Wednesday, June 28, 2017

மரம் செடி கொடிகள்


                             மரம் செடிகொடிகள்
                             ----------------------------------
 காணிநிலம்  வேண்டும் என்ற பாரதி அதில் எப்படிக் குடியிருக்க வீடும்  தென்னை மரங்களும் வேண்டும் என்னும்  கனவுகள் கண்டான் எனக்கு அந்தக் கனவுகள் எல்லாமிருக்க வில்லை. விஜயவாடா பணியின்  போது என்  மாமியார் மாமனார்  சொல்லி வாங்கிய இடம்பெங்களூரில் அமைந்தது  வீடு
கட்டுவதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை  நாங்கள் திருச்சியில் இருந்தபோது அந்த இடத்தில் யாரோ குடிசை போட்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்தார் என்  மாமனார் என் நண்பன் ஒருவனும் என்னை வீடு கட்டும் படி தூண்டினான்  பெங்களூர் வந்து  பார்க்கும் போது எங்கள் இடத்துக்குப் பக்கத்து மனையில் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள் எங்கள் இடத்தில்  வீடு கட்ட வேண்டிய மணல் செங்கல் போன்றவற்றைப்  போட்டு இருந்தனர் மற்றபடி எந்த ஆக்கிரமிப்பும்  இருக்கவில்லை வந்ததுதான் வந்தோம் வீடு கட்டும்  ஆயத்தவேலைகளில் இறங்க முடிவெடுத்தோம்
வீடு கட்டும்  வரை படம்  தயாரிக்கும் போது இடத்தின்  முன்னும்  பின்னும்  சிறிது இடத்தை விட முடிவு செய்தோம்  அப்போதைய அந்த முடிவே இப்போது என்வீட்டின் முன்னும் பின்னும்  பசை பசேலென்ற இடமாகக் காட்சிதர  அமைந்திருக்கிறது
 சரி தலைப்புக்கு வா என்கிறது என்  மனசு  வீடு கட்டி முடித்து விட்டால அப்போது அங்கு குடிவரும்  நிலையில் இருக்கவில்லை நாங்கள்  ஒரு சுயதொழில் செய்பவருக்கு வாடகைக்கு விட்டோம்  அவருக்கு வாடகைக்கு விடுவது பற்றி அருகில் இருந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர் குடிப்பவர் என்றும் வாடகை ஒழுங்காக வராதென்றும்   கூறி எங்களை சங்கடத்தில் ஆழ்த்தினர்  எனக்கு மனிதர்களை பார்த்து எடை போடுவதில் தவறு இருக்காதென்று ஒரு நம்பிக்கை. அதே போல் அவரிடம் பேசிய போது ஒரு நல்ல ஜெண்டில்மானாகவே தெரிந்தார் அதேபோல் அவரும்  தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்  என்  வீட்டின் முன்னும்பின்னும் இருந்த இடங்களில் சில மரம்செடிகொடிகளை நட்டு பராமரித்து வந்தார்  ஐந்து ஆண்டுகாலம் எந்தப் பிரச்சனையும்  தராமல் இருந்தார்  அவர் நட்டுச் சென்ற கொய்யாமரம்  மாதுளம்  மரம் பஞ்சு மரம்  கருவேப்பிலை மரம்  தென்னை  ஆகியவை பலன் தந்து  அதை அவர் அனுபவிக்கும் முன்பே நாங்கள் பெங்களூர் வர நேர்ந்தது. எந்தபிரச்சனையும் தராமல் காலி செய்து சொந்த வீடு கட்டிச் சென்றார். இப்போதும் அவர் நல்ல நண்பராகவே இருக்கிறார்
