Sunday, September 30, 2018

சபரிமலையாத்திரை


                                    சபரிமலை யாத்திரை
                                    -----------------------------------
சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களுக்கும்   உரிமைஉண்டு என்னும்   உச்சநீதிமன்ற தீர்ப்பு என்னைஇப்ப்திவுஎழுதத்தூண்டியது வந்ததீர்ப்பு சரியா தவறா  என்று அலசல் இல்லை சில அடிப்படைகளை நினைத்துப் பார்க்கும் போது எழுந்த எண்ணங்களே  இப்பதிவின் சாராம்சம்
முன் காலத்தில் சபரி மலைக்குப் போவதே  ஒரு சவாலாக இருந்தது  ஏறத்தாழ 42 கி மீ தூரம்நடந்தே போகவேண்டும்  அடர்ந்தகாட்டுப்பகுதி கரடு முரடான மலை மேடுடனான  காட்டுப்பாதை  வெட்ட வெளியில் ராத்தங்கல் குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிந்துஇருக்க வேண்டும் விலங்குகளின் நடமாட்டத்தால் பயம்  இவற்றைஎல்லாம்சரிகட்ட சில பழக்க வழக்கங்களை விட வேண்டும்   நம் நாட்டில்தான் எதையும்  சரியாகச் சொன்னால் எடுபடாதே  கடவுளின் பெயரால் சொல்லி சில நியமநிஷ்டைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும அப்போதுதான் மக்கள் அனுசரிப்பார்கள் அதற்குப் பழகிக் கொள்ள  சில விரத முறைகள்  ஏற்படுத்தப்பட்டன/ எந்த முறைக்குமொரு காலகெடுவைத்து  சொன்னால் தான் ஏற்கப்படும் ஒரு மண்டல காலம் அனுஷ்டித்தால் அவை பழக்கத்துக்குவந்துவிடும்  காட்டுப்பகுதியில் காலணி இல்லாமல் நடப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடனிருப்பது   நாம் அவ்வாறு இருப்பதை பிறர் அறிய கருப்பாடை அல்லது காவியாடை கட்டுக்குள்செல்ல கை விளக்கு (டார்ச் லைட் ) எதிர்வரும்  விலங்குகளை சமாளிக்க  கத்தி கூட்டமாக ப் போவது சரண கோஷ்மிட்டு போவது  எல்லமே ஏதோ ஒருகாரணத்துக்காக ஏற்படுத்தப்பட்டது நீண்ட நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும் உடல் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தராது இருத்தல்  உ-ம் தாம்பதிய உறவு கொள்ளாது இருத்தல்  தரையில் படுத்து எழல்  .இம்மாதிரி கட்டுப்பாடுகள் இருந்தால் உடலும்  பழக்கப்பட்டு விடும்  ஆனால் இவை எல்லாவற்றையும்   கடவுள் பெயரால்சொன்னல் பயத்துடன் செய்வார்கள்
என்க்கு எதையும்  நானே என்னையே சோதித்து  முடிவு காணுதல்  வழக்கம் சபரிமலைக்கு யாத்திரை யாக மூன்று முறை  சென்றிருக்கி.றேன்   முதல் ஆண்டு 1970ல் என்று நினைவு விரதங்களை மிகக்கடுமையாக அனுஷ்டித்தேன் சபரி மலையில் அங்கப்பிரதட்ஷிணமும்   செய்தேன் ஜோதி தரிசனம் கண்டு உருகி இருந்ததும் நினைவுக்கு வருகிறது வாரமிரண்டு நாட்கள் என்வீட்டில் பஜனை நடக்கும்   அன்னதானமுமிருக்கும்  ஆக முதல் ஆண்டு தரிசனம்   கிடைத்ததில் சில படிப்பினைகளும்   இருந்தது போற்றிசாமி என்றே அழைக்க[ப்[பட்டேன்  இரண்டாம் ஆண்டும்மலைப் பயணமென்னை ஈர்த்தது . இம்முறை என் மூத்தமகன் அப்போது ஐந்து வயது அவனயும்  அழைத்துச் சென்றேன் அம்முறை  யாத்திரை எனக்கு பல பாடங்களக் கற்பித்தது எந்த விரதமும் இல்லாது வருவோரும் எல்லவற்றிலும்சொகுசு காண்போரும் கூட இருந்தனர்  யாத்திரை முடிந்து திரும்பும்போது  குருவாயூரில் சில கசப்பான அனுபவங்கள் (பார்க்க) கிடைத்தது யாத்திரைபற்றிய என் கண்ணோட்டமும் சிறிது மாறத் தொடங்கியது