Friday, August 30, 2019

சில திரைப்பாடல்கள்



                                              சிலதிரைப்பாடல்கள்
                                             -----------------------------------

 அண்மையில் கேட்டு ரசித்த பாடல்கள் எனக்கும் கர்நாடக சக்கீதத்துக்கும்  ம் தூரம் அதிகம் என்றாலும் கேட்டு ரசிக்கப்பிடிக்கும்   செம்மீன்  படப்பாடலும்



ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவில் வரும் இப்பாட்டும் மிகவும் பிடிக்கும்  இப்பாடலின்  நீள சற்றே அதிகம்   இருந்தால் என்னபாடல் கேட்டு ரசிக்கலாமே











Wednesday, August 28, 2019

ருக்மிணி கல்யாண வைபோகமே




                           ருக்மிணி கல்யாண வைபோகமே
                            -------------------------------------------------------

இன்று ஆகஸ்ட் 28ம் நாள்  சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்  வலையுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்தியது என்பேரன்  பத்தாம் ஆண்டுக்குள் பிரவேசிக்கிறேன் முன்புபோல் சரளமாக எழுத வருவதில்லை  முன்பெல்லாம் எழுத உட்கார்ந்தால்  எழுத்துகள் தானாக வந்து விழும்  சுமாராகவும்  இருக்கும்  ஆனால் இப்பொழுதுஎழுதுவதுஎன்பதே மிகவும் கஷ்டமாயிருக்கிறது  2011 ம் ஆண்டு
 கண்ணன் கதையை கிருஷ்ணாயணம்  என்று எழுதினேன்  அதற்கு வந்த பின்னூட்டமொன்றில் ருக்மிணி கல்யாணம்வரை முயன்றிருக்கலாமோ  என்று திருமதி கீதா சாம்பசிவம் கேட்டிருந்தார்  இப்போது முயன்று பார்க்கலாமே என்றால்  அதன்   தொட்ர்ச்சியாக எழுத முடியவில்லை

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனின்
அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம்
அவதாரத்தில் அவனுக்கு  பல மனைவிகள்
 இதில் எதை எழுத எதை விட இருந்தாலும் –
இவற்றில்  ருக்மிணிகல்யாணம்  சிறப்பாகப் பேசப்படுகிறது
கவர்ந்து சென்று நடந்த ராக்கத மணமல்லவா
பீஷ்மகன்  எனும் விதர்ப்ப நாட்டு மன்னனனுக்கு
 ஐந்து புதல்வர் ருக்குமி ருக்மிரதன் ருக்மி பாகு
ருக்மி கேசி ருக்மி நேத்திரன்  எனப்பெயர் கொண்டவர்
 ஒரு புதல்வி ருக்மிணி மஹாலக்ஷ்மி போன்றவள்
 துவாரகைக் கண்ணனின் பால் மையல் கொண்டாள்
 முனிவர்கள் பலரும் எடுத்துரைத்த அவன் ரூபலாவண்யத்திலும்
பராக்ரக்கிரமங்களிலும் மனதைப் பறி கொடுத்து எஞ்ஞான்றும்
  அவனையே நினைத்து உருகினாள் தந்தையும்
மகள் மனமொப்பி திருமணம்  செய்ய ஒப்பினான்
 ஒரே ஆதரவாய் இருந்த  தந்தையும் மூத்தவன் 
ருக்மிக்கு எதிரே செயல் பட இயலாமல் மண
ஏற்பாடுகளில் மூழ்கினான் விதர்ப்பநநாட்டுத் தலைநகர்
 குண்டினபுரம்அல்லோலகல்லோலப்பட்டது
ருக்மியின் நண்பன்  சிசுபாலன்  கண்ணனை எதிரி யாய்
 நினைப்பவன் மணமகனாய்த் தேர்வு செய்யப்பட்டான்
ருக்மிணி மனம் தளராது கண்ணனையே  வரித்துவிட்டாள்
மனமோரிடமும் உடல் வேறிடமும் வாழமுடியாது
மனம்வாடி தன்மேல் அன்பு பாராட்டும் ஓர் அந்தணன்  மூலம்
ஓலை ஒன்று வரைந்தாள கண்ணனுக்கு திருமணவிழாவுக்கு
 வந்து தன்னைக் கவர்ந்து செல்ல வேண்டினாள்
மண நாளுக்கு  முன் நாள் கௌரி பூசைக்காக ஆலயம்
வரும்நேரம் அவனை எதிர் கொள்ள  அவளே
 வருவதாகவு  அதுவே ஏற்ற நேரம் என்றும்குறிப்பிட்டு
இருந்தாள்கண்ணனும்  இசைந்தான்   அந்தணருடனும்
ஒரு படையுடனும்கண்ணன்குண்டினாபுரம்சேர்ந்தான்
கூடவே அண்ணன்பலராமனும் ஒரு படையுடன் உடன் சென்றான்
ருக்மிணி ஆலயம்வந்தாள் வந்தவளை கண்ணன் தேரில் ஏற்றிச் சென்றான் 
துரத்திவந்தருக்மியின் சிர முடி வெட்டிக்  கொல்லத்துணிந்தவனை
ருக்மிணி  தடுத்தாள் உயிர்ப்பிச்சை பெற்றான்  ருக்மி
பின் என்ன ருக்மிணி கல் யாண வைபோகமே …….!!!!      
           

