Wednesday, December 30, 2015

எழுத்து---- அன்றும் இன்றும்


                                     எழுத்து----அன்றும் இன்றும்
                                    --------------------------------------------

சில நாட்களாகவே எழுதுவது ஏதும்  திருப்தி தருவதில்லைபொழுது போக்கும் எழுத்துக்கள் எந்த மதிப்பும்  இல்லாதவை. நண்பர் ஏகாந்தன் என் வீட்டுக்கு வந்தபோது என் பழைய பதிவுகள் சிலவற்றைக் காட்டினேன் அண்மையில் எழுதிய சிலவற்றையும் காண்பித்தேன் அவர் சொன்ன கருத்து சரி என்றே தெரிகிறதுமுன்பு எழுத்தில் இருந்த ஓட்டமும் கருத்தும் இப்போதைய எழுத்துக்களில் இல்லையே என்று கேட்டார். எனக்கே என் பழைய பதிவுகளைப் படிக்கும் போது அந்த எண்ணம் தோன்றுகிறதுகாரணம் ஆராய முற்பட்டால் அந்த நாளைய எழுத்துக்களுக்கு  உரமூட்டும் பின்னூட்டங்கள் இருந்தன. என் எழுத்துக்களுக்கு பின்னூட்டமிடுபவர்களின் கருத்தை வெளிக்கொண்ரும் சக்தி இருந்தது. நான் அன்று எழுதிய பதிவு ஒன்றினையும்  அதற்கு வந்த பின்னூட்டங்களில்  சிலவற்றையும் இப்போது பதிவிடுகிறேன் ஒருவேளை அத்தகைய பின்னூட்டங்களே அல்லது வாசகர்களின் கருத்துக்களே என் எழுத்துக்கு  உரமூட்டியதோ என்னவோ நீங்களும்தான் பாருங்களேன்

அறியாமை  இருள்.

             
என்னுடைய விடியலுக்காகக் காத்திருக்கிறேன் என்ற
பதிவில்,விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும், விளங்கா நிலையில்,
என்றோ, எவனோ, வரைந்து முடித்துவிட்ட வட்டத்தின்
தொடக்கப் புள்ளி தேடி,நாம் ஏன் சோர்வுற வேண்டும்,
அறியாமை இருளில் இருப்பதே சுகம் என்று எழுதி இருந்தேன்..
அண்ட  வெளியின்  இருட்டின் வியாபிப்பும், அதில் ஒளி தருவதே
ஞாயிறின் ஜொலிப்பு என்றும், அறியாமையும் ,அவலங்களுமாய்
இருண்டிருக்கும் வாழ்வியலில், நம்பிக்கையே ஞாயிறின்  ஒளி
என்றும், அந்த ஞாயிறின் விடியலுக்காகக்  காத்திருக்கிறேன்
என்று ம் எழுதியிருந்தேன்.
          அப்படியே நான் எழுதி விட்டாலும், நம்பிக்கை என்று வரும்
போது, அது அறிவு சார்ந்த்ததாக இருக்க வேண்டும் என்பதில்
குறியாய் இருக்கிறேன்..அணு, அண்டம் அறிவியல் என்று ஒரு
பக்கம் எழுதியதைப் படிக்கும்போதும், ஒரு பக்கம் உருவமே
இல்லாத ஒன்றுக்கு ஆயிரம் உருவங்களும் ,நாமங்களும்
கொடுத்து, “ ஐயனே ,உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்து
இருப்பதும் நான் எப்போ.?”என்று  உள்ளத்தாலும், உதடுகளாலும்,
எழுத்துக்களாலும், ஏங்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது,
இரண்டுக்கும்  பாலமாகப் பதிலாக, சாதாரணன் பகுத்தறிவின்படி,
ஒப்புக்கொள்ளும் படியான விளக்கங்கள் கிடைப்பதில்லை.
இல்லையென்றால் கிடைத்தவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு
இருப்பதில்லை. நான் என்னைக் குறித்தே குறைபடுகிறேன்.
          அறியாத ஒன்றைப் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம், அதே சமயம் எல்லாம் அறிந்துவிட்டதாகச் சிலர்
நம்பி உண்மையில் அந்த அறிவைத்தேடி, விளக்கில் மாயும்
விட்டில் பூச்சிகள் போல், ஏதும் அறியாமல் புரியாமல் சாதிக்காமல்
செத்து மடிவதைக் காணும்போது மனம் ஆயாசப்படுகிறது

