ஞாயிறு, 14 ஜூலை, 2013

OLD IS GOLD.....தூசி தட்டி....



                                 OLD IS GOLD.......தூசி தட்டி.....
                                 --------------------------------------



(நான் பதிவுலகில் தவழத் தொடங்கிய பொழுது எழுதியவை யார் கண்ணிலும் படாமல் போனது.இப்போது தூசி தட்டி மீண்டும், பதிவிடுகிறேன்),
                நானும் நீயும்
                -------------
 எந்தன்    உயிருக்குயிர்     நீயே
 
நாடும்    அன்பு     நானோ
 
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
  க
ருத்தின்  ஒளியும்  நானோ
  
நற்பண்ணின்    சுவை    நீயே ---உன்
  
பாவின்   நயமும்   நானோ
  
என்    எண்ணின்   பொருள்   நீயே
  
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !


     எண்ணத் தறியில்
     -----------------

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி   
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |
   
  
     கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
     
   எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
   
    தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
    
   மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |

 
அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
  
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
  
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
 
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |

  
     இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
 
      இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
 
       இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
        இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது

    கண்ட  கனவு  நனவாக  இன்று
   
காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்
   
கயிற்றால்   பிணைக்கின்றேன்கண்ணே
 
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |   




               நம்பிக்கைகள்
                                 --------------------

 நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.---மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை ---- பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை ---- நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை.  நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை. 
---------------------------------------------------------



இயலாமை
-----------------
பிறப்பொக்கும்   உயிர்க்குவாய்  கிழியக்  கூறுகிறோம்
ஏனிந்த   ஏற்றத்தாழ்வு   என்றறிவோமா..?
என்ன   பிழை  செய்தான்   ஏழையாய்ப்   பிறந்தவன் ,
ஏனில்லை   வாழ்வுவாய்ப்பு , உரிமையில்  சமத்துவம் .?
இருப்பவன்   வளமுடன்  உயர்கிறான் ,
அற்றவன்   என்றும்  அடியில்  தேய்கிறான் .
மேலே  செல்வது  கீழே  வரும்புவி  ஈர்ப்பின்  நியதி.
கீழே  உள்ளது  மேலே  செல்ல  யாரென்ன  செய்ய.?
காலச்  சக்கரச்  சுழற்சியில்  தானே  நடக்கும் . --நம்புவோமா ..!


நான்  ஏன்  பிறந்தேன் .?
------------------------
கலாநேசன்   பதிவில்   அழைப்பொன்று ,
கவிதைப் போட்டி  காட்டுங்கள்  திறனென்று,
நான்  ஏன்  பிறந்தேன்,
மூன்று  வார்த்தைகள்  மூன்று வரிகளில்
வருதல்  வேண்டும்அதுவே  விதி.

     
சிறுவயது  முதலே  என்  தேடலின்  வரிகள்;
     
நானும்   எழுதினேன்
     "
நான்  நானாக   இருக்கையில்
     
நீ   மட்டும்  வேறாக
     
பிறந்தேன் (பிறந்து  ஏன் ) பழி தீர்க்கிறாய் "

"
நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும்
நான் படும்  பாட்டை  பகிரவே
வந்து விழுந்த  வரிகள்
நாமெங்கு  பிறந்தோம் , நம் வரவே
ஒரு விபத்தின்  விளைவன்றோ ?
(
பார்க்க  என் பிறிதொரு  பதிவை)

      
நிலையிலா  வாழ்வில்  நான்  எங்குள்ளேன்.?
      
என்  எண்ணில் "நான்" போனால்
      
நலம்  பல விளையலாம்.

