Tuesday, October 25, 2022

மறதி போற்றுவோம்

 


                                         மறதி போற்றுவோம்
                                         -----------------------------
(மறதி என்பது ஒரு உடற்கூறின் குறைபாடு என்று கூறுகிறார்கள்( ALZEIMER  வியாதி) ஆனால் மறதி என்பது பெரும்பாலும் வரம் என்றே தோன்றுகிறது. அதன் விளைவே இப்பதிவு)




அங்கிங்கெனாதபடி    எங்கும்    அவலங்கள்       
ஆனால்   நமக்கோ   அவை -- வெறும்    நிகழ்வுகள்   செய்திகள்
அண்டை  வீட்டுக்காரன்   மண்டையைப   போட்டால்
நமக்கென்ன  பாதிப்பு   ?
ஊரில்   உலகில்   ஆயிரம்   சாவுகள்
வெள்ளத்தால்   மழையால்    மண்சரிவால்
பூகம்பத்தால்  சுனாமியால்   கொடிய   நோய்களால்
ஒரே  நொடியில்  கோடீஸ்வரன்  ஒட்டாண்டியாகிறான்
மாடு   மனை   வாசல்   எல்லாம் துறக்கிறான்
எண்ணவே   இயலாத   அவலங்கள்
அரை   நொடியில்   மண்ணில்   நிகழ்வது  நிஜம் .
எங்கோ  குண்டு   வெடிக்கிறது
மரண ஓலங்களும்   வலியின்  வேதனைகளும்
நமக்கென்ன   தெரியும்  ? அவை வெறும் செய்திகள்தானே .
மூக்கறுந்த  பெண்ணும்      மொய்க்கும்   குழந்தைகளும்
பத்திரிகையில்   செய்திகள்  தொலைக்காட்சிப்  படங்கள்
என்ன செய்வது,எல்லாம்  தலை  எழுத்து
நாம்  என்ன செய்ய ,--ஐயோபாவம்    என்று
ஊச் "  கொட்டுவோம் .
இழப்பு   நமக்கு   நேர்ந்தால்  தெரியும்
 
வலியும் வேதனையும்
ஊர்  கூட்டிக் கதறி  ஒப்பாரி ஓலமிட்டு
 
காட்டுவோம்    உலகிற்கு

நமக்கு   நேரும்  இழப்பும்   வலியுமே
காலத்தின்  போக்கில்  மறக்கும்   நமக்கு
மாற்றானின்   வலியும்   வேதனையும்
வெறும்  நிகழ்வுதானே   செய்திதானே
மறப்பது   மனசுக்குள்ள  மருந்து
காலம்  நமக்கு   கொடுத்த     வரம்
எதுவும்    கடந்து   போகும்
 மறதி     போற்றுவோம்   !

13 comments:

  1. //நமக்கு   நேரும்  இழப்பும்   வலியுமேகாலத்தின்  போக்கில்  மறக்கும்   நமக்கு
    மாற்றானின்   வலியும்   வேதனையும்
    வெறும்  நிகழ்வுதானே   செய்திதானே
    மறப்பது   மனசுக்குள்ள  மருந்து
    காலம்  நமக்கு   கொடுத்த     வரம்
    எதுவும்    கடந்து   போகும்
     மறதி     போற்றுவோம்   !//

    ஆனாலும் செய்நன்றி கொன்றவரை மறக்க முடியவில்லையே!. மறப்போம் மன்னிப்போம் என்று விடமுடியவில்லையே!

    Jayakumar

    ReplyDelete
  2. எதையும் மறந்து நம் வாழ்க்கையை நாம் தொடர்ந்து நடத்திச் செல்வது இயல்பானதுதான். எந்தத் துக்கமுமே மறந்துபோகும். அது மட்டுமல்ல.. நாம் பிறருக்குச் செய்த கெடுதியும். அவ்வகையில் மறதி நன்றா?

    ReplyDelete
    Replies
    1. நன்றா அல்லவா என்பது கேள்வி அல்ல

      Delete
  3. மறதி - மனம் முடிவு செய்யும்...

    ReplyDelete
  4. காலத்தில் அத்தனையும் கடந்துபோகும்

    ReplyDelete
    Replies
    1. காலத்தில் அத்தனையும் கடந்துபோகும் மறபோகும்

      Delete
    2. மறந்து போகும்

      Delete
  5. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று

    ReplyDelete
    Replies
    1. அது தெறீயாததுதாணே பிரச்சனை

      Delete
  6. எல்லாவற்றையும் மறக்க முடிகிறதா?

    ReplyDelete
  7. எல்லாம் மரந்து போகும்

    ReplyDelete