Tuesday, October 29, 2019

நினைவில் நீ நாவல் pdf 2ஆக


                               நினைவில் நீ நாவ ல் பிடி எஃப் ஆக
                               ----------------------------------------------------- 


 சில செய்திகள் மனசுக்கு இதம் தருகின்றன அவற்றை நம்கவனத்துக்கு கொண்டு வருபவர் பாராட்டலுக்குரியவர்கள் சில நாட்களுக்கு முன் முனைவர் ஜம்புலிங்கம் என் எழுத்தின்  சில வரிகளைஒருவர் எடுத்தாண்டு எழுதி இருந்ததை கூறி மகிழ்வித்தார் நம் எழுத்துகள்நாம் அறியாமலேயே  வாசிக்கப்படுகின்றன என்பது மகிழ்ச்சி தருகிறது என் மன திருப்திக்காக எழுத துவங்கினேன்   சில  நாட்களுக்குப் பின்   என்ன எழுதுவது என்னும் தேடலே நிறைய இருந்தது
எழுதியவற்றை சேமிப்பில் வைக்கவும்  நாமும் எழுத்தாளர்தான்  என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளவும் புஸ்தகாவில்  சிலவற்றை மின்னூலாக்கினேன் பிறர் அவற்றை படிக்க வேண்டுமென்று கருதி  பலருக்கு என் நூல்களை பரிசளித்தேன்   அப்படியாவது படிக்கிறார்களா  என்று பார்க்கத்தான் ஆனால் அந்தோ வெகுசிலரே படித்ததாகக் கூறினார்கள் என்னை பிரபல ஆசிரியராகப்ளாக்  வாசகர்கள்கருதவில்லை போலும்
இது  இவ்வாறிருக்க நம் எழுத்துகள் படிக்கப்பட்டு மேற்கொள் காட்டப்படுவதும் அறிந்தால் மகிழ்ச்சிதானே

 அண்மையில் இன்னொரு விஷயமும்தெரிந்தது  நான் எழுதி இருந்த ஒரே நாவல் புஸ்தகா  இல்லாமல் வேறு ஒரு நிருவனத்தாலும் டெலெக்ராம்  ஆப்பில் வந்திருக்கிறதுஎன்று செய்தி கிடைத்தது  அதை டௌன்  லோட் செய்து இலவசமாகப் படிக்கலாம்  PDF இணைப்பையும் தருகிறேன் இது சரியோ இல்லையோ தெரியவில்லை  புஸ்தகாவுக்கும் எழுதிக்கேட்கவேண்டும் புஸ்தகாவில் வாடகைக்கோ அல்லது வாங்கியோ படிக்கலாம்  ஆனால் இங்கு இலவசமாகப் படிக்கலாம் என் எழுத்துகள் என் எண்ணங்களையும்  அபிலாக்ஷைகளையும் கொண்டிருக்கும்  1960 களில் எழுதிய ”நினைவில் நீ”  யு,ம் அப்படிப்பட்டதே  விருப்பமுள்ளவர்கள் படித்து கருத்துசொல்லலாம் 
இதுவரை இந்த பிடிஎஃப்  360 வசகர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது இந்த பிடிஎஃப் கோப்பை பதிவில் கொண்டு வர  தொழில்நுட்பம் தெரியாமல் இருந்தது நண்பர் தனபாலன் உதவியுடன் அவர் சொல்லி இருந்தவழிகளில் 90%செய்து விட்டு முடிக்கத்தெரியாமல் இருந்தது  தீபாவளிக்கு  வந்திருந்தஎன்பேத்திக்கு தமிழ் படிக்கத்தெரியாதுஅவளுக்கு தனபாலனின்  கடிதத்தை வாசித்துக்காட்டி  அவளுதவியுடன் பிடிஎஃப் கோப்பை என் தளத்துக்குகொண்டு வந்து விட்டேன்  தனபாலனுக்கு நன்றி பலபதிவுகளாக  என் தளத்தில் வந்த இந்தநாவலை ஒரே இடத்தில் படிக்கமுடியும் பதிவுகளில் படிக்காதவர்கள் இங்கு படித்து அவர்கள்  கருத்தைவெளியிடலாம் இந்த நாவலின் முடிவில் பலருக்கு அபிப்பிராயபேதம் இருந்தது தெரியவந்தது  அவர்கள் இந்தபதிவையும் சேர்த்து வாசித்தால் அந்தமுடிவின் ஜஸ்டி ஃபிகேஷன் அதன் ஆசிரியர் என்னும் வகையில் நான் எழுதி இருப்பதுபுரியலாம்