நன்கு  பழகிய  நண்பரொருவர்
நலமெலாம்  விசாரித்து  பிரிய  மனமின்றி
பிரியா  விடை  பெற்றுச்  சென்றார்.
மறுநாள்  காலை  வந்தது  சேதி ,
தூங்கச்  சென்றவர்  துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர்   இன்றில்லை
நிலையிலா   வாழ்வில்  என்றுமவர்   இனி
வெறும்  நினைவாகவே  திகழ்வார்.
பெயர் ஒன்று  கொண்டு  புவியில்   திரிந்தவர்
போகையிலே  வெறும்   பிணமே  வெறும் சவமே
கையில்  கடிகாரம்  கட்டினால்
காலத்தை  வென்றவர்  ஆவோமா ?
பிறப்பும்  இறப்பும்  நம் கையில்  இல்லை
இன்றிப்போது  காண்பதே  இறுதிக்  காட்சியாகலாம் .
இருக்கையில்  வேண்டுமா  காழ்ப்பும்  கசப்பும்.?

       
ஏனென்று  கேள்வி  கேள்
       
உன்னை  நீ அறியலாம்,
      
உரைத்தவன்  சாக்ரடீஸ்

      
உண்மை  உணர்வதே
      
வாழ்வின்  நோக்கம்,
      
கூறினான்  காந்தி.

      
அயலவனை  நேசி
     
உன்னிலும்  மேலாக
     
என்றவன்  ஏசு.

உண்மையும்  நேசமும்  ஒன்றாக  இணைந்தால்
பிறந்த  காரணம்  புரியலாம்  ஒருவேளை .
------------------------------------------                                                 
                 



 
 

                                                  
                 









                      


வியாழன், 11 ஜூலை, 2013

அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்...!


                    அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்....!
                      ---------------------------------------------------



சில நாட்களுக்கு முன் துக்கடாக்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில்ஒரு பகுதியில் நான் இந்தியன் (இங்கே சுட்டவும்) என்ற தலைப்பில் நம் மவரின் சில குணாதிசயங்களை குறிப்பிட்டிருந்தேன் நம்மவரில் சிலர் பணி நிமித்தமாகவோ, தாங்களை மேம்படுத்திக் கொள்ளவோ மேலை நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்கா செல்கிறார்கள்.அங்கு சென்று அங்கேயே தங்க நேரும்போது சில அமெரிக்கப் பழக்க வழக்கங்கள் இவர்களிடம் வர வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இவர்கள் தங்கள் வேர்களைத் தொலைக்கிறார்களோ என்னும் அங்கலாய்ப்பில் ”வேர்கள் எங்கே” (இதில் சுட்டவும்) என்று ஒரு பதிவும் எழுதி இருந்தேன். இந்தப் பதிவு இவை இரண்டுக்கும் இடைப் பட்டது.இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில நாட்கள் தங்கவும் செல்பவர்கள் திரும்பி வந்தால் சில மாற்றங்களுடன் வருகிறார்கள். என் கண்ணுக்கும் மனதுக்கும் தோன்றியதை எழுதுகிறேன். எக்செப்ஷன்ஸ் இருக்கலாம். இவர்களை அடையாளம் காண்பிக்கும் சில விஷயங்களைப் பகிர்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.


