Saturday, August 29, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்


                                      கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்
                                          ===================================
 நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்

 காட்சி 15
பாத்திரங்கள்—அருணா குமரேசன் சபாபதி மாணிக்கம்
(அடுப்புப் புகையில் கண்களைக் க்சக்கிக் கொண்டு இருக்கிறாள் அருணா  அங்கு வரும் சபாபதி)
 சபா---- என்ன புகை என்ன புகை -----
அருணா (திடுக்கிட்டு ) நீயா --- ஊரிலே தாத்தாசௌக்கியமா
சபா—ஊரில எல்லொரும் சௌக்கியம்தான் ஆனா இங்க உன்னை சௌக்கியம் இலாம பர்க்க என்னால முடியலை சந்தணமும் சாம்பிராணியும்  புகையறதைத் தவிர வேற ஏதாவது புகையை உன் வீட்டில் நி பார்த்ததுண்டா
அருணா – ஏன் என்னைச்சுற்றியிருந்த உங்க மனசு எல்லாம் புகையறதை நான் பார்த்திருக்கேனே இப்போ புகையில்லாம நீ   தூபம் போடறதையும் பார்த்திட்டுதானே இருக்கேன்
சபா--- அருணா நானிங்க எதுக்காகவும் தூபம் போட வரலை  நீ படாத படுபடறேன்னு கேள்விப்பட்டு ஆறுதலா  நாலு வார்த்தை பேசிட்டுப்போகலாமேன்னுதான் வந்தேன்  நி நல்லப டியா வாழணம்னு நெனக்கிற ஒரே நண்ப நாண்டான்  அருணா
அருணா—அது நிஜமாயொருந்தா முதல்ல நீ வெளியே போயிடு
சபா--- உன் வீட்டுக்கு நான்வந்தது  தப்பா அருணா
அருணா – அவர் இல்லாத நேரத்தில நீ வந்ததுதான் தப்பு  இன்னும்கொஞ்ச நேரத்தில அவர் வந்திடுவார் ……அப்புறம் நீயும்  தாராளமா வரலாம்
சபா--- காவல்காரன் இருக்கறப்போ  முட்டாள்கூட  திருட வரமட்டான் அருணா
ச் சபா --- எவன் கிட்டயோ எதுக்காகவோ நீசெய்துகிட்டஒப்பந்தத்துக்காகநமக்கிருக்கிற ஒப்பந்தம்  அறுந்து போகணுமா  அருணா காலக் கொடுமையாலோ  சந்தர்ப்ப சூழ் நிலையாலோ நீ வேறொருத்தனுக்கு வாழ்க்கை பட்டதால நம்ம காதலை நாம்மறந்துடத்தான்  வேணுமாஅருணா
அருணா---- காதலா உனக்கும் எனக்குமா   அடப்பாவி  உன் நல்லகாலம்  அவர் வீட்டிலே இல்லை
சபா---இருந்திருந்தால்----
அருணா --- முன்னே செய்யாதகுற்றத்துக்காகதூக்குக்கு போகதயாரா இருந்தவர் இப்ப உன்னைக் கொலை செய்துட்டு தூக்குக்கு போக தயாராய் இருப்பார்
சபா---போனால்தான் என்ன சாவித்திரியல்லவா நீ மீட்டுட்டு  வந்துடமாட்டியா  அருணா  நீ இனிமேமீள முடியாது  நீ நென்சக்கிறதுபோல உன்னையும் என்னையும்  இந்தநிலையில்பார்த்தா என்ன நடக்கு ம்தெரியுமா உனக்கு  விபச்சாரி பட்டம் கட்டி உன்னை உன்  வீட்டுக்கு  அனுப்பி விடுவான்  அப்புறம் நீயே  கதின்னுஎன் கால்ல நீ வந்து விழணும் எனக்கு வேண்டியதும்  அதுதானே அருணா மன் இருக்க வேண்டியது  காட்டில மீ  இருக்க வேண்டியது குளத்தில  நீ இருக்கவேண்டியதுஎன் வீட்டிலே (அவள் கையைப்பற்றி  இழுக்கிறான்)
