Saturday, May 30, 2015

விஷ்ணு சஹஸ்ரநாமம் .


                                      விஸ்ணு சஹஸ்ரநாமம்
                                       ---------------------------------
 இந்த மாதம் பதினேழாம் தேதி  ஞாயிற்றுக் கிழமை என் மனைவியுடன் வயாலிக்காவல் வெங்கடேச பெருமாள் கோவில்கல்யாண மண்டபத்தில்  விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலிகள் ஒருங்கிணைத்து நடத்திய நக்ஷத்திர பாராயணத்துக்கு சென்றிருந்தேன். அதாவது நக்ஷத்திரத்துக்கு ஒரு முறை வீதம் 27 நக்ஷத்திரங்களுக்கும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது பெங்களூருவில் 250-க்கும் மேற்பட்ட மண்டலிகள் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இம்மாதிரி அகில இந்தியாவிலும் ஆயிரக் கணக்கான மண்டலிகள் இருப்பதாகவும் இதையே ஒரு க்ளோபல் இயக்கமாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறினார்கள். ஒரு முறை பாராயணம் செய்ய சுமார் இருபது நிமிடங்கள் என்று கணக்கிட்டாலேயே 27 முறை பாராயணம் செய்ய  ஒன்பது மணிநேரத்துக்கும் மேல் ஆகிறது. காலை எட்டுமணி சுமாருக்குத் துவங்கிய பாராயணம் மாலை ஐந்து மணிவரைத் தொடரலாம். அன்று நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்வருபவர்கள் வீட்டில் இருப்போரின் நக்ஷத்திரங்களுக்குப் பாராயணம் முடியும் வரை இருக்கின்றனர். வந்த அனைவருக்கும் காலை டிஃபன்  மதிய உணவு எல்லாம் இலவசமாகக் கொடுக்கப் பட்டது
எந்த நேரத்திலும் அகில உலகில் 24 மணிநேரமும் எங்காவது இந்தப் பாராயணம் நடக்குமாறு செய்ய வேண்டும் என்பதே குறி என்றனர்
இனி விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய சில செய்திகள் தமிழ் விக்கிப் பீடியாவிலிருந்து
இது சத்வகுணம் நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரைஅம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.
யுதிஷ்திரர் பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்கிறார்
  1. இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது?
  2. அதை அடைவதற்குரிய மேலான நிலை எது?
  3. எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்?
  4. எந்த தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்?
  5. எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது?
  6. எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்?
இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.
திருமதி M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடியுள்ள விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் புகழ் பெற்றது
பகவத் கீதையைத் தமிழில் படிக்க வாய்ப்பு இல்லாததால்கீதையைப் பற்றிக் கேட்டிருந்தும் அதை முழுவதும் வாசித்திராதவர்களுக்காக கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழில் பதிவிட்டேன். அதே போல் விஷ்ணு சஹஸ்ரநாமம் பரவலாகப் பாராயணம் செய்யப் பட்டாலும் அது சம்ஸ்கிருதத்தில் இருப்பதால் பலருக்கும் பொருள் தெரிவதில்லை. தமிழில் இருக்கும் பல இறைவணக்கங்களுக்குமே பொருள் தெரிவதில்லை என்று சொல்லத் தயங்குகிறோம் பின் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் இந்த துதிக்கு பொருள் தெரியாமலேயே பாராயணம் செய்யப் படுகிறது என்று நான் சொன்னால் பலர் நம்பலாம். சிலர் மறுக்கலாம் அன்று நான் அங்கு சென்று கேட்டபோது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. மேலும் தமிழ்மட்டுமே படித்தவர்களுக்கு அந்த சம்ஸ்கிருத உச்சரிப்பு வருவது மிகவும் சிரமம் எனக்கு நான் தை ஏன் தமிழ் அர்த்தங்களை எழுதக் கூடாது என்று தோன்றியது. எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் அங்கும் இங்கும் தேடி பொருள் கண்டு எழுதலாம்தான் இருந்தாலும் தயக்கமாக இருக்கிறது. அது ஒரு பெரிய ப்ராஜெக்டாக இருக்கும். எனக்கு வேறு எதுவும் செய்ய முடியாது.தயக்கத்துக்கு இன்னோர் காரணம் கீதைக்கு கிடைத்த வரவேற்பும் இதற்குக் கிடைக்காது என்று உள்ளுணர்வு சொல்கிறது. சம்ஸ்கிருத மொழி கற்காததால் அந்த மொழியில் இருக்கும் பல விஷயங்கள் தமிழ் மூலமே கற்க வேண்டி உள்ளது முடிவெடுக்க முடியாமல் தயக்கத்தோடு இருக்கிறேன் . பார்ப்போம்.

