Tuesday, May 28, 2019

ஒரு சர்வாதிகாரி உருவாகிறாரா



                                     ஒரு சர்வாதிகாரி உருவாகிறாரா
                                     ---------------------------------------------------

இந்தப்பதிவை எழுதுவதா வேண்டாமா  என்னும் பலத்த சிந்தனைக்குப் பின் எழுதுகிறேன்  இதில் காணும்செய்திகள் எல்லாம் ஏதோ பெர்செப்ஷனில் எழுந்ததே  இது முற்றிலும்  என் சிந்தனை ஓட்டமே  வாசகர்கள் தாரளமாக அவர்கள் கருத்தைக் கூறலாம்
 அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மோடியின்  பா ஜ க   வென்று விட்டது இவ்வெற்றி என்சிந்தனையைத் தூண்டி விட்டது  எனக்கு பயமாக இருக்கிறதுமோடி இன்னொரு ஹிட்லராக உருவெடுப்பாரோ என்பதே  ஹிட்லருக்கு அவர் ஆரிய குலத்தவர்  உயர்ந்தவர் என்றும்   மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருத்து இருந்ததாகப் படித்திருக்கிறேன் அதாவது நம்மோடிக்கும்  அவர் சார்ந்து இருக்கும்   ஹிந்துத்வா கொள்கைக்கும்   ஹிட்லரின் நாஜி கொள்கைபோல் இருக்கிறதோ என்னும் ஐயம் இன வெறி கொண்டு லட்சக் கணக்கானவரை ஹிட்லர் அழித்தார்அதுபோல் மோடியும் நினைக்கிறாரோ, இதை அறியாமல் ஜாதிவாரியாககூட்டணி அமைத்து தேர்தலில் தோற்றவர்கள் போல்  சாதிவாரியாக அல்லாமல்  இனவாரியாக காய்களை நகர்த்தி மோடி வெற்றி அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது நம்நாட்டில் முஸ்லிம்கள் சுமார்  15 சதவீதம் இருந்தாலும்அவர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பிரிந்து இருக்கின்றனர் அவர்களது வாக்குகள்முக்கியம் என்றாலும்   ஒருங்கிணைந்து இருக்கவில்லை உத்தரப் பிரதேசத்தில் யாதவ்களும் மாயவதிகளு கூட்டு சேர்ந்து மோதியை எதிர்த்தார்கள் ஆனால் தோல்வி கண்டார்கள்  மோடி எடுத்த ஆயுதமோ ஹிந்துத்வா கொள்கை இதில் சாதியினரை அடக்கியதுமோடியின்  சாமர்த்தியம் இந்த  சிறுகணக்கை  விட்டு விட்டு ராகுல் காந்தி மக்களுக்குத்தேவையாக நினைத்ததுவேறு தென் இந்தியாவில் மோடியுடைய பாஜகவையோ அதற்கு துணை போனவர்களையோ கண்டுகொள்ளவில்லை  தமிழ்நாட்டில் ஹிந்துத்துவாவை பிராம்மணர்களின்  கட்சி என்று நினைத்தார்கள் அது தலை எடுத்தால்  தங்கள் கொள்கைகள்  அடிபட்டுப்போகும்   என்று நினைத்தார்கள்  
பாஜகஒரு நாஜிக்களின் கொள்கைகளைக் கையில் எடுக்கும் அபாயம் இருக்கிறது இன்னொரு முறை மோடியின்  ஆட்சி  சர்வாதிகாரமாக மாறும் அபாயம்  உள்ளது  நானே ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரி தேவையாக  இருக்கலாமென்றுஎழுதி இருக்கிறேன் ஆனால் போகிறபோக்கைப்பார்த்தால் மோடி இன்னொரு ஹிட்லராக உருவெடுக்கும்  சாத்தியக் கூறுகளே  அதிகமென்று தோன்றுகிறது அன்புக்கும்  அஹிம்சைக்கும் பெயர் போன இந்தியா