Thursday, May 28, 2020

டெல்லி நினைவுகள் சில


                                         டெல்லி நினைவுகள் சில
 

  
                    1979 ம் ஆண்டு  மேமாதம்  என் மச்சினனுக்கு  திருமண்ம் குருவாயூர் அருகே நடப்பதாய்  இருந்தது நாங்கள்  விஜயவாடாவில் இருந்தோம் டெல்லியில்  தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு இருந்தது நான் அந்த வாய்ப்பில் என் மக்கள்மனைவியோடு டெல்லி பயணப்பட்டேன்   அதுவே எனக்கும்  குடும்பத்தாருக்கும்   முதல் டெல்லி  பயணம் டெல்லியில் எதுவும் தெரியாது என்நண்பனின் மச்சினன் டெல்லியிலிருப்பது  நினைவுக்கு வந்து அவனுக்கு நாங்கள் வருவது குறித்து  தகவல் அனுப்பினோம் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்து  எஙளை அவனிருப்பிடத்துக்கு கூட்டிப்போனான் ராமகிருஷ்ணாபுரம் என்பது நினைவு  அவனோ ஒரு வீட்டில் சப்டெனண்டாக  இருந்தான்சிறியைடம்நாங்கள் எத்தனை நாளிருப்போம் என்பது தெரியாது அலுவலகப்பணி  சீக்கிரமே முடியலாம்  அங்கிருந்துவிஜயவாடா போய் பின்  கேரளாசெல்லவேண்டும் விஜயவாடா விலிருந்துடிக்கட் எடுத்துஇருந்தோம் எப்படியும் மே 13 ம்  தேது கேரளவில் இருக்க வேண்டும்
டெல்லி புதிய இடமானதால்குடும்பத்தாருட  தலைமை அகத்துக்குப் போனேன்  வேலை முட்ந்ததும் என்னோடு அவர்களும் வரலாம் என்பது திட்டம்லௌஞ்சில் அவர்களை விட்டு நான்  போனேன்   அவர்களை என்நண்பன் ஒருவன் பார்த்து விசாரித்தான் பிறகு அவர்களை அவன் வீட்டுக்கு கூட்டிப்போனான்   பிறகு என்ன்சைப்பார்த்து விஷயம்கேட்டு அவனும் சொன்னான்  என்பணி மதியத்துக்கு உள் முடியவே அவர்களுடன் நாங்கள் ராமகிருஷ்ணபுரதுக்குசென்றோம்அன்றுஇரவு எப்படியோ மேனேஜ்  செய்தோம் மறு நாள் டெல்லி சுற்றிப்பார்க்க ஒரு நாள் பேரூந்து டிக்கட் எடுத்திருந்தான் ஒரு வழியாய் டெல்லியின்  முக்கிய இடங்கள் பார்த்தோம் 
டெல்லியில் மலைக் கோவில் ஒன்று உள்ளதாம்  அதை அங்கே மலாய் மந்திர்  என்கின்றனர்
அந்தமுறை குதுப் மினார்  மேல் ஏறிப்பார்த்தோம்  அங்குஇருக்கும்  துரு ஏறாத இரும்புத்தூண் இருகிறது  அதை சுற்றிக் கட்டிப்பிடிப்பது சிரமமாம் என்மனைவி அவள்கை வரிசையைக்காட்டினாள்இப்போதெல்லாம்  குதுப் மினார் மேல் ஏறவும் அந்த தூணைதொடவும்  அனுமதி இல்லை வழக்கம்போல் புகைப்படங்கள்கதை சொல்லும்


துரு பிடிக்காத  துண்


குதுப் மினார் மேல் நாங்கள் 



வலது பக்க த்தில்  ருப்பவர் வீட்டில் தங்கினோம் 


ஒரு காட்சி  ஓடும் பஸ்ஸில் இருந்து எடுத்த படம்  




பிறகு பல முறை டெல்லி சென்றிருந்தாலும்  முத்ல் பயணம் ஏதுமறியா டெல்லியில் முதல் முறை குடும்ப்த்துடன் சென்றது நினைவுக்கு வரும் ராமகிருஷ்ணாபுரத்தில் ஒரு தென்னிந்திய ஓட்டலுக்குச்சென்றிருந்தோம் அதன்   உரிமையாளர் பிஎச் இ எல் அதிகாரி ஒருவர் போல் இருந்தார் அவர் தன்    பணி ஆட்களிடம்   கூறியது இன்னும் நினைவில்  நேற்றையவடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு என்று கூறீ கொண்டிருந்தார்          