 வீட்டின்  முன்புறம்  இருந்த கொய்யா மரம் காய்க்கும் போது நிறையகல்  அடிபட்டு   தொந்தரவாக இருந்தது மாதுளையும் பஞ்சு மரமும்  கம்பளிப்பூச்சிகளைக் கொண்டு வந்தது மேலும்  கொய்யா மரம் இருந்ததால் அருகில் இருந்த தென்னை வளருவதில் சிரமம் இருந்தது கொய்யா மாதுளை பஞ்சு மரங்களை வெட்டி விட்டோம்   கருவேப்பிலை மரம்  பட்டுப்போயிற்று ஆக அப்போது சின்ன மரமாக இருந்த மாமரமும்  தென்னையும்  நன்கு வளரத் துவங்கியது  வாழைகள் சிலவற்றை வைத்தோம்   சில பெயர் தெரியாத செடிகளையும் ,  (கேட்டால் குரோட்டன்ஸ் என்று மனைவி சொல்லுவாள்) வைத்தோம் முன்னும்  பின்னும் பச்சைப் பசேலென்று இருந்தது காய்கறி வளர்க்கும் முயற்சி பலிக்க வில்லை.  தோட்டவேலை  சரியாகத்தெரியவில்லை  அப்படியும் இப்படியுமாக  இப்போதைய நிலைக்கு வந்திருக்கிறது
என் தோட்டத்தில் ( அப்படிச் சொல்லலாமா) சில எக்ஸோடிக் வகைப் பூச்செடிகள் வளர்ந்தன பெயர் தெரியாதவற்றின் பெயர்களை வலையில் எழுதிக் கேட்டுத்தெரிந்து கொண்டேன்   இப்போது அவற்றின்  சில படங்களைப் பகிர்கிறேன்   முன்பே பகிர்ந்தும் இருக்கிறேன்  என்ற நினைவு 
 பூக்களை செடியில் இருக்கவிடுவதா அல்லது பறித்து எடுப்பதா என்ற சந்தேகம் எழுவதுண்டு  நல்ல ரோஜாப்பூக்களை வீடு ஏறி வந்து  பறித்துச் சென்று விடுகிறார்கள் ஒரு முறை கேரளா சென்றபோது  அங்கிருந்து எடுத்து வந்த  வெற்றிலைச் செடி இப்போது  கொடியாகி மாமரம் பற்றி மேலே  சென்று விட்டது  மாமரம்  நன்கு காய்க்கிறது  இந்த முறை எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்தோம்  தென்னையில் ஒன்றின் மீது இடி விழுந்து  கெட்டு விட்டது இன்னொரு மரம் நன்கு காய்க்கிறது
 என்ன பிரச்சனை என்றால்  காய்களைப் பறிக்க முடிவதில்லை  மரம் ஏறிகள் கிடைப்பதே பாடாக இருக்கிறது தேங்காய்களைப் பறிப்பதே  சிரமமாய்  இருக்கிறது  அப்படியே காய் பறிக்க யாராவது வந்தாலும் மனம்பயத்தால்  உறைகிறது அவர்களுக்கு எந்த பிரச்சனையும்  இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா ஒரு முறை மரம் ஏற ரூ. 200 லிருந்து  500 வரை கேட்கிறார்கள்  நிறையக் காய்கள் இருக்கும் போது எடுக்கக் கொடுத்துதானே ஆகவேண்டும்   மட்டைகளில் இருந்து தேங்காய் உரிக்க காய் ஒன்றுக்கு ரூ 2 / கேட்கிறார்கள் மரத்தில் கிடைக்கும்  காய்கள் எங்களுக்கும்  மகனுக்கும்  போக சில உறவினர்களுக்கும்கொடுப்பதுண்டு  மாமரத்திலும்  வெற்றிலைக் கொடிகளிலும்  பெரிய சிவப்பு எறும்புகள் இலைகளை சுருட்டி என்னவோ செய்கின்றன  மரம் ஏற முடிவதில்லை.  விபூதி தெளித்தால்  போய் விடுகின்றன ஆனால் மரத்தின்  மேல் எப்படி விபூதி தெளிப்பது
 இனி சில செடிகளுடைய படங்களைப் பார்ப்போம்   
                   

