Wednesday, August 5, 2020

அடிமேல் அடி அடித்தால் ------

   

                                       அடி மேல் அடி அடித்தால்
                                      -------------------------------------------


கடந்த சில நாட்களாகதேசிய கல்விக்கொள்கை பற்றிய செய்தியாகவேஇருக்கிறது பார்க்கப் போனால் எல்லாம் வெறும்   டிங்கரிங் தான்  படிக்கும்  ஆண்டுகளுக்குஏதோ சிலமாற்றம் காட்டுகிறார்கள் கல்வி கொள்கையில் ஏதும்  மாற்றம் இல்லை நாங்கள்படிக்கும்போது ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்து  ஐந்து ஆண்டுகள் எலிமெண்டரி கல்வியும் அடுத்த மூன்று ஆண்டுகள் ஹையர் எலிமெண்டரி  ஸ்கூலென்றும்   அடுத்த மூன்று ஆண்டுகள் செகண்டரி   ஸ்கூல் என்றும்  கூறப்பட்டது  பின் இரண்டு ஆண்டுகள் ப்ளஸ்  டூ என்றும் அடுத்த  மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு  அல்லது  க்ராஜுவேஷன் என்றும்கூறப்பட்டது இன்னும் சில ஆண்டுகள்முன்பு ப்ளஸ் டூவை  எஃப் ஏ( ஃபேகல்டி ஆஃப் ஆர்ட்ஸ்)  என்றுகூறினர் நான்  சொல்லும் டிங்கெரின்   என்பதன் பொருள் விள்ங்கி இருக்குமென்று  நம்புகிறேன்  பாடங்களிலோசொல்லிக் கொடுக்கும்மு றையிலோ எந்தமாற்றமும்  இருக்காதுகல்வி ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்நாட்டில் நிலவும் ஏற்ற தாழ்வுகளைப் போக்க வேண்டும் நான் ஆரம்ப முதலே எழுதிக்கொண்டு வருகிறேன்   ஏற்ற தாழ்வுகள் மனிதனின்  ஜாதி என்று ஆகிவிட்டது
5+ 3 + 3 என்கிறார்கள்  மூன்று வயது முதல் கல்வியாம் மூன்று வயதில் குழந்தைகளை எழுத சொல்வார்கள்  சுமார் ஐந்து வயது ஆனபிறகே எழுத வைக்கலாம் என்னவோ சரியாகப் படவில்லை

