எது சுதந்திரம். கேள்விகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எது சுதந்திரம். கேள்விகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஆகஸ்ட், 2014

சுதந்திர தினச் சிந்தனைகள்


                                   சுதந்திர தினச் சிந்தனைகள்
                                  ---------------------------------------


சுதந்திரம் அடைந்து விட்டோம் 67 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறுமுன்னே பாடினான் பாரதி
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு  நாம் எல்லோரும் சமம் என்று உறுதியாச்சு “ என்று .
எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் நடுவில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா.?அரசியல் சுதந்திரம் , ஆட்சி அமைக்கச் சுதந்திரம் என்பதுதான் சுதந்திரமா.?சுதந்திரத்துக்கு எதிர்ப்பதம் அடிமைத்தனம் என்றால்அரசியலை நீக்கி நாம் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம், வாழ்கிறோம் நாம் பல விஷயங்களைக் கற்கிறோம் படிக்கிறோம் அறிகிறோம் ஆனால் உண்மையான சுதந்திரம் என்னவென்று நினைத்துப் பார்த்தோமா. இதை எழுதும் போது நம் வலையுலகப் பிரசித்தி பெற்ற திரு அப்பாதுரை அவர்களின் எழுத்துக்களை உபயோகிக்காமல் இருக்க முடியவில்லை. சுதந்திரத்தின் எதிர்ப்பதம் அடிமைத்தனம் என்று சொல்லி எது அடிமைத்தனம் என்னும் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டால் அதன் எதிர்மறைகள் சுதந்திரம் என்று பொருள் கொள்ளலாம் இந்திய சுதந்திரம் கிடைத்த நாளில் திரு .ஜவஹர்லால் நேரு நிகழ்த்திய உரை பிரசித்திப் பெற்றது அதன் ஆரம்ப வரிகளைக் கொடுக்கிறேன்
Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance.
Alas..Has that happenned  after so many years .?
அரசியல் சுதந்திரம் அடைந்து விட்டோம். .The soul of the nation , long suppressed. Has that found the utterance.?
திரு அப்பாதுரை அவர்கள் பள்ளிச் சிறுவர்களிடம் அடிமைத்தனம் பற்றிக் கேட்க அவர்கள் சொன்ன பதில்கள் சிந்திக்க வைக்கின்றன.
"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"
பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"
அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."
நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று கூறுகிறோமே நம் எண்ணம் செயல்கள் சுதந்திரமாக வெளிப்படுகிறதா.? ஆண்டை அடிமை என்று நிலவி வந்த நிலையை வெள்ளையன் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மில் சுதந்திர எண்ணம் தோன்ற முடியாதபடி செய்து விட்டான் அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள் தலை நிமிர்ந்து எண்ணவோ செய்யவோ அதற்கான சூழலோ உருவாகி இருக்கிறதா.?அன்று அரசியலில் ஆங்கிலேயனுக்கு அடிமையா நின்றோம். இன்றும் அடிமைத்தனத்துக்கான காரணங்கள் தவிர்க்கப்படவில்லை. இன்றும் சுதந்திர எண்ணமோ செயலோ இல்லாமல் நம் வாழ்க்கையை நடத்துகிறோம் இன்று நம் நாட்டில் எல்லோரும் சமம் என்னும் நிலை உருவாகி இருக்கிறதா?.
அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். கேள்விகள் கேட்கக் கூடாது. ஏனென்றால் அவற்றுக்குப் பதில்கள் கிடைக்காது. இருந்தாலும் பிறவிக் குணம் விடுவதில்லை. நண்பர்களே சொல்லுங்கள் நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா.?     .              
(திரு அப்பாதுரையின் பதிவுகளில் இருந்து வரிகளை அவரிடம் அனுமதி கோராமலே எடுத்தாண்டிருக்கிறேன். அவரது சிந்தனைகளும் பலராலும் விரும்பிப் படிக்கப் பட்டால்  அவரும் விரும்புவார் என்பது என் எண்ணம் )