 
எங்கள் வீட்டுத்தென்னை 

 
லாப்ஸ்டர் பூ --  நண்டுகால் பூ


 
ஃபுட்பால் லில்லி 


 
மாடி ஏறிய முல்லை கொடி 
மாமரம்  பற்றிய வெற்றிலைக் கொடி  ( பார்க்க சிவப்பு எறும்புகள் )
விபூதி தெளித்த வெற்றிலைக் கொடி 
வெற்றிலையில் அது காயா பூவா
மாங்காய் பறிக்க 
தொட்டியில் ரோஜாப்பூ 
குரோட்டன்ஸ் ?
தெச்சிப் பூக்கள் 
வெற்றிலைக் கொடி கீழே 
பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி  பூ வாடிய நிலையில்
ஒரு முறை பூத்துப் பார்த்தது  அதன்  பின்  பூ  பூப்பதைக் காண முடியவில்லை  செடிகள் இருக்கின்றன

பலமுறை நம்பிக்கைகளைப் பற்றி எழுதி சிலரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டும்  இருக்கிறேன் அந்தமாதிரியான நம்பிக்கை சார்ந்த .ஒருதகவல் நாங்கள் பெங்களூர்  வந்தபோது  வீட்டின்  சுவரருகே ஒரு அத்தி மரம் வேறூன்றி இருந்தது. அதனால் வீட்டின் கட்டிடம்பலவீனப்படலாம் என்று தோன்றியது அதை வேறோடு வெட்ட முடிவு செய்தேன்  பக்கத்தில் இருப்போர் அதை வெட்டக்கூடாது வெட்டினால் அசம்பாவிதம் நிகழுமென்று பயமுறுத்தினர்  என் சேமிப்பு எல்லாவற்றையும் போட்டுக் கட்டிய வீடே எனக்கு முக்கியமாகப் பட்டது  ஒரு நாள் மரத்தை வெட்ட ஒருவரைக் கூட்டி வந்தேன்  அவர் அது அத்தி மரமென்றதும் பின்வாங்கினார் மரத்தை வெட்டி தன்சாவை வரவழைக்க அவர் விரும்பவில்லை.  இருந்தாலும் மரம்  வெட்டுவதால் வரும்  பணம் அவருக்கு வேண்டி இருந்தது மரம் வெட்டும்பாவம்  தனக்குக் கூடாது என்று நினைத்து  மரத்தின் மேல் மூன்று வெட்டுகளை என்னைச் செய்யச் சொன்னார்  எனக்குத்தானே சாவுவரும்  என்பதுஅவர் எண்ணம்  அப்போது எனக்கு 55 வயது நான்  வெட்டுக்கத்தியை வாங்கி மூன்று வெட்டுகள் அவர் கூறியபடி வெட்டினேன்   மீதிவெட்டலை அவர் செய்து பணம்  வாங்கிப் போனார்  இன்று எனக்கு வயது 78  நன்றாகத்தான் இருக்கிறேன்  மரம் வெட்டினால் சாவு என்னும் நம்பிக்கை அறிவு சார்ந்ததா மூட நம்பிக்கையா  வாசகர்களே தீர்மானியுங்கள்     .






         




  

Sunday, June 25, 2017

மனசில் தோன்றியது

வாழ்வின் விளிம்பில் என்னும் நூலில் வந்தவை 
இது      இதுவரை அச்சில் வராதது 
 புஸ்தகா மின்னூல் பதிப்பாக இது வரை நான்கு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்  யாராவதுபடிக்கிறார்களோ  இல்லையோ தெரியாது  ஒரு வேளைகணினி பழுது பட்டால் என் எழுத்துக்களாவது சேமிப்பில் இருக்கும் அல்லவா மின்னூலில் இதுஒரு பயன்
1) நினைவில் நீ என்னும்  நாவல்
2) சிறுகதைத் தொகுப்பு
3) கவிதைகள் தொகுப்பு
4) கதை கதையாம்காரணமாம் சிறுகதைகள்

இதில் வந்துள்ள கதைகளும் கவிதைகளும் பதிவில் வந்தவையே  இருந்தாலும்சேர்த்து வைத்துபடிப்பது போல் வருமா  படிக்காதவர் வாசித்து பலன் அடையட்டும்  மற்றவர் அதிர்ஷ்டம்  இல்லாதவரே 














நாவல் 1966ல் எழுதியது 














பல genre களில்  எழுதியது
மின்னூல்களை வெளியிட்டாயிற்று  இனி கொள்வார் உண்டோ எனக் காத்திருக்க வேண்டும்
-------------------------

