Tuesday, February 25, 2020

எல்லொரும் நல்லவரே



                                     
                       எல்லோரும் நல்லவரே
                       ----------------------------------------------        

இன்று காலையில் எழுந்ததும் மனம் உற்சாகமாக இருந்ததுஒரு விஷயம் பலரும்  அனுபவித்து  இருக்கலாம்  எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலை யை  எட்டி இருக்கிறோம் தெரியுமா  சாதாரணமாக  கேட்கும்டயலாக் தான் ஆனால் இம்மாதிரியான எண்ணங்கள்  எல்லாமே அந்த வயசில் தோன்றி இருக்காது அதுதான் வாழ்வின் நியதி என்று சொல்லாமலே தெரிந்திருக்கும்
நான் பள்ளியில் படிக்கும் போது ஃபௌண்டன்  பேனாவை உபயோகித்ததுஇல்லை  இல்லையெ என்னும் எண்ணமிருந்ததெ இல்லை  ஆனால் கடந்த அந்தகாலநினைவுகளை அசை போடும்போது மிகவும் கஷ்டப்பட்டதுபோல் இப்போது தோன்றும் அப்போதெல்லாம் வாழ்வில் இதெல்லாம் சகஜமென்ற  எண்ணமிருந்திருக்கும் நான்  முதலில் வேலைக்குப் போகபோகிறேன் என்றபோதுதான் முதன்முதலில் காலணி என்க்கு கிடைத்தது  அதையே இன்றுநினக்கும்போதுநான் இழந்த்து அதிகம் போல் தோன்றுகிறது இப்படி நீட்டிமுழக்கி நான்கூறுவதேகஷ்டம் சுகம் என்பது எல்லாம்   ரிலேடிவ் விஷயங்கள்  என்று தெரிவிக்கவே
அது சரி என்மனம் காலையிலேயே  உற்சாகமாக இருக்கக் காரணம் நம்மைசுற்றி இருப்போரெல்லாம்  நல்லவர்களே நாம் தான் அனாவசியமாக குறை பட்டுக் கொள்கிறோம் எது எப்படியோ என்னைச் சுற்றி நல்லவர்களே  இருக்கிறார்கள் நிறைய எம்பதி  உள்ளவர்கள் வயதான  என்னையும் என் குறைகளையும்   கண்டுகொள்வதில்லை  எனக்குத்தான் என் குறைகள் பூதாகாரமாகத் தோன்றுகிறது சின்னச் சின்ன வேலைகளை எனக்காக் செய்கின்றனர் ஒரு முறை பதிவில் என்வயதை போட்டுக் கொள்வது  எனக்கு ஏதோ ஐயா ஸ்தானத்தை எனக்குக் கொடுக்கவா என்று ஒரு நண்பர் கூறி இருந்தார் என்வீட்டு வேலைகளுக்கு நான் அதிகம் சிரமப்படுவதில்லை பிஎச் இ எல்லுக்கு மாதம் ஒருமுறை  மருந்து வாங்கப்போகவேண்டும்  என்னை கண்டதும்  பிஎச் இ எல் கேட்டை திற்ப்பார்கள் நான் போகும் ஆட்டோவுக்கு தனிபெர்மிஷன் தென்னை மரத்தில் இருந்துதேங்காய்பறிக்க  வருபவர் என் வீட்டுக்கே வந்து  தாமதத்துக்குமன்னிப்புகேட்டார் மா மர்த்திலிருந்து மாங்காய்பறிக்க வருபவரும் குறையின்றி செய்துவிட்டுப்போவார்  எனக்கு முடி வெட்ட வீட்டுக்கே வந்து வெட்டி விடுவார் எனக்கு அங்கும் இங்கும் செல்ல முடியாது என்குறை தெரிந்து உதவுபவர் பலருண்டு எனக்குஇந்தகணினி மூலம்பணம் பரிவர்த்தனைசெய்வது சிரமமாய்இருக்கிறது  என் மகன் அந்தக் குறை தெரியாமல் செய்து  விடுகிறான்  இப்போதெல்லாம்  நானென் குறைகளை  பெரிது படுத்துவதை குறைத்துக் கொண்டுவிட்டேன்



      நல்லவன்   எனக்கு நானே நல்லவ 






Friday, February 21, 2020

ஒரு அதிசயக் கோடீஸ்வரி



                   ஒரு அதிசயக்ம்கோடீஸ்வரி 
                 ----------------------------------------------------------    


