வாழ்வியலில் ஒரு பாடம்
-----------------------------------
ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள்
நுழைந்தார்.என்ன பாடம் நடத்தப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பில் மாணவர்கள்.
ஆசிரியர் மேசைக்கு அருகே நின்று ஒரு
கண்ணாடி பாட்டிலை வைத்தார். அதற்குள் கால்ஃப் பந்துகளைப் போட்டு நிரப்பினார். மாணவர்களிடம்
கண்ணாடி பாட்டில் நிரம்பிவிட்டதா எனக் கேட்டார். மாணவர்கள் ஆமோதித்தனர். அதன் பின்
சில கூழாக்கற்களை கண்ணாடி ஜாரில் போட அவை கால்ஃப்பந்துகளுக்கிடையில் இருந்த காலி
இடங்களுக்குள் போய் அமர்ந்து கொண்டன.
இப்போது ஜார் நிரம்பிவிட்டதா என்று கேட்டார். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டு ஆம் என்றனர். பிறகு ஆசிரியர் ஒரு பையில் இருந்த மணலை பாட்டிலுக்குள்
இட்டார். மணல் சரிந்து கொண்டு ஜாரில் இருந்த வெற்று இடங்களை நிரப்பியது. இப்போது
ஜார் நிரம்பி விட்டதா எனக் கேட்டார். எல்லோரும் கோரசாக ஆம் என்றனர். இன்னும் என்ன
செய்யப் போகிறாரோ என்னும் ஆவல் அவர்கள் கண்களில். ஆசிரியர் அவர் கோட்டுப் பைக்குள்
இருந்து ஒரு பாட்டில் சாக்கலேட் பானத்தை ஜாரில் விட்டார். ஜாரும் அந்தபானத்தை ஏற்றுக்
கொண்டது. ....
எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன். முதலில் விளக்க மாக எழுதலாம் என்று எண்ணினேன். ஆனால் என்னதான் எழுதினாலும் இந்தக் காணொளி விளக்குவது போல் இருக்காது. மனம் மாறி அந்தக் காணொளியை அப்படியே பகிர்கிறேன்.
ஒரு நிழலாட்டம் என்னவெல்லாம் சொல்கிறது.REALLY INCREDIBLE.!