ஏற்ற தாழ்வு பற்றி ஓரளவுக்கு நிறையவே எழுதிவிட்டேன். ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயதில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் கூறி இருக்கிறேன் சமுதாய சீர்கேட்டுச் சித்தாந்தங்களால் இழி குலத்தோர்  என்று பல்லாண்டுகள் முத்திரை குத்தப்பட்டு வாழ்வின் அடிமட்டத்திலேயே உழன்றவர்களின் சந்ததிகளும் அதே நிலையில் இருக்கவேண்டுமா.?காலங்கள் மாற வேண்டாமா.? மாற்றக் கூடிய சக்தி எது என்று சிந்தித்தால் கல்வி ஒன்றுதான் என்று பதில் வருகிறது. இது எனக்கு மட்டும் உதித்த ஞானம் அல்ல. EDUCATION  IS A GREAT LEVELER என்று தெரிந்துதான் கல்வி கிடைக்கப் பெற முடியாதவர்களுக்கு ( ஏன் கல்வி கிடைக்கப் பெறமுடியாதவர்கள் ஆனார்கள் என்று ஆராயப் போனால் பலருக்கும் வருத்தம் ஏற்படும் விஷயங்களைக் கூற வேண்டி இருக்கும்) இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்தார்கள். அப்படிக் கொண்டுவந்த ஒதுக்கீடுகளினால் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்யவில்லை. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் கூறப் பட்டு இருக்கும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சலுகைகளுக்காக தவறான அணுகுமுறைகளையும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இது போதாதென்று நாட்டில் ஏற்ற தாழ்வுகளை நிர்ணயிப்பது பணம் ஒன்றுதான் என்று அநேகமாக எல்லோரும் நம்புகின்றனர். கல்வி ஒன்றுதான் சமன் செய்யும் என்று எண்ணினால் அதுவும் வியாபாரிகளிடம் சிக்கி இருக்கிறது. கல்வி அமைப்புகளிலும் சமம் இல்லை. ஏழைக் கல்வி பணக்காரன் கல்வி என்றாகி விட்டது. இதையும் அறிந்துதான். ஓரளவுக்காவது சரிகட்ட எல்லாக் கல்வி நிலையங்களிலும் குறைந்தது 25% ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர். இப்போதுள்ள கல்வி வியாபாரிகள் இந்த சட்டத்தை மதிப்பதாகவே தெரியவில்லை. ஒரு குழந்தையை ஆரம்பக் கல்விக்காக பள்ளியில் சேர்க்க வேண்டுமானால் அவர்கள் கேட்கும் தொகை மயக்கம் வர வைக்கிறது. பள்ளிக் கூடங்களின் பிரக்யாதியைப் பொருத்து ரூபாய் 50,000/ முதல் ஒரு லட்சம் வரைக் கேட்கிறார்கள். இந்த நிலையில் 25% ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றால் அதனால் ஏற்படப் போகும் நஷ்டத்தை அரசாங்கம் ஈடு செய்ய முடியுமா.?ஆகவேதான் எனக்கொரு எண்ணம் எழுகிறது. அரசாங்கம் ஏதேதோ செய்தாலும் அவை எல்லாம் அரை வேக்காடாய்ப் போகிறது. கல்வி கற்பிப்பதை அரசாங்கம் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வங்கிகளை அரசுடைமை ஆக்கியது போல் கல்வியும் அரசுடைமை ஆக்கப் பட வேண்டும். இப்படி அரசுடைமை ஆக்கினாலும் ஏற்ற தாழ்வுகள் குறைந்து போகுமா.? ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மாறுமா.? அதையும் மாற்ற கல்வி பயிலும் அனைவருக்கும் மதிய உண்வு சீருடை சமச் சீர் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட்டு  எல்லாம் அரசாங்கமே பொறுப்பு ஏற்றுக்கொண்டு நடைமுறை படுத்தினால் . இப்போதில்லாவிட்டாலும் வருங்காலச் சந்ததியினராவது பேதங்கள் தெரியாமல் வளர்ந்திருப்பர். பசித்திருப்பவனுக்கு மீன் கொடுப்பதைவிடமீன் பிடிக்ககற்று கொடுப்பதே  சிறந்தது பேதமற்ற கல்வி அறிவு அவர்கள் சிந்தனைகளில் மாற்றம் கொண்டு வரும்.

இதை எழுதுமுன் வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்னும் குறள நினைவுக்கு வந்தது. சரி, இணையத்தில் இது பற்றி என்னென்ன கருத்துக்கள் நிலவுகின்றன என்று பார்க்கப் போனால் வள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலைமைகளையே சொல்லிச் செல்கிறார் என்று தெரிகிறது. கீழே சில குறள்களைத் தருகிறேன். அவற்றின் பொருள் குறித்து பல எண்ணங்கள் கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் படித்ததை இங்கு எடுத்துக் கூறினால் காப்பி பேஸ்ட் செய்கிறேன் எனும் குற்றச் சாட்டு எழலாம். இருந்தாலும் வெவ்வேறு முறையில் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் ஒரு முறை எழுதி இருக்கிறேன். எனக்குத் தமிழ் தெரியாது. தெரிந்தவர்கள் விமரிசிக்கலாமே.

 உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவா னெனின்

சிலர் எழுதும் பதிவுகளில் இந்த சாதி குல வேறுபாடுகள் பண்டைக் காலத்தில் இருக்க வில்லை என்றும் இவை எல்லாவற்றுக்கும் ஆங்கிலேயர்களே காரணம் என்பதுபோலவும் எழுதுகின்றனர். இருந்துவந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் உபயோகித்துக் கொண்டனர் என்பதும் அப்போது கல்வி கற்க அனுமதிக்கப் பட்டவர்கள் அவர்களுக்குத் துணை போனார்கள் என்பதுமே என் கட்சி. யார் காரணம் என்று ஆராய்வதில் குணமில்லை என்று கருதியே என் சிற்ற றிவுக்குப் பட்ட தீர்வைக் கூறி உள்ளேன்     
             



 -

30 comments:

  1. கல்வி என்று தனியார் வசம் போனதோ... அன்றே வியாபாரமாகி விட்டது. இனி பணம் படைத்தவனின் குழந்தைகள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை வரும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அந்தநிலை மாற வேண்டும்

      Delete
  2. ஐயா 
    இதுவரை இருந்த எல்லா அமைப்புகளையும் கொள்கைகளையும் இலக்குகளையும் மாற்றுவதே லட்சியம்; யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்பதே தற்போதைய அரசின் தீவிரம். அதன் முதற்படியாக planning commission போன்ற அமைப்புகளை மாற்றினார்கள். Demonetisation கொண்டு வந்து ஒரே அகலம்  உள்ள புதிய ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தனர். GST என்ற முறையில் வரி வசூல் முழுதும் எடுத்துக் கொண்டு மாநில அரசுகளை பிச்சை கேட்க வைத்து விட்டார்கள். தற்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக் கல்வியையும் எடுத்துக் கொள்வதே இந்த புதிய கல்வி திட்டம். 
    எதுவானாலும் கல்வி சீரமைப்பு அவசியம். காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை. எத்தகைய மாற்றங்கள் என்பதில் தான் விவாதம். குருகுல கல்வி முறை, மெக்காலே கல்வி முறை, தொழிற்கல்வி முறை என்று எத்தனையோ கல்வி முறைகளை பார்த்தாகிவிட்டது. கல்வி முறையை தீர்மானிப்பவர்கள் எல்லோருக்கும் ஒரே சீரான முறையை கட்டாயப் படுத்துவது சரியில்லை. மாணவர்களின் தேவைக்கேற்ப, திறமைக்கேற்ப பாடத் திட்டங்களில் சில மாற்றங்களும் படிப்பிக்கும் முறையில் சில மாற்றங்களும் தேவை. உதாரணமாக நான் கற்ற differentiation, integration, complex variable, linear algebra போன்றவை எனக்கு ஒரு பிரயோஜனமும் செய்யவில்லை ஒரு டிகிரி கொடுத்தது தவிர. சொல்ல வந்தது என்னவென்றால் எல்லோரும் ஓரே சட்டையை அணிய முடியாது. அவர் அவர் உடல் தேவைக்கேற்ப சட்டையின் அளவு, துணி, வடிவம்  தேவை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 
     ஆக இந்தியா முழுமையும் ஒரே கல்வி முறை என்பது சரியில்லை,
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ கல்வி முறைகளை பார்த்தாகிவிட்டது. கல்வி முறையை தீர்மானிப்பவர்கள் எல்லோருக்கும் ஒரே சீரான முறையை கட்டாயப் படுத்துவது சரியில்லை./ஏன்சரி என்பதை விளக்கி இருக்கிறேன் பதிவி உட்கருத்டை புரிந்து கொள்ளவில்லையோ ஒரு ஏற்ற தாழ்வற்றசமுதாயம்வேண்டி எழுதப்பட்ட்து

      Delete
  3. இவற்றுக்கெல்லாம் காரணமான : ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று, சனாதானம் பற்றியும் எழுதியிருக்கலாம்...

    வர்ணாசிரம தர்மம் (http://gmbat1649.blogspot.com/2016/07/blog-post.html) வாசித்தேன்... பதிவும் கருத்துரைகளும் நன்றாகவே இருந்தது...

    இது அதிகாரங்களை ஒப்பிட்டு (கள்ளாமை vs கல்லாமை) செய்து சிலவற்றை எழுதி வைத்துள்ளேன்... பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நான் சுட்டிகாட்டி எழுதிய குறள்கள் இணையத்டில் வாசித்து அறிந்தது இங்கொன்றும் அங்கொன்றுமாக\இவற்றுக்கெல்லாம் காரணமான : ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று, சனாதானம் பற்றியும் எழுதியிருக்கலாம்... எனக்கு விளங்கவில்லை குறள் சித்தர் குறள் பற்றி எழுதுவடை நான் பலமுறை ஆச்சரியத்துடன்படிப்பதுண்டு

      Delete
  4. // வள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலைமைகளையே சொல்லிச் செல்கிறார் //

    உறுதி பொருட்களின் அனைத்திற்கும் விடை உண்டு குறள்களில்...

    இன்றைக்கு நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயத்திற்கும் தீர்வு, குறள்களில் உண்டு... அப்படியென்றால் அவர் வாழ்ந்த காலம் அப்படி இருந்திருக்குமா...? என்ன சிந்தித்தார்...? எப்படி எழுதினார்...?

