Wednesday, March 30, 2022

லை ஃப் இன்ஷூரன்சும் நானும்

 

lலைஃப்  இன்ஸூரன்சும் நானும்

 1958 என்று  நினைக்கிறேன் என் தமக்கை வீட்டுக்குப் போயிருந்தேன் அங்கு ஒரு குறி சொலபவர் குறீ சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு ஆரவக்கோ ளாறால் நானும்  என்கையை நீட்டினேன் பொதுவாக சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு குண்டைப் போட்டார்[i]என் ஆயுள் இன்னும்ஆறுமாதம் தான் என்றார்  பொதுவாக  சரியாய்  சொல்லிக்கொண்டிருந்தவர்இப்படி சொன்னதும் நான்  ஆடிப்போய் விட்டேன் வீட்டில் என்னைநம்பி  ஐந்து ஜீவன்கள் இருந்தன படி ஆழாக்கு உழக்குகளாக நான் போய் விட்டால் இவர்கள்கதி என்னாவது  வருமுன்  காப்பது புத்திசாலித்தனம் அல்லவா அட் லிஸ்ட் இம்பாக்ட் கன் பீ ரெட்யூஸ்ட் ஒரு இன்சூரனஸ் பாலிசி  எடுக்கலாம்  என்றுநினைத்து ரூபாய் 10000 க்கு  ஒரு பாலிசி எடுத்தேன் பத்தாயிரம்அந்தக்காலத்தி ல் ஒரு பெரிய  தொகைமாதம்ரூ 25 செலுத்த வேண்டும்அதுவும்  என் சக்திக்கு மேலானது இரு ந்தாலும்   அது என்க்கு  அப்போது சரியாய்    பட்டது   பதினாலு மாதங்க்ள் செலுத்தி னேன் பிற்கு  முடிய வில்லை பாலிசி  லாப்ஸ்   ஆயிற்று  புத்திக் கொள்முதல் எனலாமா

எனது இருபது களில் என் சாவுக்கு   நாள் குறித்தனர் ஆயிற்று  எனக்கு இப்போது 

வயது  84











 ஆஆ 84 ஆ

Thursday, March 24, 2022

இரு சிறு கதைகள்

 கதை  1


இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?” என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? ” என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம் நாம்தான்மறைத்து வைத்துவிளையாடுகிறோம் என்று சந்தேகப் படுகிறார்கள் என்றான்

கதை 2 

ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் புரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்” என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.” என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்
திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் ” மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லை” என்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூய் அல்லவா.”என்றார்.




















 சந்தேகப் படுகிறார்கள் என்றான்....!

Saturday, March 19, 2022

கர் நாடக இசையும் நானும்

 


                                       கர்நாடக இசையும் என் கனவும்....
                                           -------------------------------------

இசையைப் பற்றிப் பலரும் பதிவிடுகிறார்கள். அதன் சில நுணுக்கங்களையும் அதனை அவர்கள் ரசிப்பதையும் பதிவுகளில் காணும்போது எனக்குள் நான் எதையோ இழந்தது போல் இருக்கும். எங்கள் குடும்பத்தில் சாஸ்திரீய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர் யாரும் இல்லை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. எப்போதும் அதைக் குறையாகவே இருக்க விடலாமா சினிமாப் பாடல்கள் கேட்டு ரசித்ததுண்டு.( அந்தக் காலத்தது.) இந்தக் காலத்துப் பாட்டுக்களை என்னால் ரசிக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரே இரைச்சலாகவே தோன்றுகிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. I KNOW I AM DIGRESSING