அருணா –பாவி விடுடா கையை(என்று கத்தும்போது மாணிக்கத்துடன்குமரேசன்  )
சபா--- விடு கையை இது நியாயமில்லை  நீ இன்னொருத்தன்  மனைவி
கும--- ( ஆத்திரத்துடன்)துரோகி ( அருணா திகைக்கிறாள்)
சபா--- நீங்க  வந்தீங்க நல்லதாயிற்று  இல்லையென்றால் நடக்க்க் கூடாதது  நடந்திருக்கும்
உம--- நய வஞ்சகம்
அருணா—ஆங்---
சபா—நான்  அப்போதே சொன்னேன்   கேட்கலை
கும--- முட்டாள்
சபா --- நநான் கொஞ்சம்  யோக்கியனா இருண்டடால் உங்க மானம்   தப்பிச்சுது
குமரே----பாவம் 
சபா ---பெண்களை நம்பாதேன்னு  சும்மாவா சொன்னாங்க
கும---நம்பிக்கை துரோகி
அருணா ----நான்சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க
சபா –நியாயத்தை அவர் கேட்டபிறகு  யார் சொல்றதை கேட்கணும்  மன்னிப்புக்கு வழியப் பாரு
கும --- மன்னிப்பா ஒருத்தனுக்கு  மனைவி என்பதை  மறந்த பின்
சபா--- மானமுள்ள  எந்த ஆண்தான் இதைமன்னிப்பான்  வீட்டை விட்டு  துறத்தவா  இந்த உலகத்திலேயே  இருக்கக்கூடாது
அருணா – ஐயையொ நான்  நிரபராதி
சபா --- அப்போ நானா குற்ற வாளி
கும--- அது எனக்கு தெரியாதா கண்ணாலே பர்ட்தஹுக்குபின்  சாட்சியா வேணும் மிஸ்டர் சபாபதி  உங்களுக்கு கடைசியா ஏதாவதுசொல்லணம்னு இருந்தழ் சொல்லிடுங்க
சபா--- இதுக்கு மேலே என்னசார் சொல்றது எல்லாத்தையும்நீங்கதான் பார்த்திட்டு வந்தீங்களே
கும --- ஆனால் நீ மட்டும்பார்க்ககூடததை பார்க்க  வந்தியாடா முட்டாள்
சபா --- என்ன என்னயா முட்டாள்னு----
கும—பின்னே வேறொருத்தன்பெண்டாட்டி மேல ஆசை வைக்கிறவனுக்கு என்ன பேர் துரோகி ஏழைகளோடவாழ்க்கையில்  விளையாடினதுபோதாம மானத்தோடும்விளையாட  வந்திருக்கே ( என்று சொல்லி அறைகிறான் )
சபா—ஐயையோ  நான் நிரபராதி(என்று சொல்லிஒடப்பார்க்கிறான் மணிக்க அவன்சைப் பிடித்து  குமரேசனிடமே தள்ளுகிறான் ) என்னை  ஆளுக்கொரு பக்கமா உருட்டறீண்ங்களே  நான் என்ன பந்தா
மாணி--- –இல்லை இந்தௌலகத்திலே நடமாடக்கூடாத விஷ ஜந்து
கும--- பம்பையும் தேளையும்   கண்ட இடத்ட்க்ஹிலேகொல்லணும்  மாணிக்கம் (சபாபதி தப்பி ஓடி விடுகிறான் ) அவன் நல்ல காலம் தப்பித்துவிட்டான்
அருணா—அதி என் நல்லகாலம் அவ்ன் மட்டும் தப்பித்து ஓடி இருக்காவிட்டால் என்ன செதிருப்பிர்களோ நானல்லவா உங்களை  இழக்கவேண்டி இருக்கும் 
மாணி--- நல்ல  ஆளுண்ணே முத்ல்ல நிங்கபேசினதப் பார்த்தப்போ அண்ணி மேலயே சந்தேக்ப்பட றீங்களோன்னு பயந்திட்டேன்
அருணா – வேற யாராவது  வந்திருந்தா  என் கதி என்ன வாகி இருக்கும்
கும --- யரும்  ஊரிலே உள்ள ஆண்கள்  யோக்கியமானவர்கள்ன்னு நெனச்சு கூம்பம் நடத்தறதில்லை அருணா இந்தச் விஷயத்திலே மனுஷனுக்கு மனைவி மேல நம்பிக்கை  வேணும்
 அருணா—நீங்க மனிடரில் தெய்வம்
கும – இதுக்கு போய் மனுஷன்  தெய்வமாக வேண்டாம் மனுஷனா இருந்தாப்போதும்
                           திரை                      
















