Friday, September 30, 2022

ஒரு வித்தியாச முயற்சி

 


வாழ்வியலில் சினிமாப் பாடல்கள்

                                     வாழ்வியலில் சினிமாப் பாடல்கள்.
                                    -------------------------------------------------


ஆண்:- ப்ரேமை எனதே பாரின் மீதே பாக்யம் வேறேதே
பெண்:-ப்ரேமா ரூபனே என்றனைப் புகழ்ந்தால் பதியே நானுந்தன் இன்பரூபமே
ஆண்:- சந்திர பிம்பமே. ! சரசாங்கியே நீ.! சாரச நயனீ எனதாருயிரே
பெண்.: ப்ராண நாயகா நீயன்றோ. !
ஆண்:- மங்கை நீயென் மானச தேவி.!
பெண்:-மங்களாகர  மன்மத ரூபா.?

வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று எழுதத் துவங்கிய எனக்கு அந்த காலத்து டூயட் பாட்டு மனதில் ஓடியது. வரிகள் முன்னே பின்னே இருக்கலாம்.
ஆனால் சங்கதி அது அல்ல. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் சினிமாப் பாடல்களில் பதிவாகி இருக்கிறது என்பதுதான். காதல், கலியாணம், மகப் பேறு என்று எழுதி வாழ்வின் எல்லா சுவைகளும் பாடல்களிலேயே தெரிய வரும்.

ஆண்:-வாடிக்கை மறந்ததும் ஏனோ
      என்னை வாட்டிடும் ஆசை தானோ
      பல கோடி மலர் அழகை மூடி வைத்து
      மனதைக் கொள்ளை அடிப்பதும் ஏனோ
பெண்:- வாடிக்கை மறந்திடுவேனோ
        எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ
        இளமங்கை எந்தன் மனதில் பொங்கி
        வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ.

ஊடல் கலந்த ஆசை பறிமாற்றங்கள் எழுத்தில் வந்துஇசையில் பரிமளிப்பது மேலே காணலாம். .

கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ
காதலிசை பாடியதும் நீயேயன்றோபெண்மனதில் ஏற்றி வைத்த தீபமல்லவோ
ஒளி பரவும் முன்னே அணைத்தல் பாபமல்லவா....

வேறூன்றி வளரும் என்று விதை விதைத்தேன்
இரு விழியாலே காத்திருந்து நீருமிறைத்தேன்
பூமுடிக்கும் ஆசைகொண்டு சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்


காதல் தோல்வி எதிர்கொள்வதை மிக அழகாகப் பதிவு செய்யும் பாட்டு. 

காதல் வெற்றி கல்யாணத்தில் முடிய வேண்டியதுதானே.ஒரு கல்யாணம் பாட்டில் விமரிசையாக நடை பெறுவதை இந்தப் பாட்டை விட அழகாக எழுத முடியுமா என்ன,? 

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும்திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன்ரகுராமன்ரகுரா..ரா..ரா...மன்.

 
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட


பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி, கண்ணில் நீரெழுதி.

திருமணம் நடந்துவிட்டால் போதுமா.? மணமான பெண்ணை எப்படி வரவேற்கிறார்கள் பார்ப்போம்.

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா.

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில்
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன்மணமும் பொருள்மண்மும் உங்கள் வாசலில்
புதுப் பூமணமும் பா மணமும் எங்கள் வாசலில்

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்

தங்க நகை வைரநகை நிறைந்திருக்காது இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி இருக்காது.

வரவேற்புக்கு ஏதும் குறைவில்லை. இருந்தாலும் வந்த இடத்தையும் இருந்த இடத்தையும் ஒப்பு நோக்குவது குறித்துக் கொள்ள வேண்டும். .

திருமணம் முடிந்து மணமகள் வந்தாயிற்று.இனி என்ன.? முதலிரவுதானே.? 

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம்கொண்டு சேரும் நன் நேரம்

சப்ர மஞ்சத்தில் ஆட சொப்ன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்கள் பாட சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாகம்
புலரி வரையில் நம்முடே யோகம்.
ஆஆ  அ அ ஆ ஆ..........

இருவரும் ஒருவராக இணைய மூன்றாமவர் வருவதுதானே நியதி. வரவேற்பு எப்படி என்று பார்ப்போமா. ?

 
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
(
காது கொடுத்து கேட்டேன் )

ஓராம் மாசம் உடல் அது தளரும்
ஈராம் மாசம் இடை அது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...
(
காது கொடுத்து கேட்டேன்
  
விருப்பப்படி குழந்தை பிறந்து விட்டால் தாலாட்டும் பாட்டும் பிரமாதம் ..
வளர வேண்டிய சூழல் எப்படியெல்லாம் பாட்டில் வருகிறது .பார்ப்போம். .

 இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

என்றெல்லாம் தாலாட்டுப் பாடி,முத்தாய்ப்பாக அறிவுரையுடன் முடிக்கும் பாடல்)
ந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே

தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்

நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்

ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
(
பாதை..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(
இந்த..)

வித்தியாசமான சூழல் தரும் பாட்டு இது..

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன்பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

நான் பிறந்த காரணத்தை நானே அறியு முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

கொஞ்சம் வளர்ந்ததும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் கொண்டுவிடும்போது பிள்ளைகளுடன் மனப்போராட்டம் எஆதாரணமாய் நிகழ்வதுதானே. 