இந்தபதிவை+ நான் எழுதி முடித்தபின் வாசகப் பெருமக்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று அறிய ஆடியன்சை பார்த்தேன்  இந்தியா தவிரபிற நாடுகளிலும் என்பதிவுகள்வெகுவாக வாசிக்கப்படுகின்றனஎன்பதை அறியும் போது  மகிழ்ச்சி தருகிறது           





Saturday, October 26, 2019

மழையும் எண்ணங்களும்




                  மழையும்   எண்ணங்களும்
                  --------------------------------------------------------       
ஒரு  திரைப்படத்தில்  நாகேஷ் ஒரு திரி விளக்கு எரிவதைப் பார்த்து  கற்ப்னை  தறி கெட்டு ஓட அழுவார் அந்த விளக்கிலிருந்து தீ பற்றிக் கொள்ள எங்கும் தீ பரவுவது போல் நினைத்து அழுவார்  கிட்டத்தட்ட அந்த மன நிலையில் தான்  நானிருக்கிறேன்  ஒரே வித்தியாசம் தீக்குப் பதில் வெள்ளம் அதென்னவோ தெரிய வில்லை  கொஞ்சம் மழை பெய்தாலேயே  சென்னை வெள்ளமும்   கேரள வெள்ளமும் நினைவுக்கு வருகிறது 
 இந்த முறை நீர்பற்றாக்குறை என்பதுபோய் எல்லா இடத்திலும்  மழை வெளுத்து வாங்குகிறது சில     நேரங்களில் தேவைப்படும் இடங்களில்  மட்டும்மழை பெய்யக் கூடாதா என்று தோன்றும் பெய் எனப் பெய்யும் மழை உண்டானால் நில் என நிற்கும் மழையும் இருக்க வேண்டுமே
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  நினைவும் கேரளவெளத்தல் மக்கள் அடைந்த அவஸ்தையு ம் மழைபெய்யும்போது நினைவுக்கு வரு சென்னையில் மழை என்றால் ஸ்ரீராமும்  கேரள மழைஎன்றல் தில்லையகத்து துளசி தரனும்  கோவையில் மழை என்றால்  முனைவர் பழனிசாமியும் நினைவுக்கு வருவார்கள் வானிலை அறிக்கையாக  ரெட் அலெர்ட்   யெல்லோ அலெர்ட் என்று என்ன வெல்லாமோ கூறு கிறார்கள்  பெங்களூரில் மாலையில் மழை பெய்தால் அன்றிரவு  உறக்கம் வருவதில்லை மழை அதிகமாகி வீட்டில்வெள்ளம்புகுந்தால் என்னும் நினைப்பே அலைக்கழிக்கும்
சென்னயைபோலோ கேரளம் போலோ மழை வந்தால்  பெங்களூரால் தாக்கு பிடிக்க முடியாது பராமரிப்பு  இருக்கிறதா தெரியவில்லை  அத்தனை போதாதுஎன்றெ தோன்றுகிறது  இந்த வயதில் அதை எதிர் கொள்ளும்  துணிவும் சக்தியும்   இல்லை என்பதே நிஜம்

தீபாவளிக்கு  மகன்கள்வருவார்கள்  வரும்போது கார்ப்பயணம்தான்   இருக்கும்   ரயில் டிக்கட்களில்லை மேலும் வந்து மறு நாளே திரும்பவேண்டும் அவர்கள்பயணம் நலமாக அமையவும் வரும்வழியில் இந்த மழையால் தொந்தரவு இல்லாதிருக்கவுமே  நினைக்கிறேன் தினமும் தொலைபேசி நிலைமையைக் கேட்கிறேன்
இங்கு ஒரு இடத்தில் மழை வெளுத்து வாங்கும்போது  இன்னொருஇடத்தில் மழையின் அறிகுறியே  இருக்காது
நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் வருகையைஒட்டி மழையும் இருக்கும் எனக்கும் சென்னைக்கும்  ராசியில்லை என்று எழுதி இருந்த நினைவு
என்னை சிலர் திட்டுவதும் தெரிகிறது  மழை வேண்டுமென்னும்போது மழை வேண்டாம் என்பது சரியில்லைதானே நான் இருக்கும் நிலையைக் கூறுகிறேன்          





Thursday, October 24, 2019

பயந்து ஓடிய வேதாளம்


             பயந்து ஓடிய வேதாளம்
        ---------------------------------------------
சிலர் கதைக்கு என்னவெல்லாமொ  இலக்கணங்கள்  சொல்கிறார்கள்  பலபெயர் பெற்ற எழுத்தாளர்களைப் போல்  இருக்கவேண்டு என்கிறார்கள் அவர்களைப்போல் நாம் ஏன்  எழுதவேண்டும்  இது என் பாணி நான் ஒரு NON CONFORMIST  இதையும்  பாருக்களேன்