1)       கணவன் மனைவி இருவரையும் BERMUDAS-ல் காணலாம். பெரும்பாலும் NIKE ஷூக்கள அணிந்திருப்பர்.
2)      தாபாக்களில் உணவு அருந்திவிட்டு CREDIT கார்டில் பணம் செலுத்த முயல்வார்கள்.
3)      மினெரல் வாட்டர் பாட்டிலுடன் இருப்பார்கள்.
4)      தாராளமாக DEODARENT உபயோகிப்பார்கள்.
5)      யாராவது தும்மினால் GOD BLESS  என்பார்கள்.
6)      ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது HEY அல்லது HI என்பார்கள்.
7)      தயிர் என்பதற்கு யோகர்ட் என்பார்கள்.
8)      டாக்சி என்பதற்கு பதில் CAB என்பார்கள்.
9)      சாக்கலெட் அல்லது மிட்டாய்க்கு CANDY என்பார்கள்
10)  பிஸ்கட் என்பதற்கு குக்கி என்பார்கள்.
11)  HAVE TO GO என்பதற்கு GOTTA GO என்பார்கள்.
12)  ஜீரோ என்று வருமிடங்களை ஓ என்பார்கள். (உ-ம் 204 என்பதை டூஓஃபோர் என்பார்கள்.)
13)  தூரங்களை மைலில் சொல்வார்கள்
14)  எண்களை மில்லியன்களில் சொல்வார்கள்.
15)  சுற்றுப்புறம், வெயில் எல்லாவற்றையும் குறைபட்டுக் கொள்வார்கள்.
16)  பால் கவர்களில் பாலில் எவ்வளவு % FAT இருக்கிறது என்பதை கவனமுடன் பார்ப்பார்கள்.
17)  நாளைக் குறிப்பிடும்போது மாதம் தேதி வருடம் (MM/DD/YYYY) என்றுதான் எழுதுவார்கள். தேதி மாதம் வருடம் என்று குறிப்பது பிரிட்டீஷ் வழக்கம் என்று கேலியாக சொல்வார்கள்.
18)  COKE குடிக்கும்போது கவனமாக DIET COKE தான் குடிப்பார்கள்.
19)  ஊருக்கு வந்து ஒரு மாதம் ஆனாலும் JET LAG பற்றி குறை கூறுவார்கள்.
20)  இந்தியாவின் எல்லாவற்றையும் குறைவாகவே மதிப்பார்கள்.
21)  தங்கள் பயணத்தின்போது சூட்கேசில் கட்டப்படும் விமான சர்வீஸாரின் TAG களை எடுக்கவே மாட்டார்கள்.
22)  SCHEDULE என்பதை SKEJULE என்றும் MODULE என்பதை MOJULE என்றும் உச்சரிப்பார்கள்.
23)  கடைசியாக..? பெரும்பாலும் உரையாடலின் போது “ அமெரிக்காவில்அல்லது நான் அமெரிக்காவில் இருந்தபோது என்று அடிக்கடி கூறுவார்கள்.

( எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலின் சாராம்சமே தமிழ்படுத்தி எழுதி இருக்கிறேன். ....அப்பாடா.. நான் தப்பித்துக் கொள்கிறேன் .....!) 

என் மனைவியின் அனுமதியுடன் பதிவிடுகிறேன்......!!!

 இப்படியும் இருக்கிறதா.?நல்ல முன்னேற்றம்...,!






 

திங்கள், 8 ஜூலை, 2013

பதிவரின் பயணக் குறிப்புகள்.





பதிவரின் பயணக் குறிப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதக் கடைசியிலோ ஜூலை மாத முதலிலோ ஆலய தரிசனமாக திருச்சி, வைத்தீஸ்வரன் கோயில் சிதம்பரம் என்று செல்வது வழக்கம்.ஜூலை மாதம் மூன்றாம் தேதி என் மனைவியின் பிறந்த நாள். அன்று ஒரு கோயில் தரிசனமாக இருப்பது அவளுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். மெலும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா அந்தகாலத்தில் நடைபெறும். சாதாரணமாக திருச்சியில் ஒரு நாள் தங்கி மறுநாள் கும்ப கோணத்தில் தங்கி அதுவரை பார்க்காத கோவிலுக்கு விஜயம் செய்வோம். மறுநாள் வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் முடித்து சிதம்பரம் செல்வோம். அங்கு தரிசனம் செய்து இரவு தங்கி மறுநாள் ஊருக்குத் திரும்பப் பிரயாணம் செய்வோம்.இந்த வருடம் எங்களைத் தனியாக அனுப்ப என் பிள்ளைகளுக்கு விருப்பம் இருக்கவில்லை. என் மூத்த மகனும் எங்களுடன் பிரயாணப் பட்டான். அவனது சௌகரியம் குறித்து எங்கள் பயணம் ஒரு நாள் குறைக்கப் பட்டது.

