எழுத்து காணொளி ஒரு ஒப்பீடு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்து காணொளி ஒரு ஒப்பீடு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 நவம்பர், 2014

கடவுளுடன் ஒரு நேர்காணல்


            கடவுளுடன் ஒரு நேர் காணல் ( ஒரு புலம்பல் பதிவு.)
          ---------------------------------------------
 எனக்கு அண்மையில் ஒரு காணொளி அனுப்பப் பட்டிருந்தது. வித்தியாசமான எதையும் பகிரும் எனக்கு  இதைக் கண்டவுடன் நான் முன்பு பதிவிட்டிருந்த ;கடவுளுடன் ஒரு உரையாடல்’ என்னும் பதிவு நினைவுக்கு வந்தது. அதை வெளியிட்ட மாதமும்  வருடமும் நினைவுக்கு வரவில்லை. ஏறத்தாழ ஐநூறு பதிவுகளுக்கிடையில் அதைத் தேடுவது சிரமமாக இருக்கவே கூகிளை நாடினேன். தேடு பகுதியில் தமிழில் “கடவுளுடன் ஒரு உரையாடல்” என்று தட்டச்சு செய்தேன் உடனே என் பதிவு வந்தது ஆச்சரியமில்லை. ஆனால் அதே தலைப்பில் இன்னொருபதிவர் எழுதி இருந்ததும் கண்டேன். அதைப் படித்துப் பார்க்கும்போது  என்னுடைய பதிவே வெகு சில மாற்றங்களுடன் எழுதப் பட்டிருந்தது . நான் எழுதியது நவம்பர் மாதம் 2011 ம் ஆண்டு.இந்தப் பதிவு ஃபெப்ருவரி 2012-ம் ஆண்டு.
நாம் பல விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்கிறோம். பல செய்திகள் நம் எழுத்துக்கு வித்தாகின்றன. கருத்துக்கள் ஒரு போல் இருப்பதை அதிகம் லட்சியம் செய்ய முடியாது. ஆனால் வார்த்தைகள் மிகச் சில மாற்றங்களுடன் என் பதிவையே அச்சு அசலாக ஒத்திருந்தது வேதனை அளித்தது. நான் என் எழுத்துக்கு காப்புரிமை பெற்றதில்லை. ஆனால் அதற்காக இப்படியா. ?
 இந்தப் பதிவு ஒரு காணொளி.நான் அன்று எழுதியது ஒரு வார்த்தை விளையாட்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க லிங்க் கொடுக்கிறேன் ”இங்கே” கூகிளில் தமிழில் “கடவுளோடு ஒரு உரையாடல் என்று தட்டச்சு செய்தால் இரண்டு பதிவையும் பார்த்து வாசகர்களே ஒரு முடிவுக்கு வரலாம். மீண்டும் கூறுகிறேன். நம் எழுத்துக்களுக்கு வித்து நாம் எங்கோ படித்த அல்லது அனுபவித்த விஷயங்களில் இருக்கலாம். கண்ணதாசன் கவிதைகள் பலதும் இதற்கு எடுத்துக் காட்டாக இருக்கும்.
என்ன சொல்ல .? மனம் வேதனை அடைகிறது என்பது தவிர. .இப்போது காணொளியைக் காணுங்கள். கருத்திடுங்கள்.கடவுளின் வியாபிப்பைக் காட்டும் படங்கள் என் முந்தைய பதிவையும் படித்துப்பாருங்கள்(லிங்க் கொடுத்திருக்கிறேன்.)

   .