வலைப்பதிவர்கள் பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்று பெருமையுடன் எழ்துவதைப்பார்க்கிறேன் நா தொலைக்காட்சிநிகழ்ச்சிகளைப்பார்ப்பவன்   வேண்டமென்றால் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ரிமோட் நம் கையில் இப்போதெல்லாம்  எல்லா சானல்களையும் எல்லோரும் பார்ப்பதில்லை குறிபீட்ட சானல்களுக்கே கனெக்‌ஷன்கொடுத்திருப்போம் கலர் டிவி தமிழில்  நடிகை ரதிகா கோடீஸ்வரி  நிகழ்ச்சியை பெண்களுக்காகவே நடத்துகிறார்அம்மாதிரியான நிகழ்ச்சி ஒன்றை நான் காண நேரிட்டது அதில் ஒருமாற்றுத்திறனாளி பெண் ஒரு கோடி ரூப்பாய் வென்றதுதான்  ஹைலை காதுகேட்காதபெண்மணி  வாயும்பேச முடியாத் மன்னிக்கவும்  சரியாகப் பேச முடியாதவர் கணொளி இணைக்கிறேன்






Image result for images kodeeswari kausalya



விருப்பமிருப்பவர்கள் கலர் டிவி யில் பார்க்கலாம்  இந்தமாதிரி மாற்றுதிறனாணிகளைக் காணும்போது  உற்சாகம்வருகிறது நானும் கேட்கப்படும்  கேள்விக்சளுக்கு  பதில் தெரிகிறதா என்று  என்னையே சோதித்து பார்ப்பேன்   எல்லாகேவிகளுக்கும்  பதில் சரியாக 




Wednesday, February 19, 2020

உடலும் நலமும்



                                                   உடலும் நலமும்
                                                  ---------------------------------


திருச்சியில் இருந்து விஜயவாடா சேர்ந்தகதை எழுதி யாகி விட்டது  மறுபடியும் திருச்சி வந்ததும்சொன்னால்தான் வட்டம் முடிவடையும்விஜயவாடாவில் என்னைசுழலும்மெஷின்களை  நிர்மாணிக்கவும் ஸ்டோர்சாமான்களை பொறுப்பேற்கவும் பணித்தார்கள்  வேலை மிகவும் அதிகம் உடல் பாதிக்கும்பணியாகவும்   இருந்தது  நேரம்காலம் இல்லாததாய் இருந்தது இதற்கிடையே ஸ்லிப் டிஸ்க்  ஆகி விட்டது  மருத்துவர் என்னை கம்ப்ளீட்  ரெஸ்டில் இருக்கக் கூறினார் அப்போதைய நிலையில் அது சாத்தியமில்லாமல் போனதுஎன்னை குண்டூரில் இருந்த எலும்பு சிகிச்சை நிபுணரிடம்   ரெஃபெர்  செய்தார்கள் அவர் நான் உட்கார்ந்த நிலையில் வேண்டுமானால்  முடிந்தால் பணிசெய்யலாம்  என்றார் ஒரு நாளும்  விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலைஒரு நாளைக்கு  12 மணிநேரத்துக்கும்   அதிகபணி  திருச்சிக்கே மீண்டும்போகலாமென்று  விண்ணப்பித்தேன்   திருச்சிக்கே சென்றும்  கேட்டேன்  அப்போது திருச்சியில் நிர்வாக  இயக்குனராக  இருந்தவர்  ரிப்லேஸ்மென்ட் கேட்காவிட்டால் ஓக்கே என்றார்  அது  அப்போதுஇயலாத சூழ்நிலை அவரிடம என் நிலை கண்டு உதவக் கேட்டேன்  அவருக்கு என்ன்னைப்பற்றி நன்கு தெரியும்  பார்க்கலாமென்றார்  நன் விஜயாவாடா வரும்முன்னே அவர் ஆக்‌ஷன் எடுத்திருந்தார்  நான் விஜயவாடா வந்த ஓரிரு  நாளில் எனக்கு திருச்சிக்கு மாற்றல்  ஆர்டரிருந்தது திருச்சியில் என்னை வால்வ் டிவிஷன் தரக்கட்டுப்பாட்டு பொறுப்பை ஏற்கக் கூறினார்கள்
இதன் நடுவே என்மனைவி என்னை குண்டூரில் இருந்த  அக்குபங்க்சர் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றார்  அப்போது அங்கு இருந்தசிகிச்சை பெறுபவரைப் பார்த்து இது வேண்டாமென முடிவுக்கு வந்தார்  உடலில்பல பாகங்களில் ஊசி குத்தி அசையாமல்பலர் இருப்பதைப் பார்த்து பயந்து விட்டாள் அப்போது ஒரு சிட்டிங்க்கு  ரூ 400  என்றனர்  எத்தனை முறை வேண்டுமோ தெரியவில்லை மேலும்பலரெஸ்ட்ரிக்‌ஷன்களைம்    கூற்னார்கள் என்மனைவி திருப்பதி உண்டியலில் ரூ 1000 செலுத்துவதாக வேண்டிக் கொண்டார்  அக்குபங்க்சர் மருத்துவம் எடுக்கவில்லை ஸ்ல்ப் டிஸ்க் தொந்தரவு தொடர்ந்தது கூடவே செர்விகல்  ஸ்பாண்டிலைடிஸும்  சேர்ந்துகொள்ள  தினமும் ஃபிசியோதெரபி  எடுத்து கொண்டிருந்தேன்   இவைபற்றி  எல்லாம்  உபாதைகள் பலவிதம் என்றுபதிவு கள் எழுதி இருக்கிறேன் பெங்களூர் வந்தும் தொடர்ந்த உபாதைகளால் ஒருமுறை விழுந்து விட்டேன்அதுவே நான் வீழ்வேனென்று  நினைத்தாயோ என்னும்  பதிவானது
 நன்  பல உபாதைகளுக்கு  ஆளாகி  இருக்கிறேன் நம் உடலின் எந்த  உறுப்பும்  தன் இருப்பை தெரிவிக்கா விட்டால்  உடல் நலம்என்று அறியலாம் என்பதே என்  கண்டுபிடிப்பு 

