இறந்தபின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறந்தபின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 பிப்ரவரி, 2019

போதிமரம்



                                  போதி மரம்
                                  -----------------
  வயது ஆகும்போது இறப்பைப் பற்றிய எண்ணங்கள் கூடுகின்றன இந்த எண்ணங்களையே  பதிவாக்கினால் என்ன என்று தோன்றியது தோன்றியது செயல் படுத்தினால்,,,,,,,,,,,,,,
அரச குமாரன்  சித்தார்த்தன் வீதியில் போய்க் கொண்டிருந்தாராம்  ஒரு வீட்டின் வாசலில் ஒரெ அழுகைக்குரல் வரக்கேட்டது  என்ன என்று விசாரிக்க அவ்வீட்டில் ஒரு இழப்பு என்று கேள்விப்பட்டாராம் ( சில செய்திகள்  அடியேன்  இட்டுக் கட்டியதாகும் இல்லையென்றால் கதை அப்படி அல்ல என்பார்கள் )  அவர் உள்ளே போய் சமாதானப்படுத்த முயன்றார்  யாருடைய அழுகையையும் நிறுத்த முடியவில்லை  "சாகும்வயசா இவருக்கு குழந்தைகள் இருக்கின்றனவே அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டுமே" என்று என்னவெல்லாமோ சொல்லி மனைவி அழுது கொண்டிருந்தாளாம் அவரைப் பார்த்ததும் அழுகைக்குரல் கூடியது  என்ன செய்வது என்று  யோசித்தவருக்கு  ஒரு ஐடியா தோன்றிற்றாம்
அவரை நான்பிழைக்க வைக்கிறேன்  என்றாராம் ஒரு டம்ளர் நீரை இறந்தவரின்  அருகே வைத்தாராம்    எல்லோரும் ஆவலோடு அவர்முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தனராம் 
இவருக்குப் பதில் யாராவது தன்உயிரைத் தியாகம்செய்ய முன்வருபவர் இந்நீரைக் குடிக்க வேண்டும் இவர் பிழைத்து விடுவார் ஆனால் நீரைப்பருகியவர் இறந்துவிடுவார்  என்றாராம்  எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனராம் வீட்டின்  வயதான தந்தையிடம் மகனைப் பிழைக்க வைக்க அவர்  நீரைப் பருகுவாரா என்று கேட்டதற்கு நான்போனால் என்மனைவியை யார் பார்த்துக் கொள்வது என்று ஒதுங்கி விட்டாராம்இறந்தவரின் அம்மாவுக்கு தன்மகள் நிறை மாசக் கர்ப்பிணி அவளைக் கவனித்துக் கொள்ளும் பணி தனக்கு இருப்பதால்  தன்னால் முடியாது என்றாராம் இறந்தவரின் மனைவிக்கு மீதி இருக்கும்  குழந்தைகளை  வளர்த்து  ஆளாக்கும்  கடமை இருந்தது இப்படியெ ஒவ்வொருத்தரும்  ஒதுங்கி விட்டனராம்
சித்தார்த்தருக்கு  ஒரு உண்மை புரிந்தது இறப்பவரின் இழப்பு ஏற்படுத்தும் கஷ்டங்களே  அழுகைக்குக் காரணம் அன்பு மட்டும் அல்ல காலப்போக்கில்  எல்லாம் மறந்துவிடும்இழப்பு என்பது டெம்பொரரியே  அப்போது மட்டும் அழுகையும் அஞ்சலிகளும்   இருக்கும் யாரும்மறுக்க முடியாத உண்மை  போதிமரம் ஏதும்தேவை இல்லைஉண்மை நிலை உணர