அதன்பின்  சபரி மலை செல்லும் ஆர்வம் குறைந்தது கடைசியாக 2007 அல்லது 2008 ம் ஆண்டுஎன்றுநினைக்கிறேன் என்மனைவிக்கு சபரி மலைக்கு செல்லும் ஆசை எழுந்தது மலை ஏறும் போது  என் மனைவி மாதவிடாய் பருவத்தில்  இருப்பவரா என்று  கேட்டு வழியில் மடக்கினார்கள் அதெல்லாம் முடிந்து விட்டது என்றுசொன்னோம்  ப்ரூஃப் வேண்டுமென்றார்கள் நாங்கள் மலைக்குச் செல்ல ஆர்வலர்கள் தடைவித்திப்பது எனக்குள் கோபமூட்டியது டாக்டர் செடிஃபிகேட் கேட்காத குறைதான்  ஒரு வழியாக  மலை ஏறிதரிசனம் முடித்து திரும்பினோம்  அப்போதே பெண்களுக்கு எதிராக  பலர் செயல் படுவதும் புரிந்தது இவை எல்லாம் சேர்த்து எனக்கு மலை ஏறி தசரிசனம் செய்வது வீண் என்றே  நினைக்க வைத்தது எங்குமிருப்பதாகக் கூறப்படும் ஆண்டவனை எங்கு தரிசனம்செய்தால் என்ன பழனி திருப்பதி குருவாயூர் சபரி மலை போன்ற இடங்களில்  அந்த இடங்கள் பக்தர்கள் வரவால் அதிக சாங்க்டிஅடைவதாக ஒரு நம்பிக்கை  நம்பிக்கை குறித்து ஏதும் கருத்து சொன்னால் பக்தர்கள் பொங்கி விடுகிறார்கள் இந்த நேரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பு  அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் என்னைக் கவர்ந்தன பெண்களை அடிமைகளாகப்பாவிக்கும் ஒரு சமுதாயத்தில் பெண்களே  அதை அறிய முடியாமல் ஆணாதிகத்தாரால்  பழக்கப் படுத்தப் பட்டு இருக்கிறாள்  மாத விடாய் என்பது ஒரு பயாலாஜிகல் நிகழ்வு அதையே தீட்டு என்றுஒதுக்குவது எனக்கு சரியாகப்பட வில்லை  மாதவிடாய் சமயத்தில் இருந்தென்ன யாரும்புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை மாத விடாய் காலத்தில் ஒதுக்கி வைக்கப்படுவது அவர்களுக்கு ஓய்வு கோவிலுக்குச்சென்றுவழிபடுவதும் தவறல்ல என்னும்கொள்கை தேவைஎன்பதையும்  மீறி வேறு காரணங்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை இப்போதெல்லாம்சுத்தமாயும் சுகாதாரமாகவும் இருக்கவும் பல வழி முறைகள் புழக்கத்தில் இருகின்றது இதைவிட்டு மதக் காரணமும் பழங்காலம் முதலே வழக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களையும்     யும் காரணமாகச் சொல்வதுநம்  பாட்ரியார்கியல்  பழக்கத்தையே சுட்டுகிறதுஆணும்பெண்ணும்  சமமென்று இயங்கும் இக்காலத்தில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதும்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை நம்சமுதாயத்தில் எல்லா சடங்குகளிலும் ஆணுக்கே முன்னுரிமை  அப்படி இருப்பதே  சரி என்னும் எண்ணமும்  பெண்களிடையே கூட  ஊறி இருப்பதைஅறிய முடிகிறது  சபரி மலை வழிபாட்டில் எல்லோரையும்  சமமாக பாவிக்கும் வழக்கம் இருப்பது  சந்தோஷம் தருவது அனால் யாத்திரை முடிந்து வந்து விட்டால்  பழைய குருடிகதைதான் விரதபாவிப்புகளென்றுஏதும் தெரிவதில்லை  காஞ்ச மாடு கம்பங்க் கொல்லைக்குப்போன கதைதான்யாத்திரை சமயம்  எல்லோரும்சாமிகள் தான்   ஆனால் இப்போதெல்லாம் விரதம் என்பது எல்லாம்பெயரளவில்தான் இன்றுமாலை நாளைப்பயணம் என்னும்கதிதான்    
 ஒரு கடவுளை நைஷ்டிக பிரம்ம சாரியாகக் காட்டுவதும் பெண்களுக்கு வழிபடும் உரிமையை மறுப்பதும் சரியல்ல, அதை எடுத்துக்கூற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தேவைப்பட்டது Better late than  never    