இனி டி எம் எஸ் குரலில் ஒரு பக்தி இசை 






கடவுள் பிரத்தியட்சமாவார் 









அலை பாயும் மனம் 










Saturday, February 15, 2020

நான் முன்னாலே போறேன் பின்னாலெ வா நீ



                                       நான் முன்னாலே போறேன்  பின்னாலே வா நீ
                                       --------------------------------------------------------------------------



.
விடிகாலையில் விழிப்பு வந்தது என்படுக்கை சன்னலை ஒட்டியே இருப்பது வெளிச்சம் வேண்டி

சன்னல் ஸ்க்ரீனை  ஒதுக்கி வைப்பது வழக்கம் விழிப்பு வந்ததும்  அருகில்

படுத்திருக்கும்மனைவியைப்பார்த்தேன்  அவளுக்கென்ன தூங்கு கிறாள் மனசில் அல்லாடுப்வன்

 நானல்லவா வயது கூடக்கூட எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை சாலைஒரத்து

  விளக்குக்கள்அறைக்குள்ளும் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தப்பாழும் மனம்   தினமும் அவள்

 உயிர்ப்புடன் தான்   இருக்கிறாள்  என்று

 உறுதி செய்துகொள்ளும் 


  நான்  அன்றெழுதிய கவிதை  நினைவுக்கு வந்தது

  நிலவைப் பழிக்கும் முகம்

  அதில் நினைவைப் பதிக்கும் கண்கள் (இப்போது உறக்கத்தில் கண்கள்மூடி இருகின்றன்)

  படர்கொடி வெல்லும் துடியிடை

  இடர் சேர்க்க இடையிடையாட

என்றெல்லாம்  எழுதிக் குவித்தேன் 

  இன்றும் அவளெழில் குறைந்தாளில்லை

  கூறப் போனால் அக அழகு

  மாசற்ற மெருகு கூடியே உள்ளது
.
  காதலுக்குக் கண் இல்லை என்பர். –நான்

  ஓங்கி உரைப்பேன், காதலுக்கு வயதுமில்லை.

. அன்றோ தளதளவென்று இருப்பாள் இன்று தளர்ந்திருக்கிறாள்

இருவருக்கும் வயதாகி விட்டது இருவரும் ஒருநாள்  இல்லாமல் போக வேண்டியதுதான் யார்

 முந்தி என்பது தெரியாது  ஆனால் என்னால் தனியே இருக்கமுடியாது  என் சுபாவம் அப்படி

 என்னால் எல்லா இடங்களிலும் என்னைப் பொறுத்திக் கொள்ள முடியாது அப்படி ஒரு சுபாவம்

 எங்கும் என் கை ஓங்கி இருந்து  பழகி விட்டது மேலும்   இப்போதெல்லாம் என்னால் தனித்து

 இயங்க   முடிவதில்லை என்னை  எல்லோராலும் ஏற்றுக் கொள்வது சிரமம்  அவளில்லாமல்

 நானில்லை என்னும் பாடலே நினைவுக்கு வருகிறது சொல்லப் போனால் நான்  வெர்சுவலி  ஒரு

குழந்தை  என்னோடு 56 வருடங்கள்  குப்பைகொட்டியவள் நான்நினைப்பதை உடனே கூறுபவள்

 அது போல் என்னால் முடிவதில்லை  என் குறைகள் எனக்குத்தெரியும்  எழுத எண்ணங்கள்

கோர்வையாய் வ்ருவதில்லை  

         வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

         
என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
         
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
         
மூடிய கண்கள் விழித்து விட்டால்
         
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே

 என்பதிவு ஒன்றுக்கு  பின்னூட்டமாகஒருவர் சொல்கிறார்  சொல்கிறார்,வாழ்க்கைதுணை தேடும் போது பெண் தன் முதல் குழந்தையை தேடுகிறாள், ஆண் தன் இரண்டாவது அன்னையை தேடுகிறான் என்று.சத்தியமான  மொழி அது  நான் என் இளவயதில் என்னைப் பெற்றவளை இழந்தேன்பெற்ற அன்னையின் அன்பு அறியாதவன்  என்  மனைவியைத் தாரமாகமட்டுமல்லாமல்  தாயாகவும் காண்கிறேன்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்