 

   

Saturday, May 23, 2020

மா புராணம்


                                             மாபுராணம்
                                              ------------------


உஸ்ஸ்ஸ் அப்பாடா   ஒரு வழியாய் மரத்திலிருந்த மாங்காய்கள்  பழங்கள் கீழே வந்தன இலை மறைவாய் காய் மறைவாய்  என்பதன் அர்த்தம்புரிந்தது இவ்வருடம் நிறையவே காய்கள் பறித்து போட்ட மகானுபாவன் +  சுமார் நான்கு மூட்டைக்ள் காய்களை எடுத்துச்சென்றான் நாங்களூம் கண்டு  கொள்ள வில்லை   எனக்கு ஏனோநெல்லைத் தமிழரின் நினைவு வந்தது எங்கள்வீட்டு மாமரம் பற்றி நிறையவே  விசாரித்து இருந்தார்  அடுத்து இருப்போர் எல்லோருக்கும் கொடுத்தோம்எங்கள் வீட்டு மாம்பழத்தின்  சுவையே தனி  எந்த ஜாதி என்று தெரியாதுமஞ்சள்நிறமே வராது காய்பொல் இருக்கும் ஆனால் தின்னத் தின்ன சுவை நாங்கள்மாம்பழம் வாங்கி சாப்பிட்டது  கிடையாது  வாங்கிய ப்ழங்களின்   சுவை காரண்டி கிடையாது  சில  நேரஙகளில்மலையாளத்தில்  சளுக்கும்  என்பார்கள் அதுபோல் இருக்கும்   ஆனாலெங்கள் வீட்டுப் பழங்க்சள் இனிக்கும் போதும்   எங்கள் வீட்டு மாம் பழங்களின் புராணம்                                                                       


https://www.youtube.com/watch?v=tNnLAyM_azc
பழங்கள்  மஞ்சள் நிறம் வருவதில்லை



சூப்பர் சிங்கர்     பாட்டு ஒன்று 




Wednesday, May 20, 2020

ஒரு ஆருடம்



                                      ஒரு ஆருடம்
                                        -------------------



இந்த கொரோனா தொற்று வ்ந்தாலும் வந்தது ஆலயங்கள்எல்லாம்  மூடப்பட்டு விட்டன  ஆனால் என்ன பக்த கோடிகளின்   பிரார்தனைக்கு குறைவே இல்லை நம் கையை மீறிப்போய்விட்டால் நடப்பது அவன் சித்தம் நல்லதே நடக்க்  பிரார்த்திபோம்என்று கருதுகிறார்கள்  என் சிந்தனை சற்று  வித்தியாசமானது  அவனுக்கு தெரியாததா ஒன்பது  அவதாrரங்கள் எடுத்து  அவனியை ரட்சித்தவனுக்கு தெரியாதா உலகை அழிய விடமாட்டான்   உலகு அழியும் குறிகள் எல்லாம் காட்டுகிறான்     அனாத  ரட்சகன் அல்லவா  கடைசி நேரத்தில்வருவான் இப்போதுஇருப்போரின்   பிரார்த்தனைக்கு செவி சாய்க்க கடைசியில் இருக்கும் சிலருக்கு உலக அழிவின்  பயத்தை ஏற்றி மீண்டும்  ப்டைப்பு தொழிலை துவங்கி அவதார நோக்கினை நிறை வெற்றுவான்  நம் இன்றைய பிரார்த்தனை நாளைதான்   நிறைவேறலாம்
 அரசு தொற்று பரவாமல் இருக்க எடுக்கும்  நடவடிக்கைகளை எல்லாம் இதழிலோடும்  புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறாrர் அரசுக்கு  வேண்டியது செய்வது போல் இருக்கும்செயல்தானே கைகளைக் க்ழுவுவதோ  முகமூடி அணிவதோ  தொற்றை தவிர்க்கும் என்னும் நம்பிக்கை மட்டும் இல்லை கடவுள் மேல் பாரத்தை  நாம் போடுவோம்   நடப்பது நன்றாக நடந்தது இனி நடப்பதும் நன்றாகவே நடக்கும் என்று கீதையில்கண்ணன்  சொல்லாததை எல்லாம்   சொன்னது போல்  பாவிப்போம்  ஆனால் நம்பிக்கை என்னும் வார்த்தையை அடிக்கடி கூறுவோம் நான் சொல்வது ஏதோ ஆருடம்போல் இருக்கும்
 என்மகன்  2020 ம் ஆண்டு  சந்துஷ்டியாக இருக்கும்  என்று சொன்ன     சோதிடனை தேடிக் கொண்டு இருப்பதாக கூறுகிறான் அதிகம் சொல்லி அது நடக்காமல் போனால். என்னையு ம் பலர் தேடலாம்