முயற்சி செய்து பார்த்தேன் யுதிஷ்திரரின் கேள்விகளும் பீஷ்மப் பிதாமகரின் பதில்களுமாக எழுதிப் பார்த்தேன் எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய புரிதல் ஏதுமில்லாததாலும் அங்கு இங்கு என்று ப்ல இடங்களில் இருந்து தேடி எடுத்து பதிவாக்கினேன் . குறைகள் இருந்தால் அதன் முழுப் பொறுப்பும் எனதே. இருந்தாலும் இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது முழு ஈடுபாடும் வருவதில்லை.பெரும்பாலானவர் பாராயணம் செய்தால் போதும் பொருள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவோரே.இந்த ஸ்தோத்திரமே அவனது ஆயிரம் நாமங்கள் கொண்டது. நாமஜபம் செய்வதற்கு மொழி ஒரு தடைக்கல்லே அல்ல என்னும் அபிப்பிராயம் உடையவர்களே   

Q.-1 Kim ekam daivatam loke?
கிம் ஏகம் தைவதம் லோகே
உலகிலேயே  ஒரே சிறந்தகடவுள் எனப்படுபவர் யார்
Ans.-Pavitraanaam pavitram yo Mangalaanaam cha mangalam
Daivatam devataanam cha Bhootaanam yo avyayah pitaa.
சாந்நித்தியத்தையே சாந்நித்தியம் செய்பவர் மங்களமே உருவானவர்.என்றும் நிலைத்திருக்கும் அனைத்துக்கும் பிதா தந்தை ஒரேகடவுள் விஷ்ணு.
Q.2.- Kim vaapyekam paraayanam?
கிம் வாப்யேகம் பாராயணம்
அனைவருக்கும் போக்கிடம் கதி யார்
Paramam yo mahat-tejah Paramam yo mahat-tapah
Paramam yo mahat-brahma Paramam yah paraayanam
.
மிகுந்த தேஜஸ் உடையவன் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவன் உண்மையின் ஒளிவீசும் பிரஹ்மம், அடைய வேண்டிய ஒரே இலக்கு-விஷ்ணு.
Q.3- .  Stuvantam kam praapnuyuh (Maanavah subham)?
ஸ்துவந்தம் கம் ப்ராப்னியுஹ்( மானவ சுபம்
யார் புகழ் பாடினால் மானிடர் நலம் பெறுவார்கள்
Ans.
Jagat-prabhum deva-devam Anantam purushottamam
Stuvan naama-sahasrena Purushah satatotthitah.
ல்லோரது நலனுக்கும் எல்லாம் செய்யும் இந்த பிரபஞ்சத்தின் தலைவன் ஸ்ரீமஹா விஷ்ணு
Q.4 -Kam archantah) praapnuyuh  Maanavaah subham?
கமர் சந்த ப்ராப்னியூ மானவ சுபம்
எந்த தெய்வத்தை அகத்திலோ புறத்திலோ வைத்து வழிபட்டால் அமைதியும் நலனும் பயக்கும்
   Tameva cha archayan nityam Bhaktyaa purusham avyayam
Stuvan naama-sahasrena Purushah satatthitah.
தியானத்தாலும் அர்ச்சனையாலும் அதே புருஷ்னை வணங்குதலால் மனிதன் நலம் பெறுவான்
Q.5 , Ko dharmah sarva-dharmaanaam Bhavatah paramo matah?
கோதர்மசர்வ தர்மானாம் பவத பரமோ மதா
உங்கள் கருத்துப்படி சிறந்த தர்மம் அல்லது நெறி யாது
Q.6 Kim japan muchyate jantuh Janma-samsaara-bandhaaat?
கிம்ஜபன்முச்யதேஜந்துர் ஜன்ம சம்ஸாரபந்தனாத்
எதை தியானித்து உயிரிகள் சம்ஸாரத் தளையிலிருந்து விடுதலை அடையலாம்
Ans..5&6Anaadi-nidhanam vishnum Sarvaloka-maheshvaram
Lokaadhyaksham stuvan nityam Sarva-duhkha-atigo bhavet.
ஆதி அந்தம் இல்லாத விஷ்ணுவின் நாமத்தைப் பஜிப்பதாலும் நினைப்பதாலும் எல்லாத் தளைகளில் இருந்தும் விடுபடுவதே சிறந்த நெறியாகும்

விஷ்ணு  சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
--------------------------------------
“விஸ்வம் விஷ்ணு வஷட்கார பூதபவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:

அண்டமெலாம் வியாபித்து இருப்பவர் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அனைத்தையும் தான் நினைத்தப்டி நடத்தி தன் வசம் வைத்திருப்பவர்,முக்காலங்களிலும் இருப்போர்க்கெல்லாம் தலைவர்,தன் நினைவாலேயே அனைத்தையும் படைப்பவர், படைத்த அனைத்தையும் தாங்குபவர், பிரபஞ்சமே தன்னைச் சார்ந்திருப்பதாகக் கொண்டவரனைத்துக்கும் ஆதமாவாக இருப்பவர்,அனைத்துக்கும் அவரே உடல், அனைத்தையும் பேணி வளர்ப்பவர், தலைவர்.

( இது போல 108 இரண்டடி சுலோகங்கள்...... உனக்கு இது தேவையா என்னும் கேள்வி எழுகிறது)

.