சேது அன்று மாலை வருவதாகத் தகவல் அனுப்பி இருந்தான்.தங்கமணிக்கு கொஞ்சம் ஆறுதல். ஏதோ இருக்க ஒரு வீடு இருந்தாலும் தினப்படி செலவுக்கு எங்கே போவது.? வயிற்றுப் பாட்டுக்கு கிராமத்தில் ஒன்றிரண்டு பட்டர் (பிராமணர்) வீடுகளில் பாத்திரம் தேய்த்து , முறிகளை அடிச்சு கோரினால்(பெருக்கி எடுத்தால்) அம்மியார் ( பிராம்மண அம்மணி) கொடுக்கும் சோறும் கூட்டானும் கொண்டு அவளும் அவளது தாயாரும் வயிறு நிறைக்கலாம். கூட இருக்கும் சகோதரி தேவானை அவள் வகையில் வீடுகளில் பணி செய்து அவளது வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொள்வாள். வாழ்க்கை என்பது வெறும் வயிற்றோடு முடிவதா என்ன.?இருக்க இடம் உண்ண உணவு மட்டும் போதுமா.?உடுத்தவும் மேனி அலங்கரிக்கவும் இன்னும் எத்தனையோ தேவைகள் இருக்கின்றனவே.. இந்த மாதிரித் தேவைகளைப் பூர்த்திசெய்ய சேது மாதிரியான  புண்ணியவான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.


தங்கமணிக்கு ஓரோர் சமயம் இந்த வாழ்க்கை சரியா என்ற எண்ணம் தோன்றும் சரியோ தவறோ இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. கட்டின கணவனுக்கு என்ன காரணத்தாலோ இவளுடன் தொடர்ந்து வாழப் பிடிக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றால் இவள் இஷ்டப்படி வாழ்வதிலும் கேள்வி வரக்கூடாது. வயசான அம்மா இருக்கும்வரை தலைக்குக் கூரை நிச்சயம். அம்மா போனாலும் இது தொடரும், கூடப் பிறந்த “ஆங்கள்” ( சகோதரர்கள்) தாயின் வீட்டில் பங்கு கிடைக்காதென்று தெரிந்து (மருமக்கத்தாயம்) அவரவர் வழிகளில் சென்று விட்டனர்.

இந்த வேதாளம் மறுபடியும் முதுகில் ஏறிவிட்டது போல் தெரிகிறது. நிச்சயமாய் என்னிடம் கேள்வி கேட்டுக் குடையப் போகிறது. நான் எழுதுவதைப் படிக்காமல் இருக்கப் போகிறதா என்ன.?)


தங்கமணியின் வீட்டைப் பற்றிக் கூறவேண்டும். அவளது அம்மா அவரது தரவாடு” பற்றி நிறையவே கூறி இருக்கிறார். இப்போது மிஞ்சி இருப்பது பெத்தப்” பேர்மட்டும்தான். கூட்டுப்புறத்து வீடு என்றால் தெரியாதவர் கிடையாது. தங்கமணியின் அம்மாவுக்குக்  கூடப் பிறந்த சகோதரிகள் ஆறு பேர். அவரவருக்குக் குடும்பம் குழந்தைகள் என்று ஆனபிறகு இரண்டு கட்டுத் தரவாட்டு வீடு விற்றுப் பணமாக்கப் பட்டு பாகம் பிரிக்கப்பட்டு வந்த பணத்தில் தங்கமணியின் அம்மா இந்தக் குச்சு வீட்டைக் கட்டினாள். இவர்களும் கூட்டுப் புறத்து வீட்டின் பெயரில் அவகாசிகள் ( சொந்தம் )ஆனார்கள். இதே பெயருக்கு சொந்தம் கொண்டாட இவர்களுக்கு சந்தான சம்பத்து இல்லாமல் போயிற்று.



(வேதாளம் முதுகில் நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இவன் என்ன எழுத வருகிறான் என்று தெரியாமல் குழம்புகிறது என்று தெரிகிறது)

தங்கமணியின் அம்மா திண்ணையே கதி என்றிருப்பாள். திண்ணையை ஒட்டி ஒரு ரேழி . அதை அடுத்து சின்ன மித்தம் ( முற்றம்) அதன் இரு பக்கங்களிலும் இரண்டு முறிகள் ( அறைகள்) ஒன்றில் தங்கமணியும் மற்றதில் அவள் சகோதரி தேவானையும் உறங்குவது வழக்கம்.


