சிறு கதை-மீள்பதிவு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறு கதை-மீள்பதிவு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 அக்டோபர், 2011

அனுபவி ராஜா அனுபவி....

அனுபவி   ராஜா  அனுபவி --------- ஒரு சிறு  கதை
-----------------------------------------------------------------
          "என்னடி  அம்மா இது ! இந்த  போஸ்ட்மேனை  இன்னும் காணலை. இவனும்  இவன் கொண்டுவந்து  கொடுக்கும்  பிச்சைக்காசும் ....எல்லாம்  சவம்டியோ ...”



    அவனைப்பார்த்ததும்  இந்த  டயலாக்தான்  சுந்தாவுக்கு  நினைவுக்கு  வந்தது .மேலத்தெருவில்  பக்கத்து வீட்டில்  இருந்த லட்சுமியம்மாளின்  மகனல்லவா  இது ? சதாசிவம்  என்ற பெயரை  வைத்துக்கொண்டு  சதா  எல்லோரையும்  சவமாகத்திட்டுவானே ---- ஒ  ! எத்தனை வருஷங்களாச்சு  இவனைப்பார்த்து .ஐம்பது  ஆண்டுகளுக்கு  மேலாகி  இருக்கும்.


." சதா... சதா.. " என்று சற்று  உரக்கவே  கூப்பிட்டான்  சுந்தா.
       

 "எந்த சவம்டா  என்னை  சதான்னு கூப்பிடறது ?" என்று சற்று  உரக்கவே  கூறி திரும்பியவனைப  பார்த்ததும்  சுந்தாவுக்கு அவன்தான்  என்று நிச்சயமாகத  தெரித்தது .


 “ஐயாம்  ஸாரி..... நான்தான்  மேலத்தெருவில் ...உங்க  பக்கத்து வீட்டு ...."
       

 "சுந்தா ...!  அடடா ..! நீயா    அடையாளமே   தெரியலியே ..."
       

  பின்னே ... ஐம்பது  வருஷம்னா   சும்மாவா ..வாயேன் வீட்டுக்கு  பக்கத்திலேதான்  இருக்கு ..நிறையப்  பேசலாம் "
        

 "ஹூம் , என்னத்தப் பேசப் போறோம் , சரி வா ,"  என்று சற்றே  சலிப்புடன்  கூறிய சதாசிவம் கொஞ்சமும் மாறவில்லையோ என்று தோன்றியது சுந்தாவுக்கு.

 மாசத்தின்   முதல் நாளே போஸ்ட்மேனின்  வரவை  எதிர் பார்க்க  ஆரம்பித்து  விடுவார்கள்  லட்சுமி  அம்மாளும்  பிள்ளைகளும் . அன்றைக்கு  இல்லாவிட்டால்  மறு  நாளாவது  கட்டாயமாக மணியார்டர்  வர வேண்டும் . கடன்காரர்களுக்கு  எவ்வளவு  நாள்  வாய்தா  சொல்ல முடியும் . கடன்  வாங்காமல்  இருக்கலாம்  என்றால்  முடியவா செய்யும் ? அந்த மட்டிலாவது  குடும்பம்  ஓடியது  அவர்கள்  வீட்டு  மூத்த பிள்ளை  கிச்சா அனுப்பும் ரூபாய் நூறால்தான். வீட்டிற்குப் 
 போகும்  வழியில்  பழைய  எண்ணங்களில் நினைவோடியது .
        

"என்ன ஒரு சவமடி --மாத்திக்கட்ட  நல்ல வேஷ்டியும்  ஷர்ட்டும்  இல்லாம---சே ! நான் ஒரு நல்ல ஸ்திதிக்கு  வந்து  ஒரு  டஜன்  வேஷ்டி  ஒரு டஜன் ஷர்ட்  ஒரு டஜன் பேன்ட்  எல்லாம் வாங்கி  ஆசை தீரப  போட்டுக்கணும் ...இஷ்டப்படி  சாப்பிட வேண்டும் ..வாழ்க்கையை  நன்னா  அனுபவிக்கணும் ".
   

 சதாசிவம்  இப்போது  சுமாராக  உடுத்தியிருந்தான் . பார்த்தால் ஓஹோ  என்ற நிலைக்கு  வந்த மாதிரித  தெரியவில்லை .
        

