மார்கழித்திங்கள்
---------------------------
-
இந்தப்பதிவை நானெழுதுவதே பலருடைய புருவத்தை உயர்த்தும்
எனக்கு இறை இலக்கியங்களில் ஈடு பாடு உண்டு தமிழ் வளர்ந்ததே அவற்றால்தான் என்று நினைப்பவன்
மேலுமொரு காணொளியும் கிடைத்தது அதை உபயோகிக்கும் விதமாக இந்தப் பதிவு எழுதுமெண்ணம்
எழுந்தது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்துரின் கோபுரங்கள் திருப்பாவையின் பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவை என்று சொல்கிறார்கள்
முதலில் காணொளி
பின் பாடல் வரிகள் தரலாம் என்றிருந்தேன் ஆனால் பாடல் வரிகள் இணையத்தில் இரைந்துகிடக்கின்றன மேலும் திருப்பாவை பற்றி அறியாதோர் மிகக் குறைவே என்று நினைக்கிறேன் பலரது பதிவுகளிலும் வந்தவை வருபவை ஆதலால் பாடல் வரிகள் இடவில்லை
இன்று மார்கழி 19ம் தேதி இன்றைக்கான திருப்பாவை பாடல் மட்டும் இதோ
19) குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
ஏலோர் எம்பாவாய் பொருள் புரியவில்லை தெரிந்தவர் விளக்கலாம்
ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஆடும் நடராஜர் படம்
ஏலோர் எம்பாவாய் பொருள் புரியவில்லை தெரிந்தவர் விளக்கலாம்
ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஆடும் நடராஜர் படம்