அதற்கு நேர்மாறாக செயல் படுவது தெரிகிறது மோடி அவர் காய்களைப் பிறரால் நகர்த்தும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர் போபாலில் ஒரு  கொலைக்குற்றம்சாட்டப்பட்ட  சாத்திவினியை தேர்தலில்  நிற்க  வைத்துகாந்தியைக் கொன்றவன்  ஒரு தேசபக்தன் என்றுகூறியதுகேட்டும்  வாளாவிருப்பது  கண்டு  அவரது உண்மை சொரூபம் தெரிகிறது  இல்லை யென்றால்  அவரை தேர்தலிலிருந்து விலக்கி இருக்க வேண்டும் காஷ்மீர் பிரச்சனையை மோடி தீர்க்கமுயல மாட்டார்  அவருக்கு இஸ்லாமியர் மேல் அத்தனை காழ்ப்பு தீர்வுகாணமுயற்சிக்காமல் என் சொல்படித்தான்  நடக்க வேண்டுமென்று நினைப்பது அவரது சர்வாதிகார குணத்தையே காட்டுகிறதொ எனும் சந்தேகம் எழுகிறது
 The BJP is the political wing of Hindu nationalism, a movement that is changing India for the worse. Little wonder, as it stands for the flagrant social dominance of the upper castes of Hindu society, pro-corporate economic growth, cultural conservatism, intensified misogyny, and a firm grip on the instruments of state power. The landslide win for Mr Modi will see India’s soul lost to a dark politics – one that views almost all 195 million Indian Muslims as second-class citizens.
On the campaign trail Muslims were denigrated as “termites” by Mr Modi’s right-hand man. Off it, they were lynched with apparent impunity. Despite their number, Muslims are political orphans, shunned by a political class fearful of losing support from the majority Hindu population
 The BJP has been allowed to be funded anonymously to the tune of 10.3bn rupees (£120m) by big business after Mr Modi legitimised opacity in political donations. The party pays lip service to reducing the yawning inequalities that disfigure India, but political cleavages in India’s party system have grown along the lines of caste and religious conflict. This suits the BJP, with its pro-business and anti-Muslim nationalism. The opposition will need to be able to run a distinctive campaign on an egalitarian platform.
மேலே  த கார்டியன் பத்திரிகையில் வெளியான சில செய்திகள்
கான்ஸ்டிட்யூஷனல் அங்கங்களை தன் இஷ்டத்துக்கு வளைப்பதில் தேர்ந்து விட்டார் மோடி  ரிசர்வ் பேங் எலெக்‌ஷன் கமிஷன்   என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்டொரேட்  ஏன்  உச்சநீதி மன்றம்கூட அடங்குமோ   எல்லாவற்றையும்  எந்த மன கட்டுப்பாடும் இல்லாமல் உபயோகிக்கிறார் என்றே தோன்று கிறது 

 எந்தக்கட்சியிலும் மனஸ்தாபம் உள்ளவர்கள் இருக்கலாம்  ஆனால் அவர்களை வலை வீசிப்பிடித்து  அரசியல் லாபம் காண்பது என்ன நியாயம் கர்நாடகத்தில் ஆப்பெரேஷன்  லோடஸ்  பெயர் பெற்றது
 2014 ல் எப்படியும்  ஜம்மு காஷ்மீரில் பதவி பிடிக்க ஆசைப்பட்டு  ஹிந்துக்கள் அதிகம் இருக்கும்  ஜம்முவிலிருந்து பெற்ற வெற்றியுடன்  ஆட்சி அமைக்க மெஹ்பூபா  மஃப்டியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்ததே பிஜேபியின் தந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு  பிஜேபியினருக்கு கொள்கை என்று ஏதும் இருந்தால் அது இந்தியாவை ஹிந்துத்வா நாடாகக் கொண்டு  வந்து காவிகளின்  அடியில் சமர்ப்பிப்பதே தேர்தலின்  போது கூறிய  சப்கேசாத் சப்கே விகாஸ் என்பதெல்லாம்  தேர்தல்  வாக்குறுதிகள் மட்டுமே         

               
   வழக்கம்போல் மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன் ஆனல் பல மோடி ஆதரவாளர்கள்

 ஒப்புக்கொள்ளமாட்டார்களே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும்

  நான் எழுதுவேன் வயதாகி விட்டதே யார் எப்படிப்போனால் என்ன என்று இருக்க

முடியவில்லை சிலராவது புரிந்து கொள்வார்கள் என்னும்நம்பிக்கையே காரணம்    


                    
   


  


Saturday, May 25, 2019

நன்றி நவில்கிறேன்



                                    நன்றி நவில்கிறேன்
                                     -------------------------------

 அது என்னவோ தெரியவில்லை இன்று நான் இப்படி இருக்க யார் யாருக்கெல்லாம்   நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்க தோன்றியது சிலருக்கு நன்றியை நினைத்துக் கொண்டாலும் அதை ஆவணப்படுத்த் தோன்றியது

வாழ்வில் முதல் முறையாக ஒர் நேர்காணலுக்கு எச் ஏ எல் பயிற்சிக்கு   சென்னையி நெர்காணல்  நாங்கள் நீலகிரி வெல்லிங்டனில் இருந்தோம்வெல்லிங்டனிலிருந்து சென்னை (மெட்ராஸ் ) செல்ல அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்புக்கு ரயில் சார்ஜ் ரூ.10  என்று நினைவு மெட்ராஸ் போய்வரவும் அங்கு ஓரிரு நாள் தங்கவும்   ரூ 30 க்கு குறையாமல் ஆகும்  என்னதான் முயற்சித்தும் அப்பாவால்  ரூ 15 க்கு மேல் புரட்ட முடியவில்லை நமக்கு கிடைத்த வாய்ப்பு அவ்வாவுதான்  என்று தோன்றியபோது  அதென்ன அப்பாதான் பணம் ஏற்பாடு செய்ய வேண்டுமா நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது  என்று தோன்றவே முதலில் மனக்கண்ணில்  தோன்றியவர் பர்மா ஷெல் இன்ஸ்பெக்டர் திரு சுப்பிரமணியம் அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன்அவரை நான் மைசூர் லாட்ஜ்  கூனூரில் பணியிலிருந்த்போது பழக்கம் குழந்தே என்று  அன்புடன் கூப்பிடுவார் . என் நிலைமை எடுத்துக் கூறினேன். அவர் என்னை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துநான் இண்டர்வியூவுக்கு மெட்ராஸ் செல்ல உதவுவதாகவும் கூறினார். ஈரோடில் அவருக்கு ஒரு வேலை நிமித்தம் செல்ல வேண்டி இருப்பதாகவும் என்னை அவருடைய காரிலேயே ஈரோடு வரைக் கூட்டிச் சென்று, அங்கிருந்து மெட்ராஸுக்குரெயிலில் டிக்கெட் வாங்கி ஏற்றி விடுவதாகவும் கூறினார். எனக்கு மனதில் கொஞ்சம் தெம்பும் உற்சாகமும் வந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய வீட்டுக்கு காலை பதினொரு மணி அளவில் சென்றேன். அவருடன் அவருடைய காரில் ஈரோடு வரை பயணித்தேன். போகும் வழியெல்லாம் அவர் என்னை எப்படி நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார். என்னை கேள்விகள் கேட்டு, நான் பதில் சொல்வதுகேட்டு, என்னை ஊக்கப் படுத்தி, எனக்கு அந்த தேர்வில் வெற்றி கிடைக்கும் என்றும் வாழ்த்தினார். ஈரோடில் என்னை ரயில் ஏற்றியும் விட்டார். ஆக காலணா செலவில்லாமல்  மெட்ராஸ் சென்று விட்டேன் நான்பயிற்சியில் சேரவும் ஒரு நல்ல நிலைக்கு வரவும்  முக்கியமானவராக இருந்தார் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினேன்  இயலவில்லை அவருக்கு என் முதல் நன்றி  வளர்ந்துமுன்னுக்கு வந்தபின்  முகநூல் மூலம் தொடர்பு கொள்ள முயற்சியும் பலன் தரவில்லை