கண்ணா…… 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா… NEVER 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் 
நடந்தது அந்த நாள் 
முடிந்ததா பாரதம் 
நாளைய பாரதம் யாரதன் காரணம் 
ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 

உள்ளப் போராட்டத்தின் விளைவாய் உதிக்கும் எண்ணங்கள் தேடல்களில் கொண்டு போய் விடுகிறது.விளைவு.? அருமையான தத்துவப் பாடல்கள். ,


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
இன்னும் ஒன்று.


போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது

வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

கடைசியாக ஒன்று

ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ

ஆடும்வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடும்வரைக் கூட்டம்
கொள்ளி வரை வருமா.?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்றுவிடு என்பான்

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு.

வீடு வரை உறவு..............

வாழ்வியலில் தமிழ் சினிமாப் பாடல்கள் நவ ரசங்களிலும் இருக்கிறது. ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஏதோ அங்கும் இங்குமாகக் கோடி காட்டியிருக்கிறேன். இதுவே மிகவும் நீ.........ளமாகிவிட்டது.  
--------------------------------------------------------------------..










Saturday, September 24, 2022

வினாயகர் அகவல் ஒரு அரிய முயற்சி

 எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் ஔவையாரால் எழுதப் பட்ட விநாயகர் அகவலில் வரும் இந்த வரிகள் பொருள் தெரிந்து சிந்திக்கத் தகுந்தது. முதலில் விநாயகப் பெருமானை வர்ணித்துப் பிறகு வேண்டுதல்களை வைக்கிறார்.

 

“........................................................................................................................

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக்கருளி

கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து....

 

படிக்கும்போதே ஓரளவுக்குப் புரிகிறது.  இனி அவர் கேட்பது தெஇந்து கொள்வதே கடினம். அவரது ஒரு வார்த்தை புரிய என்னென்னவோ தெளிய வைக்கிறார்.

”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி ...

 

நல்வினை தீவினை அதனால் ஏற்படும் மாய இருளை நீக்கி

சாலோகம்  சாயுஜ்யம் சாமீபம் சாரூபம்  என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன, அதன் நலங்கள் என்ன 

என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )

 

மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.

 

ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களினால் ஏற்படும் மயக்கத்தை இறுத்து

 

ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்

 ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

 ஆறாதாரத்து அங்குச நிலையும்

 பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே....

 

உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி மூலாதாரம் , சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களில் நிறுத்தி

அதன் பயனாய் பேச்சிலா மோன நிலை அருளி ( குறிப்பிட்ட ஆறு ஆதாரங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பது என்று எண்ணுகிறேன் )

 

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்த்றிவித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி 

 

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3)

சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,

 

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

என் முகமாக இனிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்படஎனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினிற் கபால வாயில் காட்டி,

இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன

அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்து அருள்வழி காட்டி,

சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,

சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,

அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,

அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து

தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட

வித்தக விநாயக விரை கழல் சரணே.

 

இடையிலிருக்கும் சக்கரத்தின் பதினாறு நிலையையும் உடலின் எல்லா சக்கரங்களின் அமைப்புகளையும் காட்டி உருவமான தூலமும் ,அருவமான சூட்சுகமும் எனக்கு எளிதில் புரியும்படி விளக்கி, மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி

எனக்குக் காட்டித்தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்கருளி, நான் யார் என்பதை எனக்குத் தெளிவித்து,பூர்வ ஜன்ம வினையை நீக்கி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கருளி, அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி ,இருள் ஒளி இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்பதை உணர்த்தி

அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாகக் கூறி, அளவில்லாத ஆனந்தம் தந்து துன்பங்கள் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, உள்ளும் புறமும் சிவனைக்காட்டி, சிறியவற்றுக்கு சிறியது பெரியவற்றில் பெரியது எதுவோ அதை கணு முற்றி உள்ள கரும்பு போல எனக்குள் காட்டி , உண்மையான தொண்டர்களுடன் என்னைச் சேர்த்து ,அஞ்சக் கரத்தினுள்ள உண்மையான பொருளை என் மனதில் நிலை நிறுத்தி எனை ஆட்கொண்ட விநாயகப் பெருமானே உன் பாதார விந்தங்கள் சரணம்

 

அது சரி முதலில் நான் எழுதத் துவங்கியதற்கும் ஔவையின் அகவலுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். எண்ணங்களை அடக்க வேண்டும் . எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணம் .எண்ணங்களை நிறுத்த முடியாது. ஆனால் அடக்க முயலலாம். மூலாதாரத்து மூண்டெழு கனலை ( அதுதான் குண்டலினி சக்தியோ ?)ஆறு ஆதாரங்களின் வழியே கொண்டுவந்து கபால வாயிலில் நிறுத்தி..... அப்பப்பா. எண்ணங்களை கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்லிச் சென்றிருக்கிறாள் ஔவைப் பாட்டி. இதனை சுருக்கமாக தியானம் என்று சொல்லலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது. .

 

தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்தது என்று சொல்ல முடியவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.

 

எண்ணங்களை அடக்க வேண்டும் என்பதில் துவங்கி, அடக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி, ஔவையின் பாடலில் கொண்டு நிறுத்தி , எனக்குத் தெரிந்தது கடுகளவு தெரியாதது உலகளவு என்னும் முத்தாய்ப் புடன் முடிக்க வைக்கிறது. பதிவுலகின் ஜாம்பவான்கள், தமிழறிஞ்ர்கள்,பாடலின் கடின ( நமக்குத் தெரியாத ) பதங்களை விளக்கினால் பலரும் பயனடையலாம்.