 


  

Tuesday, May 26, 2015

துணுக்குத் தோரணம்


                    துணுக்குத் தோரணம்
                   ---------------------------------
 இந்த முறை விலாவாரியாக எந்த தலைப்பு பற்றியும் எழுதப் போவஇல்லை. ஆகவே இந்த துணுக்குத் தோரணம்


சில செய்திகள் பகிர்ந்துகொள்ளச் சொல்கின்றன. எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்திருக்குமா தெரியவில்லை. அண்மையில் ஒரு விளம்பரமே செய்தியாக இருந்ததுஒரு தாயின் மணமகன் தேடும் விளம்பரம் இதில் செய்தியாவதற்கு என்ன இருக்கிறது? அந்தத் தாய் தன் மகனுக்கு மணமகன் கேட்டு விளம்பரம் செய்திருந்தார். ஓரினச் சேர்க்கை என்று தெரிந்தாலும் மகன் பக்கம் எத்தனை தாய்மார்கள் இருப்பார்கள். ? ஒரு பக்கம் சட்டரீதியாக இதெல்லாம் அனுமதிக்கப் படவேண்டுமென்று கூப்பாடு. வாழ்க்கையில் வால்யூஸ் என்று பேசுவதெல்லாம் புரளி. தனிமனித சுதந்திரம் என்போர் நிறையப் பெருகி வருகிறார்கள்
                    =============================================
ஒரு 65 மூதாட்டி( அப்படிச் சொல்லலாமா) ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் அவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் இருக்கிறதாம் அவர் ஏழு குழந்தைகளுக்குப் பாட்டியுமாம்  இதில் விசேஷம் என்னவென்றால் 65-வது வயதில் செயற்கை முறையில் கரு  தரித்துக் கொண்டாராம் ஒன்னுமே புரியலே இந்த உலகத்திலே என்ன செய்வது.? ஆண்டவன் சித்தம் அது என்றால் தடுக்க முடியுமா.?
                     -----------------------------------
எங்கள் ஊரில் திருவிழா இருந்தது. இங்கிருக்கும் மக்கள் ஊரப்பா என்கிறார்கள் abbaa என்றால் கன்னடத்தில் திருவிழா என்று பொருள். எனக்கு கிராமங்களில் திருவிழா பார்த்த அனுபவம் இல்லை. அருகில் இருக்கும் மகேஸ்வரம்மா கோவிலில் திருவிழா. திரு விழாவுக்கு மக்கள் கூடும் இடம் ஒரு பெரிய மரத்தடி. கோவில் வேறிடத்தில் சில நாட்களாகவே திடீரென்று மேளச் சத்தமும் பட்டாசு வெடிச்சத்தமும் நேரம் காலம் இல்லாமல் கேட்கும். வெளியே வந்து பார்த்தால்தலைகளில் குடங்களுடன் பெண்கள் செல்ல வாத்தியமும் வெடியும் கூடவே. இதை ஒட்டி வெளியூரிலிருந்தும் மக்கள் வருவதாகவும் படையல் எல்லாம் பிரமாதமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்நான் சென்று பார்க்கவில்லை. ஆனால் எந்த திருவிழாவானாலும் பண்டிகை ஆனாலும் எங்கள் வீட்டின் முன்பாக ஊர்வலம் இருக்கும் இரு சிறு காணொளிகளைப் பகிர்கிறேன் என் கைபேசியில் எடுத்தது

                    ---------------------------------------------
ஒவ்வோர் ஆண்டும் மேமாதத்தில் பூக்கும் FOOT BALL LILLY  எனப் படும் பூ பற்றிப் பகிர்ந்திருக்கிறேன் இந்த ஆண்டு திடீரென ஏப்ரல் மாத இறுதியிலேயே ஒரு பூ தலைகாட்டியது. கூடவே பக்கத்தில் அதற்கான செடிகள் பலவும் தலை தூக்கின. சென்ற ஆண்டு டாக்டர் கந்தசாமி என் வீட்டுக்கு விஜயம் செய்தபோது மூன்று நான்கு பூக்கள் தலை சாய்த்து வரவேற்பு அளித்தன. இந்த ஆண்டும் வலை நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வருவதாக எழுதி இருந்தார் ஆவலோடு காத்திருந்து ஏமாந்தேன். எங்கள்வீட்டு வாசமில்லா பூக்களும் அவற்றின் வரவேற்பை ஏற்க நண்பர் வராததால் ஏமாற்றமடைந்திருக்கும் பூக்களின் ஓரிரண்டு படங்களைக் காணலாம் பூ என்று சொல்லும் போது எங்கள் வீட்டில் பூத்த பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்திப் பூவைப் பற்றியும் சொல்லவேண்டும் இதுவும் எங்கள் வீட்டில் எதிர்பாராதருணத்தில் பூத்திருந்தது. விடியற்காலையில் மட்டுமே மலரும் இப்பூவின் மலர்ச்சியைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அதனால் மலர்ந்த பூவின் படமும் இல்லை.