மைசூர் மயிலாடுதுறை எக்ஸ்ப்ரெசில்டிக்கெட் பதிவு செய்யப் போனால் பெங்களூரில் இருந்து பயணம் செய்ய இடம் காலி யில்லை என்றார்கள். ஆகவே மைசூரில் இருந்தே டிக்கெட் பதிவு செய்து பெங்களூரில் ஏறுவது போல் பயணச் சீட்டு வாங்கப் பட்டது. பெங்களூரில் நாங்கள் மூன்றாம் a/c  கோச்சில் ஏறினால் பாதிக்கும் மேலாக இடங்கள் காலியாக இருந்தது. ரெயில்வேயில் முன் பதிவும் டிக்கெட் வினியோகமும் புரிவதே இல்லை. பல முறை பார்த்திருக்கிறேன். கடைசி நேரத்தில் நிறைய பேருக்கு இடம் ஒதுக்கப் படும். தினமும் அத்தனை பேரும் டிக்கெட் வாங்கி கான்சல் செய்கிறார்களா? இல்லை நமக்குத் தெரியாமல் இடங்கள் காலியாக விடப் படுகின்றனவா. ? இதை படிப்பவர்கள் விளக்கம் அறிந்து கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன் இரண்டாம் தேதி பெங்களூரில் இருந்தும்  ஐந்தாம் தேதிமயிலாடுதுறையில் இருந்தும் பயணச்சீட்டு பதிவு செய்யப் பட்டது.

இந்த முறை பயணத்தின் போது திருச்சியிலும் கரந்தையிலும் வாழும் முகம் தெரியாப் பதிவுலக நண்பர்களை சந்திக்க விரும்பினேன். திரு. வை. கோபால கிருஷ்ணனின் மினனஞ்சல் முகவரிக்கு என் விருப்பம் தெரிவித்து எழுதினேன். அவர் திருச்சி வாழ் பதிவர்களுக்கு தெரியப் படுத்தியதும் அல்லாமல் கூடியவரை எல்லோரையும் கூட்டிவர முயற்சி செய்வதாகவும் கூறினார். ஒவ்வொரு பதிவரையும் அவர்கள் இருப்பிடம் சென்று நான் சந்திப்பதுதான் முறையாக இருக்கும். ஆனால் நேரம் பற்றாக்குறையும் , என் வயது காரணத்தாலும் அவர்களை நான் தங்கு மிடத்துக்கு வருமாறு வேண்டினேன்.

 ஜூலை மூன்றாம் தேதி

அதிகாலை மூன்றே முக்கால் மணிக்குத் திருச்சி ஜங்ஷன் வந்தோம். என் மகன் ஏற்கனவே பஸ் நிலையம் எதிரில் இருக்கும் PLA KRISHNA INN  என்னும் ஓட்டலில் அறை முன் பதிவு செய்திருந்தான்.


தங்கி இருந்த ஒட்டல்( திருச்சியில் )

நானும் என் மனைவியும்



குளித்துக் காலை உணவு அருந்தி ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த காரில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்யப் போனோம். நம்பவே முடியாத அளவு குறைவான கூட்டம். நிறைவான தரிசனம்.

காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள , பூக்கின்ற புன்னகையால்
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையே- என்னை
ஆட்கொள்ள வேண்டும் தாயே
எனை ஆளும் சமயபுரத்தாளே....

என்று மனம் உருகி வேண்டி நின்றேன். ஒவ்வொரு முறையும் சமயபுரம் செல்லும்போது ஏதோ மாற்றம் தெரிகிறது. இந்த முறை அன்னைக்கு அபிஷேகம் செய்யும் இடம் காணவில்லை.மறைக்கப் பட்டிருந்தது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற்போல் வரிசையில் நின்று, நகர்ந்து, தரிசனம் முடிந்ததும் குறிப்பிட்ட வழியில் வெளியே வர வேண்டி உள்ளது.