நான் அந்தபயிற்சிக்கு தேர்வானேன்  1955 மார்ச் மாத இறுதியில்  பெங்களூர் வந்தேன்  சில பல காரணங்களால்  பெங்களூரில் தனியே தங்க வேண்டி இருந்தது பெங்களூர் கண்டோன் மெண்ட் ஏரியா எனக்கு பழக்கப்பட்டதே ரயிலில் வந்ததும் ஒரு ஜட்காவண்டி பிடித்து வண்டிக்காரரிடம் எதாவது ஓட்டலுக்குக் கூட்டிப்போகச்சொன்னேன்அவர் என்னை ஓல்ட் புவ்ர் ஹௌஸ்ரோடில் இருந்த ஹோட்டல் அசோகாவுக்குக் கூட்டிச்சென்றார்  ( இப்போது அந்த இடத்தில் ஹோட்டல் காமத் இருக்கிறது))அங்கு ரூம்வாடகையாக ஒரு நாளைக்கு ரூ 40 என்றும் மாத வாடகைக்கு இடம்தருவதில்லைஎன்றும்  கூறினார்கள் என்னிடம்  இருந்ததோ ரூ 15 மட்டுமே  ஜட்காவண்டிக்காரர் நல்லவர் என் நிலை தெரிந்து  இப்ராஹிம்சாஹிப் தெருவில் இருந்த ராஜா ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றார்அங்கு ஒரு அறையில் நான்கு கட்டில்கள்  ஒரு கட்டிலுக்குமாதவாடகை ரூ 10 /-ஒரு மாதவாடகையைக் கொடுத்து அறையை ஏற்பாடு செய்து கொண்டேன்  தங்குமிடம் எனக்கு ஏதுவாக அமைய உதவிய ஜட்கா வண்டிக்காரருக்கு என்நன்றி

eஎங்கள் பயிற்சி நேரம்   மதியம் 12மணி முதல்  இரவு 8 மணி வ்ரை  ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திரா பாலிடெக்னிக்கில் பயிற்சி   போஸ்ட் மான் வரும்போது நான் அறையில் இருக்கமாட்டேன்   ஆனால் எனக்கு ஒரு ரெஜிஸ்டர் தபால் என் தந்தையிடம்  இருந்து வரவேண்டி இருந்ததுஅவர் நான்  எச் ஏ எல்லுக் கொடுக்க வேண்டிய பாண்ட் பத்திரம் என் அப்பாவின் கையெழுத்திட்டு வர வேண்டும்  நான் அறையில் இருக்க முடியாததால் பெங்களூர் தலைமை  போஸ்ட் ஆஃபிஸ் நான் போகும் வழியில் இருந்ததால் அந்த போஸ்ட் மாஸ்டரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தேன்   எனக்கு வரும் கடிதங்களை c/o post  master என்னும் முகவரிக்கு வரும் என்றும்  அதை  அவர் வாங்கி வைத்தால் நான் பெற்று கொள்ள முடியுமென்றும் சொன்னேன்  அவரும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்   அந்த உதவியைச் செய்து உதவிய அவருக்கும்  நன்றி இப்போதெல்லாம் அதுபொல் முடியுமா தெரியவில்லைஅவரது உதவியால் நான் எனக்கு வந்த ரெஜிஸ்தர் கடிதம்பெற்று க் கொள்ள முடிந்தது  அரசு உத்தியோகத்திலும் நல்லவர்கள் இருந்த காலம் அது