கர்னாடக இசையை முறையாகப் பயிலலாம் என்றால் என் பணி நேரம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மேலும் என் குரல் வளத்தில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. என் மனைவிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்து அவளை ஒரு விதூஷிகியாக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல் படுத்த முயன்றேன். என் வீட்டில் நான் என் மனைவி, இரு குழந்தைகள், அவள் தம்பி என, எல்லோர் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியவள் மேல் இன்னொரு பாரமும் ஏற்றப் பட்டது. பாட்டுக் கற்றுக் கொள்வது பாரமா எனக் கேட்பவர்கள் அந்த சூழ்நிலை உணர்ந்தால் அப்படிக் கேட்க மாட்டார்கள், சரி தீர்மானம் எடுத்தாய்விட்டது. யாரிடம் பாட்டு கற்றுக் கொள்வது?. எங்கள் நல்ல காலம் திருச்சி ஆண்டாள் தெருவிலிருந்து ஒருவர் பீ.எச்.இ.எல்  டௌன்ஷிப்புக்கு வந்து சிலருக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறார் என்று கேள்விப் பட்டோம். மதியம் வேலை எல்லாம் முடிந்து சற்று அக்கடா என்று என் மனைவி இருக்கும் நேரமே பாட்டு கற்க உகந்த சமயம் என்று முடிவாயிற்று.

வைத்தியநாத பாகவதர் என்பது பாட்டு வாத்தியார் பெயர். 45-/வயதிருக்கலாம் சுமாரான உயரம். சற்றே மெலிந்த தேகம். பார்த்த உடனே சொல்லி விடலாம்

தேவைகளைப் பூர்த்திசெய்ய அல்லாடுபவர் என்று. காலையில் திருச்சியிலிருந்து டௌன்ஷிப்புக்கு வந்தார் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டு சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்ப மாலை விளக்கு வைக்கும் நேரமாகி விடும்..வாரம் இரண்டு நாள் பயிற்சி. சும்மா சொல்லக் கூடாது . அபார ஞானம் உள்ளவர். எந்த ஸ்தாயியிலும் அசாதாரணமாகப் பாடுவார். அவரை ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுமுன் அவரிடம் ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்டேன். இன்றும் அவர் பாடிய அந்தப் பாட்டு என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “பஞ்சாட்சத்  பீட ரூபிணி ,மாம்பாஹி. ஸ்ரீராஜராஜேஸ்வரி “என்று உச்சஸ்தாயியில் ஆபேரி ( ? ) ராகத்தில் பாடக் கேட்டதும் , இவர்தான் என் மனைவிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கப் போகும் குரு என்று தீர்மானித்து விட்டோம்..அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அலசூரில் இருந்தவர் என்பதும், சற்றுக் காலங்கடந்து மணம் முடித்தவர் என்பதும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றும் அவர் கூறத் தெரிந்து கொண்டோம். எங்கள் ஒரு வீட்டுக்காக வர வேண்டியவருக்கு எங்கள் எதிர் வீட்டு நண்பரின் மனைவியும் பாட்டுக் கற்றுக் கொள்வதன் மூலம் இன்னொரு பயிற்சியாளராகச் சேர, j அதிக வருவாய்க்கு வழி கிடைத்தது. அப்பொழுது ட்யூஷன் ஃபீஸாக மாதம் 20-/ ரூபாய் கொடுத்த நினைவு. ஒரு ஹார்மோனியப் பெட்டி மாத்திரம் வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவருக்கு நூற்றுக் கணக்கான கிருதிகள் மனப் பாடமாகத் தெரியும். ஸ்வரம் ,எழுதி, சாஹித்தியமும் எழுதிக் கொடுப்பார்

.

எந்தப் புத்தகமும் பார்க்க மாட்டார். சுமார் இரண்டு ஆண்டு காலம் என் மனைவி அவரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டார். என் மனைவியின் ஆர்வம் அதிகரித்ததுபோல் எதிர்வீட்டு நண்பரின் மனைவியின் ஆர்வம் குறைந்து அவர் விலகிக் கொண்டார். எங்கள் துர திர்ஷ்டம் எனக்கு விஜயவாடாவுக்கு மாற்றல் ஆகி என் மனைவியின் பாட்டு கற்கும் படலம் முற்றுப் புள்ளி பெற்றது. அதற்குள் ஒரு நாள் டௌன்ஷிப் கோயிலில் பக்க வாத்தியங்களுடன் இரண்டு மூன்று பாட்டுகள் என் மனைவியை பாட வைத்தார். அப்போது என் மனைவி பாடிய “நகுமோமு கனலேனி  நாஜாலி தெலிசி “என்ற பாட்டு நல்ல வரவேற்பு பெற்ற்து.

