Saturday, August 27, 2022

சில விளக்கங்கள்

 

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டுஎதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால்  மனம் வருந்தியதும் உண்டு  அதற்கு சிலவடிகால்கள் வேண்டும்  எழுதுவதன் மூலம்   சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்

இப்பதிவும் அதுபோல் ஒன்றுதான்

 

 

எனக்கு வரும்பின்னூட்டங்கள் பலவும் பட்டும்படாமலும் இடுகையில் எழுதி இருக்கும்விஷயத்திலிருந்துமாறுபட்டும்

இருக்கின்றன ஒரு வேளை அப்படித்தானிருக்க  வேண்டுமோ எதற்கும் நாம்கவலைப்படுவதில் லைநம்பிக்கைவழி   நடத்துகிறது மேலு ம்

 எழுத முடிவதில்லை  நிறை ய  பிழைகள்

 


Monday, August 22, 2022

ஊழல் சில எண்ணங்கள்

 

J⁸

ஊழல்  லஞ்சம்

ஊழல் லஞ்சம்  குறித்து எழுத வேண்டும் என்றுநெடுநாளாக யோசனை இருந்தது ஆனால் எழுதி [பிரயோசனம் இல்லை என்றே தோன்றியது ஊழல் லஞ்சம் என்றால் உயர் மட்டத்தில்தான்  இருக்க வேண்டுமா  நம்மிடையே இருக்கும் பொதுவான குணம்தானே லஞ்சம் என்பது  நம்கலாச்சாரத்திலேயே ஊறிய ஒன்றுதானே கையூட்டு என்பது கடவுளுக்கு கொடுத்தால் அது வேண்டுதல்  மனிதனுக்குக் கொடுத்தால்அது லஞ்சம்  நம்மில்   யார்தான்லஞ்சம் கொடுக்காதவர் எந்த அரசு அலுவலகத்தில்எந்த வேலையாக  வேண்டுமானால் லஞ்சம்கொடுத்துதான் ஆகவேண்டும் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லைநான்கொடுக்க மாட்டேன்  என்று அடம் பிடித்தால் நம் வேலை நடைபெறாது வெறுமனே அலைகழிக்கப்படுவோம்   இதற்கு பதில்  கொஞ்சம் தண்டம் அழவெ நாம் தயாராய் இருக்கிறோம் பைக் அல்லது கார் ஓட்ட உரிமம் பெறுபவர்கள்  எல்லோருக்கும் தெரிந்தது தான்

 என்பேரனின்   திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்டிஃபிகேட் பெற  கட்டணம் ரூ 300 / ஆனால் அது கிடைக்கப்பெற கையுட்டு ரூ 500/  எனக்கு காவேரி தண்ணீர் வர கனெக்‌ஷன்பெற  பலஅண்டுகளுக்கு முன் ரூ 8000/கொடுக்கவேண்டும் என்றனர்  நானும்  அந்தப்பணத்தோடு  அது சார்ந்த அலுவலகத்துக்கு இரண்டு மூன்று முறை அலைந்தேன்   ஒரு வழியாக பணம் பெற ஒப்புக்கொண்டனர்  கையூட்டு வாங்க ஒரு நூதன வழி அறிந்தேன் கைபேசியில் எவ்வளவு பணம் தரர வேண்டும் என்று குற்ப்பிடுகின்றனர் ரூ 8000 உடன்  அவர்களுக்கான பண்மும் சேர்த்து   கைபேசியில் காட்டுகின்றனர் அதை செலுத்த நான் ஒப்புக்கொண்டபிறகே நமக்கு ரசீதுக்கான வழிகள்பிறக்கின்றன