நான் இதுவரை தொற்றுக்காக  எடுக்கும்  பரிசோதனை மற்றும் கோரண்டைன்   எல்லாம்  இலவசம் என்று நினைத்திருந்தேன்   ஊரடங்கு  தளர்த்தப்ப்ட்டு விட்டதே ஒரு எட்டு வந்து போயென்   என்று மகனிடம்  சொன்னேன்  வந்து போவது எளிதல்ல என்றான் அதற்கு அனுமதி  வாங்க வேண்டும்   நாள் ஒன்றுக்கு ரூ 1800 கட்டி கோரண்டைனில் இருக்க வேண்டும்  என்றான்  இருபது லட்சம் கோடி ரூபாய எப்ப்டிஎல்லாமோ செல்விடும் அரசு  எப்படி எல்லாம்  பணம்  வசூலிக்,கிறர்கள் என்று சொல்வதில்லை  சில நாட்களுக்கு முன்  ரயிலில் புலம் பெயர்ந்தார்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து போராடினதும்நினைவுக்கு வந்தது 

  நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்(8) கீதை அத்தியாயம்  4  சுலோகம் எட்டு
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே "எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக" அதர்மமேநிலை பெற்று  விட்டதாகத்கோன்றியதால் எழுதியபதிவு   i


           -
      

Monday, May 18, 2020

முட்டம் முருகன்



                                            முட்டம்  முருகன்
                                            -----------------------------


  ஊரடங்குநேரத்தில்  எந்த சானலிலும் சினிமாதான். ஜயா சானலில் கடலோரக் கவிதைகள் என்னும் சினிமா இருந்தது  பாரதி ராஜாவின்  படமாயிற்றே  என்றுசிறிது நேரம் பார்த்தேன்   முட்டம் என்னும் இடத்தில் படம் எடுக்கப் பட்டதாம்முட்டமென்னும் பேரைப்படித்தபோதுநான்  அந்த இடத்துக்கு சென்றதுநினைவில் ஆடியது முன்பெல்லாம் ஜூலை முதல் வாரத்தில் ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலில் இருப்பது வழக்கம்   2004ம் ஆண்டு என்நண்பரின் விருந்தினராக நாகர் கோவிலுக்கு செனாறோம்அங்கிக்ருந்து கன்னியாகுமரி திருச்செந்தூர்   நெல்லை போன்ற இடங்களுக்கு போய் வந்தொம்   அப்போது நண்பர் நாகர் கோவிலைச் சுற்றி இருந்த இடங்களுக்கு  கூட்டிப்போயிருந்தார் அப்படி போன  இடங்களுள்  ஒன்றுதான்  மண்டக்காடு அங்கிருக்கும் பகவதி கோவில்பிரசித்தம்அப்படிப் போகும் வ்ழியில் ஒரு முருகன் கோவிலும் இருந்தது மிகவும் அழகான முருகன் சிலை இடம்பெயர் நினைவுக்கு வரவில்லை புகைப்படமும் எடுக்கவில்லை எடுத்திருந்தால் நான் இப்படி தடு மாற நேர்ந்திருக்காது                                
போகும் இடமெல்லாம்  கடலோரப்பகுதிகளே அப்போதுமுட்டம் கடற்கரையில் சிறிதுநேரம் இருந்தோம் நாங்கள்படமெடுப்பதைப் பார்த்துஒருவர்  மோர் விற்பவர்  அவரையும் ஒருபடம் எடுக்க வேண்டினார்  வெள்ளந்திமனிதர் படம் எடுத்தாலும் அவருக்கு  கொடுக்க இயலாது என்றோம் பரவாயில்லை என்றார் அவர் பெயரைக் கேட்டு தெரிந்து கொண்டோம்   முருகன்  என்று கூறினார் முருகன் சிலையை ப்டமெடுக்காவிட்டாலும்  முருகன் என்னும்மனிதனைப் ப;டமெடுத்தோம் 