சில நாட்களுக்கு முன்  தமிழே உலகின்  முதன் மொழி என்னும்  தலைப்புக்கு எழுத திரு யாழ்பாவாணன்  கேட்டிருந்தார்  நானும் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல்    தாய் மொழி  பற்றிய சில கருத்துகள்  என்று எழுதி இருந்தேன் அப்போது இந்தக் காணொளி கிடைத்திருக்கவில்லை  இருந்தாலும்  பெட்டெர் லேட் தான்  நெவெர் 


---------------------------------------------    
                   
  நானும்  சுமார் ஏழு ஆண்டுகளாகப் பதிவுகள் எழுதி வருகிறேன் தமிழ்மண வரிசைப்பட்டியலில்  20 அல்லது 21 ராங்குக்குள் இருக்கிறேன்   இருந்தாலும்   வாசகர் எண்ணிக்கை  இப்போதுதான்  2 லட்சத்தைத் தொட்டு இருக்கிறது  சிலரது பதிவுகளுக்கு வாசகர் எண்ணிக்கை  ஐந்தாறு லட்சத்தைத் தொட்டு விட்டதை அறியும் போது  எங்கோ நான் சரியாகச் செயல் படவில்லை என்று தெரிகிறது நான் தமிழ் மணத்திரட்டியில் மட்டும் தானிணைந்திருக்கிறேன்  மேலோட்டமாகப் பார்க்கும் போது நல்ல ஆதரவு இருப்பது போல்தான்  இருக்கிறது 
-------------------------------------------------


தந்தையர் தினத்தன்று பதிவிட்டிருக்க வேண்டும்   இருந்தால் என்ன  தந்தையர்   பற்றி நினைக்க நாளேதும் இருக்கிறதா ? தாமதமானாலும்  தந்தையர் பற்றிக் கூறலாம்தானே காணொளி பாருங்கள்
--------------------------------------------------------------      


மீண்டும் பதிவிடுவதில் பிரச்சனை  என் தளத்துக்கு என்னால் போக முடியவில்லை சொடுக்கினால் வெயிட்டிங் ஃபர் தமிழ்மணம் என்று வந்து சுற்றிக் கொண்டே இருக்கிறது நான்  கூகிள் க்ரோம்  உபயோகிக்கிறேன் மொஜில்லா மூலம் வந்தால் பதிவு திறக்கிறது ஆனால் மொஜில்லாவில் வந்தால் தமிழில் எழுத முடிவதில்லை வேர்ட் ஃபைலில் எழுதி காப்பி பேஸ்ட் செய்யவேண்டும் எனக்கானால் பின்னூட்டமிட்டவர்களுக்கு மறு மொழி அளிக்க வேண்டும்  அதில் வருகிறது பிரச்சனை இதையும்  வேர்ட் ஃபைலில் எழுதி காப்பி பேஸ்ட் செய்கிறேன்  என்னதான் ப்லாகரோ புரியவில்லை. முன்பு ஒருமுறை இதேபோல் வந்து  சுமார் ஒரு வாரம் கழிந்து அதாகவே சரியாயிற்று, அதுபோல் இப்போதும்  ஆகும் என்று நம்புகிறேன்   பிறர் தளங்களைப் பார்ப்பதில் தொந்தரவு இல்லை. 
 இதை எழுதும்போது மேலே சொன்ன பிரச்சனை காணவில்லை...........!
------------------------------------------------
   

