போட்டி- கவிதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டி- கவிதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூன், 2011

கவிச்சோலைக் கவிதைப் போட்டி.

கவிச்சோலைக் கவிதைப் போட்டி
-----------------------------------------------
          வலைப் பூ கவிச்சோலையில், நண்பர் எல். கே.
அவர்கள்  ஒரு கவிதைப் போட்டி அறிவித்திருக்கிறார்.
முத்தொள்ளாயிரத்து  பாடல்  ஒன்றை புதுக்கவிதை
வடிவில் எழுத வேண்டும். என் ஆத்ம திருப்திக்காக
எழுதுகிறேன்.
       
                          
                             பாடல்

                            -----------
வீறுசால்  மன்னர் விருதாம் வெண்குடையை
பாற்  எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
செங்கண்மாக  கோதை  சின வெங்களி  யானை
திங்கள் மேல் நீட்டுந்தன்  கை.

                 என் கவிதை.
                  ----------------

சேர மன்னன் வீர மறியாது,
வெற்றி கொள்ளும்  ஆவலில்,
செருக்கோடு  செருக்களம்  புகுந்த
வீரர்தம் தேர்க் குடைகளை
சென்றங்கு  செருமுனையில்  இழுத்து,
மிதித்துப் பழகிய  வெங்கரியின்  ஏறோன்று
 நீல வானில்  ஒளி வீசும்
முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
குடை என்றெண்ணித தன துதிக்கை
கொண்டிழுக்க முயன்றது (  தாம். )  ,
========================================

            இது  சும்மா டமாசுக்கு.  எப்பூடி கீது.?
                                 ----------------------

      சேர  ராசாவ  சண்டைல  சுளுவா
      கெலிக்க  லாம்னு  தேரோட வர
      சிப்பாய்ங்க  தேர்மேல கீற கொடைங்கள
      சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
      சேரனோட  யானே ,வட்ட நெலாவப் பாத்து,
      தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
      அதோட தும்பிக்கைய  நீட்டிச்சாம்.