 2011 ம் ஆண்டு அன்னா ஹசாரே ஒரு மாபெரும் உண்ணா விரதப் போராட்டம்நடத்தினார் லோக் ஆயுக்த  மற்றும் லோக்பால்  போன்ற அமைப்புகள் கோரி யது  அந்தப் போராட்டம் அந்தப் போராட்டம்குறித்து அறிந்த பலரும்   அதற்கு ஆதரவு தெரிவித்தனர் உயர்மட்டத்து ல்ஞ்ச லாவண்யங்கள் மட்டுமே முன்   நிறுத்தப்பட்டன ஆனால் தினசரி கண்முன்னே நடந்தேறும் கைய்யூட்டுகளை  விசாரிக்க யாராவது  புகார் கொடுக்க வேண்டுமாம்   கடவுளுக்கே லஞ்சம்கொடுக்கும் நாம்  இம்மாதிரி சிறிய குற்றங்களுக்கா புகார்கொடுப்போம்நம்காரியம் நடக்க  நாம்கொடுத்துதான்  தீரவேண்டும் வாழ்கையில் இதெல்லாம் சகஜம் என்று ஏற்றுக் கொள்வோம்

பெரிய அளவில் பணம் பெறுபவர்களையே நாம் குறி வைக்கிறோம்   அதுதான்  நம்கண்களுக்கு  குற்றமாகத் தெரிந்தது  

நாம் தினப்படி காணும்லஞ்சங்கள் பெரிதாய்  தெரிவதில்லை உயர் அதிகாரிகளே  ஊழல் செய்கிறார்களென்று சமாதானமடைவோம் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ  நடந்தாலும் திருட்டு என்பது திருட்டுதான் அதேபோல் எந்த அளவில்  ஆனாலும்லஞ்சம் லஞ்சமே 

                      ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

🔵உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று
வாழவே வாழாது

                    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’


🔴
மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!


🔵
எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!

                     ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


🔴
இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்..

                                      ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’


 

Saturday, August 20, 2022

நினைவுகள் இஷ்டம் போல்

 ?

அப்போது நான்  பி எச் இ எல்லில்  இருந்தேன்  அசிஸ்டண்ட் எஞ்சினெயர் பெங்களூர்  வர பஸ் ஸ்டாண்ட் டுக்கு வந்தேன்  அங்கு ஒரு முகம் பார்த்ததுபோல் இருந்தது  அம்பர்நாத்தில் எனக்கு ஜூனியர்  அவருக்க்கு என்னை அடையாளம் தெரிந்தது ஆனாலும் பார்வையிலும்  தோர்ணையிலும்   ஒரு அலட்சியம் நான் நீங்கள் இன்னார்தானே  என்று விசாரித்தேன்  ஆம் என்றார் நான் பிஎச் இ எல் லில்  வால்வ் டிவிஷனில்  தரக்கட்டுப் பாடுதுறையில் இருப்பதாகக் கூறினேன் பிறகு அவர் என்னைக் கேட்டதுதான்   என்னை திடுக்கிடச் செய்தது  அவர் மைகோவில் வேலையில் இருப்பதாகவும்  நான்  வால்வ் ஏதாவது விற்க விரும்பினால் அவர்  உதவி செய்வார் என்றும்   கூறினார்எனக்கு சே என்றாகி விட்டது  அவர் ஏதோ உச்சாணிக்கொம்பில் இருப்பதுபோலவும்  நான் அவர் உதவிக்கு ஏங்குவது போலவும்  அதன் பின் நான் பேசவில்லை

இதே போஒல் இன்னொரு முறை நான்படித்த பள்ளி மாணவன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது நான் பி எச்  எல் லில்  எஞ்சிநீராகப் பணியில் இருக்கிறேன் என்று சொன்னதும் அவன்சிரிப்பை அடக்க முடியாமல்  பத்தாங்கிளாஸ் படித்துஎஞ்சிநீராஎன்று  சொல்லிச் சொல்லி  சிரித்தான்