சேது வரும் தகவல் தேவானைக்கும் தெரிந்தது. அவளுக்கு ஒரு விஷயம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. இப்படி அடிக்கடி வந்து போகும் இந்த சேது அக்கிரகாரத்தில் இருப்பவன். தங்கமணியிடம் சம்பந்தம் வைத்துக் கொள்வானா இல்லை அவளைக் கை கழுவி விடுவானா?அவன் கொஞ்சம் பசையுள்ளவன். தொடர்ந்து வருபவனை வற்புறுத்திக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தால் தங்கமணி அதிர்ஷ்டம் செய்தவள் ஆவாள். இல்லையென்றால் ......? இலையென்றால் என்ன.? நாடிவருபவர்கள் எல்லோரையும் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன.?

தங்கமணி சேதுவை நம்பி இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

வேதாளத்துக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘ யோவ், நீ என்னதான் சொல்ல வருகிறாய்.?என்று காதருகே குசுகுசுத்தது. வேதாளத்துக்கு எழுந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. நான் என்ன எழுதப் போகிறேன், சொல்ல வருகிறேன் என்று எனக்கே தெரியாதே. கணினியின் முன் அமர்ந்து தட்டச்சுகிறேன். எண்ணங்கள் கோர்வையாய் வந்தால் கதையாக்கலாம் எண்ணங்கள் கோர்வையாக வராவிட்டால் என்னும் என் எண்ணம் வேதாளத்துக்குத் தெரிந்து விட்டது. அது சொல்லியது.” தோன்றுவதை கொஞ்சம் விலாவாரியாக எழுதிக் கொண்டே போ. முடியும் வரை எழுது. நாளைக்கு வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். அப்போது தொடரலாம் வேதாளத்தின் உத்தியை முயன்றுதான் பார்ப்போமே.)
இந்த சேதுவை முத்ன் முதலில் எங்கு கண்டாள் என்று நினைத்துப் பார்த்தாள். ஆம். ஒரு ஆறுமாதமிருக்குமா.?அக்கிரகாரத்தில் பணிமுடிந்தபின் தங்கமணி வந்துகொண்டிருந்தாள். எதிரே சற்று தூரத்தில் ஒரு கையில் குடையுடன் மறுகையால் வேட்டியின் நுனியைத் தூக்கிப் பிடித்தபடி ,ஆஜானுபாகுவாக என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அந்த சந்தி வேளையில் சற்று தூரத்தில் இருந்தே தெரிந்த பட்டை விபூதி நெற்றியுடன் நல்ல உயரத்துடன் அவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தங்கமணிக்கு மேனியெல்லாம் என்னவோ செய்தது. மனசு குறுகுறுத்தது. ;நமக்கும் ஒருவன் வாய்த்தானே என்னும் அலுப்பும் கூடவே வந்தது. இவளைக் கடக்கும் நேரம் அவன் நின்று “ ஆ.. தங்கமணியல்லே.? எவிடெக்கா ? வீட்டிலிக்கா.?” என்று ரொம்பவே அறிமுகம் ஆன மாதிரி ‘சம்சாரிக்கத்’ தொடங்கினான். தங்கமணிக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வெட்கப் பட வேண்டுமா, தலையைக் குனிந்து கொள்ள வேண்டுமா ஒன்றும் புரியவில்லை. எல்லாம் கலந்த கலவையான ஒரு பாவம் வந்து போயிற்று. சேது தொடர்ந்தான் “ தங்கமணியக் கெட்டியவன் எவிடெ பணி எடுக்குன்னு.?
“ ஆ செத்தையினக் குறிச்சு ஒன்னும் கேழ்க்கண்டா சாமி என்றாள். இந்த பதில் சேதுவுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது..” ஒன்னும் விஷமிக்கண்டா தங்கமணி. ஞங்கள் ஒக்க இல்லே” என்று நூல் விட்டுப் பார்த்தான். தங்கமணி ஏதும் சொல்லாமல் தலையை நிமிர்த்தி பின் சரித்து ஒரு புன்னகையைத் தவழவிட்டாள்.இப்போது சேதுவுக்குத் தான் சொன்னது விளையாட்டுக்கு இல்லை உண்மைதான் என்று நிரூபித்துக்காட்ட வேண்டும் போல் இருந்தது.
நேர் எதிர்த் திசையில் போய்க் கொண்டிருந்தவன் இப்போது அவள் செல்லும் திசைக்கே திரும்பினான். அவளது எதிர்பார்ப்புகள் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளது நித்திய ஜீவனம் பற்றியும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்றும் கேட்டுத்தெரிந்து கொண்டான். தங்கமணியிடம் பேச்சுக் கொடுத்ததில் அவளைப் போலவே அவள் தங்கை தேவானையும் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். அவன் உள்மனது முட்டைகள் பொரியும் முன்பே குஞ்சுகளைக் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.
பேசிப்பேசியே தங்கமணியின் வீட்டுக்கு வந்து விட்டான். வாசலில் நின்றவன்,
‘இன்னால் ஞான் போட்டே” என்று இழுத்தான்.
“ உள்ளிலிக்கு வரூ. காப்பி குடிச்சிட்டுப் போகாம்” என்று அவளும் வலை விரித்தாள்.
“ உன்னுடன் பிறந்தவள் எங்கே “
“எவிடெயெங்கிலும் போயிரிக்கும்
“அம்மை.?
“அது ஒரு பிரஸ்னமில்லா. கண்ணும் சரிக்கி காணில்லா. உள்ளிலிக்கு வரூ” என்று அவன் கையைப் பிடித்துக் கூப்பிட்டாள். சேதுவுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சமுமான தயக்கமும் போய் விட்டது.
அவளது முறிக்குக் கூட்டிக் கொண்டு போனாள். கதவைத் தாழ்ப்பாளிட்டாள் ஆரம்பத் தடுமாற்றங்கள் ஏதுமில்லாமல் இருவரும் இணைந்தனர். அவனருகே படுத்திருந்தவள் சற்று ஒருக்களித்து படுத்துக் கொண்டு “சாமிக்கு என்னே இஷ்டப் பட்டோ?” என்று கேட்டாள். இஷ்டப்படாமலா இவ்வளவு நேரம் நடந்தது என்று நினைத்துக் கொண்டான். “ பின்னே.....” என்று ஒரு நமுட்டுச் சிரிப்பினை உதிர்த்தான். சமயமாகி. பின்னெ நாளேக் காணாம் “ என்று கூறியவன் அவள் கையைப் பிடித்து அதில் சில ரூபாய் நோட்டுகளை அழுத்தினான். கதவு திறந்து வெளியே வரும்போது அங்கே தேவானை நின்று கொண்டிருந்தாள்.சேது அவளை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கடந்தான்.  