    ReplyDelete
    Replies
    1. நானும் என் எண்ணத்தில் தோன்றியதீர்வை கூறி உள்ளேன்

      Delete
  5. நம் நாட்டை ஆண்ட குறு மன்னர்களும், பெருந்தனக்காரர்களும் மக்களைக் கொடுமைப்படுத்தியே வந்தனர்.  குறிப்பாக வட நாட்டில்.  அதனால்தான் ஆங்கிலேயே ஆட்சி வந்து சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து விக்டோரியா மகாராணி சாதி வித்தியாசம் பார்க்காமல் அரசாங்கங்களில் வேலை கிடைக்கும் என்றபோது போராட்டம் பிசுபிசுத்துப் போனது.  அடிமைப்பட்டு / கஷ்டப்பட்டுக் கிடந்த மக்களுக்கு இந்தியன் என்ன, ஆங்கிலேயன் என்ன!  இதை உபயோகித்து தங்கள் கல்வி முறையைப் புகுத்துவதற்கும் மெக்காலேக்கு வசதி ஆயிற்று.

    ReplyDelete
    Replies
    1. மெக்கலே கல்வி முறை எப்படி ஏன் வந்தது என்று முன்பு எழுதி இருக்கிறேன் மெக்கலே கல்வி முறையை ஒரேயடியாய் குறை சொல முடியாது அந்தக் கல்விமுறையில் படித்த வர்கள்தான் நாட்டுக்காக சிந்தித்தவர்கள் அண்டக்கல்வி இலாதிருந்தால் இன்னும் மத சார்புடைய கல்வி மடும் இருந்திருக்கும்/அதனால்தான் ஆங்கிலேயே ஆட்சி வந்து சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து விக்டோரியா மகாராணி சாதி வித்தியாசம் பார்க்காமல் அரசாங்கங்களில் வேலை என்றபோது போராட்டம்பிசுபிசுத்துப் போனது\ இது நான் அறியாதது

      Delete
  6. அப்படிக் கொண்டுவந்த ஒதுக்கீடுகளினால் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்யவில்லை. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் கூறப் பட்டு இருக்கும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சலுகைகளுக்காக தவறான அணுகுமுறைகளையும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இது போதாதென்று நாட்டில் ஏற்ற தாழ்வுகளை நிர்ணயிப்பது பணம் ஒன்றுதான் என்று அநேகமாக எல்லோரும் நம்புகின்றனர். கல்வி ஒன்றுதான் சமன் செய்யும் என்று எண்ணினால் அதுவும் வியாபாரிகளிடம் சிக்கி இருக்கிறது. கல்வி அமைப்புகளிலும் சமம் இல்லை. ஏழைக் கல்வி பணக்காரன் கல்வி என்றாகி விட்டது. இதையும் அறிந்துதான். ஓரளவுக்காவது சரிகட்ட எல்லாக் கல்வி நிலையங்களிலும் குறைந்தது 25% ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர். இப்போதுள்ள கல்வி வியாபாரிகள் இந்த சட்டத்தை மதிப்பதாகவே தெரியவில்லை. //

    இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம் சார். நல்ல கருத்துகள் எல்லோர் மனதிலும் இருக்கும் கருத்துகள்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நிகழ்வுகளை நடக்கிற படி கூறு கிறேன் தீர்வு எனக்குத் தெரிந்தபடி

      Delete
  7. கல்வி தனியார்மயமாகாமல் அரசின் கீழ் நல்ல முறையில் வந்தால் நல்லா ஆசிரியர்கள் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.
    தற்போதைய சூழலில் பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி நல்ல ஆசிரியர்கள் அதாவது மாணவர்களின் அறிவுத்திறனை ஆளுமையை விரிவுபடுத்தும் அளவிற்கு பெரும்பான்மையான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் உண்மை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கல்வி ஒரு great leveler ஆனால் அது அப்படி இல்லாதவாறு செய்ய அனைத்து முறைகளும் கையாளப்படுகின்றன் காரணம் தெரிந்தால் அதை சரிசெய்யலாமே அரசு சொல்வதை ஆசிரியர்கள் கடை ட பிடிக்கின்றனர்

      Delete
  8. கல்வியை அரசுடைமை ஆக்கினால் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்குமே அல்லாது அவர்களிடம் அதற்கேற்ற கற்பிக்கும் திறனை எதிர்பார்க்க முடியாது. கல்விப் பணியை விட தொழிற்சங்கப் பணிகளுக்கே முக்கியத்துவம் ஏற்படும். மேலும் அரசிடம் அந்த அளவுக்குப் பண வசதியும் கிடையாது. எனவே தனியார் பள்ளிகளை நம்பித்தான் இன்றைய கல்வி முன்னேற்றம் நடைபெற்றுவருகிறது. அந்தப் பள்ளிகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்பு உள்ளவர்களே.

