விடுப்பில் சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுப்பில் சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 மார்ச், 2018

சென்னையில் சில நாட்கள்

                       
                                         சென்னையில் சில நாட்கள்
                                         -------------------------------------------

சென்ற கோடையில் சென்னைக்கு சென்று வந்தேன் என் மகனின் புதிய வீட்டு கிரகப் பிரவேசத்துக்குச் சென்றது  அதன் பின்  இப்போது ஃபெப்ருவரி மாச  நடுவில்  என் மகன்  இங்கு வந்து எங்களை கூட்டிக் கொண்டு சென்றான்  என் சென்னைப் பயணம்  பற்றி ஸ்ரீராம் தில்லையகத்து கீதா  செல்லப்பா மற்றும்  நெல்லைத்தமிழனுக்கு அறிவித்திருந்தேன்   இம்முறை நாங்கள் அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்று செல்லப்பா  கூறி இருந்தார் என் மகன்  தங்கி இருக்கும்  பெரும்பாக்கம்   சென்னையின்  வெளிப் புறம் இருக்கிறது செண்ட்ரலிலிருந்து சுமார் 30 கி மீ  தூரமிருக்கும் பொதுவாக சென்னை வந்தால் பதிவர்கள் சிலரை நான்  சந்திக்க அழைப்பதுண்டு  இம்முறை  இருப்பிடம் தூரம்காரணமாக இருந்ததாலும்  யாருக்கும் தொந்தரவு தர விரும்பவில்லையாதலாலும் யாரையும்  வேண்டி வருந்திக் கூப்பிடவில்லை 
திரு செல்லப்பாவின்  வேண்டுகோள் பற்றி என் மகனிடம்கூறி இருந்தேன் அவன் எங்களை அவனது காரில் கூட்டிச் சென்றான்   கூகிள் வரைபடமே நாவிகேட் செய்ய உதவியது செல்லப்பாஎன் மகன்வீட்டிலிருந்து சுமார் அரை  மணி தூரத்தில் அவரது  குடியிருப்பு இருப்பதாகக் கூறி இருந்தார்  ஆனால் ஷார்ட்கட்டில் பயணம் செய்தும்  ஒருமணி நேரம்  ஆயிற்று  அப்போதுதான்  திரு செல்லப்பா வேளச் சேரியில் என் மகன் வீட்டுக்கு வர எத்தனை சிரமப் பட்டிருப்பார் என்று யூகிக்க  முடிந்தது  மாலை சுமார் நான்கு மணி அளவில் அவர் வீட்டுக்குச் சென்றோம்  சுமார் ஒரு மணிநேரம் அவருடனும் அவர் மனைவியுடனும்  அளவளாவினோம்  தோசையும் காப்பியும்  கொடுத்தார்கள்
பிறகு அங்கிருந்து திரும்பினோம் 

திரு செல்லப்பா தம்பதியுடன் 
திரு செல்லப்பாவீட்டு  பால்கனி தோட்டம் 


 என் மகன்  சொன்னது  சென்னையின்  வடக்கு பாகமும்   பழைய மாமல்லபுரம் இருக்கும்  இடங்களும்  மக்களுமே  மாறுபட்டவர்கள் என்றும்  வட பாகத்தில் இருப்பவர்களுக்கும்   இந்தப் பகுதியில் இருப்பவருக்கும்    வாழ்க்கை முறையிலும்  அணுகலிலும் நிறையவே வித்தியாசங்கள்   இருக்குமென்றும்  இங்கிருப்பவர்களுக்கு   வடசென்னை  ஒத்துவராது என்றும் அவனது அபிப்ப்ராயத்தைக்கூறினான் அங்கும் ஏற்ற தாழ்வுகள்  பிரச்சனை