தேவானைக்குத் தடுமாற்றம். தங்கமணியைவிட தான் எந்த விதத்தில் குறைவு என்னும் எண்ணம் எழுந்தது அது என்னவோ தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ எல்லோருமே “ பர்த்தா இல்லாதவராகவே இருக்கிறார்கள். இது ஆண்களின் பொறுப்பின்மையா, அல்லது பெண்களின் ஆதிக்கக் காரணமா.... என்ன இருந்தாலும் வாழ்க்கை என்ற ஒன்றை வாழ்ந்துதானே ஆகவேண்டி இருக்கு. இந்த சேது ஆள் நன்றாகத்தான் இருக்கிறான். அவன் எதிர்பார்ப்பை தங்க மணி கொடுக்க முடியும் என்றால் தன்னால் முடியாதா என்ன.? எண்ணங்கள் திட்டங்கள்.... ...!

வந்து போன சேதுவுக்கும் தேவானையைப் பார்த்ததும் உடலில் ஒரு சூடு பொங்கி எழுந்து அடங்கியது. தேவானையும் லட்சணமாகப் பாந்தமாகக்கிண்” என்று இருந்தாள். தங்கமணியுடன் சேர்ந்தால் தேவானையை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே. எண்ணங்கள்....திட்டங்கள்......

தங்கமணியும் தேவானையும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கத் தொடங்கினர். சேதுவோடு இருக்கும்போது “ இந்தப் பெண்ணின் நோட்டமும் பார்வையும் சரியில்லையே” என்று சற்று உரக்கவே கூறினாள். இவனோ “ பாவம், அவளும் உன்னைமாதிரிதானே” என்று சொன்னான். அப்படியானால் அவளிடம் சேர்வதுதானே” என்று கோபத்தில் கூறினாள் ‘ ஆஹா இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணியவன் “மாற்றமே வாழ்வின் சுவை
( variety is the spice of life) அனுபவிக்க என்ன செய்யலாம் என்றும் சிந்திக்கத் தொடங்கினான். இதற்கு ஒரே வழி இருவரும் இருக்கும் நேரத்தை ஒதுக்கிவிட்டு ஒருவர் இல்லாத நேரத்தில் ஒருவர் என்று கணக்குப் போட்டான். தங்கமணியை சந்தித்தபோது நடந்தவற்றை ரிபீட் செய்வதுதான் நல்லது என்று எண்ணி ஒரு நாள் தேவானை வேலை முடிந்து வரும்போது அவளை மடக்கினான்.இந்த சந்தர்ப்பத்துக்குத்தானே அவளும் காத்திருந்தாள். திட்டமிட்டபடி எல்லாம் நடக்க ஒரு நாள் இவன் தேவானையின் அறையில் இருந்து வெளியே வரும்போது தங்கமணி நின்றிருந்தாள். இவனைப் பார்த்ததும் மூஞ்சியை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.
இருந்தாலும் இருவருக்குமே வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பல நேரங்களில் பல விஷயங்களையும் விட்டுக் கொடுக்க(compromise) வேண்டும் என்று புரிந்தது..

