Monday, August 30, 2010

inaivinil inbam

          நிலவைப்  பழிக்கும்  முகம் _அதில்
               நினைவைப்  பதிக்கும்  கண்கள்
           நிலமடந்தை  நாணும்  எழில் _முத்துச்
               சரம்  விரித்த  முல்லைச் சிரிப்பு _சிந்தக்
           கமல மலர்  செவ்விதழ்  விரிப்பு _ கொண்டு
               படர் கொடி  வெல்லும்  துடி இடை _ என்
           இடர் சேர்க்க  இடையிடை யாட _மென்னடை
               நடந்தென்முன்   நின்றாள்_ இன்பக்
            கனவினை  நனவாக்க எண்ணி _ வந்த
               கற்பனைக்  கண் கண்ட  கன்னி .
  பண்ணும்  மறந்தேன் ,எனையும்  மறந்தேன்
              இழுத்துப் பிடித்தேன்  என்னிதழ்  பதித்தேன்
  அவளிதழ்  சுவைத்தேன் ,போதை யிலாழ்ந்தேன்
               பேதையவள்  மிரண்டாள் ,மிரட்சியில்  துன்பம்
  கோதையவள்  கண்டாள் , காட்சியில்  இன்பம்
               நண்டவள்  நரியானேன்  நானென்றாள்
  கொண்டவள்தானே  குறைஇல்லை  என்றேன்
               தனிமையில்தான்  தழைத்திடும்  துன்பம்
   இருவரும்  இணைந்தால்  இருக்காது  என்றேன்
                           எனையவள்  நோக்கினாள்  இரண்டே  வினாடிகள்
                            இசைவினை  அறிந்தேன்  ஒரு  கண்ணசைவிலே
                            அணைப்பினில்  பெற்றாள்  இன்பம் _பின்
                             இணைந்ததும்  பெற்றோம்  இன்பம்
                            இன்பம்   இன்பம்   இன்பம் !          




    





   





  

1 comment: