Friday, July 31, 2020

சுஜாதா




            இன்றைக்கு   சுமார்  2500 டாலர் கொடுத்தால் CANNON  கம்பனியின் நேவிகேட்டர் என்னும்பெட்டியை நீங்கள் வாங்கலாம்
நேவிகேட்டர் என்பது ஒரு சிறியமேசைக் கணிப்பொறி  ஒரு தொலைபேசி ஒரு பதில் சொல்லி ஒரு ஃபாக்ஸ் இயந்திரம்ஒரு அச்சு யந்திரம் ஒரு 10 இன்ச்  டெலிவிஷன் திரை  இது போதும் அலுவலகத்தை வீட்டுக்கு கொண்டு வர

இதனால் ஏற்படும் சிக்கனங்கள் ஏராளம் ஆபீசுக்குப் போகும்  பெட்ரோல் மிச்சமாகும்     பஸ்களில் கூட்டமிராது நகரங்களில்போக்கு வரத்துநெரிசலைக் குறைக்கலாம்  பொல்யூஷன் குறையலாம்
எதிர்காலத்தில் அலுவலகம் செல்ல வேண்டாம்அலுவல் உங்கள் வீட்டுக்குவந்து சேரும்
ஒரே ஒரு சிக்கல்
நாள்முழுவதும் மனைவியுடனேயே  இருக்க  வேண் டும்
சுமார் 30  ஆண்டுகளுக்கு முன் கற்ப்னைக்கு  அப்பால் என்னும் நூலில் சுஜாதா  எழுதியதாம் 