ஏப்ரலில் திடீரெனப் பூத்த பூ
 
அடுத்து மலர்ந்த பூ மொக்காக
 
மொக்கு விரிகிறது
 
விரிந்த பூ
 
பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி
                                    --------------------------------------------------------
எனக்கு இந்த வலைப்பூ தளத்தை நிறுவிக் கொடுத்தவன் என் பேரன். பாட்டெழுதுவது பெரிய பாடா பாட்டா என்று கேட்டு என்னை சிந்திக்கச் செய்தவன் தானே ஒரு வலைத்தளம் அமைத்து ஆங்கிலத்தில் எழுதுகிறானென்னப் பைக்கும் வாசகர்கள் அவனதுவலைத் தளத்துக்கும் போய் கருத்திட வேண்டி அழைக்கிறேன் He seems to be a budding writer.அவனது வலைத்தளம் காண இங்கே சொடுக்குங்கள் நன்றி.
                      -------------------------------
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலுக்குச் சில ஆண்டுகளுக்குமுன்  சென்றிருந்தோம். பேரூந்தில் செல்ல வழி கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. யாரோ ஒருவர்முதலில் பேரளம் சென்று அங்கு கேட்டால் தகவல் கிடைக்கும் என்று சொல்ல நாங்கள் போய் வந்தது ஒரு அனுபவம் அந்தக் கோவில் பற்றி இன்று ஜயா டிவியில் காட்ட, என் மனைவி டிவியிலிருந்தே படம் எடுத்து ஒரு காணொளியும் எடுத்தாள். அந்தப் பயணத்தின் நினைவுகளூடே படமும் வீடியோவும் கீழே.
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை டிவியில் இருந்து

 

Saturday, May 23, 2015

இதோ ஒரு சிறுகதை......


                       இதோ ஒரு சிறுகதை
                       -------------------------------



(இதோ ஒரு சிறுகதை. சில நாட்களுக்கு/ மாதங்களுக்கு முன் ஒரு ஈழப்பெண் தான் எப்படி விபச்சாரத்தில் ஈடுபட நேர்ந்தது என்று கூறி இருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதே நேரத்தில் தலை நகரில் ஒரு பெண் சீரழிக்கப்பட நாடே கொந்தளித்து சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டது. இந்த மாதிரி நிகழ்வுகள் மனதில் ஆயிரம் எண்ணங்களைத் தோற்று விக்கிறது. நான் ஒரு எழுத்தாளன் அல்லவா.கற்பனைக் கதையாகப் புனைந்து விட்டேன் படித்து பாருங்களேன். சிலருக்கு இது ஏற்கனவே படித்தது போல் இருக்கலாம்  இருந்தால் என்ன.?எண்ணங்களைப் பதிக்கத் தடை ஏதுமில்லையே..)
 
இவளுக்கு பெயர் சூட்ட விரும்பவில்லை. பெயர் தெரியாமலேயே அபலையாக, ஆனால் எல்லோராலும் பேசப்படுபவர்களில் இவளும் ஒருத்தி.. இவள் இவளாகவே அறியப் படட்டும்.இவளுக்குப் பெயர்தான் கொடுக்கவில்லையே தவிர இவ்ளைப் பற்றி பலரும் பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்த விஷயங்கள் எல்லாம் இவளுக்கு மட்டும்தான் உண்மையாய்த் தெரியும். பாதிக்கப் பட்டவள் ஆயிற்றே. காலம் கடந்தபின் ஏதேதோ நிகழ்வுகளுக்குப்பின் இவளும் முக்கிய செய்தி ஆகிவிட்டாள். இவள் தைரியசாலி என்றோ வீராங்கனை என்றோ அழைக்கப் படுவதில்லை.. அப்படி அழைக்கப் படுவதை இவள் விரும்புவதுமில்லை.இவளை உபயோகித்தவர்கள் இவள் உயிரை எடுக்க வில்லையே. அப்படி நேர்ந்திருந்தால் இவளும் வீராங்கனையாகக் கருதப் படுவாளோ.? இப்போது அதுவா பிரச்சனை. ஆண்டுகள் பல கழிந்துவிட்டது. இவளையும் இவளுக்கு நேர்ந்ததையும் நாடே அசைபோடுகிறது. இதெல்லாவற்றுக்கும் ஆரம்பம்தான் என்ன.?நினைவுகள் சுழல்கிறது. 
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
 உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
 
என்று பாடவைத்தவன். பேசியே மயக்கியவன். இவளும் பெண்தானே. அம்சமாய் இருந்தாள். பருவம் பலரையும் சுண்டி இழுத்தது. ஆனால் இவள் விழுந்தது அவன் மிடுக்கில், தோரணையில்,நடையில் பேச்சில். சுருங்கச் சொன்னால் எப்போதும் அவனை நெஞ்சுக் கூட்டுக்குள் பொத்திப் பாதுகாத்து.வந்தாள். சராசரிக்கும் கீழான வாழ்க்கை நிலை. கனவு காணும் பருவம். அவனுக்கோ இவள் மேல் காதலிருந்தாலும், வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையும் இருந்தது. கண்ணும் கண்ணும் கலந்தாயிற்று. காதலின் முதல் படி அது.  கையும் கையும் சேர வேண்டும். வேகம் பிறக்க வேண்டும். உடலில் வெப்பம் ஏறவேண்டும். அவளை அடைய வேண்டும். பிறகு யோசிக்கலாம் என்ன செய்வதென்று. மனம் கணக்குப் போட திட்டங்கள் உருவாக்க வேண்டும். அவனுக்கு எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும், திட்டமிட்டதைச் செய்யவேண்டும்.. இலக்கு நல்லதாக இருந்தால் நல்ல விஷயம்தான். 

