எனக்கும் சமையல் செய்யத் தெரியுமே மம்மி......! ------------------------------------------------------------------
2014 ஆம் ஆண்டு ஜூன்
மாதம் ஒரு பதிவு எழுதி இருந்தேன் ஒரு நாள் பொழுது என்னைவிட்டு என் மனைவி கோவிலுக்குப் போய் இருந்தாள் முதலில் ஒரு
திரைப்படத்தில் ஜனக ராஜ் கூறியது போல் :தங்கமணி ஊருக்குப் போயிட்டா என்று நினைத்து
மகிழச் செய்தாலும் தனிமை என்னை வாட்டுவதை எழுதி இருந்தேன் அதைத் தவிர்க்கும்படி
சில ஆலோசனைகளை பின்னூட்டத்தில் ஜீவி எழுதிய நினைவு
இந்த முறை என்னை விட்டு என் மனைவி ஒரு வாரகாலம் அவளது உடன்
பிறப்புகளுடன் ஒரு நிலரெஜிஸ்ட்ரேஷன்
விஷயமாகக் கேரளம்
சென்றிருந்தாள் எனக்கும் ஒரு பாகேஜ் மாதிரி கூடப் போக
விருப்பமிருக்கவில்லை. நான் தனியே இருந்து
கொண்டு மேனேஜ் செய்து கொள்கிறேன் என்று
சொல்லி அனுப்பி விட்டேன் அவளும் அவளது
உடன்பிறப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியாய்
இருக்க நான் தடையாய் இருக்கக் கூடாதல்லவா
நான் தனியே இருக்கக் கூடாதாம்
மகன்களிடம் போயிருக்கச் சொன்னாள்
எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை என் பேரன் சென்னையில் இருந்து
வந்திருந்தான் என் கூட இருக்க, இரண்டு மூன்று நாட்களுக்கு என் இளைய மகன்
வந்திருந்து கூடத்தங்கினான் மொத்தத்தில் தனியே நான் விடப்படவே இல்லை என்ன எதுவாயிருந்தாலும் மனைவி அருகாமையில்
இல்லாதது வெறுமை உணர்ச்சியையே தந்தது என்
மனைவிக்கு நேரத்துக்கு நேரம் அவள் செய்து
தருவது போலாகாது என்னும் எண்ணம் ஒரு
கவலைஉணர்வைத் தந்திருக்கும் ஆனால் எனக்கோ நான்
ஃபியர்ஸ்லி இண்டிபெண்டெண்ட் என்னும்
எண்ணமே. மேலும் என் தீரடிகல்
குக்கிங் எக்ஸ்பெர்டைசை
வெளிக்கொண்ர இது ஒரு வாய்ப்பு என்றும் நினைத்தேன் என்மேல் எனக்கு அளவுகடந்த நம்பிக்கை உண்டு
ஆனால் இந்தப் பாழாய்ப் போன உடல் ஒத்துழைக்குமா என்றும் சந்தேகமெழுந்தது
என் மனைவி ஊருக்குப் போய் இருந்தநேரம் என்நண்பனின் மனைவி அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாள் மைசூரில்
ஏதோ பூஜை என்று வந்தவள் இரண்டு நாட்கள் இருந்துமைசூர் போனாள் பிறகு என் மனைவி வந்தபின்பே வந்து சில நாட்கள் தங்கினாள்
ஊருக்குப் போகும் முன்
மகராசி இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்திருந்தாள் அடுக்களையில் எனக்குப்
பணி செய்ய எந்தப் பொருள் எங்கிருக்கிறது என்று தெரியாதது சிரமம்கொடுத்தது எந்த
வேலையிலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும்
என்று நினைப்பவன் நான் அந்தந்த பொருளுக்குஅந்தந்த இடமென்று இருக்க வேண்டும்
இதில் எனக்கும் என் மனைவிக்கும்
நிறையவே வித்தியாசங்கள் இருக்கும்
என்பதாலேயே கிச்சனுக்குள் நான் போவதை அவளும் விரும்புவதில்லை எனக்கும் ஒத்து வராது. ஆனால்
இப்போது வேறு வழி இருக்கவில்லை காலையில்
எழும்போதே இன்றைக்கு இன்னின்ன வேலை என்று
திட்டமிட்டுக் கொள்வேன் முதல் நாள்காலையில்
காப்பிக்கு பெர்கொலேட்டரில் எவ்வளவு தண்ணீர் எவ்வளவு காஃபிப் பொடி என்பதிலேயே சந்தேகம்
தொடங்கியது இருந்தாலும் எல்லாம் ஒரு உத்தேசமாக செய்யத் தொடங்கினேன் சும்மா சொல்லக் கூடாது காப்பி அருமையாக வந்தது