.இருந்தாலும்  எண்ணங்கள் கட்டுக்குள் இல்லை வேண்டலாம்  நான் முன்னாலே

 போறேன் பின்னலே வா நீ      









Tuesday, February 11, 2020

பெயர்க் குழப்பம் வாய் முஹூர்த்தம் உடன்சிலபொன் மொழிகள்




                        பெயர்குழப்பம் வாய் முஹூர்த்தம்  உடன் சிலபொன் மொழிகள்
                       -------------------------------------------------------------------------------------------------------------
 பெயர்க் குழப்பம்
முதலில் ஒரு பெயர் குழப்பத்தை பார்ப்போம்  வழக்கம்பொல நான் திருச்சியில் இருந்தபோது நண்பர் ஒருவர் தன்நண்பனுக்கு எனக்கு திருமணப் பத்திரிக்கை வைத்தார்களா என நினைவுப் படுத்த ஜீ எம்  பால சுப்பிரமணியத்துக்கு பத்திரிக்கை வைக்க மறக்காதே  என்றிருக்கிறார் அவர் மிகவும் சிரமப்பட்டு அப்போது ஜெனரல் மானேஜராக இருந்த பால சுப்பிரமணியத்துக்கு அவரிடம் பேசிப் பழக்கமில்லாததால் மிகவும்சங்கோஜப்பட்டு வீட்டுக்குச்சென்று திருமணத்துக்குஅழைப்பு வைத்து  வேண்டி இருக்கிறார்  பிறகு வந்தவர் பழக்கம் இல்லாவிட்டாலும் ஜீஎம்மை  அழைத்திருக்கிறேன் என்றார்  நான் எனக்கு பத்திர்க்கை வரவில்லை என்றவுடன்  விசாரித்து அறிந்ததே மேற்சொன்ன சம்பவம்   என் இனிஷியலில்இருந்த ஜீ எம்பதவியில் ஜீ எம் ஆக இருந்தவரை நாட வைத்திருக்கிறது

வாய்முஹூர்த்தம்  
 ஒரு நாள் என்வீட்டுக்கு நண்பரொருவர் வந்தார் கவலையுடன் காணப்பட்டார் விசாரித்தபோது அவர் மனைவிக்கு பிரசவகாலம்  வெகு அருகில் இருக்கிறது என்றும்  முன்பே பெற்றெடுத்த  நான்கு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன என்றுமிந்த ஐந்தாவது பற்றிகவல்சை என்றும்   தெரிந்தது நான் ஆறுதல் சொல்லும்வகையில் இப்போது பிறக்கப்போகும்   குழந்தை நன்கு ஆரோக்கியத்துடனும் நல்ல ஆயூளுடனும் பிறக்கும் என்றும்  கூறி ஆறுதல் அளித்தேன் இது நடந்து இரண்டு மூன்று மாதம் கழித்து அந்த நண்பர் என் வீட்டுக்கு மீண்டும்வந்தார் வந்தவர் முகமலர்ச்சியுடன் இனிப்பும் கொடுத்தார் என்வாய் முஹூர்த்தமோ என்னவொ குழந்தை பிறந்து  ஆரோக்கியமுடன் இருப்பதாகவும் நானே பெயர் வைக்க வேண்டுமென்றும் கூறினார் அவர்கள்முருக பக்தர்கள்முருகன்பற்றிய பெயராக வைக்கவும் வேண்டினார் பிறந்தது பெண்குழந்தை ஆதலால்  கார்த்திகா என்று பெயர் சூட்டினேன்மிகவும் மகிழ்ந்துசென்றார் அவ்ர்  என் என் உறவினர் ஒருவர்திருச்சிக்கு மாற்றலாகி  வந்தார் ஆருக்கு நான் பி எச் இ எல்லில் இருப்பதுதெரிந்தது  சுமாரான பதவியில் இருப்பதும்தெரிந்தது ஆனால் என்விலாசம் தெரியவில்லை அவர் தீ அணைப்பு பிரிவில் தலைமைப் பொறுப்பில்இருந்தார்   பி எச் இ எல்  தீ அணைப்பு ப்ரிவில் பலரை அவருக்கு தெரிந்திருந்தது அவர்களில் ஒருவரிடமென்பெயரை கூறி என் நை தொடர்பு கொள்ளச் சொன்னார் பாவம் அந்த மனிதர்  மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்   பிஎச் இ எல்  தொலைபேசி டைரக்டரியில் முக்கியமானவர் பெயர்களிருக்கும்  அவர் அப்போது வேலையில் இருந்தஎல்லா பால சுப்பிரமணியங்களியும் மாற்றி மாற்றி அழைக்கத்தொடங்கி எனையும் அழைத்து  இன்னாரைத் தெரியுமா என்றுவிசாரித்திருக்கிறார்  நான் தெரியும் என்றதுமவர் குரலில் இருந்த அப்பாடியில்  அவர் மகிழ்ச்சி தெரிந்தது பின் அவரெனைப் பார்த்ததும்  நான் என் உறவினரைப்பார்த்ததும் நிகழ்ந்தது