  

Wednesday, September 26, 2018

மொழியின் அழுகை


                                                             மொழியின் அழுகை
                                                              ---------------------------------


இது ஒரு மீள்  பதிவு
கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.
யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்

" al of a sden u strt 2 lyk sm 1 dat  u wanna c dem evriday"

இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்.
-
இது இன்றைய நிலை கண்டு  எழுந்த
மனநிலை 
எனக்கு வந்த ஒரு வாட்ஸாப்பில் வந்தசெய்தி
ஆசிரியர் கையெழுத்துப்போடக் கற்றுக் கொடுத்தார்  டெக்னாலஜி கைநாட்டிடச்சொல்கிறது


         

Tuesday, September 25, 2018

ஒரு கலவை


                                  ஒரு கலவை
                                 -----------------------



ஒரு சிறுகதை
----------------------------
தினமும் நான் செல்லும்  பஸ்ஸிலேயே வருகிறான்   நான் இறங்கும் நிறுத்தத்தில் அவனும் இறங்குகிறான்  என்னையே பார்த்துக் கொண்டு வருகிறானோ? நான் பார்த்தால்  வேறு பக்கம்  பார்க்கிறான் . இது இப்படியே தொடர்ந்தால் நல்லதற்கல்ல வீட்டில் சொல்லலாமா  வேண்டாமா?
நான் அவனுக்குத் தெரியாமல்  கண்காணித்ததில்அவன் வேலைசெய்யுமிடம் நான் பணி புரியும் கட்டிடத்தின்  மேல் மாடியில் இருந்தது அவன்வீடு  எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கு மூன்றாம்  வீடு
ஒரே தெரிவில் குடி இருந்தும்  ஒரே கட்டிடத்தில் பணி புரிந்தும் ஒருவரை ஒருவர் தெரியாமல்  இருந்திருக்கிறோம் !!!!!!
                    ------------------------------------------------
ஒரு ஜோக்
ஒரு ஜோக் படித்தேன்   ஆங்கிலத்தில்  இருந்தது தமிழாக்கினால் சுவை போய்விடும் அதனால் அதனை அப்படியே தருகிறேன் இது ஒரு
A ஜோக்  ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
Do you speak  English ?
Yes
Name?
Abdulal Rhasib
Sex?
Three to five  times a week
No no  I mean  male or female ?
Yes  . male female  and some times camel
Holy cow !
Yes cow sheep animals  in general
But  is it not hostile?
Horse style doggy style or any style
Oh dear…!
No no deer runs too fast
                -------------------------------------------
குடி நீர்
புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார்  அவர் ஏசு நீரின்மேல் நடந்தார்  என்றார் யாரும் நம்பவில்லை  அவர் மேலும்  சொன்னார் ” ஏசு நீரை வைன்  ஆக மாற்றினார்”
பாதி கோட்டயம்  கிறிஸ்தவர்களாக  மாறியது                    
   