 வீட்டிற்கு  வந்ததும் , "கமலா, இது சதாசிவம் . கிராமத்தில்  எங்கள்  வீட்டுக்கு  அடுத்த  வீடு . ஐம்பது  வருஷங்களுக்குப  பிறகு  பார்க்கிறோம் .நல்ல காப்பி  போட்டுக்கொண்டுவா ", என்று கூறி மனைவிக்கு  அறிமுகப்படுத்தினான்


”சொல்லு  சதா .உன்னைப் பார்த்ததும்  அந்தக் கால நினைவுகள்  வந்து தாக்குகிறது .வீட்டில் எல்லோரும் சவுக்கியமா ....குழந்தை  குட்டிகள் ....."
       "

”நிறுத்து .. நிறுத்து ..நானே  சொல்கிறேன் . எனக்கு  வேலை  கிடைத்த  கையோடு அம்மா  போய்ச் சேர்ந்து விடடாள். என்னோட  துரதிர்ஷ்டம் நான்  நன்னா இருக்கிறதப்  பார்க்க  அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை ,. என்ன  இருந்து  என்ன பயன் ? வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேணும் "


சதா பேசப்பேச  அவனுடைய  அடிப்படைப் பிரச்சினை -- எதிலும்  ஒரு விரக்தி ...கொஞ்சம்   கூட  மாறாமல்  இருந்தது சுந்தாவுக்கு  ஆச்சரியமாக  இருந்தது.  இதற்கு  என்ன காரணம்  என்று அறியும்  ஆவலும் அதிகமாயிற்று .


 “என்ன சதா  சலிச்சுகறே....வாழ்க்கை வாழ்வதற்குத்தானே ! பெரியவனாகி  சம்பாதிக்கும்போது  அப்படி  இருப்பேன்  இப்படி  இருப்பேன்  என்றெல்லாம்  சொல்லுவாயே ”


"இல்லை சுந்தா . அது ஒரு கதை . நான் ஏன்  இப்படி  இருக்கிறேன்  என்று எனக்கே  புரியாத  சவம் ..டா ”.


  சுந்தா  அவனே மேலும் சொல்லட்டும்  என்று மௌனமாக  இருக்க சதாசிவம்  தொடர்ந்தான்
       

 “பார் ,  எனக்கு வேலை  கிடைத்ததா ---வாழ்க்கையில்  முன்னேறணும்னு  அப்படி  ஒரு  வெறி .கண்  மண்  தெரியாமல்  உழைத்தேன் . சப்பாதிக்கும்போது  சரியாக  சாப்பிடாமல் , தூங்காமல்  வேலையே கதி என்றிருந்தேன் .அதற்கு நல்ல பலனும் கிடைத்தது .நான் இப்போது  ஒரு நல்ல நிலையில்  ஒரு கம்பெனியின் மேனேஜராக  வேலை  பார்க்கிறேன்” .


  சதாசிவம் ஒரு கம்பனியின்  மேனேஜரா ? நம்பவே முடியவில்லை சுந்தாவுக்கு . ஒட்டிய கன்னமும்  கூன் விழுந்த  முதுகும இடுங்கிய கண்களும்  பஞ்சத்தில்  பரிதவிப்பவன்  போலல்லவா  இருக்கிறான் . உடை விஷயத்திலும்  வெகு  சுமாராகத்தான் இருக்கிறான் 


 ” ஒரு கம்பனியின்  மேனேஜர் என்கிறாய் . பார்த்தால் ....."என்று சுந்தா சந்தேகம்  தெரிவிக்க 
,
       "அதுதான்  சொன்னேனே   ,வாழ்க்கையை  அனுபவிக்கவும்  மச்சம்  வேண்டும் என்று "


       " அது  உனக்கு இல்லையா   ஏன்?



"சுந்தா , கஷ்டத்திலும்  இல்லாமையிலும்  இருந்தே  பழ்ச்கிவிட்ட  எனக்கு , நான் சம்பாதிக்கும்  காசை செலவு  பண்ண மனசு  வரமாட்டேங்குது . ஐயோ  எவ்வளவு  கஷ்டப்பட்டு  சம்பாதிச்சது , இதை செலவு  செய்யலாமா ,  நமக்கு தேவைதான் என்ன ... உடுக்க ஏதோ  துணியும்  உயிர்  வாழ உணவும்  போதாதா ? தேவைக்கு மேல் செலவு செய்பவன்  எங்கோ  ஒரு பிச்சைக்காரனையோ  திருடனையோ  உருவாக்கு  கிறான் என்று காந்தி  சொன்னதாகப்படித்த  ஞாபகம் .   
 அதுவுமில்லாமல் யாராவது நல்ல முறையில்  உடுத்தினாலோ  நன்றாக சாப்பிட்டாலோ எனக்கு என்னையும் அறியாமல்  அவர்கள் மேல் கோபம்  வருகிறது. கஷ்டப்பட்டிருந்தால்தானே  சுகத்தின்  அருமை  தெரியும் . இவர்கள் எல்லாம் கஷ்டப்படாமலேயே  அனுபவிக்கிறார்கள்  என்று பொறாமையாகக்கூட  இருக்கும் . எனக்கே இது அவ்வளவு  சரியில்லையோ  என்று கூடத்தோன்றும் . இருந்தாலும் வாழ்க்கையை  அனுபவிக்க   சவம் - மனசு  வர 
மாட்டேன்  என்கிறது ”