 ஒரு முறை நான் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது  ஒருவர் என்னை நிறுத்தி  விசாரித்தார்  அவரைப்பற்றிய ஞாபகம் எனக்கு வரவில்லை  பொத்தாம்பொதுவாக பதில் சொல்லி வந்தேன் அவர் விடைபெற்றுப்போகும்போது  தாங்க முடியாமல் அவர் யார் என்று நினைவுக்கு வரவில்லை என்றேன் மனிதனுக்கு  வந்ததே ஒரு கோபம்  நீங்களெல்லாம் இப்படித்தான்  வேலையானால் போதும்   வேறு  ஒன்றுமே தெரியாது என்று புலம்பினார்  நான்மன்னிக்கக் கோரி அவரிடம் அவர் யார் என்று கேட்டேன் நான் எச் ஏ எல்லில்  பயிற்சியின்போது  பல துறைகளுக்கும்   செல்ல வேண்டி இருந்தது  பலரிடம் அதிக பட்சமாகஒரு வார காலம் பயிற்சியிலிருந்திருப்பேன்  அது நடந்து முடிந்து ஆண்டுகள் ஓடிவிட்டனஅப்படி நான் பயிற்சியில் இவரிடமும்   இருந்திருப்பேன் சுத்தமாக நினைவில் இருக்கவில்லைஅவர் போனபின்  என் ஞாபக மறதியை  வைது கொண்டு வருந்தினேன் இதனால் தானோ  என்னவோ  பயிற்சியின்  போதுபலரு எதையும் சொல்லித்தருவதில்லைபின் ஒரு நாள் நாம் அவர்களுக்கே அதிகாரியாய்  வரலாம் என்னும் பயம்தான் 

இனி எழுதுவது தொடர்பற்றதாக இல்லை எப்படி இருந்தநான்  இப்படியாகி விட்டேனே என்று நினைக்கும் போது எப்படீருந்தேன் என்னும் நினைவும் வருகிறதுசிறு வயதுகளில் நன் தடகளப் போட்டிகளில் ஓரளவு வல்லுனன்  அம்பர்நாதில் பயிற்சியின் போது நடந்த தடகளப் போட்டிகளில்பங்கு பெற்று உயரம் தாண்டுதலில் முத்ல்  பரிசு பெற்றேன்   என் அளவு 
உயரம்தாண்டினேன்   அதாவது ஐந்தடி நான்கு அங்குலம்  நினைவு அதல்ல பங்கு பெற்றவர்களில் போட்டி  அதிகம் இருந்து இருந்து இருவர் சாம்பியன்ஷிப் பரிசு பெற இருந்தனர் அவர்களில் ஒருவர் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்றால்  சாம்பியன் என அறியப்படுவார்  ஆனல் எதிர்பாராத வகையில்நான்  வெற்றி பெற்றேன் தனக்கு ஒருகண்போனாலும்  பரவாயில்லை என்பது போல் அவர்களில் ஒரு கூட்டத்தினர் என்னைத் தோள் மீது அமர்த்தி மைதானத்தை சுற்றிவந்தனர்அப்படி இருந்தநான் இப்போது சரியாக நடக்கவே முடியாதுகஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது

ஒரு தந்தை மகனுடன் ஓடி தோற்றதை அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்  வாய்ப்பாக  நினைத்து  இருந்ததை ஒரு பதிவாக்கி இருந்தது நினைவுக்கு வந்தது  மேலும்நாம்குழந்தைகளிடம் பாடம்கற்பதையும் சித்தரிக்கும் விதத்தில் ஒரு காணொளியையு ம் பகிர்கிறேன் 

 
             
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 

              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 

              கவனம் கவனம் என்றே பதறினாள் 

              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய்

 

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 

வென்ற நாள் நானே முதல்வன்நானே முதல்வன் 

எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.

அப்பாஉன்னையும் நான் வெல்வேன் 

பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?

என்றே கேட்ட மகனிடம்

 

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 

               உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 

              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 

               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 

               என்றே அப்பனும் மழுப்பிட 

 

ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது

தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

 

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்

              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற

              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே

              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

 

ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 

ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை

அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 

நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்

அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்

பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்

மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 

மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை

 

             என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது

             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 

             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 

             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்

 

 

இதுபோல் தானே அன்றொரு நாள் என்

தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்

மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.

தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த

என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்

அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று 

உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 

விரிகிறது ஒரு முறுவல்

 

 




Wednesday, August 17, 2022

Mu⁸நான் யார் 15

 இதன் பின்சற்று இடைவெளி இருக்கும்


பொன்மலைப்பட்டியில் இருந்தபோது பணப்பற்றாக்குறை அதிகமாய் இருந்தது. என் கையில் ஒரு அரைப் பவுன் மோதிரம் இருந்தது, ஒவ்வொரு மாதமும் அதை ரூ12/-க்கு அடகு வைப்பதும் மாத முதலில் மீட்பதும் ... அப்பப்பா அது ஒருகாலம் ஒரு ஏழெட்டு மாதகாலம் பொன்மலைப்பட்டியில் இருந்திருப்போம் அந்த நேரத்தில் கலைமகள் பத்திரிக்கைநாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டி ஒன்று அறிவித்திருந்ததுஅப்போது என் கற்பனையில் உருவான நாவல்தான் “நினைவில் நீஅதை பத்திரிக்கைக்கு ரெஜிஸ்தர் தபாலில் அக்நாலெட்ஜ்மெண்ட் ட்யூ வுடன் அனுப்பினேன் அனுப்பிய மறு நாளே அக்நாலெட்ஜ்மெண்ட் யார் கை ஒப்பமில்லாமலும் திரும்பி வந்தது. தபால் ஆபீசில் விசாரித்தால். அந்த ரெஜிஸ்தர் தபால் போய்ச் சேர்ந்திருக்கும் என்று அலட்சியமாகப் பதில் சொன்னார்கள்.அந்த நாவல் பரிசீலனைக்கே போயிருக்காது என்றே எண்ணினேன் . அதை முழுவதும் வாசித்த என் நண்பன் மயூரநாதன் அதை வெகுவாகப் பாராட்டினான் அந்தக் கால கட்டத்தில் பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் (பிரபல எழுத்தாளர் ஜகன் நாதனின் மாணாக்கர் என்று நினைவு) சொற்பொழிவு ஒன்றினைக்கேட்க நேர்ந்தது. அவர் கூறிய பல கருத்துக்களை என் நாவலில் கையாண்டிருக்கிறேன் .அதே நாவலை நான் வலைப்பூ தொடங்கியபின் தொடராக வெளியிட்டிருக்கிறேன். புத்தக வடிவில் கொண்டுவர ஆசை உண்டு மனதில் பார்ப்போம்