தரிசனம் முடிந்ததும் அரங்கனைக் காணச் சென்றோம். இப்போதெல்லாம் குறிப்பிட்ட காலத்துக்குள் கடவுள் தரிசனம் கிடைப்பதில்லை. நாங்கள் போன போது நடை திறந்திருக்கவில்லை. கூட்டம் நிறைந்து எல்லோரும் காத்திருந்தனர். இடைப் பட்ட சமயத்தில் தாயாரைக் காணச் சென்றோம். அங்கும் சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின் தாயாரை தரிசனம் செய்தோம். மீண்டு அரங்கனிடம் வந்தால் நிலைமையில் மாற்றம் இருக்கவில்லை. அவனை மானசீகமாக தரிசித்து  திருவானைல்லா வந்து சேர்ந்தோம். ஜம்புகேஸ்வரரை அருகில் நின்று தரிசனம் செய்தோம். ஆனைக்கா அப்புஸ்தலம் என்றாலும் ஈசனைச் சுற்றி நீரின் ஈரம் கூடத் தென்படவில்லை. அங்கிருந்து அகிலாண்டேஸ்வரி சந்நதி சென்று வெண்டி மகிழ்ந்தோம். .இதுவரை திருச்சி சென்றபோதெல்லாம் தாயுமானவரை தரிசிக்காமல் இருந்ததில்லை. இந்த முறை படியேறிப் போக தடை வித்திக்கப் பட்டது. கீழே மாணிக்க விநாயகரை வேண்டி வழிபட்டோம்.

அங்கிருந்து வெக்காளி அம்மன் தரிசனம். இங்கு ஒரு மாற்றம் கண்டேன். அம்மனுக்கு கூரையோ விதானமோ கிடையாது, என்றுதான் இதுவரை இருந்திருக்கிறது. இந்த முறை அம்மன் சந்நதி மேல் ஒரு படுதா போடப்பட்டு அதன் மேல் புல் மாதிரி ஏதோ பரப்பி இருக்கிறார்கள். என்ன , அன்னைக்குக் கூரை வேண்டுமோ இல்லையோ பூசாரிக்கு வெயில் மழையில் இருந்து தப்பிக்க ஒரு விதானமாவது வேண்டும்......!

இதற்கு மேல் எங்கும் போக உடலில் தெம்பிருக்கவில்லை. மதிய உணவு முடித்து அறைக்குத் திரும்பி ஓய்வெடுக்கத் துவங்கினோம்.


மூன்றரை மணி அள்வில் திரு வை. கோபாலகிருஷ்ணன், சிறிது நேரத்தில் வருவதாகத் தகவல் சொன்னார். ஏறத்தாழ அவரும் திரு. தி. தமிழ் இளங்கோவும்  ஒரே நேரத்தில் எங்களைக் காண  வந்தனர். திருச்சி வந்ததன் மீதிப் பாதி நோக்கம் நிறைவேறிக்கொண்டு இருந்தது. சுமார் ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை. வை. கோபு சாரின் திருமண நாலாம் அது. ஸ்வீட் எடு கொண்டாடு என்பதுபோல் எங்களுக்குச் சாக்கலெட் கொடுத்தார். அவர் எழுதி வெளியிட்ட எங்கெங்கும் எப்போதும் என்னோடுஎன்ற புத்தகம் பரிசாகத் தந்தார். எனக்கு ஒரு துண்டு போர்த்தினார். ஒரு மணி பர்ஸும் ( ஐந்து ரூபாய் பணத்தோடு ) தந்தார். தமிழ் இளங்கோ அவர்கள் வலியின் ‘நினைவு நாடாக்கள் ‘ என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். பேசிக்கொண்டே அன்பு மழையில் நனைந்திருந்த நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கோபு சார் “அபிவாதயே ...... “ சொல்லி என்னை வணங்கினார். எவ்வளவு பிரபலமான பதிவர் அப்படிச் செய்தபோது நெகிழ்ச்சியில் உறைந்து விட்டேன். தமிழ் இளங்கோவும்  நமஸ்கரித்தார். இவர்களது இச்செயல்கள் என் மீது இவர்கள் கொண்ட அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது. இதற்கெல்லாம் நான் தகுதி உள்ளவனா என்றும் எண்ண வைத்தது. நண்பர்களே, உங்கள் அன்பும் பாசமும் என்றும் என் நினைவில் இருக்கும். சிறிது நேரங்கழித்து பிரியா விடை பெற்றுச் சென்றனர். இதுவுமல்லாமல் இருவரும் அவர்கள் பதிவுகளில் என்னைப் பற்றி எழுதி என்னை  இன்னும் பலரும் அறியச் செய்து விட்டனர்.
கோபு சார் தமிழ் இளங்கோவுடன்