சுஜாதாவின் அல்டிமேட்  டச்சுடன் எழுதியது இந்த கொரோனா  காலத்துக்கு பொருந்தும்தானே   

Thursday, July 30, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்


 கடை சியில் சில பக்கங்கள்  மிஸ்ஸிங்

நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்


காட்சி ---9
 இடம்—அருணா மாளிகை
பாத்திரக்கள்--- அருணா நவகோடி  கனக சபை  சபாபதி குமரேசன்
(ட்ரஸ்டிகளின்   வருகைக்காக காத்திருக்கும்  அருணா டம்பப் பையிலிருந்து  ஒரு கண்ணாடியை எடுத்து முகம் பார்க்கையில்   அங்கு  வரும்
சபாபதி--- ஆஹா அருணா நீ இன்னிக்கி  எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா அப்பா பின்னாடி வந்துட்டிருக்காரு  அதுக்குள்ளே  உன் அழகை ஒரு அத்தியாயம் வர்ணிச்சுடறேன்  கேளு
அருணா--- என் அழகை நான்   தெரிஞ்சுகறதுக்கு என்வீட்டில் எத்தனைகண்ணாடிகள் இருக்கு தெரியுமா இருக்கிற அழகை இருக்கிறபடி காட்டும் கூட்டியோ குறைத்தோ காட்டாது
சபாக்கு தெரியுமா ஆனல் எங்க வீட்டுல ஒரு கண்ணாழ்டி  இருக்கு அதில என்ன குறையோ தெரியலை ரசம்பூசினவன் கைராசி  அப்படி நாம என்ன செய்ய
முடியும் அருணா
Aஅருணா---சேச்சே உன்முகராசி அப்படி _( அப்போது ஜி அங்கு வரும்)
கனகசபை----அவங்கம்மா கூட அப்படிட்தான் சொல்லும் சபாபதி முகராசிக்கு அருணா என்ன யார் வேணுமின்னாலும் எங்க வீட்டுக்கு மருமகளா வந்திடும்னு
நவகோடி—ஆமாம் ஆமாம் 
அருணா--- அப்போ சரிதான்  உனக்குகல்யாணம் ஆனாத்தான் சொத்துன்னு நீங்க ஏன்  சொன்னிங்க்ன்னு  இப்பத்தான்   தெரியுது சபாபதிக் என்னை கல்யாண்ம்  செய்துகொடுத்தா  சொத்து  முழுதும்   உங்களுக்குத்தானே                             சபா----எப்படி ஐடியா
அருணா ---இது மட்டும் என்க்குமுன்னாடியே தெரிஞ்சிருந்தா
சபா—கல்யாணமெ செய்துக்கறதில்லைன்னு  சபதம் எடுத்திருக்க மாட்டேஇல்லே அதனால என்ன  மனுஷன்   சொன்னா சொன்னபடி நடக்க இது என்ன பாண்டு பத்திரமா பிராமிசரிநோட்டா
அருணா --- அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லவெறும்  மேரேஜ்  சர்டிஃபிகேட் தான்  எனக்கு ஏற்கனவே கல்யாண்ம் ஆயிடுத்து இதோ சர்டிஃபிகேட்
சபா--- ஆஹா  காத்திருந்தவன்  கண்மணி  காதலியை நேத்து வந்து கயாணம்செய்த்துகிட்ட  வில்லன் யார் சொல்லு அருணா
அருணா --- சொன்னா அவரை என்ன செய்வியாம் 
சபா—என்ன செய்வேனா  என்ன செய்யணும்   நான் ஒரு சீர்திருத்த வாதி முதல்ல உன்னை விதவை ஆக்கிட்டு  விதவா விவாஹம்  செய்துப்பேன்
கனக--- உன்பிடிவாதத்தை  மாத்தின அந்த சாமர்த்தியசாலி யாரும்மா
அருணா—ஏன் மாப்பிள்ளையை உங்களுக்கு  அறிமுகம் செய்து வெக்கணும்னு உயில்ல எழுதி இருக்கா என்ன  உயில்ல இப்படி எழுதி இருக்கு அப்படி எழுதி இருக்குன்னு நீங்க வெளை யாடினதுபோதும் எனக்கு கல்யாணம் ஆயிடுத்து அதற்கு  அத்தாட்சி இதோ
சபா----பேர்ல கூட  பெர்சனாலிடி இல்லையே
கனக ----- யார் இந்தக் குமரேசன் 
சபா--- நாங்க பார்க்ககூடாதா
அருணா--- பார்க்கக் கூடாதாவது  பார்க்கமுடியாது
கனக---- அவ்வ;ளவு  பெரிய இடத்துப் பிள்ளையா அவரு  (_சொல்லி உதட்டைப் பிதுக்குகிறார்)
குமரேசன் -----அருணா  அருணா(என்று அங்கு ஓடிவர அவனைக் கண்டு  அதிர்ச்சியடைகிறாள் அருணா )
அருணா----தாத்தா (என்று வீரிட்டு அலற அவளைப்பிடித்துக்கொண்டு )
கும---- உன்னைப்பார்த்து பேச ஓடிவந்தேனா இடம்தெரியாம ரொம்பத்திண்டாடிட்டேன்
ஏன்  அருணா அப்படிப்பார்க்கிற நான் ஆவியல்ல அருணா  குமரேசன்  சதையும்  ரத்தமும்  உயிரும்   உள்ள உடம்போடு தான்  வந்திருக்கேன் அருணா பாரு
கனக—இது யார் அருணா