நான் வேலைக்குப் பொய் விட்டால் சாந்தி குñìழந்தையுடன் தனியே இருக்க வேண்டும் குழந்தை மனோவும் ஒரு இடத்தில் இருக்கமாட்டான் எல்லா இடங்களுக்கும் தவழ்ந்து போய்விடுவான் குழந்தை அடுக்களைக்குள் வராமலிருக்க நிலைப்படியில் ஒரு தடுப்பு மரப்பலகையால் எழுப்பிவிடுவாள் குழந்தையின் அரணாக்கயிறில் ஒரு கயிறைக்கட்டி கட்டிலின் கால்களில் பிணத்து விடுவாள்.கயிறின் நீளத்துக்குள் குழந்தை வளைய வரலாம் குடியிருப்பு வீடு கிடைக்கத் தாமதமாகிக் கொண்டிருந்தது. மீண்டும்பெங்களூரு சென்று விட்டாள் நான் பொன்மலைப்பட்டி வீட்டைக் காலி செய்து விட்டேன் நண்பர்கள் என்.நடராஜன் அவன் அண்ணா தண்டபாணி ஆகியோருக்குக் குடியிருப்பில்வீடு கிடைத்திருந்தது. நாங்கள் நண்பன் சின்னிக் கிருஷ்ணாவுடன் நடராஜன் வீட்டில் தங்கினோம் செல்ஃப் சமையல் சின்னிக் கிருஷ்ணாவுடன் ஆன நட்பு இறுகத் தொடங்கி இருந்தது அந்த மாதிரி ஒருவருக்கு அலாட் செய்திருந்த வீட்டில் வேறு யாரும் தங்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. நானும் சின்னியும் திருச்சி மலைக் கோட்டை அருகே அல்லிமால் தெருவில் ஒரு அறை எடுத்துத் தங்கினோம் தினமும் சின்னியின் ஷெர்பா மோட்டார் சைக்கிளில் பணிக்குச் செல்வோம்  சில நாட்களுக்குப்பிறகு தில்லை நகரில் ஒரு வீடு பார்த்தேன். எவ்வளவு நாட்கள் திருமண்மாகியும் பிரம்மசாரியாய் இருப்பது தில்லை நகர் வீட்டுக்குப்போகும்போது சின்னியையும் எங்கள் கூடவே பேயிங் கெஸ்டாக இருக்கக் கேட்டுக் கொண்டேன் அவனுக்கு அது சௌகரியப்பட்டதோஇல்லையோ எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. தில்லை நகர் வீட்டுக்கு வரும்போது சாந்தியின் தம்பி பாஸ்கரனையும் எங்களுடன் தங்கிப் படிக்கக் கூட்டிக் கொண்டு வந்தோம் பாஸ்கரனை கிஅபெ பள்ளியில் சேர்த்தோம் அவன் எங்களுடனே யே இருந்து பள்ளிப்படிப்பு டிப்லொமா முடியும் வரையிலும் நாங்கள் விஜயவாடா போனபின்னும் கூடவே இருந்து பிஎச் இ எல் லிலேயே பணிக்கும் அமர்ந்தான் சில விசேஷ்ங்களை எழுதிக் கொண்டு போகும் போது இவையெல்லாம் பதிய வேண்டியது தானா என்று தோன்றும் ஒரு சாதாரணனின் வாழ்க்கையில் எது முக்கியம் எது இல்லை என்று கூறுவதே சிரமம் இருந்தாலும் எழுதும் போது வரும் எண்ண ஓட்டங்களை என்னைச் செதுக்கிய அனுபவங்களை பதிவிடுவதெ சரியே என்று தோன்றுகிறது சில நேரங்களில் நினைவுக்கு வராமல் பதிவது விட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு. அதுவே சில நிகழ்வுகள் முன் பின்னாக பாதிவாகக் காரணமாக இருக்கலாம். அனுபவங்களும் நினைவுகளும் அலுவலகம் சார்ந்ததும்  தனிப்ப்ட்ட வாழ்க்கையைச் சார்ந்ததுவுமாக இருக்கிறது மாறி மாறி வரலாம்

 