எதையும் கண்டுகாமல் சிவனே என்றிருந்த அவர்களது தாயாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உசுப்பி விட்டனர். கிழவிக்கு தன் மகள்கள் யாருடனாவது சம்பந்தம் வைத்துக் கொள்வதில் தவறு தெரியவில்லை. ஆனால் இருவரும் ஒருவனையே என்று எண்ணிப் பார்பது கஷ்டமாக இருந்ததுஇதற்கு ஒரு முடிவு கட்டத் தீர்மானித்தாள் கிழவி.

கிழவி திண்ணையில் அரைகுறைத் தூக்கத்தில் படுத்துக் கிடப்பாள். சில நேரங்களில் சேது அவளைத் தாண்டிப்போக வேண்டி இருக்கும். ஒரு நாள் சேதுவுக்கு மகள்களில் யாரோ ஒருவருடன் கூடும் நாளும் நேரமும் பார்த்துக் காத்திருந்தாள் கிழவி. சேதுவும் கிழவிக்குக் கண்சரியாகத் தெரியாதே என்று அவளைத் தாண்டினான் உடனே “ ஐயோ... ஐயோ.. என்று கூக்குரலிட்டு வெளியே ஓடினான் கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.” இனி உனக்கு இன்பம் தரும் உறுப்பின் முக்கியம்தான் இங்கு வரும்போது நினைவுக்கு வரும்” தங்கமணியோ தேவானையோ (யாரோ ஒருவர்) ஏன் சேது அப்படி கத்திக் கொண்டு ஓடினான் என்று தெரியாமல் விழித்தாள்.

உன்னைப் பார்க்கவே பயமாய் இருக்கிறது, எழுதுவதற்கு உத்தி சொன்னால் இப்படியா எழுதுவது,? இனி உன் வழிக்கே நான் இல்லையப்பா..” என்று கூறிக்கொண்டேஎன் முதுகில் இருந்து அகன்றுவிட்டது

Monday, October 21, 2019

பதிவு எப்படி



                                பதிவு எப்படி ஒரு தொகுப்பு
                               --------------------------------------------

என்னென்னவொ எழுதி யாயிற்று  சாதாரணமாக உபயோகத்தில்  இருக்கும் சில செய்திகள் என்ன வென்று பார்க்கலாம்  பெரும்பாலும் தெரியாதது அல்லது நினைவில் வராதது  பசி வந்தால் பத்தும் பறந்துபோம்
மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
-
அவ்வை பாட்டியின் நல்வழி பாடல்.

1.மானம்
2.
குலம்
3.
கல்வி
4.
வண்மை
5.
அறிவுடைமை
6.
தானம்
7.
தவம்
8.
உயர்ச்சி
9.
தாளாண்மை
10
காமம்
ஆயகலைகள் 64 என்று கேள்விபட்டிருக்கிறோம்   அந்த 64 கலைகள்தான் என்ன் என்ன
1. அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2.
இலிகிதம் - எழுத்தாற்றல்
3.
கணிதம் - கணிதவியல்
4.
வேதம் - மறை நூல்
5.
புராணம்தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7.
நீதி சாஸ்திரம் - நய நூல்
8.
ஜோதிடம் - கணியக் கலை