Friday, August 28, 2020

நினைவுகள் ஊடே ஒரு பயணம்

                                                  நினைவுகள் ஊடே ஒருபயண ம்
                                                  ---------------------------------------------------


பயணிப்பது என்க்கு பிடித்தசெயல் ஆனால் இப்போதெல்லாம் நினைத்துக் கொள்ளக்கூட  முடிவதில்லை என்னை யாராவது பயணிக்க அழைப்பது அவர்களே அவர்கள் தலையில் பாரமேற்றிக் கொள்வது போலாகும்  ஆனால் நான் பயணம் செய்த  இடங்கள்பற்றியும் அந்தநினைவுகள்பற்றியும்  நான்  எண்ணுவதை யாராலும்  தடுக்கமுடியாது  அப்படி பயணித்த இடங்களில் ஒன்று  பஞ்சாப்  அது நடந் து ஆகிறது 35 ஆண்டுகள் எழுதுவது எல்லாமே நினைவலைகள் பயணத்துக்கு முன்  சீக்கிஸம்  பற்றிய ஒரு புத்தகம் வாங்கினேன் அதை படிக்க துவங்கும் முன்  அப்போது எங்கள் வீட்டிலிருந்தசெல்லம்  செல்லி  அதைக் கிழித்து போட்டு விட்டது செய்ததுதவறு என்று உணர்ந்ததாலோ  என்னவோ  நான் அலுவலகம்   விட்டு 
 வரும்போது என்னைக்காணும்முன்  அது சோஃபா அடியில் சென்று ஒளிந்து கொண்டது நான் பஞ்சாப் சென்று வந்த அனுபவங்கள் மனதில் ஓடியது

அம்ருதசராஸ் மற்றும் கோவிந்தவால் சென்று வந்த அனுபவங்கள் .  1985 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். சம்பவங்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு மாதம் தேதிகள் நினைவுக்கு வருவதில்லை. நான் திருச்சியில் பாரத மிகுமின் கொதிகல தொழிற்சாலையில் உள்ள வால்வ் டிவிஷனின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பில்  இருந்த காலம்.