நாகராஜா கோவில்  நாகர் கோவில் 
       
முட்டம்  முருகன்
பழமுதிர் சோலை  முருகன் கோவில் 
 
மண்டைக் காடு  பகவதி கோவில் 


  திரு அருட்பா வரிகள்


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. 

காணொளி நாம் இருவர் படத்திலிருந்து இதை விட நல்ல காணொளி கிடைக்க வில்லை 

--                                                         


Friday, May 15, 2020

இலக்கிய இன்பம்


                                    இலக்கிய இன்பம்  கம்ப ராமாயணம்
                                   ===================================

ராமாயணைத்தை ஒரே வாக்கியத்தில்(சுட்டி) சாதாரணன்  ராமாயணமாக எழுதியஎனக்கு கம்பனில் இருந்து சில பாடல்க்சளைக் குறிப்பிடுவது அசாதாரணமாக இருந்தது  முயற்சி செய்ததில் குகனின்  குணத்தை பிரதிபலிக்கும் சிலபாடல்ளை குறிப்பிடலாம்  என்று  தோன்றியது குகன் சற்றுமுன் கோபியாக  முத்லில் தோன்றினாலும்   கோபமுள்ள இடத்தில்தான் குண்மும் இருக்கும்   என்பதைக் காட்டுகிறான்  

பரதனின்   சேனையை பார்த்ததும் குகன் கோபம்மேலிடுகிறன்

கட்டிய கரிகையன்  கடித்த வாயினன் 
வெட்டிய மொழியினன்   விழிக்கும்  தீயினன்
 கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் 
கிட்டியதுஅமர் எனக் கிள்ரும் தோளினான்

எலி எலாம் இப்படை அரவம் யான் என
ஒலி உலாம்  சேனையை  உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில்  வாழும் வள் உகிர்
புலி  எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே

அஞ்சன வண்ணன் என்  ஆருயிர் நாயகன் ஆளாமே
 வஞ்சனயால் அரசு எய்திய  மன்னரும்  வந்தாரே
செஞ்சரம்  என்பனதீ உமிழ்கின்ன செல்லாவோ
உஞ்சு இவர் போய் விடின் நாய் குகன்  என்று  எனை ஓதாரோ
 
ஆழ நெடுந்திரை  ஆறு  கடந்து  இவர் போவாரோ
வேழ நெடும்படை  கண்டு விலங்கிடும்   வில்லாளோ
 தோழமை என்று அவர் சொல்லிய  சொல்  ஒருசொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ

ஆடு கொடிப்படை  சாடி அறத்தவரே  ஆள
வேடு கொடுத்தது  பார் எனும்  இப்புகழ்  மேவீரோ
நாடு கொடுத்த  என் நாயகனுக்கு இவர்  நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது  காணீரோ 
 இங்கு இவ்வாறு குகன்கோபம் மேலிடதன் வீரரிடம்  சொல்லிக் கொண்டிருக்கையில் பரதன்    குகனைக்காண வருகிறான்  சுமந்திரன்  குக்ன்   யாரென்று  பரதனுக்கு சொல்கிறான்
கங்கை இரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குல தனி  நாதற்கு உயிர் துணைவன்  உயர் தோளான்
வெங்கரியின் எறு  அனையான்  விற்பிடித்த வேலையினான்
கொங்கு அலரும் நறுந் தண் தாற் குகனென்னும் குறி யுடையான்

பரதனின்  நிலை கண்டுகுகன்


வற் கலையின் உடையானை  மாசடைந்தமெய்யானை
நற் கலையில் மதி  என்ன நகை இழந்த முகத்தானை
கல்கனிய  கனிகின்ற் துயரானை கண்ணுற்றான் 
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்