           
யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே, ஐயன் புகழ்
பாடு, என்று அறியாத ஒருவனுக்குள்ள ஆயிரம் நாமங்களில்,
சிலவற்றைப் பாடி, அவனுக்காக கற்பிக்கப்பட்ட ஆயிரம் கதை
களையும் அப்படியே உண்மை என்று நம்பி, நான் முன்பு கூறியபடி
அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பதே சுகம் என்று காலம் கடத்த
வேண்டும்..ஆனால் என் செய்ய.? என் பாழும் மனம் ஒப்புவதில்லை.
          நான் முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன்.கடவுள்களும்
அவர்களுக்கான உருவங்களும், கதைகளும் ,ஏதோ ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட புனைவுகளே.ஆனால்
ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் புனைவுகள் இந்தியத் துணை
கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக
உலவுவதுதான்.ஆதியிலிருந்தே மனிதன், தன்னைக் காத்துக்
கொள்ள, தன்னிலும் மேலான சக்தியிடம், தன்னை ஒப்படைத்து
இனி அவன் பாடு, என்று பொறுப்பை, விட்டுக்கொடுத்துவிட்டான்.
தன்னில் அடங்காத, தன் சக்திக்கும் மேலான, அதே சமயம் தன்
வாழ்வுக்கு இன்றியமையாத, பொருள்களுக்கு உருவகம் கொடுத்து,
அதையே வழிபட்டு நம்பிக்கையை வளர்த்து வருகிறான்.நீர், நிலம்
நெருப்பு, அண்டம் ,காற்று, என்பவற்றைக் கடவுளாக பாவிக்கத்
தொடங்கினான். விஞ்ஞானம் வளர வளர, அவையே மனிதனின்
உடலில் இருப்பவை என்று உணரத்துவங்கி, அதையே கடவுள்
உன்னில் உள்ளான் என்று மெய்ஞ்ஞானம்கூறுவதாக
எண்ணினால், ஏதோ புரிகிறது போல் தெரிகிறது.

       
இதையே ஸ்ரீ நாராயணகுரு அவர்கள்கூறியது ,நான் படித்துப்
புரிந்து கொண்டபடிஆத்ம விடுதலைக்காக ஆண்டவனை                                            வேண்டும ஒருவன், அவனையே ஆராதிக்கலாம்  என்றும், ஒரு                 கடவுள்  சிலையோ ,ஆண்டவன் உருவப்படமோ உண்மையில்        அவனுடைய பிரதிபலிப்பே என்றும், நிலைககண்ணாடி முன்                         நின்று, அவனையே அர்ச்சித்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்றும்                தேடுப வனும், தேடப்படுபவனும், ஒன்றாகிறான் என்றும்,         வேண்டுபவனும்  வேண்டப்படுபனும் ஐக்கிய
மாக வேண்டும் என்றும்  கூறுவார்.இதையேஅஹம்
ப்ரம்ஹாஸ்மிஎன்று கூறுகிறார்கள் போலும்.

            
ஆனால் இப்படி வழிபடுவது சாதாரணனுக்கு சாத்தியம்
இல்லையே. அவனுக்கு உருவம் வேண்டும், உருவகம்
வேண்டும், கதை வேண்டும் ,அதில் ஒன்றிக் கலக்க வேண்டும்.
ஆனால் கடைசி வரையில் பெரும்பாலும் உண்மை உணரப்
படாமலேயே போய் விடுகிறது.
       
             
நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்ற  கதைகள்
பொய்யா.?கதையை நடந்தவையாகப் பாவித்தால்தான்
நம்பிக்கை வரலாம். கதைகளின் நிகழ்ச்சிகளால் மனிதனின்,
வாழ்வியலுக்குத் தேவையான அனேக விஷயங்கள்
அறிவுறுத்தப் படுகின்றன.ஆனால் உண்மை நிலை என்ன.?
நாம் அந்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திடம் மயங்கி, அதனால்
சொல்லப்படும் கருத்துகளை மறந்து விடுகிறோம்.நமது
பதிவர்களின் ஒரு பதிவில், கதைகளின் கருத்தை மறந்து,
கருத்து சொல்பவர்களைப் பற்றிய கருத்துகளையே  உலாவ
விடுகிறார்கள் என்று படித்த நினைவு.
             
