ஊழலுக்கெதிராக....
-------------------------
நாட்டில் ஊழலில்லாத அரசும் அதிகாரிகளும்வேண்டும் என்பதில்
யருக்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. ஆனால் ஊழலுக்கு
எதிராக செயல்படும் ONLY CRUSADERS -ஆக தங்களை பாவித்துக்
கொண்டு,ஏகப்பட்ட சப்தங்களை எழுப்புபவர்கள் ,மக்களை அநியா
யத்துக்கு ஒன்றுமே அறியாதவர்கள் போல் பாவிக்கிறார்கள். .
ஊழலுக்கெதிரான பலமான சட்ட அமைப்புகள் இல்லை என்பது
எல்லோரும் அறிந்ததே. உண்மையில் அந்த மாதிரி ஒரு பலமான
சட்ட மசோதா கொண்டு வரஅல்லவா இவர்கள் பாடுபடவேண்டும்
லோக்பால்போன்ற சட்டமசோதாக்கள் பாராளுமன்றத்தால் நிறை
வேற்றப்பட வேண்டும். பாராளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்
பட்ட 540-க்கும் மேற்பட்ட அங்கத்தினரைக் கொண்டது..இவர்கள்
பல்வேறு கட்சிகளையும் பிரதேசங்களையும் சார்ந்தவர்கள். .
இப்போது UPA-ல்பிரதான அங்கம் வகிக்கும் காங்கிரஸ்பெரும்
பான்மைக் கட்சியல்ல. அவர்கள் மட்டும் நினைத்து எந்த சட்டமோ
திருத்தமோ கொண்டு வர முடியாது. லோக்பால் மசோதா போன்ற
எதுவும் ,பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் படாமல் நிறைவேற்ற
முடியாது. தங்களைக் CRUSADER- களாகப் பாவித்துக்கொண்டு,
அகில இந்தியாவுக்கும் சேர்ந்து குரல் கொடுக்கும் இந்த பஞ்ச
பாண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்.?அரசாங்கம் தயாரித்துள்ள
மசோதாவில் இன்ன குறை, இது சரியில்லை, இது மாற்றப்பட
வேண்டும் என்று பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் பேசி, ஒத்தக்
கருத்தை உருவாக்க வேண்டும். அதை விட்டு, பார்லிமெண்டில்
நம்பிக்கை உண்டு, ஆனால் அதிலுள்ள பிரதிநிதிகளிடம் நம்பிக்கை
இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.?
நாடு இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்
டியது மிகமுக்கியமானது இன்னிலையில் மக்களின்
உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல்பேசுவதும் நடந்து கொள்வதும்
தலைவர்கள் என்று தங்களைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்
செய்யும் செயலாகத்தான் இருக்கிறது. அரசுக்கு எதிராக கருத்து
தெரிவிக்க, கூட்டங் கூட்டி உண்ணாவிரதம் இருப்பதுதான்
வழியா.?
நாம் சுதந்திரம் பெற்று 64- வருடங்கள் முடிந்து விட்டது.உண்மை
யில் ஏழ்மையிலிருந்தும், அறியாமையிலிருந்தும், ஜாதி மத இன
பேதங்களிலிருந்தும் ,போட்டி பொறாமை, பேராசையிலிருந்தும்
சுதந்திரம் பெறவில்லை. அதற்கான வழிமுறைகளில் ஆக்க
பூர்வமாகத் தொண்டு செய்பவர்களை, நிறைகுடங்களாய்த்
தளும்பாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல்
வெறுமே SABRE-RATTLE செய்பவர்களை முக்கியப் படுத்துவது
தவறு என்றே தோன்றுகிறது,
காங்கிரஸைத் தவிர இருக்கும் மற்ற கட்சிகள் அவர்களது
அபிப்பிராயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்களா?ஒத்த
கருத்து ஏதேனும் இருக்கிறதா.?பாராளுமன்ற Standing Committee-ல்
அங்கம் வகிக்கப் போகிறவர்கள் தானே மாற்றுக் கட்சியினரும்.
தீவிரவாதிகளும், உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளும் இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
முன்பே நான் கூறியுள்ளபடி ஊழலுக்கான அடிப்படைக்
காரணங்கள் களைந்தெறியப்பட வேண்டும். சந்தர்ப்பவாதிகளும்
சுயநலமிகளும் அடையாளப் படுத்தப் பட வேண்டும். பிரச்சினை
உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக அணுகப்பட
வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளின் அடையாளங்களாகத்
தங்களை எண்ணிக் கொள்பவர்கள் அந்த நிலையைத் தக்க
வைத்துக் கொள்ள அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.