நம்பியும்  என்  நாயகனை ஒக்கின்றான்  அயன் நின்றான்
 தம்பியையும்  ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை  திசை நோக்கித் தொழுகின்றான்
எம்  பெருமான்  பின் பிறந்தார்  இழைப்பரோ பிழைப்பு என்றான்

குகனின்  மன மாற்றம்   தெரிகிறது இல்லையா கம்ப ராமாயணத்தில் பல இடங்களில் தன்னை நாயுடன் ஒப்பிட்டு  தாழ்த்திக் கொள்கிறார்கள்

Wednesday, May 13, 2020

டிட்ஸ் பிட்ஸ்


                                                                டிட்ஸ்  பிட்ஸ்
                                                               ------------------------

  
ஊரடங்கு விதிகள்தளர்த்தப்பட்டு  இருக்கின்றன என் வீட்டுமுன்  இருக்கும்  சாலை முன்புபோல் இரைச்சலாகி விட்டது பேரூந்துகளுக்ம்  சிற்றூந்துகளும்  இல்லை  இருந்தாலும்பலரது வாழ்வாதாரங்கள்போய்விட்டன அரசு  ஏதோ உதவிகள
செய்து வருகிறது  அரசுடன் தன்னார்வலர்களும் ஏதோ தங்களால் ஆனதை செய்கிறார்கள்  ஒரு வித்தியாசம் தெரிந்தது உதவி நாடுவோர் எல்லாம்  பிச்சைக்காரர்களல்ல என்பதை  தெரிவிக்கும் விதம்  பொருட்களை வினியோகம்செய்யும்போது  கொடுத்து பெறுவதைவிட எடுக்கும் உரிமை இருக்கிறது என்பதைக்காட்ட உதவிப்பொருட்கள்வைக்கப்பட அவற்றை  எடுத்துக்கொள்ளும்படி வினியோகம்நடந்தது (சில இடங்களில் )என்பதும் குறிப்பிட  தக்கதே


   ஆண்டுதோறும் தன்இருப்பை மே மாதம்காட்டும் மலர் ஃபுட்பால் லில்லி  இந்த ஆண்டுமே துவங்கியும்   வராதது மனசை வருத்தியது கவலை வேண்டாம்  என்னும்படி  ஒருசெடி தலை தூக்கி பூத்திருக்கிறது





 உடல் நலம்சரியில்லை என்றால்  உடல்நலம் பேணவும் என்பது வழக்கமான பின்னூட்டம்ஆனால் எப்படி  என்று  சொல்வது இல்லைஒரு பிரபல பதிவர் நம்பழைய அணுகு முறைகளை பின்பற்றுவது இல்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார் ஆனல்பொதுவாக உடல் நலம் சரியில்லை  என்றால் உடனே மருத்துவரை நாடுகிறோம்  அண்மையில்  செய்தி ஒன்று படித்தேன்   இப்போதெல்லாம்  அவுட் பேஷந்ட் வார்டுகள் வெறிச்சோடிக் கிடக்கிறதாம் அதாவது மருத்துவரை நாடுத்ல்  குறைந்திருக்கிறதாம் அதாவது கை வைத்தியத்துக்கு  மாறி இருக்கலாம் அ அல்லது ம்  என்றதும்  மருத்துவரை நாடல் குறைந்திருக்கிறது மருத்துவரை நாடல் பெரும்பாலும்   பொறுப்பு  துறத்தல் ஆகும்
பொதுவாக உடல் நலம்பேணுவது நம் ஆகாரத்தில் இருக்கிறது நான் என் மக்களுக்குச்சொல்வது  உணவு உண்ணும் போது செய்ய வேண்டிய பயிறசி உணவு பரிமாறும்போது  தலையைஇடது வலமாக அசைப்பது ஆகும்  இரண்டாவதுவயிறு சார்ந்த உபாதை என்றால் லங்கணம்  பரம ஔஷதம்  என்பதே அண்மையில் நான் கடை பிடிப்பது ஆவி பிடிப்பது