விஜயவாடா போய்ச் சேர்ந்தபோது பாஸ்கரனும் எங்கள் கூடவே வந்தான் நான் அங்கு பணிக்குச் சென்ற ஆரம்ப அதிகாரி எனக்கு சில அதிகாரங்கள் மறைமுகமாக வழங்கப் பட்டிருந்தது. பாஸ்கரன் டி எம் இ முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தான் விஜயவாடாவில் அப்போது என் மேலதிகாரி  கெ.பி. ராஜ்குமார் என்பவர். என்னிடம் ஒரு சமயம் என் குடும்ப விஷயங்களைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். டி எம் இ படித்த மைத்துனன் வீட்டில் இருக்கிறான் என்று சொன்னபோது அவனை ஏன் நான் வேலைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். அதை நான் செய்தால் தவறாகக் கருதப்படும் என்றேன் அவருக்கு அப்போது பர்லி பவர் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி இருந்தது. எனக்கு பாஸ்கரனை விஜயவாடாவில் பணிக்கு அமர்த்துவதில் ஆட்சேபணை இருந்தால் அவனைத் தன்னுடன் பர்லிக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறி அவனை வரவழைத்து காஷுவல் வேலையாகப் பர்லிக்கு அழைத்துப் போனார். இப்போது அதே பாஸ்கரன் பி எச் இ எல் லில் சீனியர் மானேஜர் வரை பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறான் இன்றும் அவனை என் மகனாகவே கருதுகிறேன் நினைவுகள் எங்கோ ஓடிவிட்டது சரி  மீண்டும் தில்லைநகர்வீட்டுக்குப்போனதிலிருந்து. .பெங்களூரில் பாஸ்கரன் யாருக்கும் அடங்காதவனாக, படிப்பில் நாட்டமில்லாதவனாகஎப்போதும் விளையாட்டாக இருக்கிறான் என்று அறிந்தேன். சாந்தி வேலைக்குச் சென்றிருந்தால் அவள் குடும்பத்துக்கு உதவியாய் இருந்திருக்கும். அது நடக்காமல் போனது என்னால்தான் என்பதால் அதை ஓரளவு ஈடு கட்ட பாஸ்கரனின் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன் என்னுடன் பாஸ்கரன் இருந்தவரைக்கும் மிகவும் நல்ல பையனாகவும் அடக்கமுள்ளவனாகவுமே இருந்தான் அது அவனுக்கு என் மேல் இருந்த மரியாதையால் வந்தது என்று கூறுவார்கள். எது எப்படியானாலும் அவனை எங்களுடன் கூட்டி வந்தது பலன் உடைத்தாய் இருந்தது.

சில நாட்களில் குடியிருப்பில் வீடு கிடைத்தது  சின்னிக் கிருஷ்ணாவும் எங்கள் கூடவே வந்தான் வீட்டில் நாங்கள் அப்போது ஐந்து பேரானோம். இதற்கு நடுவில் சாந்தி மீண்டும் கர்ப்பம் தரித்தாளது ஒரு பெண்குழந்தையாக இருக்க வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன் சாந்திக்கு உதவியாக அவள் தங்கை ராதாவந்திருந்தாள் அவளுடைய இந்த இரண்டாம் பிரசவம் மறக்க முடியாதது.விடியற்காலையிலேயே மூன்று நான்கு மணீக்கே சாந்தி எழுந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். எப்போதும் போல நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. காலை சுமார் ஐந்தரை மணிக்குள் அவள் குளித்து ரெடியாய் இருந்தாள். மருத்துவ மனைக்குச் செல்ல. நான் ஒரு புறமும் நாச்சா ( சின்னிக் கிருஷ்ணாவை அப்படித்தான் அழைப்போம் ) ஒரு புறமும் இருக்க மருத்துவ மனைக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றோம் . அறியாமையின் உச்ச கட்டம் அதுதான் மருத்துவமனயில் சேர்த்த சுமார் ஒரு மணிநேரத்தில் சாந்தி மீண்டுமொரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள் லேபர் வார்டில் அவள் இருந்தபோது நான் ஒரு முறை அவளைப் பார்த்தேன் அந்தக் கஷ்டத்தைப் பார்த்த அந்த நிமிடமே இனியொரு குழந்தை வேண்டாம் என்னும் முடிவுக்கு வந்தேன் இன்றைக்கும் சாந்தி அவளை நாங்கள் அந்த நேரத்திலும் நடத்திச் சென்றதைக் குத்திக்காட்டுவாள். அதுதான் சொல்லி விட்டேனே அது அறியாமையின் உச்ச கட்டமென்று. இப்போது ஒவ்வொருவர் கர்ப்பமாயிருக்கையில் எடுத்துக் கொள்ளும் கவனிப்புகள் எதையுமே சாந்திக்குக் கொடுத்ததில்லை. வேண்டாம் என்றல்ல அறியாமையால்தான்