-------------------------
நாட்டில் ஊழலில்லாத அரசும் அதிகாரிகளும்வேண்டும் என்பதில்
யருக்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. ஆனால் ஊழலுக்கு
எதிராக செயல்படும் ONLY CRUSADERS -ஆக தங்களை பாவித்துக்
கொண்டு,ஏகப்பட்ட சப்தங்களை எழுப்புபவர்கள் ,மக்களை அநியா
யத்துக்கு ஒன்றுமே அறியாதவர்கள் போல் பாவிக்கிறார்கள். .
ஊழலுக்கெதிரான பலமான சட்ட அமைப்புகள் இல்லை என்பது
எல்லோரும் அறிந்ததே. உண்மையில் அந்த மாதிரி ஒரு பலமான
சட்ட மசோதா கொண்டு வரஅல்லவா இவர்கள் பாடுபடவேண்டும்
லோக்பால்போன்ற சட்டமசோதாக்கள் பாராளுமன்றத்தால் நிறை
வேற்றப்பட வேண்டும். பாராளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்
பட்ட 540-க்கும் மேற்பட்ட அங்கத்தினரைக் கொண்டது..இவர்கள்
பல்வேறு கட்சிகளையும் பிரதேசங்களையும் சார்ந்தவர்கள். .
இப்போது UPA-ல்பிரதான அங்கம் வகிக்கும் காங்கிரஸ்பெரும்
பான்மைக் கட்சியல்ல. அவர்கள் மட்டும் நினைத்து எந்த சட்டமோ
திருத்தமோ கொண்டு வர முடியாது. லோக்பால் மசோதா போன்ற
எதுவும் ,பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் படாமல் நிறைவேற்ற
முடியாது. தங்களைக் CRUSADER- களாகப் பாவித்துக்கொண்டு,
அகில இந்தியாவுக்கும் சேர்ந்து குரல் கொடுக்கும் இந்த பஞ்ச
பாண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்.?அரசாங்கம் தயாரித்துள்ள
மசோதாவில் இன்ன குறை, இது சரியில்லை, இது மாற்றப்பட
வேண்டும் என்று பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் பேசி, ஒத்தக்
கருத்தை உருவாக்க வேண்டும். அதை விட்டு, பார்லிமெண்டில்
நம்பிக்கை உண்டு, ஆனால் அதிலுள்ள பிரதிநிதிகளிடம் நம்பிக்கை
இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.?
நாடு இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்
டியது மிகமுக்கியமானது இன்னிலையில் மக்களின்
உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல்பேசுவதும் நடந்து கொள்வதும்
தலைவர்கள் என்று தங்களைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்
செய்யும் செயலாகத்தான் இருக்கிறது. அரசுக்கு எதிராக கருத்து
தெரிவிக்க, கூட்டங் கூட்டி உண்ணாவிரதம் இருப்பதுதான்
வழியா.?
நாம் சுதந்திரம் பெற்று 64- வருடங்கள் முடிந்து விட்டது.உண்மை
யில் ஏழ்மையிலிருந்தும், அறியாமையிலிருந்தும், ஜாதி மத இன
பேதங்களிலிருந்தும் ,போட்டி பொறாமை, பேராசையிலிருந்தும்
சுதந்திரம் பெறவில்லை. அதற்கான வழிமுறைகளில் ஆக்க
பூர்வமாகத் தொண்டு செய்பவர்களை, நிறைகுடங்களாய்த்
தளும்பாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல்
வெறுமே SABRE-RATTLE செய்பவர்களை முக்கியப் படுத்துவது
தவறு என்றே தோன்றுகிறது,
காங்கிரஸைத் தவிர இருக்கும் மற்ற கட்சிகள் அவர்களது
அபிப்பிராயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்களா?ஒத்த
கருத்து ஏதேனும் இருக்கிறதா.?பாராளுமன்ற Standing Committee-ல்
அங்கம் வகிக்கப் போகிறவர்கள் தானே மாற்றுக் கட்சியினரும்.
தீவிரவாதிகளும், உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளும் இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
முன்பே நான் கூறியுள்ளபடி ஊழலுக்கான அடிப்படைக்
காரணங்கள் களைந்தெறியப்பட வேண்டும். சந்தர்ப்பவாதிகளும்
சுயநலமிகளும் அடையாளப் படுத்தப் பட வேண்டும். பிரச்சினை
உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக அணுகப்பட
வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளின் அடையாளங்களாகத்
தங்களை எண்ணிக் கொள்பவர்கள் அந்த நிலையைத் தக்க
வைத்துக் கொள்ள அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.
