இன்னும் ஒரு தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்னும் ஒரு தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஏப்ரல், 2019

மழை விட்டும் தூவானம்,,,,,,,,,


                                   மழை விட்டும் தூவானம்..................
                                  --------------------------------------------------
தமிழ்நட்டிலும் இங்கு பெங்களூரிலும் நாடாளுமன்றத் தேர்தல்  நடந்து முடிந்து விட்டதுமுடிவு தெரிய இன்னும்  ஒரு மாதத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும்  மழை விட்டும் தூவானம் விடாது போல,
முதலில் தேர்தல் குறித்த சில வார்த்தைகள் முதலில் இந்த தேர்தல் முறையிலேயே நம்பிக்கை இல்லை பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும்  என்பதே நோக்கம் ஒரு ஹைபதெடிகல் கேஸ் மூலம் விளக்க  முயல்கிறேன்   ஆயிரம் பேர்  கொண்ட ஒரு இடத்துக்கு தேர்தல் நடக்கிறது என்றால்  ஐநூறு பேருக்கும்மேல் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பெரும் பான்மையினரின்  ஆதரவு  இருகிறது என்று எடுத்துக் கொள்ள முடியும்  ஆனால் நடை முறை அப்படி இருக்கிறதா ? ஆயிரம்பேரில் வாக்களிப்பவர்கள் அதிகபட்சமாக  700 பேர் இருப்பார்களா  இந்த எழுநூறு பேர் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுபவர் ஐநூறு வாக்கு பெறு கிறாரா என்பதே கேள்வி இந்த700 பேரின் வாக்குகள் குறைந்தது நான்கு பேராவது   பிரித்துக்கொள்கிறார்கள்என்று வைத்துக் கொண்டால் அதிக பட்சமாக முன்னூறு நானூறு  வாக்கு பெற்று தேர்வாக வாய்ப்பு உள்ளது  அதாவது இருக்கும் ஆயிரம் வாக்காளார்களில் அறுநூறு  எழுநூறு பேரின்வாக்குகள் வெற்றி பெற்றவருக்கு இல்லை  இது எப்படி பெரும்பான்மை வெற்றி யாகும் இதுவே தேர்தல் முறையின்  நம்பகத் தன்மைக்கு சவால் எது எப்படியோ போகட்டும்  இந்தமுறையில் தேந்தெடுக்கப்படுபவர்  பெரும்பானமை என்னும்பெயரில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள் அவர்களது வார்த்தை சாதுர்யத்தினால்கழுதை குதிரையாகலாம்
நமக்கு கிடைப்பது இதுதான் என்று  திருப்தி அடைவதே சரி பாஜகவின்   தலைவர்களில் நல்லவர் என்று வாஜ்பாயே ஐச் சொல்லலாம்  அவர் அன்பை விளைக்க முயன்றார்  கோத்ரா கலவரம் போது மோடி குஜராதின்   முதலமைச்சர்  வாஜ்பாயே இந்தியப்பிரதமர்  ஒரு முதலமைச்சராக மோடி ராஜ தர்மத்தைக்கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்ஆனால் மோடி செவி சாய்க்கவில்லை  வாஜ்பாயேயும் ஒரு ஆர் எஸ் எஸ்  பிரசாரக் காகவே துவங்கினார்  ஆனால் அவருக்கு முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சி இருக்கவில்லை லாஹோர் பேருந்து  செர்வீசைத் துவக்கி அதில் பயணமும்செய்தார்
 வாஜ்பாயேக்கு இண்டெலிஜெண்ட் தகவல் இருந்தது கோத்ரா ரயில் எரிப்பில் இறந்தவர் சடலங்களை  அஹமதாபாத்  வீதிகளில் எடுத்து ஊர்வலம் செல்லமோடியின் ஆணை  இருந்தது ஆர் எஸ் எஸும் வி எச் பியும்  ஒரு கலவரம் நடத்த திட்டமிட்டு  முஸ்லிம்களைப் பலிவாங்க திட்டம் இருந்தது அதைஅடக்காமல் வன்முறைக்கு துணைபோன மோடிக்கு ராஜதர்மம் பற்றி போதனை செய்தது செவிடன் காது சங்காயிற்று
 தன்னை நிலை நாட்டிக் கொள்ள  மோடி எந்தஎல்லைக்கும் போவார்
சர்ஜிகல் ஸ்ட்ரைக் கினை தான்தான்நாள்குறித்து நடத்தியதாக கூறியதுபடித்ததுநினைவுக்கு வருகிறதுகாலையில் போய் மாலைக்குள் திரும்பவேண்டும் என்று திட்டமிட்டதாகக் கூறி இருந்தார் சர்ஜிகல் நடத்திய ராணுவத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யவேண்டும்  எபடிசெய்ய வேண்டு என்று கூறும் தகுதியை தனதாக்கிக்கொண்டாரா  மோடி ? நாட்டு மக்கள்  அறியாத சர்ஜிகல் ஸ்ட்ரைக் இருந்ததாகவும் தகவல்
 அவரது பல திட்டங்கள் பலவும்  கடன்  வாங்கியதே   பல முந்தைய அரசின் திட்டங்களை  டிங்கெரிங் செய்து தனதாகக்காண்பிப்பார் இப்போதைய எதிர்கட்சியினர் திட்டம்  மாதம் ரூ 6000 ஒவ்வொரு  குடும்பத்துக்கும் என்பதை கேலி செய்கின்றனர் ஆனால் பலநாடுகளில்  வேலை இல்லாதவருக்கு அரசாங்க dole   இருப்பதாக  அறியாதவர்களா  மேலை நாடுகளில் செயல் படுத்த முடியும்போது இந்தியாவில் ஏன் முடியாது என்பதே என் கேள்வி  நானொரு பொருளாதார  வல்லுனன் அல்ல இருந்தாலும் ஆனல் பொருளாதார வல்லுனர்கள் சொல்படி இந்தச் செலவுக்கு இருப்போரிடம் இருந்து பணம்பெறமுடியும் என்றே தோன்றுகிறது .
ஒரு சாதாரணக் குடிமகனுக்கு யார் ஆண்டாலும் பெரிதாக எந்த மாற்றமும்தெரிவதில்லை  ராமனாண்டால் என்ன ராவணன்    ஆண்டால் என்ன ?
பதிவுலகில் பலரும் தங்கள்  கருத்துகளைத்தவிர்க்கிறார்கள் அதனால் பலன் இல்லை என்னும் எண்ணமாயிருக்கலாம்  எல்லாவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்கும் பலருக்கும்மாகவேநான் இடும் இந்தக் காணொளி