    ReplyDelete
    Replies
    1. எதையும் நடை முறை படுத்டுவது அரசின் கையில் எழுதிய விஷயம் மறந்து பின்னூட்டங்கள்வேறுமாதிரியாகப் போகிறதே

      Delete
    2. செல்லப்பா சார் எழுதியது சிந்திக்கத் தகுந்தது.

      அரசாங்கம் கை வைத்த எதுவும் உருப்பட்டதில்லை. காரணம், தொழிற்சங்கம், அதில் வேலை செய்ய 10% ஆட்கள் என்று சம்பளம் எல்லாம் வீணாகப் போகும். ஆசிரியர் வேலை என்பது அரசு வேலை. அரசு வேலை என்றால், வேலை செய்யத் தேவை இல்லை. இதுதான் பெரும்பாலான நிலைமை.

      Delete
    3. ஆசிரியர் வேலை என்பது அரசு வேலை. அரசு வேலை என்றால், வேலை செய்யத் தேவை இல்லை. இதுதான் பெரும்பாலான நிலைமை.எனக்குத் தெரிந்து பல அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்யும் பணியை தெய்வமாககௌதுகின்றனர் எல்லாம் அவரவர் அனுபவம்

      Delete
  9. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
    காவலன் காவா னெனின்

    அறச்சீற்றம் கொண்ட ஒரு புலவனின் சாபம் போலவே ஒளிக்கிற குறள் இது.
    இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், இயற்கையைக் காப்பாற்றாவிடில், எல்லா நன்மைகளும் குறைந்து போகும், காடு அழியும், மழை குறையும், இருக்கும் நீர் மாசு படும், தொழில் செய்கிறவர்கள் தங்கள் தொழிலுக்கான அறங்களை மறப்பர், தர்மங்களை மீறுவர்

    ReplyDelete
    Replies
    1. அறச் சீற்ற்ம் இதே வார்த்தையை என்பதிவுகள்பிர்தி பலிப்ப ஒரு வாசகர் கூறி இருந்தார் வெறும்சீற்றங்களெப்பயனையும் தருவதில்லை

      Delete
  10. கல்வி மட்டும்தான் இப்போதில்லாவிட்டாலும் வரும் காலத்தில் சாதி மத பேதத்தைக் குறைக்கும். அதனால், இட ஒதுக்கீட்டுக்குள்ளும் 50% இட ஒதுக்கீடு முதல் முறையாக மேற்கல்விக்கு வருபவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இது அனைவருக்கும் உரிய பலனைத் தரும்.

    கல்வி கிடைத்துவிட்டால், வேலை கிடைத்துவிடும் (நான் சொல்வது வெறும்ன டிகிரி அல்ல. அதிலும் ஒழுங்காகப் படித்தால்). எல்லாச் சாதியினருக்கும் வேலை கிடைக்கும்போது பிறரும் முன்னேறுவர்.

    ReplyDelete
    Replies
    1. பதிவின் சாரமே ஏற்றதாழ்வு நிலை அதை மாற்ற கூறிய சிறு உபாயம்

      Delete
  11. திருக்குறள் 7ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.

    அதனை தங்கள் இஷ்டத்துக்குப் பொருள் கொள்வது அதிகமாகிவிட்டது. மணக்குடவரோ இல்லை பரிமேலழகர் சொல்லியதுதான் சரியான உரையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உரை என்று கூறி அவரவர் எண்ணஙளை எழுதுகின்ற்னர் உரையைப் புரிந்துகொள்வதைப் புரிந்து கொள்வதை விட மூலத்தை புரிதலே எளிது

      Delete
  12. எனக்கும் கூட திருவள்ளுவர், ஒளவையார் போன்ரவர்கள் குடி பிறப்பு என்பதை வலியுறுத்தியிருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள்வாழ்ந்தகால நிலையை கூறி இருக்கின்றனர்

      Delete

  13. கல்வி அது பற்றிய முழு அறிவு இல்லாதவர்களிடம் சிக்கி சிரழிகிறது.....

    ReplyDelete
  14. சீர்செய்யும் நிலையில் இருப்பவர்கள் சிந்திப்பதில்லை என்றே தெரிகி றது

    ReplyDelete
  15. உண்மைதான் ஐயா. யார் காரணம் என்று நோக்க ஆரம்பிக்கும்போது செயலைத் தடுப்பதற்கான எண்ணமானது மறைந்துவிடவும், மறந்துவிவும் வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  16. அதுதான் நடக்கிறது 2athuthaan

    ReplyDelete