     BHEL நிறுவனம்அகில இந்தியாவில்எல்லா  இடங்களிலும் நீக்கமற  நிறைந்திருக்கும்  ஒரு நவரத்னா கம்பெனிபஞ்சாப் மாநிலத்தில் சில வகை வால்வுகளை  உற்பத்தி செய்ய ஒரு தொழிற்சாலை நிறுவ எண்ணி கோவிந்தவால் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்அதற்கு டெக்னிகல் மற்றும் தரக்கட்டுப்பாடு  சம்பந்தமான விவரங்களை விளக்கவும் ஆலோசனை கூறவும்  BHEL  திருச்சியிலிருந்து  டிசைன் அல்லது உற்பத்திப் பிரிவிலிருந்து பொறுப்புள்ள அதிகாரி ஒருவர் சென்று கோவிந்தவால் தொழிற்சாலை அதிகாரிகளுக்கு விளக்க வேண்டி இருந்தது..அந்த தொழிற்சாலை அப்போது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்ததுஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் முடிவுற்று பஞ்சாபே ஒரு கொதிகலன் போல இருந்த நேரம்திருச்சியிலிருந்து அங்கு செல்ல யாரும் துணியவில்லை.டிசைன் மற்றும் மானுபாச்சர்  உடன் நெருங்கிய தொடர்புடைய தரக்கட்டுப்பாடு அதிகாரி யாரையாவது அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதுதினமும் இருபது முப்பது கொலைகள் நிகழும் பஞ்சாபுக்கு யாரும் போக விரும்பவில்லைதரக்கட்டுப்பாட்டின் பொறுப்பிலிருந்த என்னிடமும் கேட்கப்பட்டதுநான் சரியென்று ஒப்புக்கொண்டேன்.அதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தனஒன்று எனக்குப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப் பிடிக்கும்இரண்டாவது என் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லைமூன்றாவது எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கும்t STATISTICAL PROBABILITY அதாவது பஞ்சாப் மாநிலத்தில் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நாளில் 25 பேர் தீவிர வாதிகளால் கொல்லப்படுகிறார்கள் என்றால் லட்சத்தில் ஒருவர் சாக வாய்ப்பு என்று அர்த்தம்அந்த லட்சத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்பது HIGHLY IMPROBABLE .ஆக  நான் பஞ்சாப் பயணமானேன். 

         வால்வ் தொழிற்சாலை அமைக்கப்பட இருந்த கோவிந்தவால்  அம்ருதசரசிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் முப்பது  கிலோ மீட்டர். கோவிந்த வால்   கெஸ்ட் ஹவுஸ்  தயாராக  இல்லாத நிலையில் அம்ருதசரசிலிருந்து தான் .         தினமும் பயணிக்கவேண்டும்  தினமும்  கோவிந்தவால்   தொழிற் சாலை    நிர்வாகி என்னைக் காலையில் ஹோட்டலிலிருந்து பிக் அப் செய்து பணிமுடிந்ததும் மாலையில் ஹோட்டலில் விடுவதாக ஏற்பாடு.
          எனக்கு ஓரிரு சீக்கிய நண்பர்கள் உண்டு. என்னுடைய பயிற்சி காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலத்தவரிடமும் பரிச்சயம் உண்டு. தமிழ் நாட்டில் அநேகமாக சீக்கியர்களை நாம்  அங்கு மிங்குமாக  ஒன்றிரண்டு   பேரைத் தான்   காண முடியும்நான் அம்ருதசராஸ் சென்றபோது  எங்கு பார்த்தாலும் தலைப்பாகை அணிந்த சர்தார்ஜிகளை கண்டபோது என்னை நானே சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.

          
முதல் நாள் நான் கோவிந்தவால்  தொழிற்சாலை சீக்கிய  நிர்வாகியுடன்  டாக்சியில் பயணப்பட்டேன். அவரிடம் அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தால்அவர்அதிகமாகபேச விரும்பவில்லை. அவருக்கு  என்னைப்  பார்த்து பயம் போல் தோன்றியதுஅம்ருதசரசிலிருந்து கோவிந்தவால் போகும் வழியில் தரன் தரன் என்ற ஒரு இடம்தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இடம்அதன் அருகே நாங்கள் சென்றபோது எங்கள் கார் வழி மறிக்கப்பட்டதுபயத்தில் உறைந்து போனேன்கூட வந்த சீக்கிய நிர்வாகி என்னை பயப்படாதிருக்க கூற வண்டியை விட்டு இறங்கினோம் .மூன்றுநான்கு சர்தார்ஜிகள் எங்களை அருகிலிருந்த ஒரு சிறிய குருத்வாராவுக்கு அழைத்துச சென்றனர்அங்கிருந்த லங்காரில் இலவச உணவு அளிக்குமிடம்.) எங்களுக்கு சாப்பிட சப்பாத்தி சப்ஜி கொடுத்து உபசரித்தனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளம் மாதிரி தெரிந்த ஒரு பாத்திரத்தில் எங்களுக்கு விருப்பமிருந்தால் ஏதாவது பணம் போடலாமென்றார்கள்.என் பாக்கெட்டில் கை விட்டு கிடைத்த (ரூபாய் ஐம்பதோ நூறோ தெரியவில்லை.)பணத்தைப் போட்டேன் .அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் மேல் மதிப்பு சற்றே அதிகமாயிற்று.பார்ப்பதற்கு முரடர்கள் போல் தெரிந்தாலும் வாழ்க்கையில் கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் .இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.சீக்கிரமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்யாரையாவது நம்பினால் அடிமை மாதிரி எது வேண்டுமானாலும் செய்வார்கள்உடலுழைப்புக்கு அஞ்சாதவர்கள்வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்.