இரு குழந்தைகள் பிறந்தது பற்றி எழுதி இருக்கிறேனே தவிர அவர்கள் பிறந்த தினத்தைக் குறிப்பிடவே இல்லை போல் தெரிகிறது இருந்தால் என்ன. இப்போது எழுதி விட்டால் போயிற்று. மூத்தவன் பெங்களூரு பௌரிங் ஹாஸ்பிடலில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி பிறந்தான் இரண்டாமவன் திருச்சி பி எச் இ எல் குடியிருப்பு மருத்துவமனையில்  1968-ம் வருடம் மே மாதம் ஏழாம் தேதி பிறந்தான் மூத்தவனுக்கு மஹாதேவன் மனோஹர் என்றும் இரண்டாமவனுக்கு பிரசாத் என்றும் பெயரிட்டோம் என் நண்பன் மனோஹர் பாபுல்கர் என்பவனது பன்முகத் திறமைகள் எனக்குப் பிடிக்கும் அதுபோல் என் மகனும் இருக்க அவன் பெயர் மனோஹர் என்றாயிற்று. சின்னவனுக்கு என் நண்பன் நாச்சா என்றழைக்கப்படும் சின்னிகிருஷ்ணா பிரசாத் என்னும் பெயர் சூட்டினான் நாச்சா ஏறக்குறைய பிரசாதின் காட் ஃபாதர். என் மக்கள் பிறந்ததில் இருந்தே நான் சிறிது பொசெசிவ் ஆக இருந்திருக்கிறேன் . என் மக்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வளர வேண்டும் என்று விரும்பினேன். இப்போது நினைத்துப்பார்க்கும்போது அது பொய்க்கவில்லை என்றே தோன்றுகிறது பிரசாத் பிறந்த சில நாட்களில் குழந்தையைப் பார்க்க அம்மா வந்திருந்தாள். கூடவே சந்துருவை என்னுடன் தங்கிப் படிக்க வைக்க விரும்பினார்கள் எனக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை. அப்போதெல்லாம் நான் நினைத்ததைச் செய்து விடுவேன் அதனால் பிறருக்கு ஏற்படும் கஷ்டங்களை நான் எண்ணிப்பார்த்ததில்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்த எண்ணி எந்த முடிவும் எடுத்ததில்லை. ஆனால் என் முடிவுகள் சாந்திக்கு எத்தனைக் கஷ்டங்கள் கொடுத்திருக்கிறது என்று இப்போது தெரிகிறது. இருந்தாலும் என் முடிவுகள் பற்றி நோ ரிக்ரெட்ஸ்,!எல்லாம் நன்மைக்கு என்று இருக்கும் போது தவறுகளும் நேர்ந்து விடுகிறதுஅம்மாவின் நோக்கம் பற்றி இப்போது சந்தேகம் எழுகிறது. மனைவியின் தம்பியைப் படிக்கவைக்கும் போது தன் தம்பியைப் படிக்க வைக்க தடை ஏதும் இருக்கக் கூடாது என்று எண்ணி இருக்கவேண்டும் தடை ஏதும் இருக்கவும் இல்லை. ஆனால் பாஸ்கரன் முழுக்க முழுக்க என் பொறுப்பில் கண்ட்ரோலில் இருந்தான். ஆனால் சந்துரு அப்படி இருக்கவில்லை. அவனை பெங்களூரில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் செய்த்து வந்தார்கள். அவனுக்கு அதனால் என்னுடன் இருக்கும் போது இருக்க வேண்டிய பொறுப்பு இருக்கவில்லை. ஊரிலிருந்து பள்ளி முகவரிக்கு அவனுக்குக் கடிதம் அனுப்புவார்கள் பணமும் அனுப்பி இருக்கிறார்கள். அவனுக்கு ஒரு பயமோ மரியாதையோ எப்படி வரும்.?அவனுக்குக் காது கேட்கும் திறன் குறைவு. பள்ளிப்பாடங்கள் சொல்வது கேட்காததால் புரியாது. அவனை இ என் டி ஸ்பெஷலிஸ்டிடம் கூட்டிப்போனேன்  அவர் இவனைச் சோதனை செய்யும்போது ஒருகாதில் சப்தம் எழுப்பிக் கேட்கிறதா என்றால் மறுகாதில் கேட்பதாகக் கூறுவான் அவர் பலமுறை சோதித்து அவனை ஒரு சைக்ரியாடிஸ்டிடம் கூட்டிப் போகச் சொன்னார். பிற்காலத்திலவனது சில நடவடிக்கைகள் அன்று டாக்டர் சொன்னது சரியோ என்று எண்ண வைத்தது. பள்ளிக்குப் போக  பி எச் இ எல்  பஸ்பாஸ் வாங்கிக் கொடுத்திருந்தேன் இவன் அதைக் கிழித்து வைத்து கொண்டு பாஸ் செக் செய்ய வருபவர்களிடம் காண்பிப்பான். அவனை குறித்துப் புகார்கள்வரத் தொடங்கின. ஒரு முறை செக்யூருடி அதிகாரியிடம் மணி கேட்டு அவரது கடிகாரம் ஓட்டை என்று கேலி செய்திருக்கிறான் அவர் என் வீடு தேடி வந்து புகார் செய்தார். அன்று நான் அவனை அடித்தேன் நிறைய நேரம் படிப்பான் ஆனால் எதுவும் நினைவில் நிற்காது. எப்படியோ பத்தாம் வகுப்பு வரை படித்தான் ஃபெயில். அவன் படித்து பாசாகததற்கு நாங்கள்தான் காரணம் என்று அம்மா நினைத்தார்கள் பாஸ்கரன் எல்லா வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்று டிப்லொமாவும் பாசானான் சந்துரு அவன் அம்மாவின் இண்டெர்ஃபியரென்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாகச் செய்திருப்பான் என்றே எண்ணுகிறேன் அம்மாவின் நான்கு புதல்வர்களில் சந்துருவே மிகவும் பின் தங்கியவன் அல்லது அவன் விஷயத்தில் நான் தோற்றுவிட்டேன்