 சதாசிவம் சொல்லச்சொல்ல  சுந்தாவுக்கு  நினைத்துப்  பார்க்கவும்  முடியாத  ஒரு கோணம்  வாழ்க்கையில்  இருப்பதும் தெரிந்தது . ஆனால்   இப்படியுமா ?
----------------------------------------------------------------------------------------
        










  








     








   



      
















      
     




    











 .
       










வெள்ளி, 14 அக்டோபர், 2011

புதிய பதிவு அல்ல...

  
கண்டவனெல்லாம்......(ஒரு சிறு கதை )
------------------------------------------------


 பஸ்ஸுக்குக் காத்திருந்து காத்திருந்து அலுத்து விட்டது ஹரிக்கு.  
."போக்குவரத்து  துறைஎன்றால்  தமிழ்நாடுதான்  ஹேமா . விடியற்காலைமுதல்    நள்ளிரவு  வரை  பஸ்கள்  கிடைக்கும் . ஐந்து  நிமிடத்துக்கு  மேல்  காக்க  வேண்டாம் .  சே | இந்த  பெங்களூரில்  இது  மிகவும்  மோசம் " ஹரிக்கு  அலுப்பு . "தவிர்க்க  முடியாததை அனுபவிக்கத்தானே  வேண்டும்  .இல்லையென்றால்  ஆட்டோவுக்கு  செலவு செய்ய  உங்களுக்கு  மனசு  வராதே " ஹேமா  ஹரியின் வீக்   பாயின்டைசற்றே  குத்தினாள்


        "அப்பாடா  அதோ  பஸ்  வருகிறது . சாமர்த்தியமாக  ஏறி இடம்  பிடித்துக்கொள் .  லேடிஸ்  சீட்  காலியாகவே  இருக்கும் " ஹேமாவை  முன்னுக்கு  அனுப்பி  ஹரி  அடித்து  பிடித்து  பஸ்ஸில்  ஏறி , முண்டியடித்து  முன்னுக்குப் போனால் , அங்கே  லேடீஸ்  சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில்  ஒரு  அழகான  வாலிபன்  ஸ்டைலாக  உட்க்கார்ந்து  இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம்  ஆத்திரமாக  வந்தது .  "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு  மாதிரி  ஒருத்தன்  அவள்  பக்கத்தில்  உட்கார்ந்து  இருக்கிறான் . அதுவும்  லேடீஸ்  சீட்டில்.  அவன்தான்  அப்படியென்றால்  இவளுக்கு  எங்கே  போச்சு  விவஸ்தை ? நாக்கைப்  பிடுங்கற  மாதிரி  நாலு வார்த்தை  கேட்க்க  கூடாது ? இதே மாதிரி   எவ்வளவு  நேரம்  பொறுத்துக்கொள்வது ? இதுக்கு  ஒரு  முடிவு  கட்டித்தான்  தீரவேண்டும் "                                
 இதற்குள்  பஸ்  அடுத்த ஸ்டாப்பில்  நிற்க . "ஹேமா. வா  இங்கேயே  இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது  என்று  கேட்பதற்குள்  ஹரி  பஸ்ஸை  விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த  ஆட்டோவைக்கூப்பிட்டார் 

.
 " இன்றைக்கு  மழைதான்  வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு  செய்ய  மனசு  எப்படி  வந்தது ?"


” கண்டவனெல்லாம்  என் பெண்டாட்டி  பக்கத்தில்  உட்க்காருவது  எனக்குப் பிடிக்கலை .நீயும்  பேசாமல்  இருந்தது  அதைவிடப்  பிடிக்கலை "



” உங்களுக்கு  என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு  அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"
 ஹேமாப்பாட்டி  தன  புருஷனை  அன்புடன்  கடிந்து  கொண்டாள்.

-------------------- ---------------------------------------------------------