Saturday, January 30, 2021

மொழியின் அ ழுகை




 

மொழி எப்படி எல்லாம்  மாறி இருக்கிறது  அந்தக்காலத்தியதமிழே புரிவதில்லைதமிழும்  த ன்னுள் பிற மொழிகளையும்   உள்வாங்கிக் கொண்டிருக்கிறது தவறில்லை  ஆங்கிலம்  உலக மொழியாக அற்யப்பட்டு இருக்கிற்தென்றால் அது பிற மொழிகளை  வெறுத்து ஒதுக்கவ்ல்லை அப்படியே உள் வாங்கி கொள்கிற்து அதற்கு மட்டும்  வாய் இருந்தால்  இப்போது அது சிதைக்க படுவதைகாணும்போது  அது கதறி  அழலாம் உள்வாங்குவது வேறு  சிதைப்பது  வேறு

  கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.

 யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்.

 


" al of a sden u strt 2 lyk sm 1 dat  u wanna c dem evriday"

இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்

 

 

 

 

.
----------------------------------------------------------------------

Friday, January 29, 2021

நெஞ்சு பொறுக்குதில்லையே

 


பாரதி மன்னிப்பாராக

       -------------------

 

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

 

மந்திரம் வேதம் என்பார் சொன்ன

மாத்திரம் பலன் தரும் என்பார்-தீதில்லை

தாரீர் விளக்கமென்றால்  துச்சமெனவே

மதித்திடுவார் வீண்கேள்வி ஏனோ என்பார்  ( நெஞ்சு )

 

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு

கோடியென்றால் அது பெரிதாமோ

காரணங் கேட்டே விளங்கியதிங்கு

யாவரும் உணர்ந்திட மறுத்திடுவார்   ( நெஞ்சு )

 

கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்

காரணங்கள் யாதெனும் அறிவுமிலார்

துடி துடித்து துஞ்சி மடிவோர் துயர்

தீர்க்கக் கிஞ்சித்தேனும் சிந்தையிலார்   ( நெஞ்சு )

 

 

சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு

வினை தீர்க்கும் பாம்புயிர்ப்பிடம் கூறியே

பால் வார்ப்பார்ஆறுதல் வேண்டி-மலர் தூவி

மணி அடித்துத் தீபம் காட்டுவார்             ( நெஞ்சு )

 

சாத்திரங்களொன்றுங் காணார்-பொய்ச்

சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தையிலே

கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்   ( நெஞ்சு )

 

தோத்திரங்கள் சொல்லியவர்தாம்-தமைச்

சூதுசெயும் நீசர்களைப் பணிந்திடுவார்

ஆத்திரங்கொண்டதை வினவினால் அது

முன் ஜென்மப் பாவ பலன் என்பார்             ( நெஞ்சு )  

 

 

எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்

இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்

சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்

தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.?  ( நெஞ்சு )

 

 


Wednesday, January 27, 2021

என்ன என்று சொல்லலாமே

 


செய்ய வேண்டியவற்றை  வகைப்படுத்தி இருக்கிறார்கள்ஆனால் எதெது என்பது நினைவில்லை  தினம்  இரு முறை   வாரத்துக்கு இரு முறை  மாதமிரு முறை   ஆண்டுக்கு  இரு முறை  செய்வதாக கடைப்பிடித்தால்நல்லது என்பார்கள் எந்தெசெயல்கள்  என்று அறிந்தவர் கூறலாமே ஆனால் ஆண்டுக்கு இரு முறை பேதி கொடுப்பது  ஒன்று என்பது  நினைவுக்கு வருகிற்து அந்தக்காலத்தில் அண்டுக்கு இரு முறை  ஆமணக்கு  எண்ணை என் தந்தை தருவார் குடிக்க முடியாதபடி பெரட்டும்  ’           உனக்கு பிடித்த இனிப்பை நினைத்துக் கொள் ஒரே மடக்கில் விழுங்கி விடு மேசை மேல் ஏறு  குதிவயிறு நல்லா இள்கும்  க்ளீன்  ஆகும்” என்னவெல்லாமோ சொல்லி குடிக்க வைப்பார் இந்த அனுபவம்  ப்லருக்கு ம் இருக்கும்  சில வீடுகளில்  ஆமணக்குக்கு  பதில் கடுக்காய் தருவார்கள் அது எவ்வளவோ மேல் போல் தோன்றுகிறது

நான்  என்பிள்ளைகளுக்கு  எதையும்  கொடுத்ததில்லை

இப்போது அது அல்ல பிரச்சனை  செய்ய வெண்டியதை  வகைப்படுத்தி இருந்தார்கள் என்றேனே அவை என்ன என்னவென்று மண்டை குடைகிற்து

