சித்திரை விஷு
-----------------------
தெச்சி
மந்தாரம் துளசி பிச்சக மாலைகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம் என்
மாமியார் பாடும் பாட்டு இன்று ஏனோ நினைவுக்கு வருகிறது ஏனோ என்ன இன்று விஷு நாள்
அல்லவா கேரள வேரைக் கொண்டுள்ள எங்கள்
குடும்பத்தில் இந்த விஷு அன்று கணியும்
வைக்கப்படும் நான் என் மனைவியிடம் தினமும் உன்னை கணிகாணும் எனக்கு இந்தக் கணி ஒரு பொருட்டே அல்ல
என்பேன் இருந்தும் பழக்கமாக
இருக்கும் இந்தக் கணி காணலுக்கு நான் மறுப்பு சொல்வதில்லை. சின்ன பிள்ளைகளாக இருந்தபோது இந்த நாளில் பெரியவர்களிடம் இருந்து கிடைக்கும் கை நீட்டத்துக்கு (
நேட்டட்டதுக்கா) காத்திருந்ததும் உண்டு அதே பழக்கம் இன்றும்
தொடர்கிறது என்ன எனக்கு மூத்தவர்களிடம் என்னால் வாங்கமுடிவதில்லை ஆனால் என்னிடமிருந்து என் மக்களும்
பேரக் குழந்தைகளும் வாங்குவார்கள் இந்த ஆண்டு என் மூத்தமகன் வந்திருக்கிறான் என் பெரிய பேரனும்
கூட இருக்கிறான் அவர்களுக்கு கைநீட்டம் கொடுத்து மகிழ்ந்தேன்
புஸ்தகா
பத்மநாபன் வந்திருந்தார் மின்னூல் வெளியிட சில எக்ரிமெண்ட் பேப்பர்களில் கையெழுத்து
வாங்கிச் சென்றிருக்கிறார் இன்னும் பத்து
பதினைந்து நாட்களில் என் படைப்புகள் மின்னூலாகவெளிவரலாம்
மனச் சிறையில் ஆயிரம் எண்ணங்கள் ஓடுகின்றன அப்போது தங்கள் மனச்
சிறையில் அடைத்து வைத்திருக்கும் என்
மக்கள் எங்களைக் கண்ணாடிக் கூண்டுக்குள்
சிறை வைத்திருப்பதைப் பகிர்கிறேன் எதிர்வரும்
20ம் தேதி எதிர்பார்க்கும் எல்லாப் பதிவர்களையும் சென்னையில் சந்திக்க
ஆவலாய் இருக்கிறேன் சிலருக்கு இதுவே ஒரு
தொந்தரவாக இருக்கலாம் பொருட்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
![]() |
| எங்கள் வீட்டுக் கணி |
![]() |
| கண்ணாடிக் க்யூபுக்குள் நாங்கள் சிறை |
அனைத்து வாசக நண்பர்களுக்கு எங்கள் மனங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

