ஹிஸ்டரியும் மித்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிஸ்டரியும் மித்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 நவம்பர், 2019

சரித்திரம் மாற்றப்படுகிறதா



சரித்திரம் மாற்றப்படுகிறதா
 -------------------------------------------

ரசியல் பதிவுகள் எழுதக்கூடாது  என்றிருந்தேன் இது அரசியல் பதிவா எனக்கு அப்படி தெரியவில்லை  சமீப காலமாக சரித்திரத்தையே மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன 8-11-2019 ஹிந்து நாளிதழில் கரன் தாப்பரின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்எவ்வாறு சரித்திர நிகழ்வுகள்  மாற்றப் படலாம் என்பதின் இன்சைட்கிடைத்தது  வல்லபாய் படேலுக்கு அர்ப்பணம்  என்னும் வீதம்  காஷ்மீரின் ஷரத்து 370வல்லபாய் படேலின் கருத்துக்கு எதிரானது என்னும் வகையில் அவரது பிறந்தநாளில் ,அதை ரத்துசெய்த செயலுக்கு காரணம்காட்டினார்கள் பிரதமர்மோடியும் அமைச்சர் ஷாவும்  அது எவ்வளவு தவறு என்று அந்தக் கட்டுரை கூறுகிறது ஆர்டிகிள் 370ஐ நீக்குவதே படேலின் கனவாக இருந்தது என்றும் அங்கலாய்த்திருக்கிறார்கள்  அது சரி எப்படி நிகழ்வுகள்மாற்றி  உரைக்கப்படுகின்றன என்பதற்கு இதுவுமொரு உதாரணம் ஸ்ரீநாத் ராகவன்  அந்த 370 ஆர்டிகிளை கான்ச்டிட்யூஷனில் கொண்டுவரும் முகாந்திரமான முதல்  மீட்டிங் படேலின் வீட்டில் 1949ம் ஆண்டு மேமாதம் 15 -16 தேதிகளில்  நடந்தது  ஜம்மு காஷ்மிர் பிரதமர் ஷேக் அப்துல்லாவிடம்இது பற்றி பேச அப்போதைய  மந்திரி N G  AYYANGAR ஒரு ட்ராஃப்ட் தயார் செய்துஅதை படேலின் கவனத்துக்கு  கொண்டு வந்து  அது படேலின்  ஒப்புதல் பெற்றால் தான் ஜவஹர்லால்ஜி அப்துல்லாவுக்கு தெரிவிப்பார் என்றும் கூறி இருந்தார் ஆர்டிகிள் 370ம் மற்ற காஷ்மீர் பற்றிய ஷரத்துகளும் படேலின் ஒப்புதல் இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும்  என்பதே முக்கியமாக அறியப்பட வேண்டியது படேலுக்கு மறுக்க உதவும்வீட்டோ தான் அது திரு ராகவன்   டெலிக்ராஃப் க்கு ஆகஸ்ட்  13 ம் நாள் 2019 ம் ஆண்டு கூறியதில் ஷரத்து 370 முழுக்க முழுக்க படேலுடையது என்றிருக்கிறார்  காங்கிரஸ்  லெஜிஸ்லேச்சர் பார்ட்டியை ஆர்டிகிள் 370 ஐ ஒப்புக்கொள்ளும்  படியும் செய்திருக்கிறார்
அக்டொபர் 1949ல்  நேரு அயல் நாட்டுக்குச்சென்ன்றிருந்தபோது படேல் ஆக்டிங்க் பிரதமராகஇருந்தபோது  ஷேக் அப்துல்லா இந்தமாதிரியான விசேஷ  ஷரத்துகளுக்காகபேசிய போது படேல் எந்தமாற்று கருத்தையும் கூறவில்லை  இவற்றிலிருந்து படேலுக்கு எந்தமாற்றுக் கருத்தும் இருக்கவில்லைஎன்றும் தெரிகிறது வல்லபாய் படேலுக்கு ஒருமிகப்பெரிய சிலைஅமைத்து படேலுக்கு தனி பெருமை அளித்து தங்களில்  ஒருவராகக் காட்டி சொந்தம் கொண்டாடுகிறார்கள்  ஆனால் சரித்திரத்துக்கும் MYTH க்கும்   வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள் படேலொரு தேசிய தலைவர்  அவர்புகழ் பரப்ப எதுவானாலும் செய்யட்டும் ஆனால்  சரித்திரத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டாமே
அண்மைக்கால சரித்திரமே இப்படி என்றால் நினைவு இல்லாதிருக்கும்  பழங்கால சரித்திரம் பற்றிக்கேட்க வேண்டாம்