அறிவுரை அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவுரை அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மார்ச், 2016

FOLLOW MY WORDS NOT MY DEEDS.


                                 நான் சொல்வதைக் கவனி என் செயல்களை அல்ல
                                ----------------------------------------------------------------------------
அண்மையில் நாளை என்பதை நினைக்காதவனின் நினைவுகள் என்றொரு பதிவு எழுதி இருந்தேன் அதில் சிகரெட் புகைப்பவனின் பதிலையும் எழுதி இருந்தேன் அது பற்றி இன்னும்  சில நினைவுகள்  ஒரு இளைஞனிடம் சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கூறினேன் அதற்கு அவன் நீங்கள் புகை பிடித்ததில்லையா என்று கேட்டான்  பொய் சொல்லக் கூடாது அல்லவா.
வெகு நாட்கள் புகை பிடித்துக் கொண்டிருந்தேன் இப்போது நிறுத்தி விட்டேன்  என்றேன்
  அதற்கு அவன் ”நானும் சில நாட்கள் புகைத்துப் பார்த்து அனுபவித்த பின்  நிறுத்துகிறேன்” என்றான்.....! நாம் ஒருவருக்கு அறிவுரை  கூற வேண்டுமென்றால் அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா  என்பதை யோசிப்பதே இல்லை எனலாம்
ஒரு முறை ஒரு பெண்மணி காந்திஜியிடம் தன் மகன் அதிகம் இனிப்பு சாப்பிடுகிறான் அது தவறு என்று காந்திஜி அறிவுரை  சொல்ல வேண்டும்  என்று கேட்டுக் கொண்டாளாம்  . அதற்கு காந்திஜி ஒரு வாரம் கழித்துத் தன்னை மகனுடன் வந்து பார்க்கச் சொன்னாராம்
அடுத்த வாரம் அந்தப் பெண்ணின் மகனுக்கு இனிப்பு அதிகம் உண்பது உடலுக்குக் கேடு என்று காந்திஜி அறிவுரை  கூறினாராம் ஒரு வாரம்  கழித்து ஏன் வரச் சொன்னார் என்பது அந்தப் பெண்மணிக்குப்  புரியவில்லை. காந்திஜியிடமே கேட்டார். அதற்கு காந்திஜி ” எனக்கும் இனிப்பு அதிக விருப்பம்  சிறுவனிடம் அறிவுரை சொல்லும் முன்  முதலில் நான் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும்  என்னால் முடிந்தால்தான் எனக்கு அறிவுரை கூறும் தகுதி இருக்கும்  அதை முதலில் என்னிடமிருந்தே துவங்குவதே சரியாகும் அல்லவா “ என்றாராம்

எனக்குத் தெரிந்த ஒருவரின் மகள் கல்லூரிக்குப் போகிறாள் ஒரு முறை அவளை ஒரு பையனுடன் பார்த்தேன் நமக்குத் தெரிந்த பெண் அல்லவா இவள்.  இந்தக் காலத்துப் பையன்கள் கிடைக்கும் சைக்கிள்காப்பில் ஐ லவ் யூ  சொல்லிவிடுவார்களேஎன்று மனசு கலவரமடைந்தது. நண்பனிடம் சொன்னேன் . அவன் அதை சீரியசாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை.
 அவன் ”சார் நீங்கள் காதலித்துதானே கல்யாணம் செய்து கொண்டீர்கள் நீங்கள் காதலிக்கத் துவங்கும்போது உங்களுக்கு வயது எவ்வளவாய் இருந்தது?”
 பொய் சொல்லக் கூடாது அல்லவா. “நான்  காதலிக்கத் துவங்கிய போது எனக்கு  வயது 24 “ என்றேன்
“ உங்கள் மனைவிக்கு?” என்று கேட்டான்   ”பதினேழு “ என்றேன் “நீங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன” என்று கேட்டான்  நான் “ பெருமையுடன்” அது ஆயிற்று  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல்” “என்றேன்
”“நீங்கள் காதலிக்கலாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் இப்போதைய சிறிசுகள் பேசினாலேயே குற்றமா” என்று கேட்டான்
நான் “எனக்கிருந்த மன முதிர்ச்சி மசூரிடி இப்போதைய சிறிசுகளுக்கு இருக்காது” என்றேன். அவன் சொன்னான் “ இப்போதைய இளைஞர்களுக்கு  அவர்களது லிமிட் தெரியும்  நம்மை விட புத்திசாலிகள்” என்றான்
 ”தவறு நடக்கக் கூடாதே என்று நினைத்துத்தான் சொன்னேன்’ என்றேன் என் மீசையில் மண் ஒட்டிக் கொண்டு
 இருக்கிறதா  என்று பார்க்க வேண்டும்
எனக்கு நான் ஏன் இப்படி வாய் கொடுத்து  மாட்டிக் கொள்கிறேன்  என்று தெரிவதில்லை  பிறரைப் பற்றிச் சுட்டும்போது  மூன்று விரல்கள் நம்மையே சுட்டுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் 
இன்னொரு நண்பரின் மகள் சாதி மாறி மொழி மாறி ஒரு பையனைக் காதலித்தாளாம் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் எதிர்த்தனர் அதற்கு அந்தப் பெண் ஜீஎம்பி அங்கிளும்  சாதி மாறி மொழிமாறிக் காதலித்துத்தானே கல்யாணம் செய்து கொண்டு இப்போது நன்றாக வாழவில்லையா  என்று போட்டாளாம் ஒரு போடு..... ! நண்பன் என்னிடம் YOU HAVE SET A WRONG PRECEDENT என்று குறைபட்டுக் கொண்டான் அந்தப் பெண்ணின் திருமணமும் நன்கு நடந்து ஆகிறது 16 ஆண்டுகள்
 எனக்கென்னவோ  பிறருக்கு அறிவுரை கூறும் முன்  ” நான் சொல்வதைக் கவனி செய்வதை அல்ல”என்று கூறித் துவஙுவதே சரியென்று படுகிறது