என்பேரனும் மகனும் அமெரிக்க நண்பியும் செர்டிஃபிகேட் கொடுத்தனர் பிறகென்ன இட்லியும்
மிளகாய்ப்பொடியும் தக்காளி கொத்சும் என
அமளி துமளிஆயிற்று. ஒரு நாள் பொங்கல். ஒருநாள் உப்புமா எனக் காலை உணவும் வெண்டைக்காய் சாம்பார் முருங்கைக்காய் சாம்பார்
தால் உருளைக்கிழங்கு ஃப்ரை பீட்ரூட் பொறியல் காரட் பொறியல் என்று நாள் தோறும்
வித்தியாசமாய் சமைத்துப் பார்த்தேன் சும்மா சொல்லக் கூடாது எல்லாமே நன்றாய் வந்தது
ஆனால் பதிவுலகில் சமையல் ஜாம்பவான்களுக்கு இது பெரிதாகத் தெரியாது
சின்ன வயதில் கேட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
(ஒருவன் ) ABCD படிக்கிறேன் EFGH எழுதறேன் ஒரு ஆஃபிசர் போல நடிக்கிறேன் என்
ஹஸ்பண்ட் சொன்னது போலச் செய்யறேன்
(மற்றவன் ) ஏன் இந்த படிப்பு நமக்கு அதனால் என்னபலன் இருக்கு ஆம்பளை பொம்பளைப் பேச்சைக் கேட்பதால்
அவமானமாக இருக்கு
என்னும் ரீதியில் போகும்
அந்தப்பாட்டு அது ஏன் இப்போதுநினைவுக்குவரவேண்டும்?
இன்ன
வேலைக்கு இவ்வளவு நேரம் என்பதே
தெரியவில்லை. சமையல் செய்வது சொப்பு வைத்து விளையாடுவது போல் என மனைவியைக் கேலி செய்திருக்கிறேன் சமையல் வேலை
எல்லாம் முடிந்து வெளியே வர ஒன்றரை மணிநேரம்
ஆகிறது, வாஷிங் மெஷினில் துணி
போட்டு எடுத்துக் காயப்போடல் மேலே தண்ணீர் தொட்டியில் நீர் ஏற்றி நிரைத்தல்
என
நேரம்போனதே தெரியவில்லை
எல்லா வேலைசெய்வதிலும் ஒரு திருப்தி இருந்தது ஆனால் இதேகதியில் ஏழு நாட்கள்
என்பதும் மலைப்பாய் இருந்ததுதொலைக்காட்சி சீரியல் என்கணினி வேலைகள் என்று பொழுது
போவதே தெரியவில்லை. அப்போதே என் தளத்துக்கு ஒரு பதிவு என்னும் எண்ணமும் வந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெனு என்று திட்டத்துடன் செயல்பட்டேன்
என் அமெரிக்க நண்பிக்கு ஒரே ஆதங்கம் அவரை சமையலறையில் நான் விடவில்லை. என் மகன்
எனக்கு உதவுகிறேன் பேர்வழிஎன்று எடுத்தபொருட்களை
இடம் மாற்றி வைத்துவிடுவான் 23 ம் தேதி போன மனைவி 29ம்தேதி திரும்பினாள் அவளோடு தொலைபேசியில் உரையாட முடியாதபடி அங்கு
சிக்னல் ப்ராப்ளம் 28ம் நாள் நான்
வைத்திருந்த சாம்பார்
பொறியலில் சிறிது எடுத்து
வைத்திருந்தேன் மறு நாள் வந்ததும் சுவை பார்க்கட்டுமே என்றுதான் நன்றாக இருக்கிறது என்று சொன்னாள் ஆனால் இதையெல்லாம் டாப்
செய்வதுபோல் இருந்தது அடுத்த நாள் நான்
எவ்வளவு புளி உபயோகிக்கிறேன் பருப்பு
போடுகிறேன் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தது
நான் செய்து வைத்திருந்த சாம்பாரும் பொறியலும்
நன்றாக இருந்ததே காரணம்
இதையெல்லாம் ஒரு மாற்றுக்குச் செய்யலாம் ஆனால் இதுவே வாழ்க்கை என்று இருக்கும் மனைவியிடம்
என் மதிப்பும் அன்பும் கூடுகிறது என் மனைவிக்கு நான் எந்த வேலையும்
செய்யக் கூடாது என்னும் எண்ணம் தீவிரமானது
அப்படிப்பட்டவள் நான் தனியே ஒரு
வாரகாலம்மானேஜ் செய்ததை சிலாகித்துப்பேசி
இருக்கிறாள்
அதெல்லாம்போகட்டும் இதில் நான் கற்றுக்கொண்டதுஎன்ன? ஒரு வேளை god
forbid நான் தனியே இருக்கும் நிலை வந்தால் சமாளித்து விடுவேன் என்று எனக்குப் புரிந்திருக்கும் என்றும் என் மனைவிக்குத் தெரிந்திருக்கும் என்றும் தோன்றுகிறது