அருணா ---ஹங்  யாரோ( தாத்தா) (உள்ளே போகிறாள்)
குமரே---(பிரமித்தபடி)யாரோ    யாரோ
சபா--- யாரையா நீ  பைத்தியம்
கனக--- ஏய் யார் நீ
கும---என்னைதெரியாதவள்போல அருணா  சொன்னாளே  அந்த யாரோ  தெரிந்தடமாதிரி  இவன் சொன்னானே அந்த பைத்தியம் 
சபா---- வக்கணையாப்பேசாதே  உன்  பேர் என்ன
 கும--- அதட்டிப்பேசாதே என் பேரு குமரேசன்
மூவரும் ---  குமரேசனா  இருக்க முடியாது அப்பா போயும்போயும் இந்த ஆளையா  அருணா கல்யாண்ம் செய்துக்கும்
கும ___-என்ன செய்யறது அது அப்படி நேர்ந்துவிட்டபிறகு நீங்க நம்பத்தான் வேண்டும் சட்டப்படி அருணாவுக்கு  நான் கணவன்
சபா--     டேய்
கும—ஊம் மரியாதையா பேசுடா
சபா--- அப்பா பொறுஙக் அவனை மன்னிச்சிடுவோம்  ஏன்னா பயலுக்கு உடம்பு கொஞ்சம்  கரணை  கட்டி போயிருக்கு அருணா புருஷன்னு சொல்லிக்கிறதுக்கு  உனக்கு என்ன யோக்கியதை இருக்கு
குமரே--- சொல்லிக்க மட்டுமல்ல ஒரு புருஷனுக்கு புருஷனாயிருக்க என்னஎன்ன யோகியதை வேணுமோ எல்லாம்   எனக்கிருக்கு  ஆனா  அருணாவுக்கு  என்னை மதிக்கத்தெரியலை  யாரோவாம் 
நவ----உன்னை எப்படி மதிப்பாள்  அருணா உனக்கு  சொத்து இருக்கா
கும---காலணாகூட கடனில்லை அதை விட பெரியசொத்து என்ன இருக்க  முடியும்
கனக---உனக்கு என்ன வேலை
கும--- உங்களைப்போல பெரிய மனுஷங்க நடத்தும் தொழிற்சாலையில் பாடுபட்டு ஒண்ண்  ஆயிரம்மடங்கு பெருக்குவது
சபா---- அதுக்கு உனக்கு என்ன கிடைக்கும் 
கும---மத்தவன் கையை எதிர்பார்க்கத்தேவை  இல்லாத அளவுக்கு ஏதோகிடைக்கும்
ஆடம்பரச் செலவு இல்லை எனக்கு  அதுவே பெரிய வருமானம்தானே 
கனக ---இப்படி எல்லாம்நினைக்கிற நீயா  சொத்துக்காக அருணவைக் கட்டிக்கிட்டே     
கும----சீச்சீ  சொத்துக்கு மதிப்பு கொடுத்து அவளை நான் மணக்கலை அதற்கு ஆசைப்பட்டு என்மதிப்பையும் நானிழக்கத் தயாரில்லைஅருணவைப்பார்த்து நன்றிசொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன் ஆனா பெரிyய இடத்து மனுஷங்க கிட்ட பண்புகள் இல்லைன்னு தெரிஞ்சு கிட்டேன்
கனக---- நில்  அவ்வளவு சுலபமா  நீ இங்கிருந்து  வெளியே போக முடியாது அன்னக்காவடி நீ  அருணாவுக்கு  புருஷன்னு சொல்லிக்கிட்டதே பெரிய அவமானம் 
குஅ--- எனக்குத்தானே
நவ--- எங்களுக்கு
சபா—அந்தமான நஷ்டத்துக்கு  ஐயாயிரம்ரூபாய் ஈடு கொடுக்கணும் 
கும--- மானம்கூட உங்களுக்கு வருமானத்துக்கு ஒருசாதனமா இருந்தாலும்  உங்க மானம் இவ்வளவு  மலிவா இருக்கக்கூடாது  அருணாவுக்கு நான்  தான்  புருஷன்  ஜம்பமில்லை  இதோ ஆதாரம்(சர்டிஃபிகேட்டை  காட்ட )
கனக--- யார்ரா  அங்க இவனை கழுத்தப்பிடிச்சு  வெளியே தள்ளுஆதாரமாம் ஆதாரம் ----சபா----அதுக்கு ஒரு ஆள்வேணுமா   (
(குமரேசனை நெருங்க)
கும --- ஜாக்கிரதை  கிட்ட வந்தே  உன் சுகாதாரம் கெட்டுவிடும் (மிரட்டி போகிறான்)                                                                                                                                                                              
நவ ---பேராசை பெரு நஷ்டம்னு சும்மாவா சொன்னாங்க(அருணா  அங்கு சோர்வுடன்வர)
கனக--- இதெல்லாம் என்னம்மா
அருணா --- இன்னுமா புரியலே எனக்கு கல்யாணம் ஆயிடுத்து என்சொத்தை ஒழுங்கா என்னிடம் ஒப்பச்டைங்க  இதுவரை உயிலக்கூட காட்டாம
கனக ---காட்டாம  பூட்டியா வெக்கப் போறோம் இதோ படிக்கிறேன்   கேளு “பதினெட்டு வயதானபின் அருணா கல்யாணம் செய்து கொண்டு    முப்பது நாளாவதுபுருஷனுடன்  குடித்தனம்நடத்திய பின் சொத்தை சுயாதீனம் ச்ய்துகொள்ள  வேண்டியது
அருணா---- என்னது  முப்பது நாள் குடித்தனம் வேற செய்யணும்னா சொல்றீங்க
நவ---நாங்களா  சொல்றோம்   உங்கப்பா எழுதிவெச்ச  உயில்பேசுதம்மா உயில்பேசுது
கனக---எங்களுக்கு ஏன்  வீண்பொல்லாப்பு  அவர் உசிரை விடும்போ எழுதின உயில் எங்க உயிரை இல்லவாங்குது  முப்பது நாள்குடித்தனம் செய்துட்டு வந்து கேளூ உடனே சொத்தை  ஒப்படைக்கிறோம் வாய்யா போலாம் 
                                 திரை         



