 இனி சில பொன் மொழிகள்
 கருவறை இருட்டுக்கும்   கல்லறை இருட்டுக்கும் நடுவே இருக்கும் வெளிச்சமேவாழ்க்கை
ஒருபயாலஜி மாணவன்  சொன்னது ஜீரணமென்பது வலது கையில் தொடங்கி இடதுகையில் முடிவது  
 இனி ஒரு பக்திப்பாடல்  


  

















             
                 

Sunday, February 9, 2020

சில உப நினைவுகள்


                       
                              சில உப நினைவுகள்
                              ----------------------------------

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?




 தொழிலக உப நினைவுகள்
 மாற்றலாகி சென்னையில் பவர் ப்ராஜ்க்ட்ஸ் டிவிஷனில் எங்கு மாற்றல் ஆகி எந்த சைட்  என்று தெரியாத நிலையில் இருந்தபோது விஜய வாடா அனல் மின்ன்  நிலைய  நிர்மாணப் பொறுப்பை ஏற்க ஒரு உதவி பொது மேலாளர்  சென்னையில் வந்திருந்தார் என்னைப் விஜய வாடா வர விருப்பமாஎன்று கேட்டார்  நான் என்  நிலையை விளக்கி என்னை நிர்வாகம் சரியாக நடத்த  வில்லை என்று குறை கூறினேன்   அப்போது அவர் ஒரு கதை கூறினார்
ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார் அந்த ஊர் மக்களின் கஷ்டங்களுக்கு ஆறுதல் கூறி தேற்றுவார் மக்களின்  நன் மதிப்பைப் ;பெற்றவர்  ஒரு நாள் அப்பெரியவரின் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது அடக்கமுடியாமல் அழுது கொண்டிருந்தார் ஊர் மக்கள் அவரிடம்  சென்று ஊருக்கே ஆறுதல் கூறும் நீங்கள் இப்படி மனம் ஒடியலாமா என்று கேட்டனர் அதற்கு அவர் சொன்னாராம்  துக்கம் என் வீட்டில் அல்லவா    வேறு யாருக்கோ ஆறுதல் கூறுவது போலா என்று கேட்டாராம் அதுபோல்தான் அவரது நிலையும்  என்றார்  நான்  அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டேன்
விஜயவாடாவுக்கு நான் செல்ல ஒப்புக் கொண்டதும்  அவர் என்னிடம் அங்கு சென்று வரும் ஊழியர்களுக்கு அவர்களின்  பிள்ளைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்க வேண்டியதைச்செய்யச்  சொன்னார்

       விஜயவாடா சென்றதும் அனல் மின் நிலையம் கட்டப் படப் போகும் இடம் பார்க்கச் சென்றேன் கொண்டப்பள்ளி என்னும் ரயில் நிலையத்திலிருந்துதான் வந்து சேரும் கட்டுமானப் பொருட்கள் எடுத்துவரப் படவேண்டும் ஒரு சூபர்வைஸர்  ஏற்கெனவே பணியில் இருந்தார். அவருக்கு நான் அங்கு வந்ததே பிடிக்கவில்லை. என்று சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது. எனக்குக் கீழே பதில் சொல்லும் நிலை அவருக்கு ரசிக்கவில்லை


