திருவோணம் நல் வாழ்த்துக்கள்
-----------------------------------------------
ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் படும் போது இந்த வேளையில்முதலில்
அனைவருக்கும் “ ஓணாஷம்ஷகள்”
கடவுளின் தேசம் என்று கொண்டாடப்படும் கேரளத்தில் , முன்பு அங்கு சுபிட்சமாக
ஆட்சிநடத்திய மகாபலிச் சக்கரவர்த்தி இந்த நாளில் மக்களைக் காண வருவதாக ஐதீகம் இந்த
நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து மன்னனை சந்தோஷப்படுத்த
கொண்டாடுவதாகவும் ஐதீகம்
இந்த மகாபலிச்சக்கரவர்த்தி யானவரை
பகவான் வாமன ரூபம் எடுத்து வந்து கர்வம் அடக்கினார் என்பது கதை..மலையாளத் தொலைக் காட்சிகளில்
மகாபலியின் வேடமணிந்து பலரும் வருவதாக நிகழ்ச்சிகள் காண்பிக்கப் படுகின்றன.
அவர்களில் பலரும் நகைச் சுவை நாயகர்களாக ஏதேதோ சொல்லிப் போகிறார்கள். மகாபலியை
கேலிக் கூத்தாக்குகிறார்கள் ஏன் என்று தெரியவில்லை. சுபிட்சமாக ஆண்ட ஒரு
சக்கரவர்த்தியை நினைவு கூறும்போது கேலிச் சுவை ஏன்? அப்படி சுபிட்சமாக ஆட்சி
புரிந்த அரசனின் அகந்தையை அடக்க மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தாராம் இதோ அந்தக்
கதை( முன்பு கடவுளின் அவதாரங்களை “அவதாரக் கதைகள்” என்னும் தலைப்பில் எழுதி வந்தேன் அதில் வாமனாவதாரக் கதை)
.அவதாரக் கதை...பாகம்.....5.....வாமனனாக.
திருநீலகண்டன் அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
அசுவமேத யாகம் நடத்தி, யார்
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான் பலி.
தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.
தான் ஒரு பிரம்மசாரிப் பார்ப்பனன்,
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
அழிப்பான் என்று அறிவுரை வழங்கினார்
குல குரு சுக்கிராச்சாரியார்.
சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே கூறிய மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
அறிந்த மாலும் தருப்பையால் அதன்
துவாரம் குத்த ,கண்ணொன்று குருடாகி
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.
மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம் வினவினான்.
கைகூப்பித் தலை வணங்கி
சொன்ன சொல் தவற மாட்டேன்
தங்கள் மூன்றாம் அடி என் தலை மேல்
வைக்க , யான் பெருமை கொள்வேன்
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
=================================
( அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம்
அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது ஏதாவது
கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து
இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும்,
இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப
முனிவருக்குப பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன்
பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான
அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக
பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை சார்ந்த
உறவுகள் நெருடலாகத் தெரிகிறது.
இதற்கு விளக்கம் கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். ) .
.அவதாரக் கதை...பாகம்.....5.....வாமனனாக.
-----------------------------------------------------------
ஆதிசிவனால் மூவுலகாள வரம் பெற்ற,
திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன்
மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )
பெற்றவரம் பலிக்க, வானவரையும் ஏனையவரையும்
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான்.
வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
தன் மக்கள் நிலை கண்டு வருந்தி,
கச்சியப்ப முனிவரிடம் முறையீடு செய்ய,
அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு,
வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட, திருநீலகண்டன் அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
அசுவமேத யாகம் நடத்தி, யார்
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான் பலி.
தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.
தான் ஒரு பிரம்மசாரிப் பார்ப்பனன்,
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
அழிப்பான் என்று அறிவுரை வழங்கினார்
குல குரு சுக்கிராச்சாரியார்.
சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே கூறிய மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
அறிந்த மாலும் தருப்பையால் அதன்
துவாரம் குத்த ,கண்ணொன்று குருடாகி
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.
மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம் வினவினான்.
கைகூப்பித் தலை வணங்கி
சொன்ன சொல் தவற மாட்டேன்
தங்கள் மூன்றாம் அடி என் தலை மேல்
வைக்க , யான் பெருமை கொள்வேன்
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
=================================
( அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம்
அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது ஏதாவது
கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து
இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும்,
இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப
முனிவருக்குப பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன்
பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான
அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக
பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை சார்ந்த
உறவுகள் நெருடலாகத் தெரிகிறது.
இதற்கு விளக்கம் கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். ) .
.