ஆறு குறு மிளகு 12 பொட்டுக்கடலைசிறிதுசீரகம் உப்புடன்வாயிலிட்டு நன்கு மென்று சுவைத்து  அனுபவித்து ஒரு நாளில் மூன்று முறை  நிதானமா  சுவைத்து உண்பது நலம் பயக்கும் 
 



  பல உபாதைகள் இதிலிருந்து சரியாகும்  ஸ்பெஷல்லிஇந்த கொரோன காலத்தில் முக்கியமாக தெரிய வேண்டீயது எதற்கும் அஞ்சாமை  பயமே நோயை அதிகரிக்கும்முக்கியமாக வாட்ஸாப்பில்  ஃபர்வார்ட் செய்யப்படும்  செய்திகள்பலதும் நம்பக் கூடாதது
 காலடி சங்கர மடத்திலொரு பசு கன்று ஈன்றதை காணொலியாக தருகிறேன் கன்றுக்கு சங்கரி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் இது ஒரு அசிஸ்டட் டெலிவரிமுன்பு ஒரு யானை பிரசவிப்பதைக் காணொளியாக கொடுத்திருந்தேன் 







  இன்னுமொரு காணொளி செம க்யூட் குழந்தை  பாருங்களேன்                                                                                                                                                

                             
  

Sunday, May 10, 2020

காலச்சக்கரத்தில் ஒருபயணம்


                                             காலச்சக்கரத்தில் ஒருபயணம்
                                            -------------------------------------------------

காலச்சக்கரத்தில் ஒரு பயணம்

 ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று நாங்கள் திருப்பதிக்கு முதலில் சென்று  நினைவுகளை  பசுமையாக்க  வழக்கம்போல் புகைப்படங்கள் உதவினஒவ்வொருபடமும் ஒவ்வொரு நிகழ்வை மனதில் தோற்றுவிக்கின்றது  பலமுறைகள் பிறகு சென்றிருந்தாலும்   முதன் முறை சென்றதுவிசேஷம்தானே நானும்மொட்டை அடித்ததும்  புஷ்கரணியில் நீராடியதும்  நடந்துசென்றதும் பசுமையாய் நினைவுக்கு வருகின்றது  மலை மேல் ஏறும் முன் கீழ் திருப்பதியில் ஒரு அருவிபோல் இருந்ததில் குளித்ததும்நடந்து போனபாதையில் எல்லாம்  நின்று நிதானமாக மலை ஏற்யதும்  படங்கள் நினைவு படுத்துகின்றன  இதையே காலச்சக்கரத்தில் பயணம் என்கிறேன்  ஐம்பது வருஷத்திய நினைவுகள் புகைப்படங்களால் மீட்டெடுக்கப்பட்ட்டன

போகும்பாதை  காலி கோபுரம் etc

படங்கள் ரிபீட் 

என்பெரிய மகன்( பேரனல்ல ) கோபித்து போய் அவனை தேடுவதே பெரிய பாடாகி விட்ட்து
திருப்பதியில் மொட்டைகள்அடிக்கும்போதும் அடித்தபின்னும்

கீழ் திருப்பதியில்குளியல் புஷ்கரணியில் ஜலக்கிரீடை 

புஷ்கரணியில் கூட வந்தோர் 

படங்கள் ரிபீட் 
முதல்படம்  திருப்பதி போகும்  முன்   இரண்டாம்படம்  சென்று வந்தபின்   சென்னையில் 


Wednesday, May 6, 2020

கம்ப ரசம்



                                                      கம்ப  ரசம்
பகவத் கீதையில்  சொல்லாதது புழக்கதில் இருப்பதுபோல் கம்பராமாயணத்தில்  இல்லாதது  இருப்பது  போல் நினைக்கப்படுகிறது கம்பரமாயண் பக்தர்கள் இயற்றிய காப்புச் செய்யுள்  கம்பன் பாடியதுபொல் எண்ணப்படுகிறது

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்  காக்க ஏகி
 அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்  அவன் எம்மை அளித்துக் காப்பான்                                    

                                              --


 பூவிரி  பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரி நாடு அன்ன  கழனி நாடு ஒரீஇ
தாவர சங்கமம் என்னும்  தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான்

