தில் இருத்தி வைக்க அவனுக்கு ஏதாவது இதிகாசக் கதை சொல்ல ஆரம்பித்தால் ‘ அது எனக்குத் தெரியும் ‘ என்பான். தொலைக்காட்சியில் பல விதமாகக் காட்டப்படும் காட்சிகள் நிறையவே பார்த்திருப்பான் போல். அது அப்படி அல்ல என்று திருத்தப் போனால் நம்ப மாட்டான். தொலைக் காட்சிகளில் காண்பதில் அவ்வளவு நம்பிக்கை.

இவனே சிறிய பையன். இவனுக்கு இன்னும் சிறிய குழந்தையாக நடிப்பதில் உற்சாகம் அதிகம். குழந்தைக் குரலில் பேசியதைப் பதிவாக்கி இருக்கிறேன் கேளுங்களேன்




கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் இருப்பதைஒரு முறை “இந்த வீட்டில் ஒன்றுமே இல்லை. மிகவும் bore ஆக இருக்கிறது என்றேன். அப்போது அவன் சொன்னது எனக்கு ஒரு பாடம் போல் இருந்தது
“அப்பா, இந்த வீட்டில் ஒன்றும் இல்லை என்று சொல்லாதீர்கள். உங்கள் லுங்கியில் மஞ்சள் நிறம் இல்லை யென்றால் எந்த நிறமுமில்லை என்றாகி விடுமா.?மஞ்சள் நிறம் இல்லை என்று சொல்லுங்கள். அதேபோல் உங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லை என்றால் கம்ப்யூட்டர் இல்லை என்று சொல்லுங்கள். அது எப்படி ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்என்று ஒரு பிடி பிடித்தான். நான் அவனை வாரியெடுத்து உன்னில் என் ஜீன்கள் ஓடுகின்றதடா என்று உச்சி  முகர்ந்தேன். மிகச் சாதாரணமாக அருமையான கருத்தை கூறிச் சென்றான்.

அவனுடைய அறைக்குச் சென்று அவன்விளையாட்டைக் காண வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் அவனுக்குத் தனிமையில் ஆடுவது பிடித்த விஷயம் அவன் விளையாட்டுப் பொம்மைகளை வீடியோ எடுக்க அவனது அனுமதி கிடைத்துப் படமெடுத்தேன்.வீடியோவின் சைஸ் பெரியதாயிருப்பதால் பதிவில் அப்லொட் ஆக மாட்டேன் என்கிறதுவிலங்குகளைப் பற்றி அவன் எனக்கு ஒரு பாடமே எடுத்துவிட்டான் ஆஃப்ரிக்க சிங்கம் ஏஷியாடிக் சிங்கம் எக்ஸ்டிங்ட் ஆன டைனோசரஸ் பற்றியெல்லாம் தெளிவாகக் கூறினான் ஆஸ்திரேலியாவில் வாழும் மீனினம் ப்ளாடிபஸ் மட்டுமே முட்டையிடும் மம்மல் என்றான் அவனோடு எடுத்த நேர்காணல் காணொளி பதிவில் ஏறாதது ஏமாற்ற மளிக்கிறது    
எல்லா வீட்டுக் குழந்தைகளுமதிபுத்திசாலிகள் என்று தெரிந்தாலும் ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே
தாத்தாவின்  தோளில்( இரு வருடங்களுக்கு முந்தையபடம் 
கிரிக்கட் பயிற்சிக்குப் போகிறான்
அக்காவுடன் 
இளைய மகன் குடும்பத்துடன் புது மனை புகு விழாவன்று(29-09-2014)
( கனமான  பதிவுகளுக்கிடையே  ஒரு லைட்டான பதிவு )
இந்தப் பதிவை எழுதி முடித்ததும் இன்று காந்தியின் பிறந்தநாள் என்னும் நினைவு வந்தது. காந்தியைப் பற்றி எழுதலாம் என்றால் நேரம் போதாது, இருந்தாலும் சென்ற ஆண்டு எழுதிய பதிவை ப் பார்க்க இங்கே சொடுக்கவும்