என்ன சொல்லி என்ன பயன்.?என் மனைவி பாட்டில் விதூஷிகியாகக் கொடுத்து வைக்கவில்லை. சும்மாவா சொல்லிப் போனார்கள் பாடப் பாட ராகம், மூட மூட ரோகம் என்று. விஜயவாடா சென்றதும் தோதாக வாத்தியார் கிடைக்காததால் மேலும் கற்கவோ அபிவிருத்தி செய்யவோ முடியாமல் போயிற்று. சொல்லப் போனால் என்னுள் அவளை பெரிய பாட்டுக்காரியாக்க வேண்டும் என்ற நெருப்பும் அணைந்து விட்டது. அவள் பாட்டுக் கற்றதும், பாடியதும் எல்லாம் வெறும் நினைவாகி விட்டது.

நான்கு ஆண்டுகள் கழிந்து மீண்டும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபிறகு பல நாட்கள் கழித்து வைத்தியநாத பாகவதரைச் சந்தித்தோம். அவர் மிகுந்த சிரம தசையில் இருந்தார். உடல் நலமும் சீராக இருக்கவில்லை. மறுபடியும் அவரை ட்யூஷனுக்காகக் கூப்பிட்டோம். சில நாட்கள் வருவார். பல நாட்கள் வர மாட்டார். அவர் குரலும் அதிலிருந்த கம்பீரமும் காணாமல் போயிருந்தது. அதற்குள் டௌன்ஷிப்பிலேயே ஒரு பாட்டு ஸ்கூல் ஆரம்பித்திருந்தார்கள். ஒரு கட்டான அமைப்புடன் போட்டி போட முடியாமல் வைத்தியநாத பாகவதர் காணாமல் போய்விட்டார்.

என் பிள்ளைகளும் சற்று வளர்ந்து விட்டார்கள். அவர்களது நாட்டம் மெல்லிசையின்பால் சென்றது. டௌன்ஷிப்பில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழு அமைத்து எல்லா நிகழ்ச்சிகளிலும் என் மூத்த மகன் பாட, இளையவன் ட்ரம்ஸ் வாசிப்பது வாடிக்கையாகி விட்டது. நானும் என் பங்குக்கு வீட்டில் ஏதாவது பாட்டுப் பாடினால் அவர்களின் எதிர்ப்பு இருந்தது. என் சாரீரம் ( ? )
கன கம்பீரமாக இருக்கும். டீக்கடையில் பாட்டு போட்டது போல் இருக்கிறது, என்றும் என் குரல் தொலைதூரம் வரைக் கேட்கிறது என்றும் கூறி கண்டித்து என் வாயை அடைப்பார்கள். பாட்டுக் கேட்பது மட்டும்தான் எனக்குக் கொடுத்து வைத்தது. 

வெகு நாளைக்குப் பிறகு மீண்டும் என் வீட்டில் ஒரு பாடகரை உருவாக்கும் ஆசை எழுந்தது. என் மூத்த மருமகளைப் பிடித்தேன். ஆரம்ப பாடங்களை என் மனைவி கற்பிக்க தயாராயிருந்தாள். ஒரு நல்ல நாள் பார்த்து குரு தட்சணை எல்லாம் கொடுத்து பாடம் கற்கத் தயாரானாள் என் மருமகள். சரளிவரிசை, ஜண்டை வரிசை என கம்பீரமாக என் மனைவி பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினாள். என் மருமகளுக்கோ நேராக கீர்த்தனங்களும் ராகங்களும் கற்க ஆசை. அது முடியாதென்று தெரிந்ததும் அவளுடைய ஆர்வமும் நீரூற்றிய நெருப்புபோல் பிசு பிசுத்து விட்டது.அத்துடன் ஒரு சங்கீத கலாநிதியை உருவாக்கும் என் கனவும் காணாமல் போயிற்று.