என்னுடைய எண்ணங்களும், கேள்விகளும், ஏற்ற
தாழ்வில்லா சமுதாயம் மலர்ந்து, அதற்கான விளக்கங்களும்
காரணங்களும் கிடைக்கப் பெறும்போதுதான் முற்றுப்பெறும்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை அபத்தமானதுஎன்பதும்
எனக்குத் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவிடை
ல்லாமல் மயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை நியதிகளுக்கு
விடை காண இயலுமா. ? “ பரித்ராணாய  ஸாதூனாம்
விநாசாய  துஷ்க்ருதாம்.....தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகேசாதுக்களை காத்தற்கும் துஷ்டர்களை
அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுத ற்கும் யுகந்தோறும்
வந்துதிப்பேன்என்று மக்களுக்கு நம்பிக்கை நிலைநாட்ட
பகவான் கூறியது  உண்மையாக்க அந்த ஆண்டவனுக்கு
நேரம் இன்னும் வரவில்லையா.?இந்த யுகம் முடியும்
தருவாயில் கல்கி அவதாரமாக வந்து காத்தருள்வார்  என்று
நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா?
          எப்போதும்போல் என் சந்தேகங்கள் சில. 1). விலங்கு
களிலும், பறவைகளிலும் ஏழை பணக்காரன், படித்தவன்
படிக்காதவன், சாதி வேறு பாடுகள் இல்லையே.மனிதனுக்குள்
ஏன்.? 2).மனிதனுக்கு மட்டும்தான் பூர்வ ஜென்ம பலா பலனா.?

           
தலைவிதி , பூர்வ ஜென்ம  பலன் இன்ன பிற போன்ற
விஷயங்கள் தலையைப் பிய்க்கின்றன. மறுபடியும்
தோன்றுகிறது.அறியாமை இருளில் இருப்பதே சுகமோ.? 
=============================================
===  
இந்தப்பதிவுக்கு வந்த  பின்னூட்டங்கள் சிலவற்றைப் பாருங்கள்
1.   அறிவென்பது சுமைதான். அறிவு ஆராதிக்கப்படும்போது உண்டாகும் போதை மேலும் அறிவதற்கான பயணத்தை ஊக்குவித்து சுமையையும் அதிகரிக்கிறது.

அறியாமையின் இருளில் வாழ்வதுதான் உகந்தது. ஆனால் மிருகங்கள் அறியாமையில் வாழ்பவையல்ல. அவை உணர்வுகளால் தன் பலம் பலவீனத்தால் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு அதிலேயே அமைதியடைகின்றன. மனிதனின் சிந்தனைதான் அவனின் முற்பிறவி குறித்தும் கர்மா வினை குறித்தும் சிந்திக்க வைக்கிறது. அவற்றிலிருந்து கிடைக்கும் தெளிவு ஒரு தற்காலிக போதையே. அந்தத் தெளிவுக்குப் பின் புதிய கேள்விகளும் புதிய சந்தேகங்களும் தொடருவதால் அறிவென்பது மஹா சுமையே.

ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய நிறைய எண்ணங்களைத் தூண்டிய விசேஷமான பதிவு பாலு சார்.
2.   "நம்ம சிந்தனைகள்- ரொம்ப strong இருந்தா- அது கண்டிப்பா எங்கேயாவது பிரதிபலிக்கும்"- னு அம்மா சொல்லுவாள். "ததாஸ்து" கதையெல்லாம் இதையொட்டி தான் வரும். இந்த விஷயத்துல எனக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டு. ஏதாவது பாட்டு நான் மனதில் பாடிக்கொண்டிருக்குகையில்- எங்காவது கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்... இன்னிக்கு காலையில் 'prodigy', பூர்வ ஜென்மம்' பத்தியெல்லாம் நினைத்திருந்தேன்... இந்த போஸ்ட் இப்போ படிக்கறேன்...

there's an argument. not argument, kind of inference that we came up with when me and my dad were discussing about something a few days back. "Once knowledge is gained, there's is no going back to ignorance". That much we can agree upon, I guess, sir. So what we know- we know. We cannot pretend that we do not know. We are already out of darkness (may be we are in semi-darkness, now). 