அவனைப் பொறுத்தவரை முதலில் இவளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். இவள் அவனுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றால் அவனுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும் செய்து விட்டால் போயிற்று. என்று கணக்குப் போட்டவன் சாதாரணமாகப் பெண்கள் விழும் குழியைப் பறிக்கத் திட்டமிட்டான். முகஸ்துதிக்கு மயங்காதவரே இல்லாதபோது, காதலனின் புகழ்ச்சி பேச்சில் பருவப் பெண் விழுந்துவிட்டாள்.
“ உனக்கு உன் கழுத்தே அழகு சேர்க்கிறது. நீளமான கழுத்துள்ள பெண்கள் அழகானவர்கள்.
 முதல் அத்திரம். பாய்ந்தது. பொதுவாக தரை நோக்கி நடப்பவள் தலை நிமிர்ந்து ( கழுத்து தெரியும்படி) நடக்க ஆரம்பித்தாள்.
பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது கூந்தல்தான்.. உனக்கென்ன..கூந்தல் இருக்கும் மகராசி. பின்னி விட்டால் என்ன... அள்ளி முடிந்தால் என்ன.எல்லாமே அழகுதான்..
“ உன் தலைக்குப் பூ வைக்காதே. பூவில் வண்டுகள் மொய்க்கும்போது உன் கண்கள் எங்கே என்று தேடவைக்கிறது.
உனக்கு இருப்பது கண்ணா ?உன் முகத்தில் வண்டுகள் ஆடுகிறதே என்றல்லவா நினைத்தேன்.
வித்தை தெரிந்தவன் ஆட்டிப் படைக்க விழுந்துவிட்டாள் பேதைப் பெண். ஓரிரண்டு நாட்கள் இவளைக்காண வராமல் இருந்தான். மனம் சஞ்சலப்பட இவளுக்கு “ வேரூன்றி  வளருமென்று விதை விதைத்தேன் இரு விழியாலெ பார்த்திருந்து நீருமிறைத்தேன், பூ முடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் அங்கு புயல் வீசிக் காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன். என்ற பாடல் பின்னணியில் இசைக்கத் தொடங்கியது.
கண்ணும் கண்ணும் பேசியது காதலிசைப் பாடல் வரை வந்துவிட்டது. பெண்மனத்தில் தீபமும் ஏற்றியாகிவிட்டது. இனி என்ன.? கையும் கையும் இணைந்து உதடுகள் உராய்ந்து தீப் பிடிக்க வேண்டும். சமயமும் சந்தர்ப்பமும் சரியாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் அமைக்க வேண்டும்.

ஒரு நாள் மாலை. அந்திசாயும் நேரம் வண்டாடும் விழியாலே வலைவீசி வழிநோக்கிக் காத்திருந்தாள். அவன் வருகை கண்டு இவள் எழ , தோளிலிருந்து  துகில் சரிந்து விழ. பின்னிருந்த கூந்தல் முன்னால் சரிந்து, விண்ணென்று புடைத்திருந்த சாயாத இரு கொம்புகளைக் காண விடாமல் தடுத்தது. வந்தவன் வார்த்தைகளால் விளையாடி அவளை சரித்துவிட்டான். ஏந்திழையும் தன்னை ஆட்க்கொள்ளப் போகிறவன் தானே என்று வளைந்து கொடுத்தாள். சந்தர்ப்பம் சரியாய் அமைய இவள் அவன் கைகளில். பிறகென்ன. ? உடல் சூடேற இருவரும் முனைந்து வெப்பத்தை அடக்கினர்.

அன்று நடந்ததை இவள் தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா.? ஆனால் அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லையே. அன்று நடந்தது இன்று நினைத்தாலும் இன்பம் தருகிறதே.விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ இணைந்தாயிற்று. இணைகையில் இன்பம் துய்த்ததும் உண்மை. காலம் கடந்து குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுவதால் என்ன லாபம்.. இருந்தாலும் இப்படி ஏமாற்றப் படுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“ எனக்கு நீ உனக்கு நான் என்று முடிவாகிவிட்டது.ஆனால் இந்தப் பாழும் உலகம் திருமணம் இல்லாமல் இருப்பதை ஏற்காதே. நாம் யாரும் காணாத இடத்துக்குப் போய்விடுவோம். ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் ஊரார்முன் வந்து ஊர் அறிய மணமுடித்துக் கொள்வோம்என்றான் அவன்.

 “ மணம் முடித்துக் கொண்ட பிறகு போவோமேஎன்றாள் இவள்.