 

அந்தக் காலத்தில் என் மனைவி கர்நாடக சங்கீதம் கற்கத் துவங்கி இருந்த போது பாடிய ஒரு பாடலை டேப்பில் பதிவு செய்திருந்தேன் 1970களின் ஆரம்பம். அந்தப் பாடலை இப்போது போட்டுக் கேட்டபோது இதைக் கணினியில் ஏற்ற வழி கேட்டேன் என் பேரனிடம் . அவன் என்னென்னவோ செய்து வலையில் ஏற்றத் தக்கதாக மாற்றிக் கொடுத்திருக்கிறான். டேப்பிலிருந்து மறுபடியும் ஒலிப்பதிவு செய்தபோது பாட்டின் மெருகு சற்றுக் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் பகிர்கிறேன்



              


-------









Friday, March 18, 2022

ஜீவாத்மா பரமாத்மா ஒரு புதிய அணுகல்

 



                                      ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...
                                      ----------------------------------------


கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய். “
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.? 
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
“ அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.
“ மூச்சு என்பது என்ன.?
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.

“ ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது

நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
“ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
“ தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “

“ உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர்

இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
” ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? 




)
-------------------------------------------------------------------------------

Tuesday, March 15, 2022

மீண்டும்தேங்காய்பிரச்சினை

ஒரு சிறு கதை

 

 நாய்களைக் கண்டாலே ஒரு பாசம்  ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன்   மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று இருந்தபோது ஒரு நாய் வாலை ஆட்டிக்கொண்டு சிநேக பாவத்துடன்  வந்தது பார்க்க் யாரோ வளர்க்கும் நாய் போல் இருந்தது நானும் அதைத் தடவிக்கொடுத்த போது  உரிமையுடன் வீட்டுக்குள் வந்து சோபாவில்  ஏறிப் படுத்துக் கொண்டது  மாலையானதும்சிலபிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தேன்  சிறிது நேரமிருந்து விட்டு அதுபோய் விட்டது மறு நாளும் வந்ததுஅதேபோல் அன்றும் வாலை ஆட்டிக்கொண்டு வந்து சோபாவில் ஏறிப் படுத்துக் கொண்டது நானும் ஐயோ பாவம்வாயில்லா பிராணி என்று பேசாமல் இருந்து விட்டேன் இது இப்படியே தொடர்வது கண்டு என்மனைவி அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கச் சொன்னாள்  யாராவதூரிமையாளர்கள் நம்மிடம்வந்து சண்டை போடலாம் என்றாள்  சிறி து யோசனைக்குப் பின்  எனக்கு ஒரு ஐடியா தோன்றியது தினமும் சிறிது நேரம் சோபாவில் படுத்து விட்டு சமத்தாக அதுவே போவது கண்டு அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய  நினைத்தேன்   அதன் காலரில் ஒரு சீட்டில்  நிகழ்வுகளை விவரித்து எழுதி கட்டி விட்டேன்  மறு நாள் என்ன ஆச்சரியம்   அதன்  காலரில் ஒருசீட்டுடன் அதுவந்தது அதை எடுத்துப் பிரித்துப்படித்தால்

சார் / மேடம்   மிக்க நன்றி . ஒரு வாயில்லா ஜீவனுக்கு அடைக்கலம்கொடுத்து தங்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி அது என் நாய் இங்கே என்வீட்டில் அமதியாக தூங்க முடியாமல்  அவதிப்படுமது டனக்கு ஒரு இடத்தைத்தேடிக்கொண்டது என் வீட்டில் நான்கு பிள்ளைகள் அந்தநாய்  சற்று நேரம் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை அதனால் தான் அது உங்கள்வீட்டைத் தேடி வந்தது நானும் அதுபடும்பாட்டை அனுபவிக்கிறேன்   எனக்கும் உங்கள்வீட்டில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்குமா  அப்படியானால் நானும்நிம்மதி யுடன் மதியவேளையைப்போக்கலாம் நன்றியுடன்  என்று எழுதி இருந்தது