              

Monday, August 26, 2019

மனம்சொல்வது


                                            மனம் சொல்வது
                                            --------------------------- 
                                           

வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது  வந்திருந்தவர் நான் தானா அவரென்று உறுதி செய்து கொண்டார்  நடுத்தர வயது ஒரு கண்பார்வைஇல்லாதது போல் தோன்றியதுவீட்டில் இன்வெர்டர் பொறுத்த வந்திருப்பதாகக் கூறினார்
ஒரு நாளில் பலமுறை மின் சாரம் போய்விடும் என்மகன் வீட்டில் இருந்தபோதே பல முறைபோயிற்று  இரவு நேரமானால் வயதான நீங்கள் இருட்டில் இருக்க வேண்டாம் என்ற என்மகன் உடனே ஒருஇன்வெர்டர் பொறுத்தஏற்பாடு செய்தான்  மேலும் மின்சாரமில்லாவிட்டால் என் ஒரே போக்கிடம் கணினியிலும்  வேலை செய்ய முடியாது என்றும் அவனுக்குத் தெரியும் இன்வெர்டர் பொறுத்தினால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட வேண்டாம்
 வந்தவரிடம்பெயரென்ன  என்று கேட்டேன் நல்ல வேளை தமிழ் பேசத் தெரிந்தவராய் இருந்தார்கோபால் என்றார் பொதுவாகஎதையும்துருவித்துருவி  கேட்கும் வழக்கம் என்னிடமில்லை வேலை துவங்கு முன் என் மனைவி அவருக்கு காஃபி கொடுத்தார் அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்றார்  
உங்களுக்கு எந்த ஊர் என்று  கேட்டுத்தெரிந்துகொண்டார்
 ”உங்களிடம் நான்   பொய் சொல்லி விட்டேன் அப்படி சொல்ல என் முதலாளி கூறி இருந்தார் உண்மையில் நான் ஒரு முஸ்லிம்பலவீடுகளில் முஸ்லி,ம்  என்றால்  வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை இங்கு உங்கள் வீட்டில் எந்த வித்தியாசமும்  இல்லாமல் பழகுகிறீர்கள் என் பெயர் அப்துல்  இதை என் முதலாளியிடம் சொல்லாதீர்கள் என் ஊர் ஆம்பூர்  ஒரு முறை மிக்சியில் வேலை செய்து கொண்டிருந்தபோது   அது உடைந்து  ஒரு பீஸ்கண்ணில் பட்டுபார்வை போயிற்று  ஒரு கண்பார்வை போனாலும்  வேலையில் நான் கவனம் பிசகுவதில்லைஎந்த எந்த இணைப்புகளில்தடை இன்றி மின்சாரம்வேண்டும்  என்றுசொல்லுங்கள் அதன் படி செய்கிறேன்”  என்றார்
வாஷிங்மெஷின் நீர் இறைக்கும் பம்ப் மோட்டார்  கீசர் போன்றவை இன்வெர்டரில் இயங்குவதுகஷ்டம் என்றார்அவற்றின்  கனெக்‌ஷன் தவிர்த்து எல்லா உபயோகமும் இன்வெர்டரால் கிடைக்கும் பவர் இல்லைஎன்றாலும்  சுமார்நான்கு மணி நேரம்தடை இல்லாமல் மின்சாரம் இருக்குமென்றார்எப்பவும் கணினி இயக்கலாம்  அல்லவா என்றுகேட்டு தெரிந்து கொண்டேன் எங்கு எங்கு எதன் எதன்  கனெக்‌ஷன் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வேலையை தொடங்கினார்சுமார் மூன்று மணிநேரத்தில்வேலை முடிந்தது செக் செய்து கொள்ளச்சொன்னார் இந்தகாலத்திலும் மத இன   வித்தியாசம் பாராட்டுகிறார்கள் என்பதுஅறிந்தபோது  வருத்தம் இருந்த்து
இது ஒரு நிஜ நிகழ்வு  கற்பனை அல்ல   