இவர்கள் விடை பெற்றுச் சென்ற சிறிது நேரத்தில் திரு. ரிஷபனும் ,திரு. ஆர்.ராம்மூர்த்தி அவர்களும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர இயலாததற்கு வருத்தம் தெரிவித்தனர். தொலைபேசியிலேயே நேருக்கு நேர் பேசுவதுபோல் அன்னியோன்யமான சம்பாஷணை மனசுக்கு இதமாய் இருந்தது. பெங்களூர் வந்தால் அவசியம் என் வீட்டுக்கு வர வேண்டும் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன்.

பெங்களூரில் என்னிடம் தொடர்பு கொண்ட கரந்தை ஜெயக்குமாரிடம் நாங்கள் திருச்சியில் இருந்து பேரூந்தில் பயணிக்கப் போவதாகக் கூறிய போது அவர் முடிந்தால் திருச்சி வந்தே சந்திப்பதாகக் கூறி இருந்தார்.என் மனைவிக்குத்  திட்டையில் குரு பகவானை தரிசிக்கவெண்டும் என்றிருந்தது.திட்டமிட்ட நேரத்தில் பேரூந்துப் பயணமென்றால் செய்து முடிக்க இயலாது என்று தெரிந்ததும் என் மகன் மீதிப் பயணத்தை காரில் தொடரலாம் என்றான். அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்தது. போகும் வழியில் கரந்தையில் திரு. ஜெயக்குமாரையும் பேராசிரியர் ஹரணி அவர்களையும் தரிசிக்கலாமே. திட்ட மாற்றத்தை ஜெயக்குமாரிடம் கூறி நாங்களே அங்கு வருவதாக கூறினேன். திரு, ஹரணி அவர்கள் இல்லத்தில் காலை உணவு என்றார். உண்ணும் நேரம் உரையாடலுக்குத் தடையாயிருக்கும் என்றுகருதி காப்பி மாத்திரம் அருந்துவதாகக் கூறினோம்.உமாமகேசுவனார் பள்ளி வாசலில் எங்களை ஜெயக்குமார் வரவேற்று ஹரணி அவர்களின் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். இவ்வளவு கற்றவர்கள் மிகவும் எளிமையாயும் பணிவுடனும் இருந்தது எனக்க ஆச்சரியம் அளித்தது. “ நிறை குடம் தளும்பாதல்ல்வா ?ஒரு கத்தை புத்தகங்கள் பரிசாக அளித்தனர். ஹரணி அவர்கள் எனக்கு ஒரு சால்வை போர்த்தினார். இந்த மாதிரி வரவேற்புகள் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டது. பதிவுலகம் எனக்கு கற்றவர்களையும் வித்தகர்களையும் நண்பர்களாகக் கொடுத்துள்ளது. இம்மாதிரியான நண்பர்கள் தரும் ஊக்கமும் ஆதரவுமே எனக்கு கிரியா ஊக்கியாக செயல்பட்டு எழுத வைக்கிறது. இதன் மூலம் எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரந்தை ஜெயக்குமார் நான் ஹரணி அவரது லைப்ரரியில்