Monday, July 27, 2020

சிறகடிக்கும் எண்ணங்கள்



                      சிறகடிக்கும் எண்ணங்கள்
என்னவொ தெரியலை நான் எழுதிய பழையபதிவு ஒன்று என்னை மீள்பதிவாக்கு  என்றது  ஒரு வேளை இதுதான்  இண்ட்யூஷனோ


  எண்ணச் சிறகுகளில்..
------------------------------

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.

        அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,

        விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்

        கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,

        இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ


கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

          அந்த நாள் அக்குயவன் கை

          ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)

          இந்த நாளில் ஏழையெனை

          ஏனோ குறைகள் கூறுவரே.

          நெஞ்சே, நீயும் எத்தனை நாள்

          நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.

          வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,

          மறந்து நீக்கிச் சென்றிடவே

          சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.


எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவந்தானே நீ.

        வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து

        விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ

        நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.


உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

          என்னுயிர்ப் பறவையே,

          நான் கண்களை மூடிக் கொள்கிறேன்

          நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.

          என் நெஞ்சுக்கூட்டை விட்டு

          அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.

          மூடிய கண்கள் விழித்து விட்டால்

           இன்னும் இன்னும் சிறகடிப்பாயே


யே  

Friday, July 24, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்

 கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் 


நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும் 

காட்சி ===8
இடம் ----சந்துரு வீடு
பாத்த்ரங்கள் ---சந்துரு பக்கிரி
சந்துரு---கடவுளே  உன்னை எப்படித்தான்கும்பிடுவது என்று  எனக்குத் தெரியாதுநீ நெனச்சா எதுவும் செய்யச் முடியுமாமேஎங்கண்ணனை காப்பத்த மட்டும் உன்னால் முடியாதா (ரத்த்சக் காயங்களுடன்பக்கிரி தடால் என்று வந்து விழுகிறான்)சத்தம் கேட்டு )யாரது
பக்கிரி ----ஷ்ஷ்  சத்தம்போடாதே கதவைச் சட்து முதல்லபோலீஸ் என்னை துரத்திட்டு வருது