   விஜயவாடாவில் பென்ஸ் சர்க்கிள் அருகே ஆஃபீஸ் அமைந்திருந்தது அருகேயே வீடு பார்த்தேன். படமட்டாவில் NSM PUBLIC SCHOOL  நல்ல பள்ளி என்றறிந்து அங்கே சென்றேன். அது மாண்ட்ஃபோர்ட் குழுமத்தாரால் நடத்தப் படுவது என்று தெரிந்தது நான் கூனூரில் படித்த பள்ளியும் அவர்கள் நிர்வாகத்துக்குட்பட்டதே. என்னை அந்த ப்ரின்ஸிபாலிடம் அறிமுகப் படுத்திப் பேசிக் கொண்டிருந்தபொது, அவர் கூனூரில் அதே பள்ளியில் எனக்கு மூன்று வருடம் ஜூனியர் என்று தெரிந்தது. பள்ளியில் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தால் பள்ளிக்கு நாங்கள் என்ன செய்வோம் என்று அவர் பேரம் பேசினார். அந்த மாநிலத்துக்கே மின்சாரம் தரப்போகும் அனல் மின் நிலையம் நாங்கள் தருவோம் என்றெல்லாம் கூறி பள்ளியின் முன்னேற்றத்துக்கு எங்களிடமிருந்து கணிசமான உதவி எதிர் பார்க்கலாம் என்று கூறி வரப்போகும் ஊழியர்களின் பிள்ளைகள் படிப்புக்கு உத்தரவாதம் பெற்றுத் திரும்பினேன்.

இதைப்பற்றி எல்லாம் எழுதும்பொது வேறுசில நினைவுகளும் வருவதை தடுக்க முடியவில்லை நான்பள்ளி இறுதி படிப்பு முடித்தவுடன்  வேலைதேடி அலைந்ததை முன்பே எழுதி இருக்கிறேன் அந்த நேரத்தில் ஒரு விளம்பரத்தில் எச் ஏ எல்லில் பயிற்சிக்கு ஆட்கள் வேண்டும் என்றி ருந்தது  மூன்றாண்டுகள் பயிறசி  முடிந்ததும் B  மெக்கானிக்காக பதவி  வெற்றிகரமாக முடிந்த பயீற்சிக்கு பின் வேலை  சம்பளம் தினம்  ரூ ஒன்றுடன் பத்தணா ப்ளஸ் ரூ 39 அலவன்ஸ்
 அப்பொதெல்லாம் மெகானிக் என்றல் ஏதோ காருக்கு அடியில் படுத்து வேலை செய்வது என்னும் எண்ணமே வரும் காலம்மாறி நான் எச் ஏ எல்லில்லிருந்து அம்பர்நாதுக்கு அனுப்பபட்டதும்  இரண்டு ஆண்டுகள்பயிற்சி  முடிந்ததும் எச் ஏ எல்லில்சூப்பெர்வைசராகப்பணி  மாதம் சம்பளம் ரூ 210 /-- காலம் மாற ஒரு வழி  அப்படி இருந்த நான்  என்னைப் பற்றிக் குறை கூறுவது தவறு  என்றேநினைக்கிறேன் 
 நன் அடிக்கடி எழுதுவது you get what you deserve  அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் ஆட்டுக்கு வால் அளந்துதான் வைக்கப்பட்டு இருக்கிறதோ   


Thursday, February 6, 2020

ஒரு காணொளிக் கலவை



                                            ஒரு கணொளிக்கலவை
                                                -------------------------------

                                                                      மா ஜிக்


சாகச ம்



 மாஜிக் --2


                                              தூககமுன்  கண்களை தழுவட்டுமே



வாழ்க்கையில் என்றாவது ஒருவன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியை நாடுவது முடியாத காரியம்.
                                                --- யாரோ ---
பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல் செய்யவேண்டும் .சிலர் மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல.   --- ஆஸ்கர் வைல்ட்.---

பணத்திற்காக திருமணம் செய்யாதே. அதைவிட எளிதில் கடன் கிடைக்கும்
                                      ---ஸ்காட்டிஷ் பழமொழி---
நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப் படமாட்டேன். எனக்குத் திருமணமாகி இரண்டு வருடமாகிறது.       -----சாம் கினிசன்

பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம் அதிகம். அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம் இறக்கிறார்கள்,
                                      ---எச். எல் .மென்கென் ---
புது மணத் தம்பதிகள் புன்னகைக்கும்போது ஏன் என்று புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது ஏன் என்று தோன்றும்.---யாரோ--
காதலுக்குக் கண் இல்லை. கலியாணம் கண் திறக்க வைக்கும்.--யாரோ--
காணொளி களைக் காண நேரமில்லாதவர்களுக்கு  அ;ல்லது விருப்பமில்லாதவர்களுக்கு
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
கனிமொழி என் மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கு என் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீ தானே
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்









Monday, February 3, 2020

தொடரும் அலுவலக நினைவுகள்



                                 தொடரும் அலுவலக நினைவுகள்
                                    -----------------------------------------------------


பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?


