கோவில்களும் சில நம்பிக்கைகளும்
--------------------------------------------------------
என் அண்மைய பதிவு ஒன்றுக்குப் பின்னூட்டமிட்ட நண்பர் ஒருவர் என் பீ எச் இ எல் அனுபவனகளைப் பற்றி எழுதலாமே என்றிருந்தார் அலுவலக அனுபவங்களை விட நாங்கள் இருந்த குடியிருப்பின் சில செய்திகளைப் பகிரலாமென்று தோன்றுகிறது
இந்த மனிதர்களின் அறியாமை மற்றும் மூட
நம்பிக்கை குறித்து கவலைப் படுவதே எனக்கு வாடிக்கையாகி விட்டது. நான்
நடைபயிலும் பூங்காவில் ஒரு சிறிய
மண்மேட்டுக்கு பலரும் வந்து பூவிட்டு. பொட்டு வைத்து தூப தீபங்காட்டி வழிபடுவதை
கண்டு மனம் வருந்தியதுண்டு. அவர்களிடம் அவர்களது அறியாமை பற்றிக் கூற வேண்டும் என்னும்
ஆவலை மிகவும் பிரயாசையுடன் அடக்கி வருகிறேன். நான் மூடப் பழக்கம் என்பது அவர்களது
நம்பிக்கை. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. அதுவே அவர்களுக்கு நிம்மதி என்றால்
எனக்கென்ன.?
எனக்கு இந்த நம்பிக்கைகள் பழக்கங்கள் பற்றி யெல்லாம் எழுதத்
தூண்டுவது எனது சில அனுபவங்களே நாட்டில் பல கோவில்களின் கதைகளைக் கேட்கும் போதுஅவை
யாவும் சுயம்பு மூர்த்திகள் என்றும் அவை யாருடைய கனவிலாவது வந்து அவைகளுக்குக்
கோவில் எழுப்ப கட்டளை இட்டிருக்கும்
நான் இங்கு நடை பயிலும் பூங்காவில் சில நாகர்களின் சிலைகள்
பிரடிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது காண்கிறேன்
அதற்கு சிலர் பால் அபிஷேகம் செய்வதையும் பார்த்திருக்கிறேன் அந்தச் சிலைகளின் மேல் அங்கிருக்கும் சில நாய்கள் உச்சா பொழிவதை கண்டிருக்கிறேன் நாய்களுக்குத் தெரியுமா
நம் நம்பிக்கை எது என்று?
திருச்சியில் குடியிருப்பு வளாகத்தில் எழுப்பப் பட்டிருக்கும் சில கோவில்கள் பற்றி நான் அறிந்ததைப்
பகிர்கிறேன் 1966 வருட வாக்கில்
குடியிருப்பில் கோவில் கிடையாது ஆனால்
கோவில் இல்லா ஊரில் குடியிருக்கலாமா ? சில சத் சங்க நண்பர்கள் ஒரு மரத்தடியில்
இருந்த பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார்கள் பாலகணபதி என்றும்
அழைக்கத் துவங்கினார்கள் ஒரு சில
ஆண்டுகளுக்கு முன் அந்தவளாகத்துக்குச்
சென்றபோது அங்கே வேப்பமரமும் அரசமரமும்
இணைந்திருக்கும் இடத்தில் ஒருபிள்ளையாரைக் கண்டேன் ஆனால் அதுதான் அந்த
இடத்தில் இருந்தஒரிஜினல் பிள்ளையாரா என்று தெரியவில்லை.
நமக்குத்தான் ஒருகடவுள் போதாதே ஆண்டவனை பல ரூபங்களில் வணங்க வேண்டும் அதே வளாகத்தில் ஒரு ஐயப்பன் கோவில் உள்ளது
மலையாளிகளுக்கு ஐயப்பன் இல்லாமால்
இருக்க முடியாதேஇது மட்டும் போதுமா மருவத்தூர் ஆதி பராசக்தி பக்தர்கள் ஒரு சக்தி
கோவிலைக் கட்டி மருவத்தூர் பாணியிலேயே வழிபாடும்
நடக்கிறது முருகனுக்கு கோவில் இல்லாமல் இருக்கலாமா. அருள் நெறித்
திருக்கூட்டத்தார் ஒரு கோவிலை முருகனுக்கு எழுப்பினார்கள் அந்தக் கோவில்
வளாகத்தில் இன்னொரு கோவில் எழுப்ப இடமிருக்கவில்லை. விஷ்ணுபக்தர்கள் பெரும்பாலான
ஐயங்கார்கள்குடியிருப்பின் ஒரு கோடியில் விஷ்ணுவுக்குக் கோவில் எழுப்பி
இருக்கிறார்கள் இதிலெல்லாம் ஒரு
redeeming feature என்னவென்றால் எல்லாக் கோயில்களுக்கும் எல்லோரும் செல்வார்கள். ஆனால் இவையெல்லாம்
மேற்கூறப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.. எங்கும் நீக்கமற
நிறைந்திருப்பதாய் கருதப் படும் ஆண்டவனுக்கு இருக்கும் போஷகர்கள் சாதாரண பக்தர்கள்
அல்ல.இதுதான் UNITY IN DIVERSITY யோ. சர்ச்சும் மசூதியும் கோருமளவுக்கு அவர்கள் எண்ணிக்கை இல்லை என்றே
நினைக்கிறேன்.