“ மணம் என்பது ஒரு சடங்கு. உனக்கு என்னைவிட சடங்கில் நம்பிக்கையா.? திருமணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் உன்னை விட்டுப் பிரியமாட்டேன்என்று ஏதேதோ கூறி இவளை சம்மதிக்க வைத்து ஊரை விட்டுக் கூட்டிப்போனான். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து விட்டது. இருக்க இடம் உண்ண உணவு மிகவும் அத்தியாவசியத் தேவை அல்லவா. நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உடலோடு உறவாடி அவனுக்கு இவள் என்று நிரூபித்துக் கொண்டிருந்தாள்.இருக்க இடத்துக்கு வாடகை கொடுக்க இயலாத போது நண்பன் ஒருவனிடத்தில் அடைக்கலம் புகுந்தான். வேலை தேடி ஒருநாள் வெளியே போனவன் அன்றிரவு வரவில்லை. நண்பனின் வீட்டில் அவனுடன் தனியே. இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பன் மிகவும் பதவிசாக நடந்து கொண்டான்.மறுநாளும் இவளது காதலன் வரவில்லை. இரண்டாம் நாளும் நண்பன் நல்லவனாகவே இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்களுமே நல்லவர்கள்தான்.ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகிக்காமல் இருக்க நண்பன் ஒன்றும் சாமியாரில்லையே. இந்தக் காலத்தில் சாமியார்களையே நம்ப முடியவில்லையே. வயிற்றுப் பசியைத் தணிக்கும் நண்பனுக்குக் கடன் பட்டதுபோல் உணர்ந்தாள். காதலன் இன்று வருவான் நாளை வருவான் எனும் நம்பிக்கையில் நாட்கள் நகர. இவளுக்கு இவளது கடன்சுமை அதிகரிப்பதுபோல் தெரிந்தது. நெருப்பும் பஞ்சும் அருகருகே. கடனை அடைக்க தன்னையே நண்பனுக்குக் கொடுத்தாள். கரும்பு தின்னக் கூலியா. முதலில்

தான் தவறு செய்கிறோமோ என்று எண்ணியவள். தவற்றிலும் சுகம் இருப்பது உணர்ந்து தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். நாட்கள் வாரங்களாகியும் காதலன் வராததால் இவளும் இந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.நண்பனின் குடும்பம் அவனிருக்குமிடத்துக்கு வரும் என்று தெரிந்ததும் நண்பன் இவளை இன்னோர் இடத்தில் குடியிருத்தினான். இவளுக்கும் வேறு போக்கிடம் தெரியவில்லை. ஊருக்குப் போனால் குடும்பத்தாரிடம் என்ன பதில் சொல்வது என்று யோசித்தும் , காதலன் வரும்வரை எப்படியாவது தன் காலிலே நிற்பதே சரி என்றும் தனக்குத்தானே வாதிட்டுக் கொண்டாள். மனசாட்சி என்பது அவ்வ்ப்போது குரல் கொடுத்து தான் இருக்கிறேன் என்று உணர்த்தும். மனசாட்சி என்பதே இஷ்டப்படி வளைந்து கொடுக்கக் கூடியதுதானே. செய்வது சரி என்று நிரூபிக்க ஆயிரம் காரணங்கள் கூறிக் கொள்ளலாம். பிறகு மனசாட்சியைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.


நண்பனுக்கு தன் குடும்பத்தையும் இவளையும் சேர்த்துப் பராமரிக்க முடியாமல் இவளை இன்னும் பலருக்கு அறிமுகப் படுத்தினான். ஒரு முறை சோரம் போனவளுக்கு மறுபடியும்  மறுபடியும் பிறருக்கு இன்பம் அளிப்பது தவறாகப் படவில்லை. பின் என்ன. ? நாளொரு கணவன் பொழுதொரு காதலன் என்று இவள் வாழ்க்கை இவள் அறியாமலேயே ஓடத்துவங்கியது. உடலின்பம் என்பது கொடுப்பது மட்டுமல்ல. பெறுவதிலும் இருக்கிறது என்பதை இவள் உணரத் துவங்கினாள். வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தினர். அவரவர்கள் காரியத்துக்கு ஈடு செய்ய இவள் பணயம் வைக்கப் பட்டாள். இள வயதினர், நடுவயதினர் முதியவர்கள் என்றும் , அதிகாரிகள். காவல்துறையினர், அரசியல்வாதிகள் என்றும் பலரும் இவளிடம் இன்பம் தூய்த்தனர். இவளது வாழ்க்கையும் ஒரு திசையில் போக ஆரம்பிக்க. பின் எப்போது பிரச்சனை துவங்கியது.?

ஆம். இவளால் இன்பம் அனுபவிக்க முடிந்தவர்களால் தொந்தரவு இருக்கவில்லை. ஆனால் இன்பம் அனுபவிக்க இயலாதவர்கள் வக்கிர செயல்களில் இறங்கியபோதுதான். இவளுக்கு இதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது. வேதனைதான் மிஞ்சியது. பலருடன் இவளும் சேர்ந்து இன்பம் அனுபவித்தவள்தான். ஆனால் வக்கிர செயல்கள் அத்து மீறியபோது அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அங்கிருந்து ஓடுவதுதான். எங்கு போவது.?அப்போதுதான் இவளுக்கு தன் குடும்பத்தார்பற்றிய நினைப்பு வந்தது. அவர்கள் கேள்வி கேட்பார்களே. தான் வஞ்சிக்கப்பட்டதையும் தன்னை பலரும் உபயோகித்துத் தூக்கி எறிந்ததாகவும் கூறலாம்.பெண் என்றால் பேயும் இரங்கும்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் என்று பலரும் அடையாளம் காட்டப் பட்டனர். வழக்கு தள்ளுபடியாகலாம். குற்றவாளிகள் என்று கருதப் படுபவர்கள் தண்டிக்கப் படலாம். இவளுக்கு ஆதரவு வெகுவாகக் கிடைக்கலாம். உயிருடன் தப்பி வந்து விட்டதால் வீராங்கனை என்ற பட்டம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்னொரு வீராங்கனையின் தயவால் இவளுக்கு அபலை , ஆணாதிக்க வர்க்கத்தால் சீரழிக்கப் பட்டவள் என்ற அனுதாபம் கிடைக்கலாம். ஆனால் உண்மை இவளுக்கு மட்டுமே தெரியும்.