 இதெல்லாவற்றையும்   விட நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பது என் நண்பன் முத்து சாமிக்குதான்   விஜயவாடாவில் இருந்தபோதுஎன் மாமியாரின் தொந்தரவால் பெங்களூரில்  ஒருஇடம் வாங்கினேன்   அப்போதெல்லாம் என் வேலை இருக்கும் வரை க்ம்பனி  எனக்கு வீடோ அல்லது அதற்குண்டான   வாடகைப்பணமோ தருவார்கள் எதற்காக  வீடு கட்ட வேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தேன்சராசரிவயது அறுபதுக்கும் குறைவே என்று எண்ணி  முத்துசாமிதான் என்னைவற்புறுத்தி வீடு கட்ட  வைத்தார்   அந்த செயலே இப்போது எனக்குச்சோறு போடுகிறது  மேல்தள வீட்டு வாடகையே என் வருமானம்   எனக்கும் என் மனைவிக்கும் அதுபோதும் என்று தோன்றுகிறது யார் கையையும் எதிர்பார்க்க வேண்டாம்   ஆகவே என் நண்பன் முத்துசாகிக்கான நன்றியை நான் ஆவணப் படுத்துகிறேன்

 எது இருந்து என்ன உடல் என்றால் கூடவே உபாதையும் கூட வருகிறது அதுவும் வயதானால்  கூடவே வரும்  இன்றைய நிலையில்  வரும் உபாதைகளுக்காக  மருந்து செலவு மருத்துவச் செலவு எல்லாமே  நம்கைக்கு எட்டாமல் போய் விட்டது  நல்ல காலம் நான் பணி புரிந்த  பீ எச் இஎல்  நிறுவனம் என் எல்லா மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது இது ஒரு மிகப்பெரிய ரிலீஃப்  ஆகவே நான் பணி புரிந்த பீ எச் இ எல் நிறுவனத்துகு என்சிரம் தாழ்த்திய நன்றிகள்
எத்தனையோ பேருக்கு நன்றிக்கடன் பட்டிருந்தாலும்  என் மனைவிக்கு பெற்ற கடனுக்கு ஈடாகாது
 இன்னும் யார்யாருக்கெல்லாம்  நன்றி செலுத்துவது  என்று தெரிய வில்லை நான் எழுதுவதற்கு ஊக்கம் தந்த திருஹரணிக்கு நிச்சயம் நன்றிசொல்ல வேண்டும்
பின் என்ன பாருங்கள் எப்படி ஊக்கமூட்டும்  பின்னூட்டம் என்று
பிரமித்துப்போய் நிற்கிறேன். எனக்குச் சொற்கள் கிடைக்கவில்லை உங்களை வாழ்த்த. நன்றாகத் தேர்ந்த பயிற்சியினால் மட்டுமே இதுசாத்தியம். வசனகவிதையில் இராமாயணம் படித்த நிறைவு. குழந்தைகளுக்கு இது எளிமையானது. குழந்தை இலக்கியத்தில் இதனை வைக்கலாம். அதாவது இப்படிப்பட்ட அணுகுமுறையை. அருமை ஜிஎம்பி ஐயா.

உங்களிடம் இருக்கும் பலவித ஆற்றல்களைக் கண்டு சிலிர்த்து நிற்கிறேன். குழந்தை பாடல்போல இதனை சொல்லலாம் நீங்கள். படிக்கிற போது அலுப்பூட்டாது ஆர்வங்குறையாது மனசு நிறைகிறது. எளிமையாக சொல்லுதல் என்பது எளிதல்ல. நீங்கள் வித்தகர்தான்.

அழகான கதைகோர்ப்பு. கதை சொல்லி நீங்கள். இதன் பின்னே உங்களின் கடுமையான அனுபவமும் பயிற்சி மேலோங்கி நிற்கிறது. உங்களிடம் கற்க நிறைய இருக்கிறது. எல்லா புராணங்களையும் இப்படி சொல்லுங்கள். காத்திருக்கிறோம்.

என்னுடைய மனம்நிறை வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

அற்புதம். வசீகரம். மாயாஜாலம். மனத்தைக் கட்டிப்போடும் சாதுர்யம். நிறைவு. திருப்தி. மகிழ்ச்சிகள்.

