பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்
----------------------------------------------------------
வாழ்க்கையில் என்றாவது ஒருவன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியை நாடுவது முடியாத
காரியம்.
--- யாரோ ---
பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல் செய்யவேண்டும் .சிலர்
மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல.
--- ஆஸ்கர் வைல்ட்.---
பணத்திற்காக திருமணம் செய்யாதே. அதைவிட எளிதில் கடன்
கிடைக்கும்
---ஸ்காட்டிஷ் பழமொழி---
நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப் படமாட்டேன். எனக்குத்
திருமணமாகி இரண்டு வருடமாகிறது.
-----சாம் கினிசன்—
பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம் அதிகம். அவர்கள் தாமதமாகத்
திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம் இறக்கிறார்கள்,
---எச். எல்
.மென்கென் ---
புது மணத் தம்பதிகள் புன்னகைக்கும்போது ஏன் என்று
புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது ஏன் என்று தோன்றும்.---யாரோ--
காதலுக்குக் கண் இல்லை. கலியாணம் கண் திறக்க வைக்கும்.--யாரோ--
மனைவிக்குக் கார் கதவை ஒருவன் திறந்து விடும்போது. ஒன்று
நிச்சயம் அது புதிய கார் அல்லது அவள் புதிய மனைவி.
நான் என் மனைவியை எங்கு அழைத்துச் சென்றாலும் தவறாமல்
வீட்டுக்கு திரும்பி வந்து விடுகிறாள்.
நான் என் மனைவியை எங்கள் திருமணநாள் விழாவுக்கு எங்கு போக வேண்டும்
என்று கேட்டேன். எங்கானாலும் இதுவரைப் போகாத இடத்துக்கு என்றாள். அப்படியானால் “
சமையல் அறைக்கு ?”
என்றேன்.
-----யாரோ--
எப்பொழுதும் என் மனைவியின் கையை விட மாட்டேன். விட்டால்
ஷாப்பிங் போய்விடுவாள்.
குப்பைத் வண்டி பின்னால் ’ நான் தாமதமாகி
விட்டேனா?’ என்று
கேட்டுக் கொண்டு ஓடிய என் மனைவி பின்னே ஓடிச் சென்ற நான்,“ இல்லை . ஏறிக்கொள் ‘
என்றேன்.
அவன் திருமணம் செய்து கொள்ள ஏன் பயப் படுகிறான் என்று
சொன்னான். திருமண மோதிரம் சிறிய கை விலங்கு போல் தெரிகிறதாம்
”உன் மனைவி
முன் வாசலில் இருந்தும் உன் செல்ல நாய்
பின் வாசலிலிருந்தும் அனுமதி வேண்டி இரைந்தால் யாரை முன்னால் உள்ளே விடுவாய்?” . ”நிச்சயமாய் என்
நாயை அது அனுமதிக்கப் பட்டவுடன் குரைப்பதை நிறுத்தும்.” ----- யாரோ----
ஒருவன் ஒரு வேண்டுதல் கிணறுக்குள் வேண்டிக் கொண்டு சில்லறையை
வீசினான். அவன் மனைவியும் வேண்டுதலுக்காக கிணற்றுக்குள் எய்யிப் பார்த்தபோது தவறி
கிணற்றுக்குள் விழுந்து விட்டாள். அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். “ அட...
இவ்வளவு சீக்கிரம் வேண்டுதல் நிறை வேறி விட்டதே “
( புன்னகை ஒரு சிறந்த நகை. இதைப் படிப்பவரும் அதை
அணிந்து கொள்ளட்டுமே )