9. தர்ம சாஸ்திரம் - அறத்துப் பால்
10.
யோக சாஸ்திரம் - ஓகக் கலை
11.
மந்திர சாஸ்திரம் - மந்திரக் கலை
12.
சகுன சாஸ்திரம் - நிமித்தகக் கலை
13.
சிற்ப சாஸ்திரம் - கம்மியக் கலை
14.
வைத்தியசாஸ்திரம் - மருத்துவக் கலை
15.
உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு
16.
இதிகாசம் - மறவனப்பு
17.
காவியம் - வனப்பு
18.
அலங்காரம் - அணி இயல்
19.
மதுர பாடனம் - இனிதுமொழிதல்
20.
நாடகம் - நாடகக் கலை
21.
நிருத்தம் - ஆடற் கலை
22.
சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23.
வீணை - யாழ் இயல்
24.
வேணு (புல்லாங்குழல்)- குழலிசை
25.
மிருதங்கம் (மத்தளம்)
26.
தாளம் - தாள இயல்
27.
அத்திரப் பரிட்சை - வில்லாற்றல்
28.
கனகப் பரிட்சை - (பொன் நோட்டம்)
29.
இரதப் பரிட்சை - (தேர் ஏற்றம் )
30.
கஜப் பரிட்சை - (யானை எற்றம்)
31.
அசுவப் பரிட்சை - (குதிரை ஏற்றம்)
32.
இரத்தினப் பரிட்சை - மணி நோட்டம்
33.
பூமிப் பரிட்சை - மண்ணியல்
34.
சங்கிராம விலக்கணம் - போர்ப் பயிற்சி
35.
மல்யுத்தம் - கைகலப்பு
36.
ஆகருடனம் (ஆகர்ஷணம்)- கவர்ச்சியியல்
37.
உச்சாடனம் - ஓட்டுகை
38.
வித்து வேடனம் - (நட்பு பிரிக்கை)
39.
மதன சாஸ்திரம் - மதன கலை
40.
மோகனம் - மயக்குக் கலை
41.
வசீகரணம் - வசியக் கலை
42.
இரசவாதம் - இதளியக் கலை
43.
காந்தருவ வாதம் - (இன்னிசைப் பயிற்சி)
44.
பைபீலவாதம் - (பிறவுயிர்மொழி)
45.
கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46.
தாதுவாதம் - ( நாடி சாஸ்திரம்)
47.
காருடம் - கலுழம்
48.
நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49.
மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50.
ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51.
பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52.
ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53.
அதிரிசியம் - தன்னுறு கரத்தல்
54.
இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55.
மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56.
அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57.
ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58.
வாயுஸ்தம்பம் - வளிக் கட்டு
59.
திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60.
வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61.
சுக்கில ஸ்தம்பம் - (விந்தையடக்கல்)
62.
கன்னத்தம்பம் - புதையற் கட்டு
63.
கட்கத்தம்பம் - வாட் கட்டு
64.
அவத்தைப் பிரயோகம் - சூனியம்


அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல் :

