என்றும் நினைவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்றும் நினைவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 நவம்பர், 2020

மனைவிக்கு

 

நான் இவ்வுலகில் உதித்து 82 ஆண்டுகள் உருண்டோடி விட்டன ஒவ்வொரு ஆண்டு  இந்தநாள் எனக்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா

 திருமண நாளும் பிறந்த நாளும்  ஒன்றுதான்  அதெப்படி பிறந்த நாளூம் மண நாளும் ஒன்றாக இருக்கும்  நான் சொல்ல வருவது 11 நவம்பர் நான் பிறந்தநாள் ஆனால் ஆண்டு 1938 நான் மண்ந்தது 11 நவம்பர் ஆனால் ஆண்டு 1964  இந்த நாளை நான் இண்ட்ராஸ் பெக்ட் செய்ய உபயோகிப்பேன்  இந்த முறை என்மனைவிக்கு அர்ப்பணம்செய்கிறேன் என்னை மாதிரி ஒரு பிரகிருதியோடு 56 ஆண்டுகள் குப்பை கொட்டுவதென்ன லேசுப்பட்டதா அவளுக்கு நான் சமர்பிக்கும்  பாடல் வரிகள் இதோ

 எங்கள் மண நாளில் அவளுக்கும் வாழ்த்து சொல்வது கடமையல்லவா 


ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்

என் கைப்பிடித்தவளைக் காணும்போதெல்லாம்

என்  மனம் ஏனோ அல்லல் படுகிறது

வெறும்  களிமண்ணாய் வந்தவளை நன்கு பினைந்து

குயவன்  கைப் பானையாய் வளைத்துச் செதுக்கினேன்

எனப் பெருமைப் படுவாள் பாவம்

அவள் அறிய மாட்டாள் ஐம்பத்து ஆறு  ஆண்டுகள்

என்னுடன் இருந்தது எத்தனை அரிய செயல் என்று

இன்று ஓர்க்கிறேன் தாயில்லா என்னைத் சேய் போல் கவனித்தாள்

தாரமும் ஒரு தாய்தானே

   அன்னையவளைத்  தேடி நான் அலைந்தபோது

சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே -,

நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,

தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.

 

யாதுமாகி  நின்றாள்.. தாய்தன்னைக் காணாதவன்

 தாரமாக  வந்தவளை நெஞ்சமெலாம் 

நிரப்பி ,   சஞ்சலங்கள் நீக்கிய  சேயானேன்.

 .

பிள்ளையாய்ப்  பிறந்து ,பாலனாய் வளர்ந்து

காளையாய்க்  காமுற்றுஎனதவளைக் கைப்பிடித்து

இளமை ஒழிந்து  மூப்புறும்  நிலையில்

 எல்லாம் செத்துநாளை  எண்ணுகையில் 

எனக்கு நானே  அழாதிருக்க,

 

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்

கரைபுரளபூக்கின்ற  புன்னகையால் ,

ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 

அடங்கவே  அளித்தருளி அன்னையாய்

,என்னை ஆட்கொள்ள  வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய் வாழி வாழியவே


வெறும்   வார்த்தைகள் கூடவே ஒரு டாப்லெட் டும்( மருந்தல்ல) கொடுத்தேன்