Saturday, September 22, 2018

எண்ணங்கள் இனிதே


                                          எண்ணங்கள் இனிதே
                                          ---------------------------------------
நான்  எழுத/சொல்ல வருவது ஒன்று என்றால்  புரிந்து கொள்ளப்படுவது  ஒன்றாய் இருக்கிறது என் எழுத்துகள் என் எண்ணங்களே  யாரையும் குறி வைத்ததல்ல 

எனக்கு பல ஆண்டுகளாக  மனதில் இருக்கும் வருத்தம் என்ன வென்றால்  பிறப்பொக்கும்   என்று கூறுபவர்களெல்லாம்  அப்படித்தான் நினைக்கிறார்களா தெரியவில்லை  இந்த வேற்றுமை நான் எங்கள்கிராமத்தில் இருந்தபோது  உணர்ந்து வேதனைப் பட்டது மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் அவலம் பற்றி நான் எழுதி இருக்கிறேன் வீட்டின் புழக்கடைபக்கம்வந்து அவர்களது  வருகையைக்குரல் கொடுப்பார்கள் கக்கூஸ் அருகிலிருப்பவர் உணர்ந்து  வெளியே வருவார்கள் அவர்களது  பணிமுடிந்து போனதும் அங்கிருக்கும் சொம்பு முதலான வற்றில் நீர் தெளித்து சுத்திகரம் செய்வார்கள்  கீழ் சாதியினருக்கு கிராமத்தில் நடக்கவே அனுமதி கிடையாது  ஆனால் காலம் மாறி விட்டது இப்போதெல்லாம் அக்கிரகாரத்துள்  பிற சாதியினரும் வசிக்கத்துவங்கி இருக்கிறார்கள் இது சாத்தியமாக ஏறத்தாழ எழுபதுஆண்டுகள்  ஆகி இருக்கிறது இதுவும் முன்னேற்றம்தானே  எதனால் இது சாத்தியமாயிற்று  என்று நினைத்துப் பார்த்தால் அடிப்படைக்காரணமே இவர்களுக்கு   அளிக்கப்பட்ட கல்வி அறிவுதான்  இந்த மாற்றங்கள் எல்லாமே  காஸ்மெடிக்  வகைதான் மனதளவில்  ஏற்ற தாழ்வுகள்  குறைந்திருக்கிறதா நான் படித்து அறிந்த அளவில் சாதிகளைச் சார்ந்தவர் வருவதைத்தடுக்க  இடைச்சுவர் எழுப்பியதாகவும் உண்டு இப்போது எல்லாம்  சிலர் சாதிகள்  நிலைத்து இல்லை என்னும்    ம் பாவனையில் கருத்துகள் சொல்கிறார்கள்ஒரு முறை நான் திருச்சிக்குச் சென்ற போது நண்பன் ஒருவன்வீட்டில் உணவு உட்கொள்ளச் சொன்னான் நண்பன் சொல்கிறான்  என்பதால்மறுப்பு சொல்லவில்லை  அவன் தாயாருக்குநான் எந்த சாதி  என்று தெரியாது தெரியாதவரை தாழ்ந்த சாதிக்காரனாகவே எண்ணிக் கொண்அடுக்களைக்குப் போகும் இடத்தில் கழிப்பிடம் முன்பு ஒர் இடை வெளி உண்டு அங்கே உட்காரவைத்து உணவு பரிமாறினார்கள் ஹாலிலோ அடுக்களையிலோ பரிமாறி இருந்தால் நான்  வேதனை பட்டிருக்க மாட்டேனிருந்தாலும் அந்நிகழ்வு ஒரு உயர்வு தாழ்வு மனதில் தோன்றியதன் விளைவே  என்று எனக்குத் தோன்றியது
யாரையும்  குறைகூறுவதில் எந்த உபயோகமும் இல்லை  ஆனால் இதுஏன்  என்றஎண்ணம் வராமல் இல்லை சாதிகள்சங்க காலத்திலேயே இருந்திருக்கிறதுஇன்றும் இருக்கிறது நாளையும் தொடருமென்று எண்ணுபவர்  மத்தியில் என்  உள்ளக் கிடக்கையை சொ;ல்லாமல் இருப்பது கூடாது இது நம் ரத்த அணுவில் ஊறிய சமாச்சாரம் எளிதல்ல நீக்குவது
