ஹனுமான் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹனுமான் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 நவம்பர், 2018

வீர ஆஞ்சநேயர் கோவில் மஹாலக்ஷ்மி லேஅவுட்



                                வீர ஆஞ்சநேயர்  கோவில் மஹா லக்ஷ்மி  லேஅவுட்
                                   ---------------------------------------------------------------------------
இந்த மாதம்  17ம் தேதி தமிழில் கார்த்திகை மாத முதல் தேதியாம் பல ஆண்டுகளுக்குப் பின்  என் மனைவி மஹாலக்ஷ்மி லேஅவுட்டில்  இருக்கும்  வீர ஆஞ்சநேயஸ்வாமி  கோவிலில் வடை மாலை சார்த்துவதாக பிரார்த்தனைசெய்து அதற்கான பணமும்கட்டி ரசீதும்வாங்கி இருந்தாள் என்  வீட்டில் இருந்து சுமார் பத்து கிமீ தூரத்திலிருப்பது ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது
பெங்களூரில் பிரசித்தி பெற்ற ஹனுமான்  கோவில்களில் ஒன்று  முன்பெல்லாம் அடிக்கடி செல்வது வழக்கம்  காலை சுமார் 11 மணி அளவில் மங்கள் ஆரத்தி நடை பெறும்  நான்கு வேதங்களாலும் போற்றுவார்கள் அங்கு சுமார் 22 அடி உயரமும் 16 அடி அகலமும்  கொண்ட  ஆஞ்சநேயர் சிலைக்கு பக்தர்களே அபிஷேகம்செய்யலாம் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்வெண்ணை அலங்காரம் ஷ்ரவண மாதம்  (புரட்டாசி )செய்வார்கள் அத்தனை பெரிய சிலைக்கு வெண்ணை  அலங்காரம்பக்தர்களின் பங்களிப்போடு நடைபெறும்   ஒரு பக்தர் மறக்காமல் எங்களிடம் அன்பளிப்பு வாங்கி பின் பிரசாதமும் ஒவ்வொரு முறையும் தருவார் ஒரு முறை தம்பதிகள் சமேதராக விளக்கு பூஜை செய்தோம் அங்கேயே  உணவும் உண்டு  என் இளையமகன் ஒரு ஆஞ்சநேய பக்தன்  திருச்சி குடி இருப்பில் இருந்தபோது  முதல் மாடியிலிருந்து எதற்கோ எட்டிப்பார்த்த போது  கீழே விழுந்து விட்டான்  ஆனால் எந்தகாயமும் இல்லாமல்  எழுந்து வந்தான்   அவன் கழுத்தில் இருந்த ஆஞ்ச்நேயர் டாலரே  அவனைக் காப்பாற்றியது என்றுநம்பினான்
 இந்த கோவில் 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகசெய்தி 
 முன்பு பொட்டல் காடாக இருந்தகுன்றில் இருந்தபெரிய  கருங்கல்லை ஒரு கான்வாசாக  உபயோகப்படுத்தி  ஹனுமான்  படம்வரைந்தாராம் பின்  பக்தர்கள் துணையோடு கற் சிலையாக வடிக்கப் பட்டதாம்   அழகானகுன்றில்  இருக்கும் இந்தக் கோவில் அமைதி தவழ்வதுஒரு பெரிய மஹாலக்ஷ்மி சிலையும் உண்டு  கோவிலின் கோபுரம் இப்போது  தங்கத்தால்  வேயப்பட்டு இருக்கிறது காலை ஆறு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை கோவில் திறந்திருக்கும் 17 ம் தேதி கோவில் சென்று வடை மாலை  சார்த்தப்பட்டதற்கான  அடையாளமாக  வடைகளைபிரசாதமாகக் கொடுத்தார்கள்  பெங்களூரில்  மஹாலழ்மி லேஅவுட்தவிர ராகி குட்டா  என்னும் இடத்திலும்   பான்ஸ்வாடியிலும்  ஆஞ்ச்நேயர் அருள் பாலிக்கிறார் இன்னும்  சில இடங்களும் இருக்கலாம்  இவை நான் போய்ப் பார்த்துவந்த இடங்கள். பலருக்கும்  நினைவு இருக்கலாம் பல ஆண்டுகளுக்கு முன்   பான்ஸ்வாடி  ஆஞ்ச்நேயர் கண்களிலிருந்து நீர் வழிந்ததாக செய்தி பத்திரிகைகளில் வந்தது
குன்றேற  படிக்கட்டுகள்


விக்கிரகங்கள்  பிரதிஷ்டை  செய்த இடம் 


மேல் தளத்தில் ஆஞ்ச நேயர் படம் 
மஹாலக்ஷ்மி சிலை 


விநாயகர் 
ராம லக்ஷ்மண சீதா 



லக்ஷ்மி


வீர ஆஞ்சநேயர் சிலை