நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 நவம்பர், 2020

நன்றி சொல்

நன்றி சொல் 

 

’ எதற்கெல்லாம் நன்றி தெரிவிப்பது ?” 

”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும் இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,

உலகில் இருக்கும் மக்களில் 75% மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல். இன்று காலை உறக்கம் விழித்து ஆரோக்கியத்துடன் இருந்தால் அதற்கு நன்றி சொல். யுத்த பயம் இன்றி, சித்திரவதைக் கொடுமை இன்றி, சிறைச்சாலையில் இல்லாமல் சுதந்திர மாக இருந்தால் அதற்கு நன்றி சொல். நீ நினைத்த கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப் பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல். உன் தாய் தந்தையர் உயிருடன் இருந்து இன்னும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு நன்றி சொல். கைகால்கள் நன்றாக இருந்து எல்லாப் புலன்களும் உன் கட்டுக்குள் இருந்தால் அதற்கு நன்றி சொல் .உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால் அதற்கு நன்றி சொல். ஏனென்றால் இதையெல்லாம் இல்லாதவர்கள் மத்தியில் நீ மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதற்கு நன்றி சொல் இதையெல்லாம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நீ படிக்கும் வாய்ப்பே இல்லாதவரை விட நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல்

 

அதெல்லாம் சரி. நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.?

இந்தப் பேரண்டத்தில் நீ துகளினும் சிறியவன் உன் பிறப்போ இறப்போ உன்னால் நிர்ணயிக்கப் படுவதில்லை.இருப்பும் முடிவும் உன் கையில் இல்லாதவரை நான் எனும் அகந்தை தேவை இல்லாதது. சொல்லப் போனால் எல்லாவற்றுக்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். அது கடவுளுக்காக இருக்கலாம், இயற்கைக்காக இருக்கலாம். ஆனால் உன்னை மீறிய சக்திக்கு என்று புரிந்தால் சரி

 

 

இதையெல்லாம் படித்ததில் தலைவலி வந்தால் அதை எந்த மருந்தும் இல்லாமலேயே குணப் படுத்த முடியுமாம். எங்கோ படித்தேன். வழக்கம்போல்

பகிர்கிறேன். மூக்கில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியே நாம் சுவாசிக்கிறோம். தலைவலி வந்தால் வலது நாசித் துவாரத்தைமூடி இடது துவாரத்தால் சுவாசித்தால் தலைவலி போய் விடுமாம்

அதேபோல் சோர்வுற்றிருக்கும்போது இடது துவாரத்தை மூடி வலது நாசித் துவாரத்தால் சுவாசித்தால் சோர்வு போய் விடுமாம். இதுவரை நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தலைவலியும் வரவில்லை. சோர்வும் வரவில்லை. சோதிப்பவர்கள் பலன் குறித்து தெரியப் படுத்தலாமே

ஒரு வம்பர் கேட்டார்  மூக்கின்   இரு துவாரங்களையும் அடைத்துவிட்டால் ,,,,

 




ஞாயிறு, 22 நவம்பர், 2015

வெக்கலாமா பெட்.....?


                                              வெக்கலாமா பெட்.........?
                                              ------------------------------------



நான் வீடுகட்டி அதை முதன் முதலில் வாடகைக்கு விட்டேன்  நாங்கள் திருச்சியில் இருந்தோம் என் மூத்த மகனுக்குத் திருமணம் முடிந்து அவனுக்கு பெங்களூரில் வேலை மாற்றல் ஆகியது. சொந்த வீடு இருக்கும் போது வாடகை வீட்டுக்கு ஏன் போகவேண்டும்  ஆகவே என் வீட்டுக் குடித்தனக் காரரை வீடு காலி செய்யக் கேட்டுக் கொண்டேன்  பெங்களூரில்  குடித்தனக் காரர்களை காலி செய்ய வைப்பது மிகவும் சிரமம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் என் வீட்டுக் குடித்தனக்காரர் பிரச்சனை ஏதும் செய்யாமல் காலி செய்தார் அவரது இரண்டாம் மகளுக்குத் திருமணம் என்று பத்திரிக்கை வைக்க கணவனும் மனைவியுமாக வந்திருந்தனர். பல நாட்களுக்குப் பிறகு பார்ப்பதால் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்  அவர் விடை பெற்றுச் செல்லும்  போது வாசலில் இருந்து ஒரு அழைப்பு மணி அடித்தது வந்தவர் தன்னைப் பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக்  கொண்டார்வந்தவருடன் என் பழைய குடித்தனக் காரரும் சில நிமிஷங்கள் பேசிப் பின்  சென்று விட்டார். வந்தவர் யார் என்று சொல்லவில்லையே.

 நான்பாம்பே அருகில் இருக்கும் அம்பர்நாத் என்னும் இடத்தில் பயிற்சி பெற்றவன் என்று எழுதி இருக்கிறேன் அங்கு பயிற்சி பெற்றவர்கள் வருடம் ஒரு முறை இந்தியாவின் வெவ்வேறு இடங்களில்  ஆலும்னி மீட் என்று கூடுகிறார்கள். இந்த முறை பெங்களூரில் ஃபெப்ருவரி மாதம் கூடுகிறார்கள் என்றும்  எழுதி இருந்தேன் அப்படிக் கூடுபவர்களின் வயது சராசரி எழுபதுக்கும் மேல் இருக்கும்  இந்த வயதிலும் ஓடியாடி விழா எடுக்கத் துணியும் நண்பர்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள் எங்கள் பாட்சில் பயிற்சி எடுத்தசிலரும் ஆர்கனைசிங்  கமிட்டியில் இருக்கிறார்கள் சூவனீருக்கு  என்னிடம் பதிவுகள் கேட்டார்கள்.  நானும் எழுதிக் கொடுத்திருக்கிறேன்  அந்தக் கமிட்டியின் காரியதரிசியாக  பொறுப்பேற்று இருப்பவரை நான் மின் அஞ்சலில்  தொடர்பு கொண்டு என்னை சந்திக்க முடியுமா என்று கேட்டேன்  அவரும் அவசியம் வருவதாகக் கூறினார். வரும் முன்பு தொலை பேசியில் தெரிவிப்பதாகவும் கூறினார்  அவர்தான் அன்று வந்தவர். ஆனால் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கவில்லை.  அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார் நானும்  என் மனைவியும் அவரை வரவேற்றோம்  அவர் என்னைவிட நான்காண்டுகள் ஜூனியர்.  அம்பர்நாத்தில் சந்தித்திருக்க வாய்ப்பே இருக்கவில்லை.