 இருந்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் மிகவும் மெதுவாக  படித்தவர் எண்ணிக்கை கூடும்போது  எண்ணங்களில் மாற்றம் நடக்கிறது ஆனால் படிப்பு மட்டும் போதாது என் தளத்தின்  முகப்பில்  நான்  என்னயே  நினைவுப்படுத்திக் கொள்ளஎழுதி இருக்கும் வாசகங்கள் போதும் மனதில் பட்டதைக் கூறுகிறேன்  ஒரு சொல் வழக்கு நினைவுக்கு வருகிறது ஐந்தில்  வளையாதது அறுபதில் வளையாதுஆனால் நமது ஐந்து வயதுகளில்  நிறையவே இண்டாக்ட்ரினேட்  செய்யப்படுகிறோம் அவை வேண்டும் என்றே செய்யப்படுவதல்ல  ஆனால் அப்படி அமைந்துவிடுகிறது கல்வி என்பது உயர்வு தாழ்வு எண்ணங்களுக்கு  தடுப்பு போட வேண்டும் ஆனால் இன்றைய கல்வி நல்ல சீலங்களைக் கற்பிக்க தவறுகிறது இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டவற்றில் இருந்து நல்லதுஅல்லாதது  என்பதைப்பிரித்து எடுத்துக்கொள்ளும்சுய அறிவை  வளர்ப்பதில்லை  
உயர்வு தாழ்வு மறைய முதலில் பொருளாதாரத்தில்  முன்னேற்றம் வேண்டும்இதுவரை காணும் சமஎண்ணங்கள் பொருளாதாரத்தால் வந்தவை  மனதளவில் வர வில்லை அதைக்கொண்டு வர கல்வியே சிறந்த சாதனம்  கல்வி என்னும்போது  தற்போது இருக்கும்கல்வியல்ல நான்கூறுவது  கல்வியாலேயே உயர்வுதாழ்வு எண்ணங்கள் மறைய வேண்டும் ஆனால் இப்போதிருக்கும்கல்வி பொருளாதார  ஏற்ற தாழ்வை அதிக மாக்குகிறது கல்வி வியாபார மாகி விட்டது  நன்சொல்லப் போகும்  தீர்வுக்கு கல்வி வியாபாரிகள் நிச்சயம் எதிர்ப்பு  தெரிவிப்பார்கள் அதையும் மீறி  ஏற்ற தாழ்வைசமன்செய்ய
1)அனைவருக்கும் கட்டாயம் கல்வி கொடுக்கப்பட வேண்டும் அம்மாதிரி அளிக்கப்படும் கல்வி அனைவரும் சமம்  என்னும் எண்ணத்தை வளர்க்க வேண்டும்அதற்கு
2)கல்வியில் ஏற்றதாழ்வு எண்ணங்களை  சமன்படுத்தும்நிலையில்  அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி   இலவசமாக  வழங்கப்பட வேண்டும்
3) ஏற்ற தாழ்வை வளர்க்கும் உணவு உடை விஷயமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அதுவும் விலைக்குஇல்லாதவாறுஇலவசமாக  இருத்தல் அவசியம்
4) பள்ளிகளில்  சாதி மதம்பற்றிய கேள்விகள் இருக்கக் கூடாது
5) பணம்  படைத்தவன்  எதையும் சாதிக்கலாம் என்னும் எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும்
6) சாதி மதம் பற்றிய போதனைகள் வேண்டுமானால்  உயர் கல்வியில் இருக்கலாம்
7)பள்ளி இறுதி வரை இலவசக் கல்வி  சீருடை  உணவு  எல்லாம்  சமமாக  இலவசமாக இருத்தல்  அவசியம்
இளம் வயதிலேயே அனைவரும் சமம் என்னும் எண்ணங்களை வளர்க்க இவை உதவும்
 ஒரு சமமான சமுதாயத்தை உண்டாக்குவது  அரசின் கடமைஅதற்காக செலவு செய்தல் செலவே அல்ல ஆனால் நூற்றாண்டுகளாக நிலவி வரும்கோட்பாடுகளை மாற்றுதல் எளிதல்லஎதிர்ப்புகள் எல்லா இடத்திலிருந்தும்வரும் 
ஒருபதிவரின் தளத்தில் கண்ட வாக்கியம்  நினைவு கூறத்தக்கது
எண்ணங்கள்  அழகானால்  எல்லாமே இனிதாகும்
 
