சித்தம் கொள்ளாததேனோ........
-------------------------------------
யாதுமறியாப் பருவத்தே என்னை ஈன்றெடுத்து
உனதன்பை நானும் உணரும் முன்பே சென்றுவிட்டாய்.
அன்னையே என் உயிர் ஈந்து உடல் தந்த அமுதமே
அம்மணியே உனைக் கண்டுன் அன்பில் திளைக்க
எனக்கேன் தரவில்லை வரமே.
இருந்தாலென்ன...இல்லாத ஒன்றை எண்ணி ஏங்கி ஏங்கி
அனவரதம் அழுது புரண்டு மருளுவதிலும் ஏது பயன்
ஈன்றெடுத்த உன்னிலும் மேலாக
நாளெல்லாம் பரிவுடன் பாங்குடன்
ஏழையெனை ஏற்றுக்கொண்ட ஏந்திழையும்
தாயுள்ளம் கொண்டவளே அறிவேன் நானும்
இருக்கின்ற ஒரு மருந்தை உணராமல்
இன்னலுற்று ஏன் இடர்படவேண்டும்
யாதுமாகி நின்ற உன்னைக் காண விழைந்து
தாரமாக வந்தவளை என் தாயுமாகக் கண்டு
என் சஞ்ச்லங்கள் நீக்க முயலும் சேய் நான்
உனைக் காண வருகையில்-
உனைக் காண வருகையில்-
பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து
காளையாய்க் காமுற்று எனதவளைக் கைப்பிடித்து
இளமை ஒழிந்து மூப்புறும் நிலையில்
எல்லாம் செத்து நாளை எண்ணுகையில்
எனக்கு நானே அழாதிருக்க
காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரை புரள பூக்கின்ற புன்னகையால்
ஆறாத மனப்புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையே
எனை ஆட்கொள்ள இம்முறை சித்தம்