எப்படி இந்த வயதிலும் ஓடியாடி வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன்  அவர் சுமார் இரண்டு கிமீ தூரம் நடந்துவந்தவர்  எப்படியோ முகவர் தேடி கண்டுபிடித்து வந்திருக்கிறார்.  இவரைத் தெரியுமா அவரைத் தெரியுமா என்று கேள்வி கேட்டுக்கொண்டோம்
என்னையும் ஆலும்னி மீட்டுக்கு வரச் சொன்னார். பார்வைக்கு வயதாயிருந்தாலும் மிகவும்  சுறு சுறுப்புள்ளவராக இருந்தார்  சுமார் முன்னூறு பேர் வர இருப்பதாகச் சொன்னார். வராவிட்டாலும் நஷ்டம் ஏதும் இருக்காது.  ஏன் என்றால் வருகைக்கு  ஆளுக்கு  ரூ 1500-/ ரெஜிஸ்ட்ரேஷனுக்கு முன்  கூட்டியே தரவேண்டும் இரண்டு நாள் நிகழ்ச்சி  முதல் நாள் கூடல்  மறு நாள் பெங்களூரின் முக்கிய இடங்களுக்குச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு.பெரும்பாலும் தம்பதியினரை எதிர்பார்க்கின்றனர்  /எனக்கென்னவோ  முதல் நாள் கூடும்  போது அறிமுகம் தவிர  பாட்டும் டான்சும்  அவரவர் சிறப்புத் தகுதிகளும் காட்ட உபயோகப்படும் என்று தெரிகிறது பலருக்கும் பலரையும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத கூடல்  எந்த அளவு சிறக்கும் என்று தெரியவில்லை ஒரே ஒரு காமன் டினாமினேட்டர் எல்லோரும் அம்பர்நாத்தில் பயின்றவர்கள் என்பது தான்  அநேகமாக எல்லோரும் நல்ல நிலைக்கு வந்தவர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தவர்கள்
நண்பர் என் வீட்டுக்கு வரும்போது மாலை மணி ஏழுக்கும் மேலாகி இருந்தது உணவு உண்ணலாமா என்று கேட்டேன்  மறுத்துவிட்டார் எனக்கானால் வந்தவருக்கு ஏதாவது தரவேண்டும் என்றிருந்தது காஃபி குடிக்கிறீர்களா  என்று கேட்டு என் மனைவி  in a jiffy  காஃபி தயார் செய்துவிடுவார் என்றும் கூறினேன்  என் மனைவி என்னை முறைத்துப் பார்த்ததைகவனிக்காதது போல் இருந்து விட்டேன்  ஓரிரு நிமிடங்களில் காஃபி வந்தது  
 நண்பருக்குக் கொடுத்து அவரும் குடித்தார். அவர் போனபின் என் மனைவி என்னைக் கடிந்து கொண்டாள் ஃபில்டரில் காஃபி போட நேரம் ஆகும் என்றும்  நான் சொன்னதை நிரூபிக்கவே காஃபி ப்ரூவில் தயார் செய்தேன்  என்றும்  கூறினாள் அப்போது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது  ”மனைவி அமைவதெல்லாம் ….” 



நானும் நண்பரும் பேசிக் கொண்டிருந்தபோது  அம்பர்நாத்தில்தான் நான்  டேபிள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொண்டேன்  என்றும்  பயிற்சி முடியும் தருவாயில் ஓரளவு நன்றாக ஆடும் திறன் பெற்றேன் என்றும் கூறினேன்  நண்பர் இப்போது விளையாட வருகிறீர்களா  என்று கேட்டார். நான் என் ரிஃப்லெக்ஸ் எல்லாம்  குறைந்து விட்டதால் ஆடுவது சிரமம் என்றேன்எனக்கும் தான் வயதாகி விட்டது வாருங்கள் விளையாடலாம் ரூ500/- பந்தயம்  என்றார். நான்  என் இரண்டாம் மகன் யுனிவர்சிடி  சாம்பியனாக இருந்தான் என்றும் கூறினேன்  அப்படியானால் அவரோடும் விளையாடுகிறேன் வெக்கலாமா பெட் ரூ.500-/  என்றார்.  உடல் நலம் சோர்வு எல்லாம் பெரும்பாலும்  மனதளவில்தான் என்று இன்னும்  ஒருமுறை பாடம்  கற்றேன்

(12 நாட்களுக்கும் மேலாகிவிட்டது  கணினிப் பக்கம் வந்து.  இடைப்பட்ட நேரத்தில் எழுதுவதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கோர்வைப் படுத்தி எழுதவும் நேரமும் மூடும் வேண்டும்  அதற்கு முன்பாக முன்பே ட்ராஃப்டில் இருந்த பதிவு இது. இந்த நேரத்திலெனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களும் தீபாவளி வாழ்த்துக்களும் தொலைபேசியிலும்  மெயிலிலும் ஃபேஸ்புக்கிலும்  தெரியப் படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கு  என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி....! )