Friday, August 23, 2019

கிருஷ்ணஜயந்தி


 ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்  எங்கள் வீதியில்  உறியடியுடன்  பல ஆண்டுகளுக்கு முன் எடுத்தது
   
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி 
கிருஷ்ணஜயந்தி அன்று வெளியாகும் இப்பதிவு கண்ணனைக் கேசாதிபாதம்கண்டு மகிழ்பவனின் எண்ணங்கக்ொமுன்பே எழுதியது ஒரு மீள் பதிவாக மீண்டும்ஒரு காலத்தில் நாராயணீயம் கேசாதி பாதத்திலிருந்து எடுத்து  ஆண்டது

  கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்

கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )



சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)

இ்ங்கே சொடுக்கினால்  கண்ணன் கதை படிக்கலாம் ஒவ்வொரு பத்தியும் ஒரே வாக்கியத்தில் இருப்பது விசேஷம்  


  


                          

Wednesday, August 21, 2019

நினைவு பெட்டகங்கள்



                              நினைவு பெட்டகங்கள்
                             -------------------------------------
வீட்டில் ஷோ கேசில் பலபொருட்களிருக்கும் எல்லாமே ஏதோ ஒரு நினைவையோ நிகழ்வையோ தாங்கி இருக்கும்   அவற்றில் சில  இவற்றைப்படமெடுத்து உதவிய என் மனைவிக்கு நன்றிகள்

இந்த பிள்ளையார்  மாக்கல்லால் ஆனது நாங்கள்  பேளூர் ஹலேபேட் போயிருந்தபோது சாலை யோரக் கடை ஒன்றில் வாங்கியது



கல்கத்தா காளி திருமதி கோமதிஅரசு  கொடுத்தது  கைவேலை தெரிகிறது அருகில்  இருக்கும் ராமர்  லட்சுமணர் சிலா வடிவம்திருமது கீதா  சம்பசிவத்தின் பரிசு என் மனைவிக்குக் கொடுத்தது


கும்பகோணத்தில்  நண்பச்ர் ஒருவர் கொடுத்தது அகல்விளக்கு வைக்கலாம் அணையாது மூடும் வசதி உள்ளது
 சைக்கிள் ஒரெ கம்பியில்செய்தது  டெல்லி சென்ற சமயம் ஒரு ரூபாய்க்கு வாங்கியது 1978ம் ஆண்டு என்ற நினைவு


தாஜ்மஹல் ரெப்லிகா என்மைத்துனன் கொடுத்தது மின் இணைப்பு கொடுத்தால் பிரகாசிக்கு ம்

 ஜெய்பூரில் வாங்கிய  பிள்ளையார்  பிள்ளையார் விக்கிரகங்கள்நிறைய வே  உண்டு


கேரளத்தில் வாங்கியது அஷ்டமங்கலம் என்கிறார்கள் தங்கமுலாம் பூசினோம்


விஜயவாடா அர்கே இருக்கும் கொண்டபள்ளி கிராமத்தில் வாங்கியது தசவதாரமும்கீதா உபதேசமும்   இவை கனமே இல்லாமல் தக்கையாக இருக்கும் 



எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு என்மூத்டமகனின்  மச்சினன் கொடுத்த தஞ்சாவூர் பெரியகோவில் ஆலையம்  பித் எனப்படும்பொருளால் செய்தது


அடக்கப் பாக்கிலிருந்து  செய்தது மனைவியி கை வண்ணம் மட்டை உரித்த தேங்காயின் ரெப்லிகா போல





Monday, August 19, 2019

துணுக்குத் தோரணம்



                                                துணுக்குத் தோரணம்
                                               ------------------------------------