அழகு மிக்க  பொன்னாலான  வீரக்கழலையும்  இணைஇல்லாத படையையும்   உள்ள பரதன்   காவிரி வளம் செய்யும் சோழநாடு  போன்ற  வயல் வளம்உடைய கோசல நாட்டை நீங்கி  இயங்காப் பொருள் இயங்கு பொருள் என இருவகையாய் பிரிக்கப்பட்டுள்ள எல்லா உயிரினங்களும் தனது நிலை கண்டு இரங்கி ஏங்க  கங்கையை  அடைந்தான்

திரிசடை பற்றி எழுத விவரம்  தேடியபோது கண்ணில் சிலபாடல்கள் தென்பட்டன  பாடலை விளக்கும்   இடங்களில்  எல்லாம் கம்பன்  தன்  நாட்டுப்பற்றை தனக்கு உதவிய  சடையப்ப வள்ளல் பற்றியும் கூறி இருந்தது  என்மனதில் பதிந்ததுகோசல நாட்டை  தன் சோழநாட்டுடன் ஒப்பிட்ட பாங்கு என்னை கவர்ந்தது


பல நேரங்களில் எடுத்தாளப்படும்மேற்கோள்கள் கொண்ட பாடல்களை தேடியபோது சில பாடல்களைக் கண்டேன்   அந்த மேற்கோள்கள் கம்பனின்  பாடல்களில் பொருள் சார்ந்தே இருக்கின்றன வெர்பாடிம்   இல்லை
  கம்பராமாயணத்தில்  குகனோடு  நம் ஐவரானோம்  என்று எடுத்தாள்ப்படும்  பாட்டைத் தேடிக் கிடைத்தது இது

துன்பு உளது எனின் அன்றோ  சுகம் உளது அது அன்றி  
பின்பு உளது இடை  மன்னும்  பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம்  முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம்  ஓர் ஐவர்கள்  உளர் ஆனோம்

துன்பமுளதால் தான் சுகமும் உள்ளதாகும் அவ்வாறு  நினைப்பதல்லாமல் பின்னே உளதாகப் போகின்ற இப்போது இணைந்திருப்பதற்கும்வனவாசத்துக்குப் பின்  இணைந்திருக்கப் போவதற்கு   இடைப்பட்டதான பிரிவு என்னும்  துன்பம் உளதே என்று எண்ணாதேஉன்னைக்கண்டு  தோழமைகொள்வதற்கு முன்னே                              உடன்பிற்ந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம்   இப்போது முடிவு உளது  என்று  நினைப்பதற்கு முடியாத எல்லையற்ற                                                                                                   அன்பு உடையவராகிய நாம்                                ஐவர் ஆகிவிட்டோம் என்றான்   இராமன்

பிரவசனகர்த்தாக்கள்  கண்டேன்  சீதையை என்று  அனுமன் கூறுவதாகக் கூறுவர்  அந்தப்பாடலில் வருபவை

கண்டனென் கற்பினுக்கு அணியாய் கண்களால்
தெந்திரை அலை கடலிலங்கைதென் நகர்
அண்டர் நாயக  இனி குரட்ட் ஐயமும் 
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

 ஐயனே உன்னுடைய பெருமைக்கு உரியமனைவி என்னும் உரிமைக்கு உன்னைப் எற்றாஆறாணா  தசரத சக்கர வர்த்தியும்மருமக்ளென்னும் உண்மைக்கும் மதிலையில் அரசனன ஜனகனுடைய மகள் என்னும்  பபுக்கும்  தகுதி சிறப்புகளைப்பெற்று என்னுடஒய சிறந்த தெயமமாக சீதை திகழ்கிறாள் இன்னும் நான் சொல்வதைக் கேளுங்க என்று  கூறினான்  அனுமன்

ராமனும்  சீதையும்  முதன்முதலில் பார்த்துக்கொள்வதை கம்பன் கூறும்போது ஏதோ ரசாயன  மாற்றம் அவர்களுக்குள்  நிக்ழ்ந்ததைக் கம்பன்கூறுகிறான் பாடல் வரிகள் கீழே 
எண்ண அரு நலத்தினாள் இணையள்  நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி  ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும்  நோக்கினாள்  அவளும்  நோக்கினாள்

கம்பரசம்  மேலும் தொடரும்