கரந்தையில் இருந்து தென்குடித்திட்டை செல்ல வேண்டும். அங்கு வழிபாடுகள் முடித்து மதியம் பனிரண்டரைக்குள் வைத்தீஸ்வரன் கோயில் செல்ல வேண்டும் தாமதமாகி விட்டால் மாலைஐந்துவரைக் காத்திருக்க வேண்டும் . ஆதலால் பேராசிரியர் ஹரணி மற்றும் ஜெயக்குமாரிடமிருந்தும் பிரியாவிடை பெற்றோம். கரந்தையில் இருந்து போகும் வழியை என் மகன் அவனுடைய gps aided அலைபேசியின் மூலம் கண்டு வழி சொல்ல சுமார் அரை மணி நேரத்தில் திட்டை சென்றடைந்தோம். இந்த முறை ஆலய தரிசன பயணத்தில் நாங்கள் சென்ற இதுவரை செல்லாத கோயில் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் என்ன வென்றால் இது முழுவதும் கருங்கற்களால் ஆனது. சுதை சிற்பம் ஏதுமில்லை. ஈசனின் கர்பக்கிரக விதானத்தில் இருந்து ஒவ்வொரு 24 நிமிஷ நேரத்தில் ஒரு துளி நீர் லிங்கத்தின் மேல் விழுகிறது விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பதிக்கப்பட்டு இருக்கிறதாம். அது காற்றிலிருந்து ஈரப்பசையை நீர்த் துளியாக மாற்றி 24 நிமிஷத்துக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழும்படி யாக அமைக்கப் பட்டிருக்கிறதாம்.(சந்திரகாந்தக் கல் என்றால் என்ன.?) புராண காலத்தில் பிரளயம் வந்தபோது ஒரு திட்டாக இது இருந்ததால் திட்டக் குடி என்று பெயராம். இது ஒரு குருஸ்தலம். குருபகவான் தனிக்கோயில் கொண்டு அமர்ந்திருக்கிறார். நாங்கள் சென்றது வியாழக்கிழமை. குருவுக்கு உகந்த நாள். விஸ்தாரமாகப் பூசை செய்து வழிபட்டோம். குருவினால் துக்கங்கள் நிவர்த்தி ஆகலாம் என்னும் நம்பிக்கையில் பரிகாரமாக வழிபாடு செய்தோம். என் மனைவிக்கு மிகவும் திருப்தி.

திட்டை குரு பகவான் சந்நதியில்

அங்கிருந்து நேராக வைத்தீஸ்வரன் கோயில். சுமார் இரண்டு மணிநேரத்தில் போய்ச்சேர்ந்தோம். அன்று குருத்திகை ஆனதால் கோயில் நாள் முழுதும் திறந்திருக்கும் என்றார்கள்.. ஒவ்வொரு வருடமும் எங்கள் பூஜைகளை நடத்தித் தரும் முத்து சுப்பிரமணியக் குருக்கள் இந்த முறையும் எங்களுக்கு வேண்டி அர்ச்சனை செய்து கொடுத்தாரன்று முத்துக்குமார சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் வெளியில் மண்டபத்தில் நடந்தது. கண்கொள்ளாக் காட்சி.

வைத்தீஸ்வரன் கோயிலில் முத்து சுப்பிரமணிய குருக்களுடன்

மாலை சிதம்பரம் போய்ச் சேர்ந்தோம். அங்கும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் அர்ச்சனை. அங்கும் எங்களுக்காக வழக்கமாக பூஜை அர்ச்சனை செய்து தரும் நடராஜ குஞ்சித பாத தீக்‌ஷிதர், இம்முறையும் செய்து கொடுத்தார்.

சிதம்பரம் கிழக்கு கோபுர பின்னணியில்

ஜூலை ஐந்தாம் தேதி
----------------------            
காலை ஆனித்திருமஞ்சன திருவிழாவை ஒட்டி கொடியேற்றம்  கண்டோம். காலை தரிசனம் முடிந்து தில்லைக் காளி அம்மன் கோவில் சென்றோம். அங்கும் பூஜை வகையறாக்கள் முடிந்து அறைக்குத் திரும்பினோம். எங்களுக்கு பயண டிக்கெட் மயிலாடுதுறையிலிருந்து எடுக்கப் பட்டிருந்தது.எல்லோருக்கும் அப்பர் பெர்த். இரண்டு பயணிகள் எங்களுக்காக அவர்கள் பெர்த்தைக் கொடுத்து எங்கள் நன்றியைப் பெற்றார்கள். முதுமையினால் இது ஒரு அட்வாண்டேஜ்...! ஆறாம்தேதி பேரனின் பிறந்தநாளை அவர்களுடன் கழித்து மறு நாள் வீடு வந்து சேர்ந்தோம். வந்தபிறகுதான் கணினியில் எவ்வளவு வேலை பாக்கி என்று தெரிந்தது.
---------------------------------------------------------------