இத்தாலியில் ஒரு கன்னியாஸ்திரி வழக்கு தொடர்ந்தாளாம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் அங்கு தங்களது தவறான கொள்கைகளைப் பரப்பி வருகின்றனர் 16000 பெண்களை மணந்த கிருஷ்ணனை துதிக்கின்றனர் இதனால் மக்களது morals  பாதிக்கப்படும்  என்பதே வழக்கு வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தபோது பிரதிவாதியின் வழக்கறிஞர் ஒரு கேள்வி அந்த கன்னியாஸ்திரியிடம்  கேட்டாராம் “நீங்கள் கன்னியாஸ்திரியாகும் போது ஒரு பிரதிக்ஞை எடுப்பீர்களே அதைச் சொல்ல முடியுமா “ அதற்கு இயலாமை தெரிவிக்கப்பட்ட போது வழக்கறிஞர் சொன்னராம் இந்த  பிரதிக்ஞையில் யேசுவைக் கணவனாகக் கொள்கிறேன்  என்று தெரிவிக்க வேண்டுமாம்  அப்போது எத்தனை கன்னியாஸ்திரிகளுக்கு  யேசு கணவனாவார் என்பதே கேள்வி  நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தாராம்
ஒரு ஜோக் படித்தேன்   ஆங்கிலத்தில்  இருந்தது தமிழாக்கினால் சுவை போய்விடும் அதனால் அதனை அப்படியே தருகிறேன் இது ஒரு
A ஜோக்  ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
Do you speak  English ?
Yes
Name?
Abdulal Rhasib
Sex?
Three to five  times a week
No no  I mean  male or female ?
Yes  . male female  and some times camel
Holy cow !
Yes cow sheep animals  in general
But  is it not hostile?
Horse style doggy style or any style
Oh dear…!
No no deer runs too fast
 புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார்  ஏசு நீரின்மேல் நடந்தார்  என்றார் யாரும் நம்பவில்லை  அவர் மேலும்  சொன்னார் ” ஏசு நீரை வைன்  ஆக மாற்றினார்”
பாதி கோட்டயம்  கிறிஸ்தவர்களாக  மாறியது
😀

ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி
மூனு வரில ஏதாவது சொல்லு?!

மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது

______________

நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.



______________

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..


_____________


ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

....

______________

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

_____________

ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,


______________


"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______________


Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!‍⚖

Girl : செருப்ப கழட்டவா..?

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!



______________


 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.


மா
மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!





நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.


______________

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..


_____________


ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

வித கவித.....

______________

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????


______________

ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,



______________


"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______________


Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!‍⚖

Girl : செருப்ப கழட்டவா..?

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

_____________


 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.

பேரன்------தாத்தா  உங்களை யார் படைச்சா
தாத்தா ------கடவுள் படைச்சார் 
பேரன்  ----என்னை யார்  படைச்சா 
தாத்தா ------கடவுள்தான்
பேரன்  ----உங்களைப் படைச்சப்பொ இருந்ததை  விட கடவுள் என்னை படைக்கும்போது தேறிட்டார் போல  தேறிட்டார்                                 தேறிட்டாபோல

ஒரு இளைய பாரதத்தினன் 

கற்பனை கை கொடுக்காத போதுபடித்ததும் கேட்டதும் கை கொடுக்கும்












Saturday, August 17, 2019

எங்களைப் பற்றி பேரன்




                                          பேரனின் தங்க்லிஷ் கவிதை
                                           -------------------------------------------


                                 
Iruvaraiyum  paarththaal kamal sridevi poola irukku.natippil alla.
Aaanaal avvalavu kaathal poruththam theriyuthu;
Avvalavu praem,ishtam,kaathal,love, pyaar
Ellaamae orae arththamthaanae. !
Ivarkal kaathal patri solla naan patikkanum Phd;
Iruvar kaathalilum unmai irukkirathu. 
Aqua guard thanni poola pyuraa irukkum.
Ivarkalaip paarththaal enakku poraamai. 
Aen enraal ennaip paarththu en paeran ippati ellaam solvaanaa. ?
Chansae illai.aen enraal naan innum kaathalikkavae illaiyae.!
Ivarkal santaiyaip paarththaal orae borethaan.no entertainment.
Angkaeyum love thaan therikirathu.
singkham poonaiyaaka mutiyumaa. ?oru unmai theriyumaa.?
Engka veettu singkaththai kutti paappaa 
Maathiriyaakkiya  perumai engka paattikkuththaan saerum.
Ivarkal chemistry paarththaal world physics aachchariyam illai.