சந்துரு---போலீசா ஐயையோ (கதவைச் சாத்துகிறான்புடிச்சுக்கிட்டு போனாஉன்னையும்தூக்கில பொட்டுடுவாங்களே ஐயையோ எவ்வளவு ரத்தம்(விளக்கிலிருந்து எண்ணைய்எடுத்து காயங்களுக்கு தடவுகிறான்)
பக்கிரி----ஆங்  உள்ளே தோட்டா பாய்ன்சிருக்கு தம்பீப்ப இங்க வந்து ஒளிஞ்சுககாம இருந்தா அவங்ககிட்ட  ஆப்பிட்டுட்டு இருப்பேன்
 சந்துரு --- எங்கண்ணனுக்கு  இப்படி ஓடி  ஒளிய தெரியாமபோச்சே
பக்கிரி –உங்க அண்ணனைக்கூடபோலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்களா தம்பீ
 சந்துரு --- ஆமா விடிஞ்சா தூக்கில போடுவாங்க
பக்கிரி --- யாரையாவது கொலை செஞ்சிட்டாரா உங்கண்ணன்
சந்துரு --- சேச்சே எறும்பைக்கூட  கொல்லது எங்கண்ணன் வட்டிக்கடை  சுப்பையாவை கொன்னூட்டாருன்னு எங்கண்ணன் மேலெ வீண்பழியை சுமத்தி ……
பக்கிரி ---- வட்டிக்கடி சுப்பையாவையா  ஐயையோ பொயும்போய் நான் இங்கேயா  ஒளிஞ்சிக்க வரணம் (எழுந்து செல்ல முயன்று  முடியாமல் விழுந்து விடுகிறான் )
சந்துரு இருந்தா என்ன நான்ஒண்ணுமுக்களை பிடுச்சு கொடுக்க மாட்டேன்  நீ பொனா உன்  தம்பி என்னைப்போல  கஷ்டப் படும்தானே
பக்கிரி ---எனக்குத் தம்பியுமில்ல அண்ணனுமில்ல தங்கச்சியுமில்ல  அக்காவுமில்ல  இருந்திருந்தா உங்கண்ணனைபோல  நல்லவனா இருந்திருப்பேனோ என்னஓ உள்ளே பாய்ந்சிருகிற டோட்டஎன்னை விடாடு போலிருக்கே  தம்பிஇனிமே நான் பொழைக்கிறது கஷ்டம்     ஐய்யோ
சந்துரு ----இரு இரு அப்படி எல்லாம்சொல்லாதே அண்ணே கடவுளெ உனக்கு நான்  ரொம்ப வேலைகொடுக்கிறேன்னு கோவிச்சுக்காதே எங்கணணனோட  சேர்த்து இந்த அண்ணனையும்காப்பாத்து கடவுளே
பக்கிரி –( வறட்டு சிரிப்புடன்) யாரையுமே நான்காப்பாத்த  நெனச்சதில்லை தம்பி கொலைசெய்ய நெனச்சிருக்கேன் என்னைக்காப்பாத்தகடவுள்நெனைக்க  மாட்டார்தம்பி  ஆனா நானிப்ப நென்ச்சா உங்கண்ணைனை காப்பாத்த முடியும் கொஞ்சம்தெர்ருவில போய் போலீசை கூப்பிடு  தம்பி  
சந்துரு ---இப்பத்தானே அவங்க கிட்டருந்துடப்பிச்சு வந்திருக்கே அடுக்குள்ளச் அவங்களையே கூப்பிட சொல்றயே  உனக்கென்ன புட்ட்க்ஹி கெட்டு போச்சா
பக்கிரி-----இல்ல தம்பி இப்பஹ்தான் எனக்கு நல்ல புத்ஹி வந்த்ருக்கு எத்தனையோ கொலைகளை  கூசமல் செய்த எனக்கு ஒஉத்தனைக் காப்பாத்தணும்கிறா ஆசை இப்பத்தான் வந்திருக்கு போ ஓடு தம்பி  நான் சாவறதுக்கு  முந்தி போலீசை கூப்பிட்டு வா தம்பி
சந்துரு—மாட்டேன் உன்னையும் புடிச்சி தூக்கிலபோட்டுடுவாங்க
பக்கிரி ---போடட்டும் உங்கண்ணனாவது தப்பட்டும் நான் செத்துப்போனா  அதுக்காக துக்கப்பட யாருமில்லைஉங்கண்ணனுக்கு  நீ இருக்கே  தம்பி நீஇருக்கேஅதுக்ககவாவதுஅவ்ரூசிரோட இருக்கணம் ஓடு தம்பி ஓடு (தளர்ந்து  விழுகிறான்  )
                 
சந்துரு –ஐயயோ அண்ணே அண்ணே (அவனை உலுக்கிப்பார்த்துவிட்டு வெளியே ஓடுகிறான் )
                                      திரை    