 இதன் நடுவில் அம்மாவின் மூத்த இரு பிள்ளைகளில் நடராஜனும் பாபுவும் ஒரே நேரத்தில்பள்ளியிறுதிப் படிப்பு முடித்திருந்தார்கள் நடராஜன் சுமாரான் மதிப்பெண்களும் பாபு அவனைவிட நல்ல மதிப்பெண்களும் எடுத்திருந்தனர் என் சக்திக்கு இருவரையும் கல்லூரியில் படிக்க வைக்க முடியாது என்றேன் நடராஜன் வேலைக்குப் போவதாகக் கூறினான் அப்போது எச் ஏ எல்  லில் பள்ளியிறுதி படித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமொன்று வந்தது அதன் படி மூன்றாண்டுகள் பயிற்சி பிறகு வேலை கிடைக்கும் என்று உறுதி இருக்கவில்லை. அவன் பயிற்சியில் சேர்ந்தால் ஒரு தொழிலாவது கற்றுக் கொண்டது போலாகும் என்று கருதி பயிற்சி மேலாளரை அணுகி அவனைத் தேர்வு செய்ய வேண்டினேன் ரெகமெண்டேஷன் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னாலும் அவனைப் பயிற்சிக்குத் தேர்வு செய்ர்தார். அவன் மூன்றாண்டு பயிற்சிக்குப்போனான் பாபுவாவது கல்லூரிப்படிப்புக்குப் போக அவனும் விரும்பினான் நானும் விரும்பினேன் முதலில் புனித் ஜோசப் காலேஜில் சேர்ந்தான் அதன் பிறகு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு கவர்ன்மெண்ட் பாலிடெக்னிக்கில் மூன்றாண்டு டிப்லொமாவில் சேர்ந்தான் இடைப்பட்ட காலத்தில் என் சொந்த வாழ்வைக் கருதியும் குடும்பநலன் கருதியும் நான் சென்னை லூகாசில் சேர்ந்தேன் பதிவிடும்போது நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கோர்வையாக எழுதமுடியவில்லை(.சற்று இடைவெளிக்கு பின் தொடர்வேன்)                .    .                       .              . .