Ippo naan T.R u 
ivangka rendu paerum sema pair -u
Enakkuth tharaangka  too much care u
Athaip petraal kitaikkum kick u
appuram ethukkadaa bar u
Hai tantanakkaa  tanakkunakka...!


தங்கிலீஷ் படிக்கக் கஷ்டமாக இருந்தால் அதுவே தமிழில்
--------------------------------------------------------------------------------
இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
நடிப்பில் அல்ல. .
ஆனால் அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம், இஷ்டம், காதல், லவ், ப்யார்
எல்லாமே ஒரே அர்த்தம்தானே. 
இவர்கள் காதல் பற்றிச் சொல்ல நான் படிக்கணும் Phd; 
இருவர் காதலிலும் உண்மை இருக்கிறது
அக்குவா கார்ட் தண்ணி போல ப்யூரா இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன் என்றால் என்னைப் பார்த்து என் பேரன் இப்படிச் சொல்வானா?
சான்ஸே இல்லை, ஏன் என்றால் நான் இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது. 
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா 
மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை.
                       இப்போ நான் டீயாரு

இவங்க ரெண்டு பேரும் செம பெயரு
எனக்குத் தராங்க டூ மச் கேரு
அதைப் பெற்றால் கிடைக்கும் கிக்கு 
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய் ட ண்டணக்கா டணக்குணக்கா.
டண்டணக்கா, டணக்குணக்கா. !
--




Wednesday, August 14, 2019

நான் யார்



                                          நான் யார்
                                          ---------------

எனக்கு அடிக்கடி நான் யாரென்னும்சந்தேகம் வருவதுண்டுஅப்படி வரும்போது பிராம்மண்ரிடையே நிலவும் ஒருபழக்கமும்நினைவுக்கு வரும்பெரியவர்களைக் காணும்போது தன்னை அறி முகப்படுத்திக்கொள்ளும் அபிவாதனம் ஒரு விதத்தில் சில சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்இந்த அபிவாதனமென்பதுதான் என்ன  நான்  இன்ன ரிஷி பரம்பரையில் வந்தவன் இன்ன கோத்திரம் இன்னாரின் பேரன் இன்னாரின் மகன் இன்ன பெயர்கொண்டவன் என்பது பொல் இருக்கும் பெரும்பாலும்கோத்திரமென்பது பிராம்மணரிடையே தான்பாவிக்கப்படுகிற்து கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது என்ன கோத்திரம் என்று கேட்பார்கள் கோத்திரம் அறியாதவ்ர்கள் சிவனை வழிபடுபவர் சிவ கோத்திரமென்று விஷ்ணுவை வழிபடுபவர் விஷ்ணு கோத்திரமென்றும்சொல்வார்கள் இது சரியென்று தொன்றவில்லை  பெரும்பாலானவர்களுக்கு தங்கள் முப்பாட்டன்பெயர் கூட நினைவில் இருப்பதில்லை அப்படி இருக்கும்போது இன்ன ரிஷியின் தோனறல் என்று கூறுவது சற்றே ஓவராகத் தெரிகிறது எல்லாவற்றுக்கும் ஏதோ நம்பிக்கையே காரணம் ஒரு கதை நடுவில் நினைவில் தொன்றுகிறது

உங்களுக்கு பூனைக்குட்டி, குரங்குக்குட்டி கதை தெரியுமா. ? பூனைக்குட்டி எல்லாப் பொறுப்பும் தன் தாய்ப் பூனையிடம் விட்டு விடும். குட்டி வளர்ந்து பெரிதாகும்வரை பூனை தன் குட்டியை வாயினால் கவ்விக்கொண்டு பாதுகாக்கும். ஆனால் குரங்குக் குட்டி தன் தாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு அதன் அரவணைப்பிலேயே வளரும் பூனைக் குட்டியைப் போல் மனிதனும் தன்னை ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து விட வேண்டும் என்பார்கள். ஆனால் மனிதனுக்கு கண்காண முடியாத தெய்வத்திடம் தன்னை அர்ப்பணிப்பதில் அநேக சங்கடங்கள் உண்டு, அவன் தன்னை  தன் தாய் காப்பாற்றும் என்று நம்பி இறுகிப் பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டி போல் ஆண்டவன் நம்பிக்கையைப் பற்றிக் கொள்கிறான். , இதையே சற்று வேறு விதமாகக் கூறினால். ---தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு போகும் சிறுவன் கீழே விழக் கூடும். ஆனால் தந்தையே அவன் கையை பற்றிக்கொண்டு போனால் அவன் விழமாட்டான். தன்னம்பிக்கைக்கும் ஆண்டவனைச் சார்ந்திருப்பதற்கும்  உள்ள வித்தியாசம் இதுதான்