         



Wednesday, September 19, 2018

சீரியசான தமாஷ்



                            சீரியசான தமாஷ்
                           -----------------------------

தமாஷ் 1/
                        தன் தாயிடம்  அடி வாங்கிய சிறுவன் ஒருவன் சோகமாக 
ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அதைக்  கண்ட அவன்  தந்தை 
அவனருகில் பரிவுடன் வந்துநடந்தது  என்ன என்று  விசாரித்தார்
கோபமும் , அழுகையும் ஒருங்கே  சேர  அந்த   சிறுவன்  “ அப்பா வரவர 
உன் மனைவியின்  தொல்லை அதிகமாகிறது. உன்னைப்  போல்  உன் 
மனைவியுடன் என்னால் ஒத்துப்போக  முடியவில்லைநான் ஒத்துப்
போக  எனக்கு ஒரு மனைவி  வேண்டும்  “ என்றான். 

தமாஷ் 2/- 


                       சிறுவன் ஒருவனுக்கு சின்ன சின்ன செலவுகளுக்கு  பணம் 
தேவைப் பட்டது. அப்பா, அம்மா  யாரிடம் கேட்டாலும் கிடைக்க வில்லை
பலவாறு சிந்தித்து  கடைசியில் ஒரு உபாயம் கண்டான். கடவுளிடமே 
பணம் கேட்க முடிவு செய்து  தன் கஷ்டங்களைக் கூறி  தனக்கு ரூபாய் 50/-
அனுப்புமாறு வேண்டி கடிதம் எழுதி --கடவுள்   இந்தியா--- என்று விலாசம் 
எழுதி தபாலில் போட்டான்..கடிதம் கண்ட தபால் துறையினர் அந்தக் 
கடிதத்தை  இந்திய ஜனாதிபதிக்கு  அனுப்பினார்கள்.
                      கடிதம் கண்ட ஜனாதிபதி பையனின் சாதுர்யத்தை  மெச்சி
அவனுக்கு  பணம் அனுப்ப  முடிவு செய்தார்.சிறுவனுக்குப் பணத்தின் 
அருமை தெரிய வேண்டுமென்று  கருதி கேட்ட பணம் ஐம்பதுக்குப் 
பதில்  ரூபாய் 20/- அனுப்பச் சொன்னார்பணம் கிடைத்த சிறுவன் 
மகிழ்ச்சி அடைந்து  கடவுளுக்கு  நன்றி  கூறி ஒரு கடிதம் எழுதினான்
கடவுளே, என் வேண்டுதலுக்கு இணங்கி நீங்கள் பணம்  அனுப்பியதற்கு 
மிக்க நன்றி. இருந்தாலும் நான் உங்களுக்கு  ஒரு விஷயம் தெரிவிக்க 
வேண்டும். ஜனாதிபதி  அலுவலகம் மூலமாக  நீங்கள்  அனுப்பச் சொன்ன 
பணத்தில்  ரூபாய் 30/- லஞ்சமாக எடுத்துக் கொண்டு  ரூபாய் 20/- மட்டுமே அனுப்பினார்கள் 
(சீரியசான பதிவுகளுக்குப் பின் சற்றே தமாஷாக)