எண் - தமிழ்க் கலை - வடசொல் - English Word

1.
பாடல் - கீதம் - Song
2.
இன்னியம் - வாத்யம் - Music Instruments
3.
நடம் - நிருத்யம் - Dance
4.
ஓவியம் - சித்ரம் - Drawing Instruments
5.
இலைப் பொட்டுக் கத்தரிக்கை - பத்ர திலகம் - Art of leaf-cutting design
6.
அரிசிப் பூக்கோலம் --- Art of rice-powder drawing
7.
பூமளியமைக்கை -- ---
8.
ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை --- Art of colouring for cloths
9.
பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை -- Art of embedding gems in bedrooms
10.
படுக்கையமைக்கை - மஞ்சம் - Art of bed-making
11.
நீர்க்கிண்ண இசை - ஜலதரங்கம் - Art of making music with watter-filled cups
12.
நீர்வாரியடிக்கை --- Art of water-sparying
13.
உள்வரி - வேடங்கொள்கை - Art of Camaflage
14.
மாலை தொடுக்கை --- Art of making garlands
15.
மாலையணிகை --- Art of wearing Garlands
16.
ஆடையணி சுவடிக்கை --- Art of make-up with clothes
17.
சங்கினால் காதணி -- Art of making ear-rings with shells
18.
விரை கூட்டுகை --- ---
19.
அணிகலன் புனைகை --- Art of self make-up
20.
மாயஞ் செய்தல்- இந்திர ஜாலம் - Art of magic
21.
குசுமாரரின் காமநூல்நெறி - கௌசுமாரம் - Kousumar's art of kamasutra
22.
கைவிரைவு - ஹஸ்த லாவகம் - Speedy hands
23.
மடைநூல் - பாக சாத்திரம் - Art of cooking
24.
தையல் வேலை --- Art of Stiching.
25.
நூலால் வேடிக்கை -- Art of magic with strands
26.
வீணையுடுக்கைப் பயிற்சி - வீணை டமருகப் பயிற்சி - Art of handling Veena Instrument
27.
விடுகதை - ப்ரேளிகை - Art of Riddling
28.
ஈற்றெழுத்துப் பாப்பாடுகை - அந்தாக்ஷரி - Art of Play Singing(last words)
29.
நெட்டுரு சொற்றொடர் --- Art of playing with words
30.
சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை --- Reading with music rythm
31.
நாடக உரைநடை - வசனம் - Prose
32.
குறித்தபடி பாடுகை - ஸமஸ்யா பூரணம்- To sing from the word given
33.
பிரம்பால் பின்னுதல் --- Art of Caning chair objects
34.
கதிரில் நூல் சுற்றுகை --- Art of hand-spinning
35.
மரவேலை --- Carpentry
36.
மனை நூல் - வாஸ்து சாத்திரம் - Art of house construction
37.
காசு, மணி நோட்டம் - கனக,ரத்ன பரிட்சை - Gemology
38.
நாடிப் பயிற்சி - தாது வாதம் - Human Pulse reading
39.
மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல் --- Gemology/geology
40.
தோட்டக் கலை --- Horticulture
41.
தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு --- Cock/Bull fights
42.
கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை --- Art of teaching parrots
43.
உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை --- Art of ordinary/oil massage
44.
குழூவுக்குறி - சங்கேதாக்ஷரங்களமத்து பேசுகை - Cryptography
45.
மருமமொழி - ரஹஸ்ய பாஷை - Code wording
46.
நாட்டுமொழியறிவு - தெசபாஷையுணர்வு - Linguistics
47.
பூத்தேர் அமைக்கை - புஷ்பரதம் - Decorating Chariat with flowers
48.
முற்குறியமைக்கை - நிமித்தம் - Observing Superstitions
49.
பொறியமைக்கை --- Making of traps
50.
ஒருகாலிற் கொள்கை - ஏகசந்தக்ராகித்வம் - With one leg
51.
இருகாலிற் கொள்கை - துவிசந்தக்ராகித்வம் - With two legs
52.
பிதிர்ப்பா விடுக்கை --- Singing about fore-fathers
53.
வனப்பியற்றல் - காவ்யம் - Writing Story songs
54.
உரிச்சொல்லறிவு - நிகண்டுணர்ச்சி - Idioms and Phrases
55.
யாப்பறிவு --- Writing poems
56.
அணியறிவு - அலங்காரம் - Sense of dressing
57.
மாயக்கலை - ஜாலவித்தை - Art of Magic
58.
ஆடையணி திறன் - உடுத்தற் சாமர்த்யம் - Sense of dresses
59.
சூதாட்டம் --- Gambling
60.
சொக்கட்டான் - கவறாட்டம் முதலியவை - Gambling with dice
61.
பாவை, பந்து வைத்தாடுதல் --- Playing with dolls / balls
62.
யானை/குதிரையேற்றம் - கஜ/துரக வாகனாதிகள் - Art of riding horse/elephant
63.
படைக்கலப் பயிற்சி --- Armed Combat
64.
உடற் பயிற்சி - தேகச் சதுர் - Physical Exercise

முன்காலத்தில் பெண்களை பருவ வாரியாக விவரித்தார்கள்
> பேதை : 1 முதல் 8 வயது வரை
> பெதும்பை : 9 முதல் 10 வயது வரை...
> மங்கை : 11 முதல் 14 வயது வரை...
> மடந்தை : 15 முதல் 18 வயது வரை...
> அரிவை : 19 முதல் 24 வயது வரை...
> தெரிவை : 25 முதல் 29 வயது வரை...
> பேரிளம் : பெண் 30 வயது முதல்.
 ஆண்களை விட்டு விட முடியுமா ..
Top of Form
Bottom of Form
1---7 பாலன்
8---10 மீளி
11—14 மறவோன்
15 திறவோன் 
16  விடலை
17  30 காளை
30க்கு மேல் முதுமகன்
 முக்கிய வைபவங்களில்  முக்கியமாக திருமண்ம் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறார்கள்  16 பிள்ளை  செல்வங்கள் அல்ல பின் என்னவாம் 
1.      கல்வி
2.      புகழ்
3.      வலி
4.      வெற்றி
5.      நன் மக்கள்
6.      பொன்
7.      நெல்
8.      நல்லூழ்
9.      நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொநுமை
13. இளமை
14. துணிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்

 அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)
1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி 
முன் காலத்தில்பெண்களை வகைப்படுத்தி  இருந்தனர் 
நான்கு சாதிப் பெண்கள் (பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.
பத்மினி
கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.
சித்தினி
அற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள். அழகிய முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மார்பகங்களும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள். இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள். இவள் சிறிது நேர உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல் சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள்.

சங்கினி
பேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும் விரும்புபவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டமும், எந்நேரமும் காம நினைவும் கொண்டவள்.
அத்தினி
அழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள். தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனோடு ஓடுவார்கள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.

இந்தப்பதிவாவது உபயோகமுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்