எனக்கு பலவிதமான நம்பிக்கைகளைஉரசிப்பார்க்கும் குணம் உண்டு கோத்திரங்கள்சாத்திரங்கள்எல்லாமே ஒருவனை மற்றவனிடம் இருந்து பிரித்துக் காண்பிப்பதையே காட்ட உதவுகிறதுஎன்பதே என் அபிப்பிராயம் பிறப்பால் ஒரு பிராமணராக அறியப்பட்டஒரு தம்பதியினருக்குப் பிறந்ததாலேயெ நான்பிராமணன் ஆவேனா ஒரு பிராம்மணன் தனக்காக உழைத்து எதும்சேர்க்கக்கூடாது என்பதைசொல்லி இருந்தார்கள் அக்காலத்தில் ஒரு பிராம்மணன்  இரு பிறப்பு உடையவன் என்றுகூறப்படுகிறது  முப்புரி நூல் இடுவதற்கும் முன்னும் பின்னுமானது
பிராம்மணன் என்பவன் பார்ப்பனன் என்பதுமிதையே காட்டுகிறது கோழிக்குஞ்சுக்கு பார்ப்பு என்றும்பெய்ர் உண்டு முட்டையாக ஒரு  பிறப்பும்குஞ்சாக ஒரு பிறப்புமென்பதால் இருபிறப்பு அதுமாதிரி முப்புரி நூல் இடும் முன் ஒரு  பிறப்பும் இட்டபின் ஒரு பிறப்பும் என இரு பிறப்பு அதாவது பார்ப்பு அனன்     
 
ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன்   ஒன்றுபவன்   இன்றும் உண்டோ.

(முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை  = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
                 அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி                    என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி

ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று()
இதன்படி பிராம்மணனாக இருப்பவர் யாராவது இருக்கிறார்களா சில சடங்குகள் வழி வழியாக பின்பற்றப்படுபவைபூணூல் அணிவதுமதில் ஒன்று இக்காலத்தில்பூணூலணிவதே தங்கள் சாதியை பிரகடனப் படுத்தவே என்றாகி விட்டது ஆனால் பிறபொக்கும் என்னு எண்ணம் உடையவன் நான் பூணுல் அணியமறுத்தவன்  என்னை பிறரிடம் இருந்து மாறுபட்டுக் காட்டிக்கொள்ள நினைக்காதவன்  எதையும் ஆராய்ந்து பார்க்க விரும்புபவன்
நான் பள்ளியில்படிக்கும்போதே  அதிகாலையில் எழுந்து குளிர் நீரில்குளித்து (வெல்லிங்டன்நீலகிரியில்) பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி ஓம் ஓம் என்று உரக்க தியானமெல்லாம்செய்து பார்த்தவன்                  

 சுவாமி விவேகாநந்தர் நாராயண்குரு போன்றோர் எழுதியவற்றை எல்லாம் படித்து என்னுள் ஏதாவதுமாற்றம் தென்படுகிறதா என்று சோதித்துப்பார்த்தவன் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்ற தாழ்வுகளைக் கண்டு கொதித்தவன் எங்கள் கிராமத்தில் நான் என் பத்துவயது பிராயத்தில் மனிதனின் மலத்தை மனிதரே அள்ளும் அவலத்தைக் கண்டுஅக்காலத்திலேயே அதுதவறுஎன்று உணர்ந்தவன் காலம் மிகவும் மாறி விட்டது  சாதி சம்பிரதாயங்கள் மெதுவாக மாறி வருகின்றன


எனக்குச்
 சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டுஎதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால்  மனம் வருந்தியதும் உண்டு  அதற்கு சிலவடிகால்கள் வேண்டும்  எழுதுவதன் மூலம்   சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்
இப்பதிவும் அதுபோல் ஒன்றுதான்