         
ஒருமுறை போபாலில் ஒரு சர்தார்ஜியின் கடையில் என் பிள்ளைகளுக்காக ஆயத்த உடைகள் வாங்க சென்றேன்அன்று காலை தலைமையகத்திலிருந்து என் வேலை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கூறி உடனே ட்ராம்பே செல்லப் பணித்திருந்தனர்அதனால் உடை வாங்கி இருக்கும் பணத்தை செலவு செய்ய தயக்கமாயிருந்ததுஅந்தக் கடை முதலாளி என்னிடம் பணம் இல்லாவிட்டால் பாதகமில்லைஊர் பொய் சேர்ந்தபிறகு அனுப்பிக் கொடுங்கள் போதும் என்று கூறி ,முன்பின் அறியாத என்னிடம் உடைகளைப் பாக் செய்து கொடுத்தார்மனித இயல்பு தெரிந்து பழகுவதில் சர்தார்ஜிக்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை என்னிடம்  ஏற்படுத்தினார் அவர்.  பஞ்சாபில் எனக்கு வேண்டி ஏதாவது  செய்வதற்கு வாய்ப்பு தருமாறு வேண்டி வேண்டி உதவியவர்கள்  நிறையப் பேர்.  பஞ்சாபில் பிச்சைக்கார  சர்தார்ஜிகளைப் பார்ப்பதே   மிகவும்  அரிது.


        பஞ்சாப் சென்றபோது அம்ருதசராஸ் பொற்கோவில் காணும் பாக்கியம் கிடைத்தது.ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடம் காணும்போதுகாந்தி படத்தின் காட்சிகள் நடுவே நான் இருந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டதுபொற்கோவிலில் சீக்கியர்களின் அதிகார பீடமான அகல் தக்த் இருக்கிறதுஅங்குள்ள ஒரு ஓவியபட காலரியில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது மனம் பதைக்கிறதுசீக்கியர்களின் தியாகங்களும் உயிர்பலிகளும் கோரமான படங்கள் மூலம் தத்ரூபமாக வெளிப்படுகிறதுஅதுதான் அவர்களது உள்ளக் கனலை அணையாது காக்கிறதோ என்னவோ.

        ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்கோவின்தவாலுக்கு ஒரு  தொழிற்சாலை கிடைத்ததில் மகிழ்ந்த அவர்கள் அது சரியாக  சிறப்பாக  நடைபெற ஆலோசனைகள் கூறி வழி நடத்த வந்த என்னிடம் மிகவும்  பவ்யமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள்கோவிந்தவால் குருத்வாரா சீக்கியர்களின் விசேஷ புண்ணிய தலங்களுள் ஒன்றுஅங்கு நான் சென்றபோது (நம்மிடையே பூர்ண கும்ப மரியாதை தருவதுபோல்)அங்கு எனக்கு சிரோப்பா எனப்படும் மஞ்சள் காவியில் தலைப்பாகை துணி தந்து மரியாதை செய்தனர்அதை நான்  இன்னும்  பொக்கிஷமாக  வைத்திருக்கிறேன்.  சீக்கியர்களைப்  பற்றி  எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது.


                           இன்றும்  என்னிடம் பொக்கிஷமாக இருக்கும்   சிரோப்பா                 




.