 
                            
   


  

Thursday, May 23, 2019

காணொளிப்பதிவு



                                     காணொளிப்பதிவு
                                     ------------------------------

கில்லர்ஜிக்கு இது பிடிக்காது


கீரியும்  பாம்பும்  சண்டை பார்த்திருக்கிறீர்களா


பூனையின் சீண்டல்


இட்லியின் கதை



நிறையக் காணொளிகளானால் பார்க்காமல் போய்விடும் வாய்ப்பு அதிகம்

                                                                          

Tuesday, May 21, 2019

கடவுளி டம் ஒரு வரம்


                                              கடவுளிடம் ஒரு வரம்
                                              -----------------------------------

ஒரு பதிவில் பொழுது புலர்ந்தது  மெல்லென எழுவீர் என்று  துவங்கி இருந்தேன் 
ஆனல் இந்த அனுபவம் சற்றே  வித்தியாசபட்டது
 கடவுளுடன்  ஒரு உரையாடல் என்று ஒரு பதிவு எழுதி  இருந்தேன்  கடவுளை ஒரு ஓசை வடிவில்தான்  சந்தித்த நினைவு  ஆனால் இம்முறை க்டவுளை நேரில் கண்டேன்
 என்னது கடவுளை  நேரில் சந்தித்தாயா  எப்படி இருந்தார் என்றெல்லாம்   கேட்காதீர்கள் எங்கும் நிறைந்தவன்   ஒரு உருவமில்லாதவன் அவனை ச்ந்திப்பது எளிதா என்ன சிறுவயதிலிருந்தே  கடவுளுக்கு ஒரு உருவம் கற்பித்து அதையே  கடவுளாக பாவிப்பது என்பது நம் ரத்தத்தில் ஊறிய  ஒன்று 
முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
 
வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
 
சிக்கலாக்கும்.என்று  அப்போது கடவுள் சொல்லி இருந்தார்
இருந்தாலும் ஆராய்ச்சி செய்வதே பழகி விட்டது அதனால் எந்தபாதகமும்  இதுவரை இல்லை ஒருவரை எப்படி நினைத்துப் பார்ப்பது  இருக்கும் போது இருக்கும் அடையாளங்கள்  இறந்தபின்  என்னவாகும்
 சரி ஐ ஆம்  டைக்ரெஸ்ஸுங் .
கடவுளைக்  கண்டேன் என்று எழுதி இருந்தேன்    எப்படி இருந்தார்  என்னும் கேள்வியும் கூடவே வருமே அதைத்தான் சிறுவயதிலிருந்தே இண்டாக்ட்ரினேட்  செய்யப்பட்ட உருவங்களிருக்கின்றனவே
 அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது. உருவமே இல்லாதவன் என்று சொல்லும்போதும் படைப்பின் உருவகமாக லிங்கம் ஆவுடையார் என்று உருவகப் படுத்தி இருப்பார்களோ என்னும் ஐயம் எழுவதுண்டு. இப்படி நினைப்பதே தவறு என்று கூறி அடிக்க வந்தாலும் வருவர். 
 ஆனால் என் முன்  வந்தது நானே  என்னது நீயா  ஆம்  சிறுவயதில் நாராயண குருவின்  புத்தகம் வாசித்திருக்கிறேன் அதில் அவர்
 Every idol in fact is meant to represent  oneself  and in offering a flower fruit or any form of sacrifice, the symbolism is meant to reveal the fact that the subject and the object are one and the same in the act of worship The idol in reality is to be looked upon as a subtle form of  mental equation between the self within and self without.If this worship is understood to be an equation between the two aspects of the self , the seeker and the sought , the subjective and the objective,  one can sit in front of the mirror and say ,"thou art that" and ones own image on the mirror can well serve  as the necessary idol

அப்படி நோக்கும்போது என்னுள் இருக்கும் இறைவனும்  நானே பல உருவங்களில்  வணங்கப்படுபவனும்    நானே என்று என்  இருக்கக்கூடாது கனவில் அப்படித்தான் கடவுளைக்கண்டேன்
வழக்கப்படி அவரும்  “பக்தா உன்பக்திக்கு நான் மெச்சினேன்  என்ன வரம்வேண்டும் கேள் என்றார்
எனக்குத் தோன்றியதெல்லாம் நானே கடவுள் ஆனதால்  எனக்கிருக்கும்  உபாதையைப் போக்க வேண்டும் என்பதே  என்னால் நார்மலாக நடக்க முடியாமல் இருப்பதே குறை அதை நீக்க வேண்டி வரம் கேட்டேன்   கிடைக்குமா தெரியவில்லை  எல்லாம் நம்பிக்கைதானே                          
   


