Friday, September 16, 2022

மீள் பதிவு

 புதியதாக எழுதாவிட்டாலும் முன்பு இடுகையாக்கியதை  வெளியிடலாமே என்று தோன்றியது சொறி பிடித்தவன் கைபோல.

பிள்ளை வளர்ப்பு

திருஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் இது.*வாட்ஸாப்பில் வந்தது

 பிள்ளை வளர்ப்பு
இப்போதெல்லாம்  ஏதாவது தவறுகள் நடந்தால்  செய்தவர்கள் சரியாக வளர்க்கப்படவில்லை என்று சொல்லக் கேட்கிறோம்  பொய் பேசாமை திருடாமை  போன்றவை வேண்டுமானால்  வளர்ப்பின்  பற்றாக்குறையால் வரலாம் அண்மையில் இன்ஃபோசிஸ்  நாராயண மூர்த்தியும் இது பற்றி அங்கலாய்த்திருந்தார் பிள்ளைக;ள் பிறரால் புகழப்படும்போது வளர்ப்பு நன்றாக இருப்பதாகவும்பிறரால் ஏசப்படும்போது தவறான வளர்ப்பாகவும் சொல்லப்படுகிறது  மேலும் வயதன பெற்றோரை முத்யோர் இல்லத்தில் சேர்த்தால்  பிள்ளிக ளைக் குறை சொல்லவும் கேள்விப்படுகிறோம் இதுதான்   சரியான வளர்ப்பு என்று எதுவாவது உண்டா
இந்தக்காலத்தில் பிள்ளைகளுக்கு சுதந்திரம் அதிகம் தரப்படுகிறது இது தவறா? பிள்ளைகளை பயமுறுத்தி அடிமைகள் போல் வளர்க்க வேண்டுமா
எதிர்பர்ப்புகள் தகரும்போது யாரைக் குறை கூற முடியும் இக்காலத்துப் பிள்ளைகள் எல்லோருக்கும் சரி எது தவறுஎது என்று தெரியும்
சுயமாய் சிந்திக்கிறார்கள் இப்படிச்செய் இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்துமென்றெல்லாம் சொல்ல முடியாது என்ன நிகழ்ந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவம்  இருக்கிறது
நாம் என்ன சொன்னாலும் எதிர்ப்பு காட்டாதபிள்ளைகளையே  நாம்விரும்புகிறோம்அவர்களுக்கான இடத்தை தர விரும்புவதில்லை ஏன் என்றால் நாமெது சொன்னாலும் அதை அப்படியே சிரமேற்கொண்டு செய்தால் நல்லவர்கள்  இல்லாவிட்டால் வளர்ப்பு சரியில்லையா  எனக்கு தோன்றுவதுஇதுதான் இப்படிச் செய் அப்படிச் செய் என்பதை விட எப்படிசெய்யவேண்டுமென்று வாழ்ந்து காட்ட வேண்டும்
சாக்ரடீஸ் காலம் முதலெ தொடங்கியதுதான் இது வருங்கால சந்ததியினர் சரியில்லைஎன்பதே  நாமென்ன விதைக்கிறோமோ அதுவே விளையும்    

அவர் தனது அண்டை வீட்டுக்காரர் தன்னுடன் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயத்தை நமக்குப் பதிவு செய்கிறார்....

*
பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன்.*

*
எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள்நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள்.*

*
அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம்உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே.*

*
சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன்டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம், "செல்லம்..! என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா!" என்று கூறினேன்.*

*
அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*
ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன்.*

*
அவள் 'சை...' என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*
அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.*

*
நான் சில நிமிடம் கழித்து மீண்டும் 'செல்லம்...!' என்று அழைத்தபோது அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு...*

*"
அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்எத்தனை முறை தான் என்னை எழுப்புவீர்கள்நானும் தான் நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன்எனக்கும் களைப்பாக தான் இருக்கிறதுஎன்று கூறினாள்.*

*
நான் "ஸாரிமாஎன்று சொல்லிவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.*

*
என் இதயம் அழுததுநான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான்...*

*
இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள்நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம்கொடுத்தது தவறோ?*

*அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ?*

*
நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ?*

*
அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள்ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானேபெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள்?*

*
இன்று... பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பது குறித்து கவலைப்படுகிறது இந்த உலகம்.*

*
ஆனால் பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா?*

*
அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?*

*
இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான்...*

*
இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்படிகிறார்கள்இதற்குக் காரணம் என்ன?*

*
இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார்.*

*
அவள், "நா...என்ன உனக்கு வேலைக்காரியாநீயே போய் எடுத்துக் கொள்!" என்றாள்.*

*
அவரும் சிரித்துக் கொண்டே "இல்லை...மாநான் தான் உனக்கு வாழ் நாள் முழுவதும் சேவகன்!" - என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறதுஇதற்குக் காரணம் என்ன?*

*
நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான்.*

*
பிள்ளைகள் என்றுமே அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.*

*
பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான்நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள்அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம்ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே....*

*
அதனால் அவர்களை நீங்கள் வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும்அந்த விதிமுறைகளை அவர்கள் மதிப்பதற்கு அவர்களைக் கட்டாயப் படுத்துவதற்கும் ஒரு போதும் அஞ்சாதீர்கள்.*
    


















10 comments:

  1. இப்படிச் செய் அப்படிச் செய் என்பதை விட எப்படிசெய்யவேண்டுமென்று வாழ்ந்து காட்ட வேண்டும்...உண்மை ஐயா.

    ReplyDelete
  2. எல்லோருக்கும் இருக்கும் அனுபவங்கள். யோசிக்க வைக்கும் பகிர்வு.

    ReplyDelete
  3. நல்ல கருத்துகள் சார். இப்போது பல பெற்றோரும் சொல்லுபவைதான். குழந்தைகளிடம் விதிமுறைகள் கட்டளைகள் என்று சொல்லுவதை விட நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது சரிதான் ஆனால் நாமும் மனிதர்கள்தான் சில சமயம் சறுக்கல் வரும்தான்.

    பிள்ளைகள் சுயமாகச் சிந்திக்க வேண்டும் கண் மூடித்தனமாக எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது நம் வீட்டிலும் சொல்லப்படும்

    ஆனால் சில குடும்பங்களில் பிள்ளைகளை எப்படி வளர்த்தாலும் பிள்ளைகள் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் நல்லது சொல்லி நன்றாக வளர்க்கப்படும் பிள்ளைகள் பெற்றோரை பார்த்துக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நமக்கு சறுக்கினால்குறை சொல்வது குறையும்

      Delete
  4. மிக நல்ல பதிவு. பெற்றோர் வளர்ப்பு முக்கியம்.

    ReplyDelete
  5. பலருக்கும் தெரிவ்தில்லை

    ReplyDelete