பூர்வ ஜென்மத்த பத்தி- அப்பாவோட கருத்து ஒண்ணு. மனுஷனுக்கு மேல ஒன்னும் கிடையாது. பூனை-லேர்ந்து மனுஷ பிறவிக்கு progression நடக்கலாம். ஆனா- மனுஷன்லேர்ந்து கீழ போக இயலாது. இது எங்கயோ அவர் படிச்சது. ஆனா-- புனர் ஜென்மம் concept ரொம்பவே complicated ஆன ஒண்ணு.
May be this is crazy - ஆனா துப்பாண்டி- பத்தி எனக்கொண்ணு தோணும். அவன் பூனையா இருந்தாலும்- "nearly human tendencies" அவனுக்கு உண்டு. அவன கடந்த ஒரு வருஷமா நாங்க பாக்கரதிலேர்ந்து- இந்த விஷயம் வந்தது. Bushy கு இல்லாத சில குணாதிசயங்கள் துப்பாண்டி-கு உண்டு. விட்டுக்கொடுத்தல்- முக்கியமா. Magnanimity. ஒரு சில சமயத்துல- அவன் செயலெல்லாம்- may be அடுத்த ஜென்மத்துல அவன் மனுஷனா போகப் போறானோ-ன்னு தோணும்.

But this is just my view... Who knows, what's real?

Thought provoking post...

 3 புனைவுகள் எப்போதும் சுவையானவை. அவை சுவையோடு சிலசமயம் நாம் அனுமதிக்காமலேயே நம்முடைய வாழ்வில் புகுந்து நாம் விரும்பும் விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாம் அதனை நம்பவேண்டுமோ என்கிற ஒரு மனோபாவத்தையும் அது காட்சிப்படுத்திவிடும். கதைகள் எப்போதும் தேவையானவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் ஒரு மாற்றத்தையும் அதற்கான கணிசமான விளைவையும் ஏற்படுத்தித்தான் இதுவரை நிலை நின்றிருக்கின்றன.

விலங்குகள் அறிவியல் விதிப்படி தெளிவானவை. அவற்றில் வாழ்வியலும் அதனைத் தக்க வைத்தலும் அவற்றிற்கு சொன்னதை செய் என்பதுபோல செருகப்பட்டே படைக்கப்பட்டுள்ளன. இரை வாசமும் அதனை உண்ணும்போது அர்ப்பணிப்பும் தின்று இளைப்பாறும்போது அதே தன்மையிலான இரைகள் அருகே இருந்தும் அவற்றைப் பற்றிய அலட்சியமும் அவற்றுக்கு பேச்சில்லாமல் சொல்லப்பட்டவை. இது அறிவியலின் தன்மை.
நாம் எல்லாவற்றையும் திணித்துக்கொள்ள இயலாது. திணித்துக்கொள்ள மனம் கிடந்து அலைகிறது. சில காட்டிக்கொள்கின்றன. சில நடிக்கின்றன. சில சொல்லாமல் போகின்றன. இருப்பினும் எல்லாவற்றையும் அதனதற்கரிய களத்தில் பிரமிப்போடு அனுபவித்துவிட்டு மறக்கலாம். அடுத்தடுத்து இதுபோன்று பல காத்துகிடக்கினற்ன.

தலைவிதி, பூர்வஜென்மம் இவை பற்றியெல்லாம் பெரிதாக சிந்தனை கொள்ளவேண்டியதில்லை. இவற்றை பசிக்கேற்றவாறு உணவு எடுத்துக்கொள்வதைப்போல தேவைக்கேற்பப் பயன்படுத்திப் பார்க்கலாம். இதன் விளைவுகளையும் இப்படியே எண்ணி ஏற்கலாம். அல்லது விலக்கலாம். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்தியும் பார்க்கலாம்.