  




Saturday, May 18, 2019

மொழி மாற்றங்கள்


                        மொழி மாற்றங்கள்
                       ===================
 அண்மைக் காலங்களில் சில பதிவுகளில் மொழி பெயப்பு மற்றும்  மொழி மாற்றம்  பற்றிய செய்திகள் வருகின்றன நண்பர் திரு வி நடன சபாபதி விளக்கமாக எழுதி வருகிறார் சொற்பொழிவை மொழி பெயர்ப்பதில்  சங்கடங்கள் அதிகம்  மற்ற படி ஒரு மொழியிலிருப்பதை  இன்னொரு மொழிக்கு மொழி பெயர்ப்போ மொழி மாற்றம்செய்வதோ அத்தனை  கஷ்டமில்லை  ஏனென்றால் மொழிபெயர்க்க கிடைக்கும் அவகாசம்  அதிகம்மொழி பற்றிய அறிவிருந்தால்
நான்மொழிபெயர்ப்பு மொழிமாற்றமென்பதில் இருக்கும் வித்தியாசம் பற்றி  அறிந்திருப்பதால் சொல்கிறேன்   வேற்று மொழியிலிருந்து  நம் மொழிக்கு மொழி பெயர்த்தால்  நம்  எழுத்தில் இருக்கும் நேடிவிடி போய்விடும் சாத்தியம் அதிகம்   நம்மொழியில் மாற்றும்போது பொருள் போகாமல்  மாற்றுவதை மொழி மாற்றம் என்பேன்   திருமதி கீதா மதிவாணன்    ஒரு ஆங்கில நூலை மொழிபெயர்த்து எழுதி இருந்தார்கள்  நான் என்ம்வழக்கப்படி மனதில் தோன்றியதை எழுதி விட்டேன்  அவரும் அதை  விரும்பி இருக்க மாட்டார்  இத்தனை கூறுபவன்நான் மட்டும் முயற்சி செய்திருக்க மாட்டேனா ? நானும்மொழி மாற்றம் செய்திருக்கிறேன்
செல்வி மாதங்கி மாலி அவர்கள்முக நூலில் the lonely bird   என்று ஒரு பதிவு ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்கள் நான் அதை தமிழாக்கம் செய்தேன் இதுமாதிரி தமிழிலும்  எழுத முடிந்ததுபற்றி அவர்களே ஆச்சரியம் அடைந்தார்கள்  என்பேரன்  அவன் அன்னையைப் பிரிந்து ஒரு பதிவு ஆங்கிலத்தில் எழுதி இருந்தான் அதை  நான் தமிழ் படுத்தினேன் எனது செய்யாத குற்றமென்னும் பதிவை திரு அப்பாதுரைஆங்கிலத்தில் எழுதினார்கள்அண்மயில் கன்னட கிராமியப்பாடலை நான் தமிழ்ப்படுத்தினேன்   திருடி பி கைலாசம்  ஆங்கிலத்தில்  Victoriyan  ENGLISH  ல் இருப்பதாக ஏகாந்தன் கூறி இருந்தார்கள்  DRONA என்று  எழுதி இருந்ததை  நான்மிகவும்சிரமப்பட்டு தமிழாக்கினேன் நான் எழுதி இருப்பச்து எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறினால்  மட்டுமே என்பதை இங்கு பதிவு செய்கிறேன் நான் எந்த மொழியிலும் வல்லுனன் அல்ல  நீளம்  பார்த்து படிக்காமல் போகாதீர்கள்
DRONA
THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of
 thine own son. Thou didst but drain
The bitter gall thy
 vanity had brewed!

பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே

THE  LONELY BIRD

THEdusk was a rage of red
And melted away, was gold
The breeze was a welcome bliss
But in came a cruel cold.