என்னவெல்லமோ நிகழ்வுகள்:  எதை எழுத எதை விட  சில முக்கிய விஷயங்கள் என்னில் ஏற்படுத்தியஉறுதியை  அதிகரிக்கச் செய்ததை மட்டும் நினைவு கூறுகிறேன் பாய்லர் வேலையில் சில பார்ட்களின் மூலம்  தெரிய வேண்டும் அதற்காக அந்தப்பாகத்தின்  மீது அதன்  ஜாதகத்தையே செதுக்கவேண்டும் அதற்கு வேண்டி அப்பொருளின்  மீது எல்ல டீடெயில்ஸ்களையும்  செதுக்க வேண்டும் சிலபொருட்கள் நூற்றுக்கணக்கில் கடைந்தெடுக்கப்படும் அவை சில செமி ஆடோமெடிக்  மெஷின்களில் தயாராகும்  ஆனால் அவற்றின் மீது செதுக்கப்ப்டும்  விஷயங்கள் மானுவலாகதான் செய்யமுடியும்மெஷினில் தயாரகும் வேகத்தோடு ஒப்பிடமுடியாது  நேரம் எடுக்கும்   இப்படி செதுக்குவது  தரக் கட்டுப்பாட்டுபிரிவின் கீழ்வரும் ஒரு சமயம்  பொருட்கள் அதிகமாக இருக்கும்  எண்களைச் செதுக்குவது  தாமதமாகும் சில நேரங்களில்  பொருட்களின் தாமதத்துக்கு தரக்கட்டுப்பாடே காரணம் என்றுபுகார் எழும்ஒரு முறை பொது மேலாளரிடம்  புகார் சொன்னார்கள் அவர் என்னிடம் தாமதம் இல்லாமல்  பொருட்கள் போக வேண்டும் என்று கண்டித்தார் நான் இருக்கும் நிலையை விளக்கி எத்தனை சீக்கிரம் அனுப்பமுடியுமோ அத்தனை சீக்கிரம் அனுப்புகிறேன் என்றேன்   அவர் உடனே என்றார் நான்  சீக்கிரம் அனுப்பமுயற்சி  செய்வதாகக் கூறினேன் அவர் மறுமுறை அங்கு வரும்போது  எதுவும் தேங்கி  இருக்கக் கூடாது என்று சத்தம் போட்டார்  நான் என் இம்மீடியட் உயரதிகாரியிடம் கூறினேன் அவர் பார்ட் கள்  மீது  பன்ச்  செய்ய எங்கிருந்தெல்லாமோ  பல ஆட்களை ஏற்பாடு செய்தார் இருந்தும்   அப்பொருட்கள்  இரண்டுநாட்கள் தேங்கி விட்டன நான்  பொது மேலாளருக்கு  பயப்படலாம்   ஆனால் இருக்கும் வேலை யாருக்கும் பயப்படாது என்னை பல நாட்களுக்குபின்   பார்த்த அவர் என் நேர்மையைப் பாராட்டினார் என்  ஒளிவட்டம்   அவருக்கும் தெரிந்ததுஎன்றே தோன்றியது