 

 

 

 





Thursday, May 21, 2015

காது வாங்கப் போனேன் ......


                                 காது வாங்கப் போனேன்.....( அனுபவங்கள்)
                                  ---------------------------------------------------------------



உபாதைகள் பலவிதம் என்று எழுதி இருந்தேன். புலன்கள் பற்றியும் எழுதி இருந்தேன் புலன்கள் அதற்குள்ள பணிகளைச் சரியே செய்யவில்லை என்றால் அதை உபாதை என்று கூற முடியுமா தெரியவில்லை. எல்லாப் புலன்களும் ஒழுங்காக வேலை செய்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் பார்வை சரியாக இல்லாமல் அதைச் சரிசெய்யக் கண்ணாடி போடும் சாத்தியம் வந்து விட்டது பற்களில் பிரச்சனை காரணமாகப் பற்களை எடுத்து செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொள்ளவும் முடிகிறது இந்த இரண்டு பிரச்சனைகளைச்சரிசெய்ய செயற்கை உறுப்புகளைப் போட்டுக் கொள்வதுமான பாக்கியமும்( ?) பெற்றாய்விட்டது காது சரியாகக் கேளாமை இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் நுண் அறுவைச் சிகிச்சை செய்து ஒரு காதை சரிசெயத அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறேன் அன்று அறுவைச் சிகிச்சைக்கு என்னை உட்படுத்திக் கொண்டபோது இரு காதுகளிலும் செய்திருக்க வேண்டும்  ஒரு  காது அறுவைச் சிகிச்சைக்குப்பின் பிரச்சனை ஓரளவு சரியானவுடன்  மற்ற காதுக்கும் செய்யாதது தவறு என்று தெரிந்தது. அறுவைச்சிகிச்சை ஆகாத காது 70 சதவீதத்துக்கும் அதிகமாக செயலிழந்து விட்டது. அறுவைச் சிகிச்சை செய்த காதும் சரியாகக் கேட்காமல் பிறர் பேசும் வார்த்தைகள் தெளிவாக விழாமல் அவர்கள் பேசும் போது அவர்கள் முகத்தையே பார்த்து பல நேரங்களில் வார்த்தைகளை guess செய்ய வேண்டி வந்தபோது ஒரு இடியட் போல என்னை உணர்ந்தேன். காதுக்கும் செயற்கை உறுப்பு பொருத்திக் கொள்ள ஆலோசனைகள் வந்தன.
கண்களுக்குக் கண்ணாடி போடுவது போல் காதுக்கும் ( காதாடி.?)அது ஆடி அல்லவே, செயற்கை காது பொருத்திக் கொள்ள என்னைத் தயார் செய்வது மிகவும் சிரமமாய் இருந்தது வயதாவது ஒரு செய்யாத குற்றத்துக்கு  ஒரு தண்டனை என்று எழுதி இருந்த நான் இந்த புலன்களின் பிரச்சனை பற்றி சிந்திக்கவே இல்லை. உயிருள்ளவரை  எல்லாப் புலன்களையும் முழுமையாக உபயோகிக்க முடியாமல் போய் விட்டாலும் இந்த செயற்கை உறுப்புகள் ஓரளவு அந்தக் குறையைப் போக்குகிறது
துளசிதரன் தில்லையகத்துக் கீதா மேடம் காது பொருத்திக் கொள்வதில் கவனம் வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.வியாபார அணுகுமுறையே அதிகம் தென்படுகிறது என்றும் எச்சரிக்கை கொடுத்திருந்தார். எல்லா அனுபவங்களும் பட்டால்தானே தெரிகிறது இந்த யொசனைக்குப் பிறகு என் காதுகளைப்பரிசோதிக்க ஒப்புதல் கொடுத்தேன் நானும் என் மனைவியும் இங்கிருந்த ஒரு பிரபல மருத்துவ மனைக்குச் சென்று காது மூக்குத் தொண்டை நிபுணரை அணுகினோம் ஆடியோமெட்ரிக் பரிசோதனை நடை பெற்றது. கேட்கும் திறன் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது என்னும் சோதனை காதுகளை வித விதமான ஓசைகளுக்கு உட்படுத்தி  ஒரு க்ராஃப் போல ஒன்று தருகிறார்கள். அதிலிருந்து எனக்கு ஏதும் விளங்கவில்லை. அந்த ரிபோர்ட்டுடன் மருத்துவரை அணுகியபோது ஹியரிங் எய்ட் பொருத்திக் கொள்வது தவிர வேறு வழியில்லை என்றார். அவரே அந்த சாதனம் கிடைக்கும் இடத்தையும் பரிந்துரைத்தார். ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு அங்கு போனோம் . ரூபாய் பத்தாயிரம் முதல் ரூபாய் மூன்று லட்சம் வரை ஹியரிங் எய்டுகள் இருக்கின்றனவாம் அவற்றின் தரம் பற்றியோ செயல்பாடுகள் பற்றியோ ஏதும் தெரியாது. அந்தக் கடைக்காரர் எவ்வளவு சானல்கள் வரை அதிகரிக்கிறோமோ அவ்வளவு துல்லியமாகக் கேட்கும் என்று கூறினார். சாதாரணமாக( அதாவது என்னைப் போன்றவர்களுக்கு ) ஆறு சானல்வரையிலான எய்ட் சரியாக இருக்கும் என்றார். ரூபாய் 26000/ - செலவாகும் என்றும் ஓரிரண்டு முறை அங்கு வந்து போக வேண்டும் என்றும் கூறினார். பிறகு வருகிறோம் என்று சொல்லி வந்து விட்டொம். ஒரு முடிவெடுக்க நான் மிகவும் தயங்கினேன்  என் மாமா மகன் ஒரு டாக்டர். அவனிடம் கேட்டேன் அவன் புலன்கள் சரியாக வேண்டுமானால் செலவு பற்றி யோசிக்கக் கூடாது என்றான் மேலும் இன்னொரு ஒபினியனுக்காக பெங்களூருவில் இருக்கும் டாக்டர் சந்திரசேகரின் இன்ஸ்டிடுயூட்டின் ஸ்பீச் அண்ட் ஹியரிங் செண்டருக்குப் போய் செக் செய்யச் சொன்னான்  அங்கு போய் எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் செய்தோம் . அவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அங்கிருந்த கன்சல்டண்ட் இரு காதுகளுக்கும் ஹியரிங் எய்ட் போட்டுக் கொள்ளச் சொன்னார். மீண்டும் பல ஆலோசனைகளுக்குப் பின் அறுவைசிகிச்சை செய்த காதுக்கு மட்டும் எய்ட் போட்டுக் கொள்வதென்று தீர்மானித்தேன் அங்கே படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் வீட்டுக்கே வந்து  எனக்குத் திருப்தி அளிக்கும் படி ஹியரிங் எய்ட் போட உதவுவார் என்றும் தெரிந்தது. எனக்கு பத்து கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ள கடைக்கு இரண்டு மூன்று முறை போய் செக் செய்து கொள்வதைவிட என் வீட்டிலேயே வந்து ஹியரிங் எய்ட் போட்டுத்தர உதவும் இந்த சேவை திருப்திகரமாகத் தோன்றியதுஇரண்டு இளைஞர்கள் வந்தார்கள் செயற்கைக் காது பொருத்தி என் திருப்தியைக் கேட்டார்கள். நான் ஓரிரு நாட்கள் அதைப் போட்டுப் பார்த்துப் பின் சொல்கிறேன் என்றேன் சரி என்றார்கள் ஆறு சானல் கரெக்‌ஷன் என்றார்கள் பனிரெண்டு சானல் கரெக்‌ஷன் செய்தகருவியையும் சோதித்துப் பார்த்தேன். அதன் விலை 90 ஆயிரத்துக்கும் மேலாகும் என்றார்கள். எனக்குக் காது கேட்க வேண்டும் மிகத் துல்லியம் என்பதே கேள்விக்குரியது. மேலும் 77 வயது இளைஞனுக்கு அது தேவையா என்னும் கேள்வியும் எழுகிறது. நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன் டிஸ்கௌண்ட் எல்லாம் போக ஆறு சானல் கரெக்ட் செய்த ஒரு செயற்கைக்காதை  ரூ. 23000/ - கொடுத்து வாங்கி இருக்கிறேன் இரண்டு மூன்று முறை அவர்களும் வந்து என் திருப்தியைக் கேட்டுச் சென்றனர். கீதா மேடம் காதில் வலி என்று கூறி இருந்தார்கள். அந்த எய்டில் உள்ள குமிழ்களை அவ்வப் போது மாற்ற வேண்டும் என்று கீதா மேடம் எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் அது தேவைப் படாது என்றும் என் திருப்திக்காக மூன்று ஸ்பேர் குமிழ்களையும் கொடுத்திருக்கிறார்கள்
இப்படியாகத்தானே கண்ணாடியுடனும் செயற்கைக் காதுடனும்  செயற்கைப் பற்களுடனும் வாழ்க்கையை வாழ எதிர் நோக்குகிறேன்  பதிவர் டாக்டர் கந்தசாமி அவர்கள்கண்களை மூடிக்கொள்ளவும் செவிகளாஈப் பொத்திக் கொள்ளவு வாயை மூடிக்கொள்ளவும் மூன்று குரங்குகளிண் படங்களுடன் பதிவெழுதி இருந்தார்  அவர் வேறு பொருளில் சொல்லி இருந்தாலும்  அவற்றை உபயோகிக்க முடியாமல் இருக்க முடியாது.