 


Sunday, March 13, 2022

உலகமகளிர் தினம்

 உலகமகளிர் தினம் என்றால் முதலில்நினைவுக்கு வருவதுஎன் மனவி தான்

உ  லக மகளிர் தினத்தை ஒட்டி என்ன எழுதலாமென்று யோசித்தபோது எனக்குத் தெரிந்த என்னைத் தெரிந்த வலை உலக மகளிர்களின் பட்டியல் தயார் செய்து குறிப்பிட்ட சில கேள்விகளை குறிப்பிட்ட சிலரிடம் கேட்கலாம்  என்று தோன்றியது உடனே செயல் படுகிறேன் பட்டியல் தயார் செய்யும்போது பல வலைப் பதிவர்களை  என்பதிவின் பின்னூட்டங்களில் காணமுடிவதில்லை ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன்  பல வித பதிவர்களை பின்னூட்டங்களில் பார்த்தாகி விட்டது  சிலர் பற்றிய சில அபிப்பிராயங்களும்  உண்டு அவை சரியாக இருக்கலாம் தவறாக ஆக இருக்கலாம்  என் அபிப்[பிராயங்கள் முக்கியம் அல்ல

முதலில் பட்டியல் பார்ப்போம் மனதில் வரும்பெயர்களே முதலில்  வேறு முக்கியத்துவமில்லை எல்லோரு சமமே

1)   கீதா சாம்பசிவம்   இவரைஒரு முறை அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன் ஒரு பதிவர் இவரை துறை போகியவர் என்று குறிப்பிட்டு  இருந்தார் இவரிடம்  நான்கேட்க விரும்பும்  கேள்வி நீங்கள் ஆன்மீகவாதியா  ஆஸ்திக வாதியா? எந்தக் கேள்விக்கும்  ஒரு பதில் இவரிடமிருக்கும் எனஎதிர்பார்க்கலாம் அரசியலில் கருத்து கூறும்போது நீங்கள் எதை          நம்புகிறீர்கள் கேட்டு அறிந்ததா பட்டறிந்ததா

2)   துளசி கோபால்  இவரை என்வீட்டிலும்  பதிவர் மாநாட்டிலும்சந்தித்து இருக்கிறேன்   என்னை சந்தித்ததை சிங்கத்தின் குகையில் என்று கூறி இருந்தார் அதுசரி மேடம்பலரும் உங்களை  டீச்சர் என்கிறார்கள் பள்ளி ஆசிரியரா எங்கே எப்போது?பதிவுகளில் எழுதும்போது நம்பிக்கையே முக்கியம் என்று எழுதுகிறீர்கள் அதுவும் பல நம்பமுடியாததாக இருந்தாலும்!

நீங்கள் ஒரு  விஷ்ணு பக்தையாகவே தெரிகிறீர்கள் சைவ சித்தாந்தங்கள் பற்றி ஏதும்சொல்வதில்லையேஇல்லாவிட்டால் பாடல் பெற்ற இடங்களுக்கே முக்கியதுவம்  கொடுத்து ஏன்செல்கிறீர்கள்  நியூ ஜிலாந்தில் எப்போது இருப்பீர்கள்

3)   கீதா ரெங்கன் இவரைப் பலமுறை சந்தித்ததுண்டு இவர் இப்போதுபெங்களூர் வாசி மேடம் நீங்கள் உங்கள் பின்னுட்டங்களில் பலரோடு ஒத்துப்போவதையே காண்கிறேன்உங்களுக்கென்று அபிப்பிராயமிருந்தாலும்சொல்லாமல் போவதே மேல் என்று நினைக்கிறீர்களா பெரும்பாலான இடங்களில் நீங்கள்சொல்ல வந்ததை ஏற்கனவெ வேறு சிலர் சொல்லி இருப்பதாக நீங்கள் எழுதுவதைப் பார்க்கிறேன் கர்நாடக சங்கீதம்முறைப்படி பயின்றவரா நீங்கள்