வயதாகும் போதுவயிறு இறுகிவிடுகிறதோ அப்படி நேரும்போதெல்லாம்  அப்பாவின்

 நினைவும்  ஆமண்க்கும்    நினைவுக்கு வருகிறது     







Sunday, January 24, 2021

ஏதேதோ எண்ணங்கள்

 


இப்போதெல்லாம் எண்ணாத எண்ணங்கள்

எப்பவும்   நினைக்காதபடி  வருகின்றன

ஆண்டென்றும்நாள் என்றும் புவி என்றும்

கோள் எனறும் என்னென்னவோ எண்ணங்கள்

பூமி தன்னைதானெ சுற்றுவதும் சூரியனைச் சுற்றுவதும்

காலத்தின் அளவீடாகி  இருப்பது நினைத்து வியப்பாகிறது

அக்காலத்தின் அளவிட்டில் நம் வாழ்வு மிகக்குறுகியது

82 ஆண்டுகள் காலத்தின்   அளவில்மிகச் சிறியது நாம்தான் 

மணி என்றும்   வினாடி என்றும்  கண்க்கிட்டு மலைக்கிறோம்

இதிலும்   காலா அருகில் வாடா சற்றே மிதிக்கிறேன்  காலால்

என்னும்  பீற்றல் வேறு தேவையா இதெல்லாம்

பயனற்ற பேச்சு--- தனித்தியங்கும் நாளா கோளா  நாம் எல்லாம்

இதில் துணை இல்லாது இயங்க முடியாத நிலை வேறு

துணைக்கும்  வயது ஏறுவது தெரியாதா கடவுள்மனிதனாகப் பிறக்க

வேண்டும்  எங்கோ பாடல் ஒலி கேட்கிறது மனிதனாய் பிறந்தாலும்

அவனும் நம்மைப்போல் அல்லாடத் தானே வேண்டும்

என்றோ எழுதியது  நினைவில்  வருகிறது

செய்யாத குற்றத்துக்கு  வரும் தண்டனைக்கா நாம்   நமக்கு மட்டும்

ஏன் இந்த  சிந்தனைகள் கால அள்வீட்டில்இன்னும்  சொற்ப

 நேரமே மிச்சம் தெரிகிறதுஇருந்தாலும் எண்ணங்களை

தவிர்க்கமுடியவில்லையே                                


Saturday, January 16, 2021

விளையும் பயிர்

 


 

விளையும்  பயிர்

 சில நாட்களுக்கு முன் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று எழுதி இருந்தேன் இப்போது நானுமொரு காக்கையோ என்று ஐயம்  எழுகிறது  என்பேரனை பற்றி  முன்பே எழுதிஇருக்கிறேன்  பார்க்க சுட்டிஅவன் எனக்கு ஒரு மெயில்

 அனுப்பி இருந்தான்   அவன் எழுதி  இருந்ததைப் படித்து கருத்துசொல்ல கேட்டிருந்தான்   அவன் ஆங்கிலத்தில் எழுத்யதை  இணைத்துள்ளேன் என் வாழ்வின்  விளிம் பில் நூலை பார்த்துஒரு ஆச்சரிய பாவத்துடன்  நீங்கள் ஒரு ஆசிரியரா  என்று கேட்டான்   ஒரு முறை  அவனால் என்பதிவு தவறி விட்டது என்றேன்  யூ டோண்ட்  வொர்ரி என்று உடனே பீர்பாலும் அக்பரும் மென்று எழுதி கொடுத்தான்  அதை நான்  பதிவாகவும் போட்டேன் அவனில் நான்  என்னைக் காண்கிறேன் இதுதான் genes என்கிறார்களோ 

னி அவன் எழுதியது


I have of late seen a lot of people getting depressed and begin to question their existence, I have also got many question’s asking “Abhi how are you so happy all the time, like I’ve never seen you upset.”

All these questions made me think a very serious thought, what exactly is the point of living? What is the point of slogging every single day, doing the same thing over and over again and not achieving ever lasting happiness? Why does happiness only last for such a short time? What is the point of living without even knowing when or how you are going to die? All these mindboggling questions have been in my head for three days now and I believe I finally got my answer.

This morning, when I sat down in my chair I began to think for answers for my questions and that’s when it hit me. We live to make memories! We live to have adventures of our own so that one day when we grow old we can think about the past and our amazingmemories is all that we have to remember. We might not have control over when we die but we certainly have control on how we live. We decide what we eat, where we sleep, whom we love, what we do, what we want and that’s all in our hands, so why worry about death which is not in our hands when we can live how we want for years to come.

After all, we have just one life, so why not live it to the fullest with no regrets.

 Now to the people who asked me why I am so happy all the time I finally have an answer, I’m always happy because I have only one life and I want to have a lot of fun and live without any regrets.

I hope this helps all of you realize just how precious your life as well as your happiness is, because in the end “No one wants to go down without being the hero of their story.