இந்த விஷயங்களை சிந்தித்து எழுதிக் கொண்டிருந்த எனக்கு
இன்னொரு சம்பவம்
நினைவுக்கு வருகிறது.தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் ஒரு
எறும்புப் புற்று இருக்க . ஒரு நாள் அவர் மனைவியின் கனவில் அது ஏதோ அம்மனின்
இருப்பிடம் என்றும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கட்டளை வந்ததாம். அது
அரசல் புரசலாகத் தெரிய வர ஒரு சில நாட்களில் அந்த வீட்டுக்கு பக்தர்களின்
எண்ணிக்கை வருகை கூடிக்கொண்டே போயிற்று. ஏறத்தாழ அந்த வீட்டுக்கு ஒரு கோயிலின் அந்தஸ்து வந்துவிட ஏராளமாகக் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து. கட்டுப் படுத்த செக்யூரிடி தேவைப் பட்டது. இதற்குள் அந்த வீட்டு அம்மாவுக்கு அம்மனின் அருள் வந்து பல்லைக் காட்டி நாக்கைத் துருத்தி பயங்கரமாகக் காட்சி அளிக்கத் தொடங்கினார். வேப்பிலையை கடித்து உமிழ்ந்து அதை சிலர் பிரசாதமாகப் பெறுவதும் தொடங்கியது. சமயபுரம் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோர் இங்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. என் மனைவி ஒரு முறை அங்கு சென்று வந்தவர், அதையெல்லாம் கண்டு பயந்தது தெரிந்து அங்கு போகத் தடை விதித்தேன். இதற்கு மத்தியில் அந்த எறும்புப் புற்றை செக்யூரிடி துறையினர் அகற்ற நினைத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் புற்றை அகற்றி அங்கு வருவதற்குத் தடை விதித்தனர்.. நாளாவட்டத்தில் அவர்கள் அந்த வீட்டைக் காலிசெய்து வேறெங்கோ சென்று விட்டனர். எல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
எண்ணிக்கை வருகை கூடிக்கொண்டே போயிற்று. ஏறத்தாழ அந்த வீட்டுக்கு ஒரு கோயிலின் அந்தஸ்து வந்துவிட ஏராளமாகக் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து. கட்டுப் படுத்த செக்யூரிடி தேவைப் பட்டது. இதற்குள் அந்த வீட்டு அம்மாவுக்கு அம்மனின் அருள் வந்து பல்லைக் காட்டி நாக்கைத் துருத்தி பயங்கரமாகக் காட்சி அளிக்கத் தொடங்கினார். வேப்பிலையை கடித்து உமிழ்ந்து அதை சிலர் பிரசாதமாகப் பெறுவதும் தொடங்கியது. சமயபுரம் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோர் இங்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. என் மனைவி ஒரு முறை அங்கு சென்று வந்தவர், அதையெல்லாம் கண்டு பயந்தது தெரிந்து அங்கு போகத் தடை விதித்தேன். இதற்கு மத்தியில் அந்த எறும்புப் புற்றை செக்யூரிடி துறையினர் அகற்ற நினைத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் புற்றை அகற்றி அங்கு வருவதற்குத் தடை விதித்தனர்.. நாளாவட்டத்தில் அவர்கள் அந்த வீட்டைக் காலிசெய்து வேறெங்கோ சென்று விட்டனர். எல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
என்
எழுத்துகளைப் படிப்போர் சிலருக்கு இந்தச் செய்திகள் எல்லாம் பொருட்டாகவே தெரியாதுநான் முன்பே எழுதி இருக்கும்
படி எனக்கென்ன அவரவர் நம்பிக்கை
அவரவருக்கு இருந்தாலும் நிகழ்வுகள் சில்
அவர்களையும் சிந்திக்கத் தூண்டாதா என்னும்
நப்பாசையுமிருக்கிறதே
.