4)   பானுமதி வெங்கடேஸ்வரன்  இவர் எனக்கு உறவு முறையும் கூட இவரது மகள் திருமணத்துக்கு சென்றபோதுதான் இவரும்வலையில்  எழுதுகிறார்  என்று தெரிந்தது அப்போதெல்லாம்  இவரது பதிவு பலருக்கும் தெரியாமல் இருந்தது என்பதிவுக்கு வரும்பின்னூட்டங்க்களில்  இருந்து பலநண்பர்களை உருவாக்கினார் என்று இவர் சொன்னதாக நினைவு உங்கள் கருத்துக்கு மாறாகஎழுதினால் உணர்ச்சி வசப்படுவீர்களோ என்று தோன்றுகிறது

5)   கோமதி அரசு  மயிலாடு துறையில் இவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்  அங்கு எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தார் திரு நாவுக்கரசரும்  இவரைப் போலவே எந்த வம்பு தும்புக்கும்  போகாதவர்  எதிர்மறை எண்ணங்கள் என்றாலும் தாண்டி போய்விடுபவர் எல்லோருக்கும்  நல்லவராக இருக்க முயற்சி செய்பவர் வேதாத்ரி சுவாமிகளின்  எழுத்துக்களைமிகவும் நம்புபவர்  மயிலாடு துறையில் அப்போதுநான் எழுதி இருந்த இது என் ஏரியா அல்ல என்னும்பதிவில் பட்டினத்தார் பற்றிக் கேள்விப்பட்டதைஎழுதி இருந்தேன் இது என்  ஏரியா இல்லைஎன்றுசொல்லியே பட்டினத்தார் பற்றி எழுதி இருக்கிறார்என்று அப்போது அவர் சொன்னது எனக்கு ஏதோ சர்காஸ்டிக்காகத்தோன்றியது நான் தவறாகவும் இருக்கலாம்

6)   ராமலஷ்மி இவர் ஒரு புகைப்படக் கலைஞர் இவரை பெங்களூரில் ஒரு பதிவர் சந்திப்பில்பார்த்திருக்கிறேன்  அற்புத புகைப்படக் கலைஞர் இவரது பதிவுகள் எனக்குப் பிடிக்கும் தானாக எழுதுவதை விட பிறரது கொடேஷன்களை வெளியிடுவார் திரு நெல்வேலிக் காரர் என்றும்  ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும்தெரிகிறது

7)   திரு நெல்வேலிக் காரர் என்றதும்  அமெரிக்காவில் இருந்து வெட்டிப்பேச்சு என்னும் தளத்தில் எழுதி வந்த சித்ராவும்  நினைவுக்கு வருகிறார் இப்போதெல்லாம் அவரைக் காண்பதில்லை

8)   கீதா மதிவாணன் இவர் ஆஸ்திரேலியாவில் இருப்பவர்  அங்கிருந்துஅவருக்கு முடிந்த அளவில் தமிழுக்கு தொண்டாற்றி வருகிறார் அவரது சிலபதிவு என்னைக் கவர்ந்தது  சிலபூக்களின்ந்படங்களைக் காட்டிஅது பற்றிக் கேட்டிருந்தேன்  இவர்தான் அது பற்றி எனக்கு எடுத்துச் சொன்னவர் திரு ஞானசம்பந்தம் என்னும் மூத்தபதிவர் இவருக்கு மாமனார் முறை எனக்கு ஓரோர்சமயம் அவரது சிந்தனைகள் எனதுபோல்  தோன்றும்