என்னை நெர்முக தேர்வில்  தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று கூறி அதற்கும் ஒரு கிரேட் குறைவாகதேர்ந்தெடுத்து ஆர்டர் வந்ததுபற்றிக் கூறி இருந்தென்  அப்போதெல்லாம் பி எச் இ எல் லில் நான்கு அல்லது ஐந்து  ஆண்டுகளுக்குள்  ஒருப்ரொமோஷன் கிடைக்கும்   ஆனால் எனக்கு அந்த உதவி எஞ்சினீர் கிரேடை அடைய ஆறே முக்கால் ஆண்டுகளாயிற்றுஅந்தப் பொதுமேலாளர் இன்னும்பெரிய பதவி எல்லாம் வகித்து பி எசி எல்  வந்திருந்தபோது என்னைப் பார்த்து அட் லாஸ்ட்  யூ காட் யுவர் ப்ரொமோஷன்   என்றார்  எனக்கு ப்ரொமோஷன்  கொடுத்து என்னை கன்ஸ்ரக்‌ஷன் சைட்டுக்கு  மாற்றலும் கொடுத்தார்கள்  அப்போது வேலையை ராஜினாமாசெய்யலாம என்னும் யோசனையும் இருந்தது கன்ஸ்ரக்‌ஷன் சைட்கள்இந்தியாவின்  எல்லா ப்குதிகளிலும்   இருந்தது எங்கு என்று தெரியாத நிலையில்பிள்ளைகளின்   படிப்பு கெட்டு விடுமோ என்னும்பயம்வந்தது சென்னையில் ஒரு குடித்தனம் வைத்து எனக்கு எங்கு மாற்றல் ஆர்டர் வருகிறதோ அங்கு நான் தனியாகவுமிருக்க என்னை  ஆயத்தப்படுத்திக் கொண்டேன் கோடம்பக்கம் ட்ரஸ்ட் புரத்தில் வீடு வாடகைக்குப் பிடித்து பிள்ளைகளை நுங்கம்பாக்கம் கிருஷ்ணசாமி ஹையர் செகண்டரி  ஸ்கூலில் சேர்த்தேன்  இதன்நடுவே திருச்சியில் உதவி பொதுமேலாள்ர் ஒருவருக்கு விஜயவாடா அனல் மின்  நிலையம் நிர்மாணிக்கும்   ஆர்டரும் இருந்தது  அவரென்னை சென்னை ஆஃபீசில் பார்த்ததும்விஜயவாடாவுக்கு வர விருப்பமா என்றுகேட்டார் அவர் என்னைப்பற்றியும் என் திற்ன்பற்றியும்  ஐ மீன்  ஒளிவட்டம்  பற்றியும்  கேள்விப்பட்டிருந்தார் விஜயவாடா வெகு தொலைவு இல்லை என்பதால்நான்சரி என்றேன்  முதலில் என்னை விஜயவாடா சென்று அங்கு வரப்போகும் ஊழியர்களின்   பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட வசதியும் ஏற்பாடுசெய்யச் சொன்னார் (அதுபற்றி பிறிதொரு பதிவில்விளக்கமாக எழுதுவேன் ) நான்  தொழிற்கூடத்தில்வேலை பார்த்தவன் கட்டுமானப் பிரிவு பற்றி ஏதும் தெரியாதுவிஜயவாடா விட்டு வரும்போது  அங்கு பணியிலிருந்த சூப்பெரிண்டெண்டண்ட் சொன்னது இங்கே கூறுவது நான் என்னை எவ்வள்வு தூரம்  ஆர்வமுடன் உழைத்தேன் என்பதைக்  காட்டும் அவர் சொன்னார் “நானிங்கு வரும்போதெல்லாம் இந்த மெஷின்கள்  பாலு பாலு  என்று கூறுவதைக் கேட்பேன்” நான் நான்காண்டுகள் அங்கு பணி ஆற்றினேன்   எதையும் கற்றுத் தேறலாம்என்னும்  தன்னம்பிக்கை வந்ததுவிஜயவாடா விட்டு வரும்போது நான் சீனியர் எஞ்சினீர் என்று வந்தேன்  திருச்சியில் என்னை வால்வ் டிவிஷன் தரக் கட்டுப்படுப்பிரிவின் பொறுப்பாளனாக இருந்தேன்
அப்போது பிஎச் இ எல் நிறுவனம் ட்ரெஸ்ஸர் இண்டஸ்டிரீஸ் உடன் வால்வு செய்ய ஒப்பந்தம்  போட்டு இருந்தார்கள் டோவா TOA ஜப்பானுடனும் ஒப்பந்தமிருந்தது  தரக்கட்டுப்பாட்டுக்கு நான் பொறுப்பாளனாக நான்  இருந்தும் முதலில் அந்நாடுகளுக்குச்சென்றுபயிற்சிபெற என்னை முதலில் தேர்ந்தெடுக்கவில்லைஎன்னை என்றும் ஒதுக்கச் முடியாது என்று நம்பினேன் அதேபோல் சற்று தாமதமானாலும் என்னை ஜப்பானுக்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள்
எனக்கு  டோவா  எஞ்சினிர்கள்டமிருந்தும்  ட்ரெஸ்ஸேர்  எஞ்சிநீர்களிடமிருந்தும்  நல்ல பெயர் இருந்தது நான் ஜப்பான்  சென்று இருந்தபோது  அங்கிருந்தவர்கள்பலரு என்னிடமே கற்க நிறைய இருப்பதால் என் காலடியில் அமர்ந்து எனனுபவங்களைப் பகிர வேண்டினார்கள்
நான் விஜயவாடா வ்ட்டு வரும்போது சீனியர் எஞ்சினீயர்அதாவது நான் பிஎச் இ எல் சேர்ந்து பத்தாண்டுகளுக்கும்  மேல் கழிந்தபின் நானொரு சீனியர் மானெஜராக இருந்திருக்க வேண்டியவன் 1991ல் சீனியர் மானேஜர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை இன்னும் தொடர்ந்து இருந்தால் மனதளவில்  சங்கடங்கள் அதிகம்நேரலாம்  என்று நினைத்து விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்து விட்டேன் அதாவது என் 53 வயதில்  நான்  பிறருக்காக உழைத்ததுபோதும்  என்றாகி  விட்டது விருப்ப ஓய்வு பெறும்போது நான் ஒரு மானேஜெர் பிஎச் இ எல்லில் சேரும்போதே அந்தகுறிப்பிட்டபத்வில் இருந்தால்  நான் எங்கோ போய் இருக்க வேண்டியவன் எமாற்றப்பட்டுவிட்டேன்  என்பது தவிர நான் அங்கிருந்தவரை என்னை நன்கு வெளிப்படுத்தித்தான் வந்தேன்   என்ஒளி வட்டம் நன்கே மிளிர்ந்தது