சமூக வலைத்தளங்கள் இங்கே பெங்களூரில் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக  ஹிந்து பத்திரிக்கையில் படித்தேன் நம்ம மெட்ரோவில் ஹிந்தியில் அறிவிப்புகளும் பதாகைகளும்  இருப்பதைத் தட்டிக்கேட்கிறார்களாம்   வழக்கம்போல ஏதோ சப்பைக்கட்டும் இருப்பதாகவும்  அறிகிறேன் ஹிந்தித் திணிப்பைத் தட்டிக் கேட்காவிட்டால் ஸ்டாலின்  சொன்ன மாதிரி இந்தியா ஹிந்தியாவாக மாற வாய்ப்புண்டு இந்தமாதிரி சுழ்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய்  ஊற்றும் வேலையைச் செய்கிறார் வெங்காய நாயுடு  மன்னிக்கவும்  வெங்கையா நாயுடு இவர் சொற்கள் மித வாதிகளையும்   தீவிர எதிர்ப்பாளராக்கும்  ஹிந்தி அத்தியாவசியம்   அது இல்லாமல் முன்னேற்றம் இருக்காது  அது நம் நாஷனல் லாங்குவேஜ் என்கிறார் யாரோ சொன்னால் தனிப்பட்டவரின் கருத்து என்று ஒதுக்கலாம்  ஆனால் இவர் மோடியின்  அடிவருடி மந்திரியாயிற்றே இவர்  
------------------------------------------------------------ 
சென்றவாரப்பதிவில்  டி பி கைலாசத்தின்  கவிதை துரோணாவுக்கு  யாரும்மொழியாக்கம் செய்ய வரவில்லையானால் நான் பின்னூட்டத்தில் எனது மொழியாக்கம் வெளியிடுவேன் என்று எழுதி இருந்தேன் பின்னூட்டங்களை வந்து பார்ப்பவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அதை இந்தப்பதிவில் மிகுந்த தயக்கத்துக்குப் பின்  வெளியிடுகிறேன்  படிக்காதவனின் மொழியாக்கம் சரியா என்னும்  சந்தேகம்  இருக்கிறது ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறலாமே நன்றி 


அடியேனின் தமிழாக்கம் கீழே.

பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே.

 சென்றபதிவில் துரோணாவை ஆங்கிலத்தில் பார்க்க தயங்குபவர்களுக்கு அவரது கவிதை இங்கே 
      
   டிபி கைலாசத்தின்   DRONA

THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!
                                                                      


                



   
    
















Thursday, June 22, 2017

மொழி மாற்றங்கள்


                                மொழிமாற்றங்கள்
                               ------------------------------
 அண்மையில் ஒரு போட்டி பற்றிய அறிவிப்பு பார்த்தேன்  எதிலிருந்து எதை என்பது எனக்கு சரியாகப் புரியவில்லை  இருந்தாலும் எனக்கு நான் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்த பதிவுகள் நினைவுக்கு வந்தது நான் பள்ளிப்படிப்பு அதிகம் பயின்றவன் அல்ல. ஏதோ ஆங்கிலத்தில் வர்கிங் நாலெட்ஜ்  கொஞ்சம் உண்டு. மொழி வல்லுனன்  அல்ல இருந்தாலும் சில   மொழி மாற்றங்களை  செய்து பார்த்திருக்கிறேன்  மொழி பெயர்ப்பு அல்ல 2011ம் ஆண்டு முகநூலில்  செல்வி மாதங்கி எழுதி இருந்த   The lonely bird ஐ தமிழாக்கம் செய்து பதிவிட்டேன்   அதன் பின்   என்  பேரன் ஆங்கிலத்தில் அவன் தாயை நினைத்து எழுதி இருந்ததை தமிழ்ப்படுத்தினேன்  என்னுடைய செய்யாத குற்றம் என்னும்  பதிவைதிரு அப்பாதுரைஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து என் வேண்டுகோளை நிறைவேற்றினார்  திரு டி பி கைலாசம் என்னும் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதி இருந்த  drona  வையும் தமிழ்ப்படுத்தினேன் அவரது ஆங்கிலம்  விக்டோரியா காலத்து மொழி போல் இருந்தது அகராதியின்  துணை கொண்டு நான்புரிந்து கொண்ட தமிழில் எழுதினேன்  இருந்தாலும் வலைப்பதிவில்  ஆங்கில மொழி வல்லுனர்களிடம்
அதைத் தமிழ்ப்படுத்த வேண்டி இருந்தேன் 
 சிலர் முயற்சிக்கிறேன் என்றதோடு சரி  இதுவரை செய்யவில்லை.  இப்போதும்  குறைந்து போகவில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் எழுதலாம் யாரும் எழுதாவிட்டால்நான்  எழுதியதை அங்கே வெள்யிடுவேன் 
செல்வி மாதங்கியின் 
 The lonely bird
---------------------------
 The dusk was a rage of red
And melted away, was gold
The breeze was a welcome bliss
But in came a cruel cold.

The sun was away for a while
Stars, waiting for the moon
The sky was an empty heart
Oh Night! Be here soon.

Through the gray, gold and red
Fluttered a little lone bird
"Where were his friends"? I wondered
And it seemed, for a moment- he heard.