Monday, July 20, 2020

எண்ணக் கலவை



                               எண்ணக்கலவை                             
                              -------------------------------


என் வீட்டருகே ஒருவருக்கு ஜுரம்  அவர் அதை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார் அவர்கள்வந்துகோரொனாவுக்காக டெஸ்ட் செய்து அவருக்கு கொரோனா என்றுகூறினார்கள் வீடும்அவர்களும்தனிமைப்படுத்தப்பட்டனர் இரண்டு நாட்கள்கழித்து அது தவறான செய்தி என்றும் எந்தபிரச்சனையும் இல்லை என்றனர் இம்மாதிரி எத்தனை கேஸ்களோ வாக்காளர் சீட்டு குளறுபடிகள் போல் என்று நினைக்கமுடியவில்லை எத்தனை மன சங்கடங்கள் அவர்களுக்கு இருந்திருக்கும்  இந்த பாண்டமிக் காலத்தில் அவர்கள் ஏதோ தீண்டப்படாதவர்கள்போலநினைக்கப்பட்டது எத்தனை மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்
இந்த தொற்று உள்ளவர்கள்  எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை ஆனால் பீதியைகுறைக்க பரிசோதிக்கப்பட்டவர்களில்  தொற்று இல்லாதவர்களின்  எண்ணிக்கை கணிசமாக இருக்கும்அதை வெளியிட்டால் கொஞ்சம் தைரியம்வரலாம் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது பொல் வாட்ஸாப் மருத்துவர்களின் பேச்சை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது ஆயுர்வேத மருந்து என்றால் அது நல்லதாத்தான் இருக்கும் என்று நம்பும் நம்மைஅவர்கள் டேக்கிங் ஃபர் எ ரைட்  5000 வருட பாரம்பரியம் என்னும் விளம்பரங்கள் வேறு  இந்த மருந்துகளை ஏன்சோதனைக்கு  உட்படுத்தக் கூடாது
 இங்கு  பெங்களூருவில் காவல் துறையினருக்கு அரசே மருந்துகள் தருகிறார்களாம்  பெரும்பாலும் ஆயுர்வேத மருந்துகள் அதைக் கொடுக்க மருத்துவர் பரிந்துரை வேண்டாமோ
பதிவுகளில் எதையும் செய்ய முடியாமல் பிரார்தனையையே நம்புகிறவர்களைப்பார்க்கிறேன் அந்த சிந்தனையில் எழுந்தது
 
அசதோமா சத்கமையா
தமசோமா ஜ்யோதிர்கமையா
ம்ருத்யோர்மா அம்ருதம்கமையா
ஒம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!
பொருள்:
பொய்யான இந்த உலகத்தனிலிருந்து மெய்யானஎன்னுள் என்னை அழைத்து செல்வாய்
மாயை என்ற இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எம்மை வழி நடத்துவாய்
இறப்பு என்ற பயம் நீக்கி அழிவற்ற ஆன்ம ஞானம் உணரச்செய்வாய்
ஒம் என்ற பிரணவப் பொருளே! ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி!”
இது ஆடிமாதம்  தமிழகத்தில் கூழ் ஊற்றும்  வழக்கம் உண்டு  கேரளத்திலும் கர்கடக கஞ்சி  கொடுப்பார்கள்  இந்தமாதத்தை  ராமாயணமாதம் என்பார்கள் ராமாயணபாராயணம் நடக்கும் நீநீநீ,,,,ள ராமாயணத்தைக் குருக்கி சாதரணன் ராமாயணமாக தினம் பாராயணம் செய்யும் விதமாக தருகிறென் அனைவரும்நலம் பெருக  
பதிவுக்கு பெயர் சூட்டலே பெரிய வேலை தலைப்பை பார்த்ததும்காததூர போகிறார்கள் தலைப்பைப்பார்த்து புடவை வாங்குவது போலவும் அட்டையை பார்த்து புத்தகம்வாங்குவது போலவுமிருக்கிற்து