அறிவினால் விளங்கி கொள்ள முடியாத போது அது பயத்தையும் ஆச்சர்யதையும் பழங்கால மனிதனுக்குக் கொடுத்தது. பயந்தான். பயன்படுத்தினான். அவனையறியாமல் வணங்கிப் போற்றிக் கொண்டாடினான். இது எல்லோரும் அறிந்ததுதான். தெரிந்தபோது பயன்படுத்தினான். சிந்தை தெளிந்தபோது இவற்றினைப் பற்றிய தெளிய ஆராய ஆரம்பித்தான்.
முன்னோரகள் சொல்லிய கதைகள் வீணல்ல. அவை அற்புதப் புதையல். அவற்றின் நீதிகளை அல்லது முடிவுகளை மட்டுமே உள் வாங்கிக்கொள்ளலாம். அவை பற்றிய ஆய்வு வேண்டியதில்லை என்பது என்னுடைய பணிவான கருத்து. 

எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும் அறிந்து கொண்டபின் அனுபவிக்கவும் செய்தபின் எதுவுமே தெரியவில்லை என்கிற அறியாமையை உண்டாக்கிகொண்டால் இன்னும் சுவை கூடிவிடும். 

தொடர்ந்து பல்முனையிலும் யோசிக்க வைக்கும் பதிவு ஐயா.
உங்கள் பதிவுகள் எப்போதும் சுவையானவை மட்டுமல்ல. அது சிந்தனையை அசைப்பவை. எல்லோருக்கும் எல்லாமும் அனுபவமாகக் கிடைத்திருந்தாலும். ஒவ்வொருவர் வயதின் தளத்தில் அது தனித்துவமும் ஆர்வத்தையும் தருகிறது. நான் உங்கள் பதிவில் அந்த சுகத்தை அனுபவிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. நன்றிகள்.

 4  Your Objective is to provoke your readers to ‘think’, and in that, you have achieved your objective; 

“Ignorance is Bliss “is a statement, probably made by people who experienced the same ‘pain ‘, as yourself..? Perhaps, to fancy that I must know all the answers to all my ( tormenting ) questions, is also a sort of egotism …( ? )… 

Bertrand Russell says ( quoting John Stuart Mill ) : Talking about the First Cause argument … The question Who created the world can not be answered , because it will lead to the ultimate question , Who created God; I am able to imagine and accept that the world is simply there! I am at peace with this proposition; if you are not able to imagine that the world is simply there, then that only shows your “poverty of imagination” … ( ! ) 

This is the same as 

சொல்லற சும்மா இரு” ; 

கண்டவர் விண்டிலர்;

“Choice less awareness”
“ Discussion implies non-understanding; Understanding implies non-discussion….” 
Thank you for provoking me to share this with you / readers….

எழுத்தாளன் எழுதுவதோடு நிற்பதில்லை. அந்த எழுத்துக்களின்  தாக்கமும் அறிய வேண்டுகிறான் ஆனால் இப்போதைய பதிவுகளில் இவன் இப்படித்தான்  என்று முத்திரை குத்தப்பட்டு விட்டதாலோ என்னவோ எழுத்துக்களின்  தாக்கம் தெரிவதில்லை. இல்லை ஒரு வேளை எழுத்துக்களுக்கு எந்த தாக்கமும் இல்லாது போய் விட்டதோ என்னவோ.
டாக்டர் கந்தசாமி பதிவுகளும் பின்னூட்டங்களும்  என்பது பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார் சிலர் நமக்குத் தெரிந்தவர் , வேண்டியவர் அல்லது நாம் அவர் தளத்துக்குச் செல்வதால் பின்னூட்டம் இடுபவர் என்றெல்லாம் வகைப் படுத்தி எழுதி இருந்தார்  எனக்கென்னவோ பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட  கருத்துச் செறிவான பின்னூட்டங்களே பதிவரை மேலும் எழுதத் தூண்டுபவை என்று நினைக்கிறேன் உங்கள் பின்னூட்டங்களை எதிர் நோக்கி.
இன்னொரு விஷயமும் பகிர விரும்புகிறேன்  பலரும் பின்னூட்டங்கள் பாராட்டியோ நிந்தித்தோதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனக்குத்தோன்றுவது என்னவென்றால் பதிவைப்படிக்கும் போது ஒத்த கருத்தோ எதிர்வினைக்கருத்தோ மட்டுமல்லாமல் படிக்கும் போது வாசிப்பவருக்குத் தோன்றும் கருத்துக்களையும் பதிவிடலாமே