"What had kept you back?
Why did you wait so long?
Is it for a grain of rice?
Or some poet's sad- bird song?

You flutter as you fight with the breeze
Your wings growing tired as I see
What had kept you back- waiting?
While you watched your friends fly, free?

Fly home safe, little bird
Worry not, for the grain of rice
Your little ones wait for you, back home
Keep them safe from a world of lies.

Return to them, help them live
Return to them, to life
For rice is rice, and song- a song
But life- not something rife"!

He fluttered along- soon, was gone
The sky now dark- an empty space,
I closed my eyes, to feel through the sky
And I found his little wings' pace.

He was home, he was safe
That was all, I needed to know
The night was here- and so was the cold
"Au Revoir, little bird- for now, I must go"...
 என்  தமிழாக்கம்
-----------------------------------

                                                  தனிமைப் பறவை
                                   ----------------------------
மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது 
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.
-------------------------------------------------

பேரனின்   அன்னை பற்றிய ஆங்கிலக் கவிதை
----------------------------------------------------------------------------------------
When I was home alone
I was happy thinking about the freedom
But without you it was actually boredom
The fights we have and the love we share
I missed it all and wanted nothing but care
Time passed
Oh I never knew it was cause I was thinking only about you
Things have changed  and so have I
I don’t know whether it is good or bad
But my love  always  was you mom
You were the Sun rays that woke me up
And the moon that put me to sleep
Like that I convinced  myself that you were there within myself
You are the one and only one who is so complete and so damn sweet
You are mine and you make me shine
Mom you are the best
LOVE YOU MOM
 என் தமிழாக்கம்
--------------------------------
தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மாநீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மாஎன் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!

செய்யாத குற்றம் –திரு அப்பாதுரையின்  ஆங்கில மொழியாக்கம்
------------------------------------------------------------------------------------------------------------------------

IS OLD AGE A PUNISHMENT FOR A CRIME NOT COMMITTED

Eyes drift away from the tube
as body retires to sleep;
the mind starts to ruminate
all day's events in keep

planned tasks are many; lay forgotten
incomplete, or left in abandon;
omission seems acceptable, if
the important ones are done

slumber isn't imminent; and when
eyes swoon down to sleep
colorful dreams parade in waves
like a story broad and deep.

dreams crafted in words
a thing of pleasant savor;
be posted in blogs - such
thoughts in dreams waver.

attempts to translate dreams
get foggy; lost in reformation
failed by elusive language
let down by own imagination
in early morning strolls - words
that tend to flow in a stream,
when armed with pen on return
why disappear as if in a dream?

faces remain familiar
but names tend to fade
mind desires to play with children
yet body has become a jade.

thoughts remain forever young
bodily discomforts, those bookmarks of age!
mind pursues what it desires; yet
alerts nothing can be done at this stage.

oh, dear world
to you this question is remitted
is dotage a fit retribution
for a crime never committed?

 என் பதிவு செய்யாத குற்றம் ( தமிழில் )
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள் 
நிறையவே   பார்த்து  விட்டு, 
நித்திரை  செல்லப் போகுமுன், 
அன்றைய   நிகழ்வுகள்  
நினைவினில்  நிழலாடும். 

       
என்னென்னவோ   செய்ய  எண்ணியவை 
       
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும். 
       
மறந்தாலும்   பாதகமில்லை 
       
முக்கியமானதாய்   இல்லாதவரை. 

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும் 
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள்அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்.

       
எழுத்தில்   கொண்டு வந்தால் 
       
இனிதே   ரசிக்கலாம், 
       
இடுகையில்   பதிக்கலாம் 
        
என்றெல்லாம்   கனவினூடே   
       
நினைவுகளும்   கூடவே   வரும், 

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை 
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
      
         அதிகாலை   நடை பயிலுகையில் 
         
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
        
நடையினூடே   வார்த்தைகளும்
        
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து, 
பேனா   பிடித்தால்   என்னதான்  
எழுதுவதுஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

        
பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும் 
        
வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
         
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
        
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
        
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
        
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
        
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே, 
        
உன்னால்  முடியாது  என்று  கூடவே   கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன் 
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு 
விதிக்கப்பட்ட   தண்டனையா..?

டிபி கைலாசத்தின்   DRONA

THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!