9)   அன்புடன் மலிக்கா  இவர் என்னிடம்பெண் எழுத்து என்னும்தொடர் பதிவில் கலந்துகொள்ளச் செய்தார் ஆணெழுத்து பெண் எழுத்து  என்னும் பேதம்அறியாமல் நானும் எழுதி இருக்கிறேன்

10) இவர்களைத்தவிர சாதிகா என்பவருமென் பதிவுகளில் பின்னூட்ட உற்சாகம்தந்தவர்

11) புதுக் கோட்டையில் சந்தித்த சசிகலாவும் ஒருவர்  நான் எழுதி இருந்த ஒருபதிவின் வரிகளை நினைவில் வைத்துகோண்டு புதுக்கோட்டையில் என்னை திணர அடித்தவர் இன்னும்பலர் உண்டு பதிவின் நீளம்கருதி

1)   எழுதவில்லை

எனக்கு ஒரு சந்தேகம் உண்டு  பெண்களெப்போதும் ஆண்களைச்சார்ந்திருப்பதுதான்  இந்தியக் கலாச்சாரம் என்று நினைக்கிறார்களா அவர்களுக்கென்று கருத்துஏதுமில்லையா இருந்தாலும் ஏன் சொல்ல வேண்டுமென்றுநினைத்துஒதுங்கிப் போகிறார்களா

மஞ்சுபாஷிணி வல்லி சிம்மன் மனோ சாமிநாதன்  திருமதி காமாட்சி போன்றோரும்  என்பதிவுக்கு வந்தவர்கள் திருமதி லக்‌ஷ்மி என்பவர் அம்பர் நாத் வாசி  பயண்ப் பதிவுகள் எழுதுவார் இப்போதெல்லாம் காண்பதில்லை திருமதி ராஜராஜேஸ்வரிமறக்க முடியாதவர் கோவை வாசி ஒருகால் கோவையிலும் ஒரு கால் ஆஸ்திரேலியாவிலுமாகைருந்து படிவிடுவார் இப்போது இல்லை மறைந்து விட்டார்  ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர் அவருக்க்கு ஜீனியஸ் என்னும் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறேன் இப்போது காரைக் குடியில் இருக்கும்  தேனம்மை லக்ஷ்மணன்நிறையவே எழுதுகிறார்  பல நூல்களை வெளியிட்டவர்  அவரது சாட்டர் டே போஸ்டுக்கு என்னிடம் எழுதி  வாங்கி இருந்தது நினைவுக்கு வருகிறது பதிவு  எழுதத்துவன்கியபோது இருந்த மனநிலைஎழுத எழுத மாறி விட்டது பெண்களுக்கு 33 சத வீதம் இட ஒதுக்கீடு என்பது ஒரே மாய்மாலம் என்று தோன்றுகிறதுசரிபாதி இட ஒதுக்கீடுஇருக்க வேண்டும் அல்லவாஇப்போதுபதிவுஎழுளெழுதிவரும் பலரும் நகைச்சுவை என்று நினைத்து ஏதேதோ எழுதுகிறார்களோ  என்னு சந்தேகம்வருகிறது  தனகுத்தானே பல பட்டப்பெயர்கள் கொடுத்துக் கொண்டு எழுதும் அதிரா ஏஞ்செல் என்பவரை நான் அஞ்சலை  என்றுஅழைக்கலாமா என்று கேட்டிருந்தேன் என்புகைப்படத்தில் என் மீசை பயமுறுத்துகிறது என்பதை கேட்டதும் மீசையின் இன்னொருமுக்கியத்துவமும் தெரிந்தது  

எது எப்படியோ இந்தவயதில் நானும் எழுதுவதற்கு தூண்டு கோலாயிருக்கும் மகளிர் சக்தி வாழ்க என்று கூறி முடிக்கிறேன்








 எழுதவில்லை

Friday, March 11, 2022

என்னை விரும்ப



 

நான் என்னிடம் விரும்புவது.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.

நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.

 









போல் நினைவுகள் துணை போயின