The sun was away for a while
Stars, waiting for the moon
The sky was an empty heart
Oh Night! Be here soon.

Through the gray, gold and red
Fluttered a little lone bird
"Where were his friends"? I wondered
And it seemed, for a moment- he heard.

"What had kept you back?
Why did you wait so long?
Is it for a grain of rice?
Or some poet's sad- bird song?

You flutter as you fight with the breeze
Your wings growing tired as I see
What had kept you back- waiting?
While you watched your friends fly, free?

Fly home safe, little bird
Worry not, for the grain of rice
Your little ones wait for you, back home
Keep them safe from a world of lies.

Return to them, help them live
Return to them, to life
For rice is rice, and song- a song
But life- not something rife"!

He fluttered along- soon, was gone
The sky now dark- an empty space,
I closed my eyes, to feel through the sky
And I found his little wings' pace.

He was home, he was safe
That was all, I needed to know
The night was here- and so was the cold
"Au Revoir, little bird- for now, I must go".
.                                    ----------------------------
மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.”
.
 Ammaa

When I was home alone
I was happy thinking about the freedom
But without you it was actually boredom
The fights we have and the love we share
I missed it all and wanted nothing but care
Time passed
Oh I never knew it was cause I was thinking only about you
Things have changed  and so have I
I don’t know whether it is good or bad
But my love  always  was you mom
You were the Sun rays that woke me up
And the moon that put me to sleep
Like that I convinced  myself that you were there within myself
You are the one and only one who is so complete and so damn sweet
You are mine and you make me shine
Mom you are the best
LOVE YOU MOM
தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மாநீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மாஎன் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!

Retribution for a crime not committed

yes drift away from the tube
as body retires to sleep;
the mind starts to ruminate
all day's events in keep

planned tasks are many; lay forgotten
incomplete, or left in abandon;
omission seems acceptable, if
the important ones are done

slumber isn't imminent; and when
eyes swoon down to sleep
colorful dreams parade in waves
like a story broad and deep.

dreams crafted in words
a thing of pleasant savor;
be posted in blogs - such
thoughts in dreams waver.

attempts to translate dreams
get foggy; lost in reformation
failed by elusive language
let down by own imagination
in early morning strolls - words
that tend to flow in a stream,
when armed with pen on return
why disappear as if in a dream?

faces remain familiar
but names tend to fade
mind desires to play with children
yet body has become a jade.

thoughts remain forever young
bodily discomforts, those bookmarks of age!
mind pursues what it desires; yet
alerts nothing can be done at this stage.

oh, dear world
to you this question is remitted
is dotage a fit retribution
for a crime never committed?

செய்யாத  குற்றம்

தொலைகாட்சி   நிகழ்ச்சிகள் 
நிறையவே   பார்த்து  விட்டு
நித்திரை  செல்லப் போகுமுன்
அன்றைய   நிகழ்வுகள்  
நினைவினில்  நிழலாடும்

        
என்னென்னவோ   செய்ய  எண்ணியவை 
        
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்
        
மறந்தாலும்   பாதகமில்லை 
        
முக்கியமானதாய்   இல்லாதவரை

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும் 
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள்அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்.

        
எழுத்தில்   கொண்டு வந்தால் 
        
இனிதே   ரசிக்கலாம்
        
இடுகையில்   பதிக்கலாம் 
        
என்றெல்லாம்   கனவினூடே   
        
நினைவுகளும்   கூடவே   வரும்

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை 
அசை   போட  முயன்றால்மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
      
         அதிகாலை   நடை பயிலுகையில் 
         
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
         
நடையினூடே   வார்த்தைகளும்
         
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து
பேனா   பிடித்தால்   என்னதான்  
எழுதுவது,  ஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

         
பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும் 
         
வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
         
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
         
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
         
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
         
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
         
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே
        
உன்னால்  முடியாது  என்று  கூடவே   கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன் 
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு 
விதிக்கப்பட்ட   தண்டனையா..?