என் மருமகள் ஒரு சாய்பாபா  பக்தை  அடுத்த நாள் சனிக்கிழமை ஓ எம் ஆர்  சாலையில் இருக்கும்  சீரடி பாபா கோவிலுக்குப் போனோம்  எனக்கு அதுஒரு வித்தியாசமான அனுபவம்   நான் ஷீரடியில்  இருக்கும் சாய் பாபா கோவிலுக்குப் போய் இருக்கிறேன்   எல்லாமே வணிக மயமாய் இருந்தது. ஆனால் இங்கே ஒரு ட்ரஸ்ட் நடத்தும் இந்தக் கோவில் ஆச்சரியப்படவைத்தது  அமைதியான சுற்றுப் புறம்  கோவிலில் உண்டியலோ எதற்கும்   கட்டணமோ கிடையாதுமுக்கியமாக பணம் எதற்கும்  பணம்  பெறுவது  தடைசெய்யப் பாட்டிருக்கிறது
வழிகாட்டி
 பாபா கோவிலில் பதாகை 
தியான  மண்டபத்தில் பாபாவின்  சிலை
பாபாவி வாக்கு கள்


வரும்வழியில்  கடல் நீரை குடி நீராக மாற்றும்  டிசேலியனேஷன்  ப்லாண்ட் இருப்பதாகக் கூறினான் ஏதோ அந்தாசாக படம் பிடித்துக் கொண்டேன்
கடல் நீர் குடிநீராக  மாறும் இடம் ? 
  

 காலை சிற்றுண்டி அங்கே இருந்த அன்ன  பூர்ணாவில் உண்டோம் மினி ப்ரேக் ஃபாஸ்ட் என்று  பல ஐட்டங்கள் எனக்கு மிகவும் போதுமானதாக இருந்தது 

மினி டிஃபின் ?
          
.என் மகன்  வீட்டை பற்றி  முன்பே எழுதி இருக்கிறேன்  அந்தக் குடியிருப்பை சுற்றி வந்தால்  சுமார் ஒரு கி மீ நேரமாகும்   மாலை வேளைகளில்   நான்  நடைப் பயிறசிக்குப் போவதோடுசரி  எங்கு போகவும்  தூரம் ஒருபிரச்சனை ஜனங்களை பார்ப்பதே அரிதாக இருந்தது  எதற்கும்  மகனது உதவி தேவை  கணினியில் இருந்தும்  வலைஉலகில்  இருந்தும் விலகி இருந்தேன்  என் மொபைலில் சில விஷயங்களைக் கற்று தந்தான்  என் மகன்  ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை  என் பேரனின்   பாத் ரூம் கதவில் எழுதி ஒட்டப்பட்டிஎருந்த வாக்கியம் அது பற்றிக் கேட்ட போதுபேரன் ஒரு ந்முட்டுச் சிரிப்பு சிரித்தான்    ஒரு நாள் மாலை என் பேரன் எங்களுக்காக  பூரி பட்டூரா  செய்து தந்தான்
பாத்ரூம்  கதவில்
பேரனின்  சன்னா  படூரா


 
 பெங்களூருக்கு வரும் சதாப்தி அதிகாலை ஆறு  மணிக்கு  புறப்படுகிறது  ரயில் நிலையத்துக்கு   வர காலை நான்கு மணிக்கே கிளம்ப  வேண்டி இருந்தது சதாப்தி ர்யில் புறப்படும் நடை மேடை பற்றி ரயில்வே ஊழியர்  ஒருவரிடம் என் மகன் கேட்டான் என்னை பார்த்த அவர் நடைமேடையில் தூரம் நடக்க வேண்டும்   என்றும்  என்னை ஒரு வீ; சேரில் கூட்டிப்போகவும் கூறினார்  எனக்கு அது பிடிக்காது என்றும்  நடக்கவே விரும்புவேன் என்றும் மகன் கூற அவர் ஆச்சரியப் பட்டு எனைப் புகழ்ந்தாராம் 
   பெங்களூரில் என்  இரண்டாம் மகன்   ரயில்  நிலையத்துக்கு வந்திருந்தான்   இரண்டாம் மருமகள் மருத்துவ மனையில் அட்மிட் ஆகி இருந்தவள்  அன்றுதான் வீட்டுக்கு வந்திருந்தாள்  பொதுவாக எங்கள் சென்னை வருகையின் போது  ஒரு மழையாவதுபெய்யும்   இந்த்முறை பெய்யவில்லை